Jump to content

வெற்றியின் அடுத்த கட்ட படிகளை நோக்கி முன்னேறுவோம்!


Recommended Posts

 வெற்றியின் அடுத்த கட்ட படிகளை நோக்கி முன்னேறுவோம்!


       
    தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு  / திங்கள், 25 மார்ச் 2013 12:51        
    
        

தமிழகமெங்கும் கல்வி வணிகமயமாக்கப்பட்டு
கல்விக்கூடங்கள் சிறைகூடங்களாக மாற்றப்பட்டுள்ளன‌. சேனல் 4-ல் வெளிவந்த
இனப்படுகொலை காட்சிகளும், மழலைச் செல்வன் பாலச்சந்திரனின் நெஞ்சை
பதறவைக்கும் படுகொலையும் நம்மை பூட்டி வைத்திருந்த சிறைக் கதவுகளை உடைத்து
சீறியெழ வைத்தது. ஈழத் தமிழர்களை படுகொலை செய்த "சிங்கள இனவெறியன்
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தின்
முன் நிறுத்த வேண்டும்", "வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றும்
புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற
முழக்கங்கள் தமிழகமெங்கும் எதிரொலித்தது. நாம் தமிழகமெங்கும் எழுச்சி
கொண்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். தொடர்ந்து நடந்த நமது
போராட்டத்தின் விளைவாய்


• இந்திய அரசு பணிந்து அமெரிக்கத்
தீர்மானத்தை ஏற்று (தனது பிராந்திய அரசியல் நலனுக்காக திருத்தங்களை முன்
மொழியவில்லை என்றாலும்) வாக்களித்தது.


• தி.மு.க. கட்சியானது காங்கிரசு அரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியது, அமைச்சரவையிலிருந்து விலகியது.


• தமிழீழ மக்களுக்கும், தமிழீழ ஆதரவு இயக்கங்களுக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.


• நமது போராட்டம் தமிழக மக்களின், உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, பல்வேறு மக்கள் பிரிவினரை களத்தில் இறங்கி போராட வைத்தது.


அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?


நமது முதல் கட்ட போராட்டம் மேற்கூறிய
வெற்றிகளைத் தந்துள்ளது. நமது வெற்றியை அடுத்த கட்ட படியை நோக்கி
முன்னெடுக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் அய்.நாவின் பொதுப்பேரவை
நடக்கவுள்ளது. அக்கூட்டத்தில் நமது கோரிக்கையை ஏற்க வைப்பதற்கான அனைத்து
நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டிய கடமை நம்முன்னுள்ளது.


ஈழத்தில் நடந்த இனப்படுகொலை கொடூரங்களை
முழுமையாக வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை சேனல் 4 மேற்கொண்டு வருகிறது.
ஈழத் தமிழர்களும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களும் தங்கள் கோரிக்கைகள்
நிறைவேற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகில் உள்ள மனித
உரிமை அமைப்புகளும் இனப்படுகொலையை உலகின் பார்வைக்கு கொண்டு வர
முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.


நாமும் நமது போராட்டத்தை மாணவர்கள் தளத்தோடு நிறுத்திக் கொள்ளாமல்


1. அரசியல் கட்சிகளை நிர்பந்திப்பதற்கான போராட்டமாகவும்


2. மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாகவும்


மாற்றுவதற்கு அனைத்து திட்டமிட்ட வேலைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.


அரசியல் கட்சிகளை நிர்பந்திப்பது


ஆந்திராவில் தனித்தெலுங்கானா
போராட்டத்தில் மாணவர்கள் போராட்டத்தோடு மக்களின் போரட்டமும், அரசியல்
கட்சிகளின் போராட்டமும் ஒருங்கிணைந்து உள்ளதால்தான் அந்த போராட்டம்
வீரிய‌த்துடன் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதை முன்னுதாரணமாகக்
கொண்டு நாமும் நமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.


• தனித்தெலுங்கானாவிற்காக தெலுங்கானா
காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி.க்களை ராஜினாமா செய்ய நிர்பந்தித்து போராடியது
போல் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஈழத்தமிழர்களுக்கு
துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு வெளியேற வலியுறுத்த வேண்டும்.
காங்கிரசு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைவர்கள் தங்கள் பதவியை
ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். அதற்காக காங்கிரசு எம்.எல்.ஏ,
எம்.பி.க்கள் மற்றும் காங்கிரசு கட்சித் தலைவர்களின் வீடுகளை
முற்றுகையிடும் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.


• தனித் தெலுங்கானாவிற்காக தெலுங்கானாவில்
உள்ள அனைத்து எம்.பி.க்க‌ளும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து உறுதியாகப்
போராடுவது போல தமிழகத்தில் (புதுச்சேரி உட்பட) உள்ள 40 எம்.பி.க்களும்
ஈழத்தமிழர்களுக்காக ஒருமித்த குரல் எழுப்பி போராட வேண்டும். நாடாளுமன்றத்தை
முடக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் போராட்டங்களை முன்னெடுக்க தமிழக
எம்.பி.க்களை நாம் நிர்பந்திக்க வேண்டும்.


• இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக்
கட்சிகளிடமும் தமிழக எம்.பி.க்கள் அரசியல் கட்சிகள் தமிழீழ சிக்கலை கொண்டு
சென்று அனைத்து எம்.பி.களும் தமிழீழ சிக்கலை நாடாளுமன்றத்தில் எழுப்பி
ஒருமித்து போராட வைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க நிர்பந்திக்கும்
வகையில் மாணவர்கள் போராட்டத்தை கட்டியமைப்போம். நமது இரண்டு
கோரிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வைப்போம்.


மாணவர்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!


• இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் ஆதரவை திரட்டுவதற்கான முன் முயற்சிகளில் உடனடியாக இறங்குவோம்.


• தமிழக மக்கள் மத்தியில் தமிழீழ சிக்கல்
குறித்த விழிப்புணர்வை பரப்புரை செய்து மாணவர்கள் போராட்டத்தை தமிழக
மக்களின் எழுச்சிப் போராட்டமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளுவோம்.


• தமிழகத்தைச் சேர்ந்த ஆங்கில மொழி
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டளர்களை
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலை குறித்து எழுதவும், பேசவும்,
வலியுறுத்துவோம்.


• ஏர்டெல், டாடா, அசோக்லைலேன்ட் போன்ற
இந்திய முதலாளிகளின் நலன்களைக் காக்கவே இலங்கைக்கு ஆதரவாய் இந்திய அரசு
செயல்படுகிறது. ஏர்டெல், டாடா, அசோக் லைலேன்ட், மாருதி, பஜாஜ் போன்ற
இலங்கையில் பலமாக உள்ள இந்திய முதலாளிகளின் பொருள்களைப் புறக்கணிப்போம்
என்ற கோரிக்கையை மக்களிடம் கொண்டு சென்று இலங்கையில் பலமாக உள்ள இந்திய
முதலாளிகளின் பொருட்களை மற்றும் இலங்கை பொருட்களைப் புறக்கணிக்கும்
போராட்டங்களை முன்னெடுப்போம்.


ஒட்டுமொத்தத்தில் நமது முதல் வெற்றியை
முதல் படியாகக் கொண்டு மாணவர்களின் போராட்டத்தை பரந்து விரிந்த தளத்தை
நோக்கி முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே நமது கோரிக்கையில் நாம் வெற்றியடைய
முடியும். செப்டம்பரில் நாம் சில வெற்றிகளையும் ஈட்ட முடியும்.


காங்கிரசு எம்.எல்.ஏ., எம்.பி.க்களே! காங்கிரசு தலைவர்களே! தமிழக காங்கிரசு கட்சியினரே!


* ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறுங்கள்! பதவிகளை ராஜினாமா செய்யுங்க‌ள்!


தமிழக (பாண்டிச்சேரி) 40 எம்.பி.க்களே!


* நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எழுப்பி போராட்டத்தை வெற்றியாக்குங்கள்!


* இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி. -க்களை ஒன்றிணைத்து காங்கிரசை பணிய வையுங்கள்!


இந்திய அரசே!


* இத்தாலிக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா?


* இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?


* இலங்கை அரசை நிர்பந்தித்து, ஈழத் தமிழர்களின் இனஅழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!


- மறுவாழ்வுப் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்து!


அய்.நா-மன்றமே!


* இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனபடுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணை நடத்து!


* வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்து!


* ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை அய்.நா மேற்பார்வையில் உடனடியாக நடைமுறைபடுத்து!


* சிங்கள அரசு தொடர்ந்து நடத்தும் ஈழ தமிழர்களின் இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!


- தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு


தொடர்புக்கு : 9789434804, 9629377789, 9944367319, 9092698346, 9698815767, 9659292249 8015118750

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23345

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.