Jump to content

உருட்டுக்கட்டை அரசியலும் ,தமிழக காங்கிரசின் இறுதிக் கணங்களும்


Recommended Posts

ஆக்கம்: இதயச்சந்திரன்


தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் விரிவடைந்து செல்லும் நிலையில், பொதுத் துறையில் உள்ள பல அமைப்புக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளன. இப்போராட்டங்கள், ஈழ மக்களின் தேசிய இன விடுதலை போராட்டத்தின் சரியான கருத்தியலை ,அம்மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது என்பதனை மறுக்க முடியாது.

 

வாக்கு வங்கி அரசியலிற்கு அப்பால் நடாத்தப்படும் இந்த எழுச்சி, சிறிதளவு தணிந்து , மறுபடியும் எழக்கூடிய சாத்தியமும் உண்டு. ஆனாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், இங்கு பரந்துபட்ட அளவில் முன் வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை புறம்தள்ளி, அதற்குக் குறைவானதொரு தீர்வினை எவரும் கூற முடியாததொரு நிலையை இந்தத் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.

 

அதாவது, மாணவர் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும், தமிழக மக்கள் மத்தியில், 'இதுதான் தீர்வு ' என்று ஆழமாகப் பதியப்பட்ட கருத்துருவத்தை அழித்து, புதிதாக ஒரு அரசியலை எந்தக் கட்சியும் ஈழ விவகாரத்தில் இனி அடையாளப்படுத்த முடியாது.

 

இங்கு ஏனைய கட்சிகளைவிட , தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கே இப் புதிய அரசியல் பரிமாணம்

பெரும்தலைவலியாக இருக்கப்போகிறது.

 

தமிழக முதல்வர் அண்மையில் சட்டசபையில் கொண்டு வந்த தனி ஈழத் தீர்மானத்தை, இந்திய நடுவண் அரசின் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அவசரமாக நிராகரித்த விடயம், தமிழக காங்கிரசிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

 

தமிழகத்தில் காங்கிரசின் ஆதரவுத் தளம் , பூதக் கண்ணாடியை வைத்துத் தேடிப்பார்க்கும் அளவிற்கு புள்ளியாகிப் போனதால் சினம் கொண்ட மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விடுதலைப் புலிகள் மீது தாக்குதலை தொடுக்க ஆரம்பித்துள்ளார்.

 

இத்தனை ஆண்டு காலமாக, இராஜீவ் காந்தியின் படுகொலையை வைத்து, ஈழமக்களின் நியாயபூர்வமான விடுதலைப் போராட்டத்தை ,அரசியல் களத்தில் ஒளித்து வைத்திருந்த காங்கிரசாரின் மறைப்பு அரசியலை ,மாணவர் போராட்டம் அம்பலமாக்கி விட்டதே என்கிற அதிர்ச்சிதான் இந்தச் சாமிகளை புலி எதிர்ப்புக் கோசம் போடவைக்கிறது.

 

ஒரு சாமி, டெல்லியையும், மகிந்தரையும் காப்பாற்ற அமெரிக்காவிற்கு ஓடுகிறார். மற்றச் சாமி, தமது இருப்பிற்கு ஆபத்து வந்து விடுமெனக் கலக்கமடைந்து, ஈழத்தமிழருக்கு இந்திய காங்கிரஸ் ஆட்சி செய்ததை [?] பட்டியலிடுகிறார்.

 

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டித்தர, சீமானோ, தி.மு.க.வோ ,அ.தி.மு.க வோ அல்லது முண்டாசு கட்டிய வைக்கோவோ வரவில்லை என்றும், அதனை இந்திய அரசே கொடுத்தது என்று பெருமைப்படும் நாராயணசாமி, அரியாலையில் இந்திய அமைச்சர் அத்திவாரம் இட்டபின், எத்தனை வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன என்கிற புள்ளிவிபரங்களையும் தமிழக மக்களுக்குச் சொல்லவேண்டும் .

 

இவைதவிர ,விடுதலைபுலிகளை இந்திய அரசு [காங்கிரஸ் அரசு] ஒருபோதும் மன்னிக்காது ..மறக்காது என்று இராஜீவ் படுகொலை விவகாரத்தை வைத்து பழைய பல்லவி பாடும் இணை அமைச்சர், திருச்சி.வேலுச்சாமி எழுதிய 'ராஜீவ் படுகொலை: தூக்குக்கயிற்றில் நிஜம்' நூலைப் படிக்கவில்லை போல் தெரிகிறது.

 

சுப்பிரமணிய சுவாமியுடன் நெருங்கி உறவாடிய வேலுச்சாமியின் சாட்சியங்களை ஆராய்வதற்கும், அதன் ஊடாக தீர்ப்புக்கள் திருத்தப்படுவதற்கும் இவர்கள் விரும்பவில்லை.

 

2009 இல் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலமும், இனப்படுகொலையும் , ஈழ ஆதரவு குறித்தான தமிழக மக்களின் உணர்வுகளை வேறொரு தெளிவான தளத்திற்கு எட்டுச் சென்றுள்ளது. கதர்ச் சட்டைக்காரர்கள் உருட்டுக் கட்டைகள் ஏந்திச் சன்னதம் ஆடியும் மாணவர் போராட்டம் ஒடுக்கப்படவில்லை.

 

மாநிலக் கட்சிகளின் ஆதரவினை வைத்து ஆட்சியமைக்கும் அகில இந்தியக் கட்சிகளுக்கு, தமிழகத்தின் 40 லோக்சபா நாற்காலிகளும் அவசியமானதுதான்.

 

அதேவேளை, மாநிலத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வரும், அ.தி.மு.க அல்லது தி.மு.க.வுடன் இணையாமல் 5 ஆசனங்களைக் கூட காங்கிரசால் பெறமுடியாது.

 

மாணவர் போராட்டமும் ,அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் இன அழிப்பு ஆதரவுக் குற்றச் சாட்டுக்களும், தமிழக காங்கிரஸ் பக்கம் இக்கட்சிகளை நெருங்கவிடாமல் தடுக்கிறது.

 

கடந்த சட்டசபைத் தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்த தமிழக காங்கிரசினருக்கு ,அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இதை விட மோசமான முடிவுகளைத் தந்துவிடுமோ என்கிற பயம் வாட்டுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் செந்தமிழன் சீமான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து தமிழக காங்கிரஸ் இன்னமும் மீளவில்லைபோல் தெரிகிறது.
புலிகள் மீதுள்ள வன்மமும், சிங்களத்தின் மீதுள்ள காரியக் காதலுமே போதும் தமிழக காங்கிரசின் அழிவிற்கு.

 

அதேவேளை, தொடரும் மாணவர் போராட்டம், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது.


இருப்பினும் இதனை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சியில் இக் கட்சிகள் ஈடுபடுவதுபோல் தெரியவில்லை. அமெரிக்கத் தீர்மானம் மாணவர்களால் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, சில கட்சிசாரா ஈழ ஆதரவு அமைப்புக்கள், நடை பெறும் போராட்டத்தை திசை திருப்ப அல்லது மழுங்கடிக்க முனைவதாகவும் செய்திகள் வருகின்றன.

 

மாணவர்களை அவர்கள் வழியில் பயணிக்க விடுவதே சரியான பார்வையாகும். 'அவர்களை வலுவூட்டுகிறோம்' என்கிற பேர்வழிகள் ,தோல்வியடைந்த இணக்கப்பாட்டு அரசியல் போக்குகளை ஒரு கணம் மீட்டிப்பார்ப்பது பொருத்தமானது.

 

மூலம்: தமிழ் கனேடியன் - சித்திரை 3, 2013
பிரசுரித்த நாள்: Apr 05, 2013 18:32:47 GMT

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.