Jump to content

யாழ்ப்பாணத்தில் ராஜினி திராணகமவின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடையூறு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் ராஜினி திராணகமவின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடையூறு! photo.png

[sunday 2014-09-21 06:00]
rajini-memorial-event-200-news.jpg

யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆர்வலர் கலாநிதி ராஜினி திராணகமவின் நினைவுதினத்தை அனுஷ்டிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட விரிவுரையாளராக கடமையாற்றிய கலாநிதி ராஜினி திராணகம, அசாதாரணமான சூழல் நிலவிய போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை உருவாக்குவதில் பங்களித்தவர்.தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாக முறிந்த பனை நூலை எழுதியவர்.1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி ராஜினி திராணகம அவர் படுகொலை செய்யப்பட்டார்.

  

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று அவரது 25 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான ஏற்பாடுகளை அகிலன் கதிர்காமர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் நினைவுதின பேருரை மற்றும் அதனையடுத்து அமைதிப் பேரணி என்பன அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் நினைவுதினப் பேருரைக்கு அனுமதி மறுத்துள்ளது. இதே போன்று பொலிசாரும் அமைதிப் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

 

ராஜினியின் நினைவு தின நிகழ்வுகளின் முக்கிய அழைப்பாளரான அவரது கணவர் தயாபால திராணகம, தென்னிலங்கையிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். தனது மனைவிக்கான நினைவுதின நிகழ்வுகளுக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சல்கள் தொடர்பில் பீ.பீ.சி. பான்ற சர்வதேச ஊடகங்களிடம் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னரான யாழ்ப்பாணத்தின் ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளதற்கு இந்த நிகழ்வு ஒன்றே போதுமான சாட்சியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தின் ட்ரிம்மர் வழிபாட்டுத் தலத்தில் ராஜினி நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது. மாலையில் வீரசிங்கம் மண்டபத்தில் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றது. இவற்றில் யாழ்ப்பாண தமிழ் மக்கள் மாத்திரமன்றி கண்டி, கொழும்பு, தென்னிலங்கை சிங்கள மக்களும் கலந்து கொண்டிருந்தனர். இதனைப் போன்றே அச்சுறுத்தல்களுக்கும், தடைகளுக்கும் அஞ்சாமல் இன்றைய நிகழ்வுகளையும் நடத்தப் போவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

rajini-memorial-event-210914-seithy%20%2

 

rajini-memorial-event-210914-seithy%20%2

 

rajini-memorial-event-210914-seithy%20%2

 

rajini-memorial-event-210914-seithy%20%2

seithy.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.