Jump to content

இதயத்தால் சிந்தித்த சில எண்ணங்கள் (இடிந்தகரைக் கடிதம்-2)


Recommended Posts

இதயத்தால் சிந்தித்த சில எண்ணங்கள்

(இடிந்தகரைக் கடிதம்-2)

இடிந்தகரை

மார்ச் 28, 2013

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே:

வணக்கம். கூடங்குளம் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 600 நாட்கள்

ஆகிவிட்டன. நானும், நண்பர்கள் ராயன், மை.பா., முகிலன், மில்டன், கெபிஸ்டன்

உள்ளிட்டோர் இடிந்தகரைக்குள் முடக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும்

மேலாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் நாள், சங்கரன்கோவில்

இடைத்தேர்தல் நடந்த அன்று, வைராவிக்கிணறு கிராமம் நோக்கி ஒரு பேரணி

நடத்திக் கொண்டிருந்தோம். சரியாக மாலை 4:45 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட

ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கைப்பேசியில் தொடர்பு கொண்டு,

“ஆட்சித்தலைவர் டாக்டர் செல்வராஜ் உங்களையும், அருட்தந்தை செயக்குமார்

அவர்களையும் நாளை காலை அலுவலகத்துக்கு வந்து சந்திக்கச் சொல்கிறார்”

என்றார். எனது தலைக்குள் ஓர் அலாரம் ஓங்கி ஒலித்தது. பேரணி முடிவில்

பேசும்போது “நாளை எதற்கும் தயாராய் இருங்கள்” என்று தெரிவித்துவிட்டு,

வைராவிக்கிணறு ஊரின் பத்ரகாளியம்மன் கோவிலில் இளைஞர் கூட்டம் ஒன்றை

நடத்திவிட்டு, இடிந்தகரை வந்து சேர்ந்தேன். மாவட்ட ஆட்சித் தலைவரே

அழைத்தார். “எங்களைக் கைது செய்வதற்காக அழைக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“நான் நினைத்தால் 2,000 போலீசாரை அனுப்பி உங்களைக் கைது செய்ய முடியாதா?

எதற்கு இங்கே அழைக்க வேண்டும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

கூடங்குளம் அணு உலையின் பக்கம் ஆயிரக் கணக்கான காவல்துறையினர்

குவிக்கப்படும் செய்தி எங்களுக்கு வந்து கொண்டிருந்தது. “நானும் அருட்தந்தை

செயக்குமாரும் திருநெல்வேலிக்கு வர முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக

ஆட்சித் தலைவரிடம் சொன்னதும், “நான் ராதாபுரம் வருகிறேன், நீங்கள் இருவரும்

அங்கே வாருங்கள்” என்றார். “நீங்கள் இங்கே இடிந்தகரைக்கே வாருங்கள்”

என்றேன் நான். மக்களிடம் கலந்தாலோசித்தோம்; “யாரும் எங்கேயும் போக

வேண்டாம்” என எங்களைப் பணித்தனர் புத்திசாலி மக்கள். அடுத்த நாள், மார்ச்

19, 2012 அன்று காலை ஆட்சித் தலைவர் மீண்டும் அழைத்தார். “வர முடியாது”

என்று திட்டவட்டமாகச் சொன்னேன். சற்று நேரத்தில் கூடங்குளம் மற்றும்

சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த 18 பேரும், கூட்டப்புளியில் 178 பேரும் கைது

செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தனது மகனின் பிறந்தநாளுக்காக ஈரோடு

சென்றிருந்த தோழர் முகிலன் தொடர்வண்டியில் ஊர் திரும்பிக்

கொண்டிருக்கும்போதுக் கைது செய்யப்பட்டார். தோழர்கள் சதீஷும், வன்னி அரசும்

கைதாயினர்.

காவல்துறை அராஜகத்தைக் கண்டித்து நான், ராயன் உட்பட

11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கினோம். திருநெல்வேலி மாவட்ட

காவல்துறை கண்காணிப்பாளர் திரு. விஜயேந்திர பிதாரி என்னை சரணடையச்

சொன்னார். “மக்கள் விடமாட்டேன் என்கிறார்கள்; நாங்கள் கிட்டத்தட்ட 10,000

பேர் இருக்கிறோம். எங்கள் அனைவரையும் கொண்டுபோகுமளவு வாகனங்களை

அனுப்புங்கள்; நாங்கள் அனைவரும் கைதாகிறோம்” என்று சொன்னேன். “இதுதான் நான்

உன்னோடுப் பேசுகிற கடைசி முறை!” என்று எச்சரித்தார். அன்று இரவு

நாகர்கோவிலுள்ள எனதுப் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பத்து நாட்கள்

கழித்து எனது பச்சைப் பிள்ளைகள் படிக்கும் நூலகம் நாசமாக்கப்பட்டு,

புத்தகங்கள் கிழிக்கப்பட்டு, குடிநீர் குழாய்கள் உடைத்தெறியப்பட்டு,

பொருட்கள் திருடப்பட்டு ஒரு மிகப்பெரிய தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாண நூலக எரிப்பைப் போன்ற எனதுப் பிள்ளைகளின் நூலக அழிப்பு

என்னையும், எனது மனைவியையும், எங்கள் பள்ளிப் பிள்ளைகளையும்,

ஆசிரியைகளையும் மிகவும் பாதித்தது. (இன்றுவரை காவல்துறை யாரையும்

விசாரிக்கவுமில்லை, கைது செய்யவுமில்லை. என் பள்ளிக் குழந்தைகளின்

நூலகத்தைச் சூறையாடியவர்கள், அதன் சூத்திரதாரிகள் அனைவரும் அதற்கான பாவச்

சம்பளத்தை உறுதியாகப் பெறுவர்.)

அந்த நெருக்கடியான

காலகட்டத்திலிருந்து, இன்று வரை இடிந்தகரையைவிட்டு வெளியேப் போகவில்லை.

அருகேயுள்ள கூத்தங்குழி கிராமத்துக்கு மட்டும் பெரும்பாலும் கடல் வழியாக

ஐந்தாறு முறை சென்று வந்திருக்கிறேன். கைதுக்கோ, சிறைக்கோ பயந்து வாழும்

தலைமறைவு வாழ்க்கை அல்ல இது; எங்கள் போராட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள

நடத்தும் தவம்தான் இந்த இடிந்தகரை திறந்தவெளி சிறைச்சாலை வாழ்க்கை. உழைத்து

வாழும், உண்மையான, அன்பார்ந்த இடிந்தகரை மக்கள் எனக்கும், நண்பர்களுக்கும்

உணவும், உறையுளும் அளித்துக் காத்து வருகிறார்கள். நாங்கள்

தங்கியிருக்கும் அருட்தந்தை இல்லத்தைச் சுற்றி ஆயிரக் கணக்கான மக்கள்

இரவும், பகலும் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

பெண்களுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு என இரண்டு வீடுகள் இருப்பதுபோல,

எனக்கு இசங்கன்விளை கருவான இடம், இடிந்தகரை உருவான இடம். எனது கையளவுக்

கல்வியும், சாதாரணத் திறமைகளும், வாழ்வின் அடித்தட்டில் கிடந்து உழலும்

உழைக்கும் மக்களுக்கு பயன்படுவது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத்

தருகிறது.

இரண்டு அருமையான சகோதரிகளுடன் பிறந்து, அற்புதமான பல

பெண்களுடன் உயர் கல்வி கற்று, சுமார் பதினான்கு வருடங்கள் ஆயிரக் கணக்கான

இளம்பெண்களுக்கு தந்தை போன்றதோர் ஆசிரியராகப் பணியாற்றி, வாழ்வின் துவக்கம்

முதலே பெண்கள் மேல் மதிப்பும், மரியாதையுமாக இருந்ததால், இன்று

இடிந்தகரைப் பெண்கள் மத்தியில் ஒரு சகோதரனாக, மகனாக நான் இடம்

பிடித்திருக்கிறேன். இந்தப் பிறவியில் இதைவிடப் பெரியதொரு பதவி, பட்டம்

எனக்கு கிடைக்கப் போவதில்லை. சாதி, மதம், ஊர், தொழில் கடந்துப்

பெற்றிருக்கும் இந்தப் பேறு இன்றைய தமிழகத்தில், இந்தியாவில் எல்லோருக்கும்

வாய்ப்பதில்லை.

எனது வாழ்வில் அப்பா, அம்மா, மனைவி, மகன்கள் தவிர

எனது வழியில் நடப்பவர்கள் என்று யாரும் கிடையாது. ஏராளமான நண்பர்களைப்

பெற்றிருந்தும், அவர்கள் மீது என்னை, எனது கருத்துக்களை நான்

திணிப்பதில்லை. காரணம் யாரையும் வழிநடத்துமளவுக்கு நான் பெரிய ஞானியல்ல.

அதேபோல, நான் யாரையும் அடியொற்றி நடப்பவனுமல்ல. ஆனால் ஒத்தக் கருத்துடைய

உண்மையானத் தோழர்களோடு கைகோர்த்து அருகருகே நடந்து வந்திருக்கிறேன்;

இன்னும் நடக்கத் தயாராயிருக்கிறேன்.

இருபது தேசத் துரோக வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட

முன்னூற்றைம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள், எஞ்சிய வாழ்நாள் முழுக்க

சிறையிலேயே இருக்கும்படிச் செய்யலாம். வயதான பெற்றோர் பயத்திலேயே

வாழ்கிறார்கள். குழந்தைகள் கவலைப்படுகிறார்கள். மனைவி குடும்பத்தை,

பள்ளியை, சொத்துக்களை, வாழ்க்கையை தனியாக இழுத்துக்கொண்டிருக்கிறார். “ஏன்

கணவனை திருப்பி அழைக்காமல் விட்டுவைத்திருக்கிறாய்” என்பன போன்ற சமூக

நெருக்கடிகள் ஒருபுறம். கடுமையானப் பொருளாதார நெருக்கடி மறுபுறம்.

காவல்துறை, உளவுத்துறை அராஜகம் இன்னொருபுறம். இவற்றையெல்லாம் துரும்பாகக்

கொண்டு செயல்படும் இரும்பனைய மனைவி என்பதால், வாழ்க்கை இன்னும் நகர்ந்து

கொண்டிருக்கிறது. நான் வீட்டைவிட்டு இவ்வளவு நாட்கள் பிரிந்திருந்தது

கிடையாது. வருகைதரு ஆசிரியராக வெளிநாடுகளுக்கு, வெளியூர்களுக்கு கற்பிக்கப்

போனாலும் ஒரு மாதத்துக்கு மேல் போவதில்லை.

பெற்றோரை, மனைவி,

மகன்களை ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு ஒரு முறைப் பார்க்கிறேன். அவர்கள்

இடிந்தகரை வருகிற நாளன்று வேறு ஏதாவது நிகழ்வுகள் இருந்தால், அல்லது

பார்வையாளர்கள் வந்திருந்தால், வீட்டாரோடு உட்கார்ந்துப் பேசக்கூட

முடியாமற் போகும். விடைபகர்ந்து பிரியும்போது மனைவியோடு கைகுலுக்கிக்

கொள்வதோடு சரி. “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” என்பது போலத்தான்

வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது. “ரோமில் வாழும்போது, ரோமர்கள் போலவே

நட” என்பதோர் ஆங்கிலப் பழமொழி. அனுதினமும் கத்தோலிக்க அருட்தந்தையர்களுடன்

வாழ்வதால், அவர்களைப் போலவேதான் தனிக்கட்டையாகவே தனிப்பட்ட வாழ்க்கை

நகர்கிறது.

பொருளாதார விருத்திக்காக, வளமான எதிர்காலத்துக்காக

கணவனை வருடக்கணக்கில் பிரிந்திருக்கும் மனைவியர், வெளிநாடுகளில் கிடந்து

தவிக்கும் கணவர்கள், மரணத்தால் பிரிக்கப்பட்ட தம்பதியர் போன்றோரின்

துன்பங்கள், துயரங்கள் தெளிவாகப் புரிகின்றன. தனிமையானப் படுக்கையோ, காமமோ

அல்லப் பிரச்சினை. உணர்வுபூர்வமான ஆதரவு இன்றி இந்த உலகில் வாழ்வது மிகவும்

கடினமானது. உளவுத் துறைகளும், அரசுகளும் தொடர்ந்து ஒட்டுக் கேட்பதால்,

மனைவியோடு தொலைபேசியில்கூட ஆசையாகப் பேசமுடியாது.

மக்களுக்காகப்

போராடிக்கொண்டிருக்கும் என்னையும், நண்பர்களையும், எங்கள் குடும்பங்களையும்

கண்காணிப்பதுபோல, இந்த நாட்டிலுள்ள கொள்ளைக்கார அமைச்சர்களையும்,

அதிகாரிகளையும் கண்காணித்தால் எவ்வளவோ குற்றங்களைத் தடுக்க முடியும்,

ஏராளமான மக்கள் பணத்தைக் காப்பாற்ற முடியும். இந்த நாட்டில் எந்தப்

பிரதமரும், முதல்வரும், அமைச்சரும், அதிகாரியும் என்னைப் போன்று எண்ணிறந்த

முறை “நான் வெளிநாட்டிலிருந்து பணம் பெறவில்லை,” “நிரூபித்தால் தூக்குத்

தண்டனைக்கும் தயாராயிருக்கிறேன்” என்று திருப்பித் திருப்பி சொல்லியிருக்க

மாட்டார்கள். எந்த அரசு வேலையும் பார்க்காத நான், பொதுப்பணத்தைக் கையாளாத

நான், ஊடகச் செவ்விகளில், செய்தி நிகழ்ச்சிகளில், பத்திரிகையாளர்

சந்திப்பில் என ஏராளமான முறை இந்த சத்தியப் பிரமாணத்தை எடுத்திருக்கிறேன்.

எங்களைப் பார்க்க வருகிறவர்களில் சிலர் “எப்படி நேரம் போகிறது? என்ன

செய்வீர்கள்?” என்றெல்லாம் கேட்கிறார்கள். உண்மையில் நேரமில்லாமல்

தவிக்கிறோம். சினிமா, தொலைக்காட்சி, வெளியூர்ப் பயணம், இயல்பு வாழ்க்கை

என்று எதுவுமே இல்லாத நிலையிலும், நேரம் ஓர் அரிதான விடயமாகவே இருக்கிறது.

சந்திக்க வருகிறவர்களோடு பேசுவது, ஊடகங்களை சந்திப்பது, போராட்டங்கள்

திட்டமிடுவது, நடத்துவது, பத்திரிக்கைகள் படிப்பது, எதிர்வினை புரிவது,

மக்களை சந்திப்பது, தொலைபேசியில் பேசுவது, படிப்பது, எழுதுவது என ஓய்வு

இல்லாமல், மிகுந்த நெருக்கடியோடுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டப் பந்தயத்துக்கு நடுவேயும், உள் அமைதியைத் தக்கவைத்துக் கொள்ள

வேண்டியிருக்கிறது. இறைவன்/கடவுள்/தெய்வம் என்று ஒரு தனி நபரோ, சக்தியோ

நமக்கு மேலேயிருந்து நம்மையெல்லாம் மேலாண்மை செய்வதாக நான் நம்பவில்லை.

ஆனால் இந்த உலகை, பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கும் அதே சக்தி, விசைதான்

நம்மில் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையிலும் இயக்குகிறது என நம்புகிறேன்.

சுவாமி விவேகானந்தர் ஓர் அருமையான உவமை சொல்கிறார். அதாவது, இயற்கை என்பது

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் மையப்புள்ளிகளைக் கொண்ட, சுற்றளவு எங்குமே

இல்லாத ஒரு மிகப் பெரிய வட்டம். அது போல ஒரு தனிமனிதன் தன்னை

மையப்புள்ளியாகக் கொண்ட, சுற்றளவு எங்குமே இல்லாத இன்னொருப் பெரிய வட்டம்.

இந்த வட்டங்களை இணக்கமாய் வைத்திருப்பதற்காகத்தான் நம்மை மையப்படுத்தும்

(centering) முயற்சிகளில் நாம் ஈடுபடுகிறோம். நான் யோகா, லூர்து மாதா

கோவிலில் தியானம், நண்பர்களுடனான அளவளாவல் எனும் முறைகளைக் கையாள்கிறேன்.

நானோ, பிற நண்பர்களோ எந்த எதிர்பார்ப்புகளோடும் இங்கேப் போராட வரவில்லை.

அதுபோல மக்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும்

இறங்கிப் போவதற்கும் தயாராகவே இருக்கிறோம். மக்களுடைய, எங்களுடைய

தன்னலமற்றத் தன்மையால்தான் எங்கள் போராட்டம் தொய்வின்றி தொடர்ந்து

கொண்டிருக்கிறது.

அரசியல் கட்சி தொடங்குவீர்களா, தேர்தலில்

போட்டியிடுவீர்களா என்று பலரும் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏதாவது சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் நானோ, நண்பர்களோ இங்கே

வரவில்லை. தேர்தல் அரசியலில் எனக்கு ஈடுபாடில்லை. தனது பதவியை,

அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பணம் தேட வேண்டும்; பிறரை மட்டம் தட்டி

வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; சூதும், வாதும் சொல்லி தன்னலத்தைக்

காத்துக் கொள்ளவேண்டும். இப்படியெல்லாம் வாழ என்னால் இயலாது, நான்

விரும்பவுவில்லை. சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், சுயநலவாதம் போன்றவற்றோடு

வாழ்வது ஈனப் பிழைப்பு என்று கருதுகிறவன் நான்.

எனவே நான் தேர்தல்

பதவிகளை விரும்பவில்லை. பெரும்பாலான இன்றைய மக்கள் பிரதிநிதிகளை மக்கள்

திருடர்கள், ஒழுக்கங்கெட்டவர்கள், மோசமானவர்கள் என்றேப் பார்க்கிறார்கள்.

அவர்களை சந்தேகிக்கிறார்கள், கடுகளவும் நம்புவதில்லை, மதிப்பதில்லை.

அரசியல் வியாபாரமாக்கப்பட்டு விட்டது, ஒருவித விபச்சாரம்தான் நடக்கிறது.

இந்த ஈனப் பிழைப்பில் மாட்டிக்கொண்டு எனது மன அமைதியை, நண்பர்கள் மத்தியில்

உள்ள நற்பெயரை கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அமெரிக்காவில்

இருக்கும்போது 1997 முதல் 2000 வரை “School for Politicians” எனும் ஓர்

இணையதள அரசியல் பள்ளியை நடத்தினேன். இப்படி “பயிற்றிப் பல கல்வி தந்து

இந்தப் பாரை உயர்த்திவிட வேண்டும்” எனும் பாரதியின் கனவோடு இயங்குவதையே

நான் விரும்புகிறேன். எனக்குத் தொழில் “எழுத்து, கவிதை, நாட்‌டிற்கு

உழைத்தல்!”

அன்புடன்,

சுப. உதயகுமாரன்

 

------ முகநூலில் இருந்து --------------------

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.