Jump to content

உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா?


Recommended Posts

உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா?

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எமது இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனையில் இருக்கும் அக்கறை ரொம்பவுமே வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் வாழும் எமது ஈழத்து தமிழ் உறவுகள் (கிட்டத்தட்ட 500,000 தமிழர்கள் அமெரிக்கா, கனடா வில் உள்ளார்கள். 500,000 தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள்) மொத்தமாக 1,000,000 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை உற்பத்தி பொருட்களாகிய

*குளிர்பானங்கள்

*பலதரப்பட்ட பிஸ்கட்ஸ்

*பலதரப்பட்ட ஜாம்

*பால்மாக்கள்

*டின் மீன்கள், நூடில்ஸ் உள்ளிட்ட வேறுபல பொருட்களும் இவ் 1,000,000 மக்களில், கிட்டத்தட்ட 250,000 குடும்பங்கள் உள்ளன, இவர்களில் பெரும்பான்மையான மக்கள் மாதம் ஒன்றிற்கு குறைந்தது $50 இக்கு சரி மேலே குறிப்பிட்ட பொருட்களை நுகர்வு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிறிலங்காவில் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் $150, 000,000 ($ 150 மில்லியன்) (250.000 குடும்பம் * $50 * 12 மாதங்கள்)

இது ஒரு சிறிய கணிப்பீடுதான், ஆனால் பல வழிகளில் எமது மக்கள் இலங்கை பொருட்களையும் / சேவைகளையும் $1000 மில்லியனுக்கு மேல் கொள்வனவு செய்கிறார்கள். தமிழ்நாட்டு எம் தொப்புள்கொடி உறவுகளே எமக்காக இலங்கை பொருட்களை புறக்கணிப்பு செய்யும் போது. நாம் மட்டும் எமது நாக்கு ருசிக்காக Nekto சோடா குடிப்பது சரியல்ல.

எமது மக்களுக்காக எவ்வளவோ தியாகிகள் அகிம்சைவழியில் போராடி, உண்ணாவிரதம் இருந்து போராடியும் விடியு இல்லை என்ற படியாலே ஆயுதம் எடுத்து போராடினார்கள். ஆனாலும் எமக்குள் ஒற்றுமை இல்லாமலும், துரோகிகளால் காட்டிகொடுத்ததாலும், பல சக்தி வாய்ந்த நாடுகள் இலங்கை அரசுடன் சேர்ந்தே எமது விடுதலை போராட்டத்தையும் முடக்கவும், பல ஆயிரம் மக்களையும் ரசாயனக் குண்டுகள் பாவித்தும் கொன்று ஒழித்தனர்.

எமக்கு பணம் வேண்டும் என்றால் நன்றாக வேலை செய்து உழைக்கிறோம்….

எமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும் என்றால், பல இடங்களில் கல்விக்கு அனுப்புகின்றோம்.

எமக்கு வீடு, கார், சொகுசு வாழ்க்கை வேண்டும் என்று இரவு பகலாக உளைகின்றோம்.

இவற்றைப்போலவே எமது பிரைச்சனை தீர வேண்டும் என்றால் நாமே தான் பல வழிகளிலும் போராடி அதை எடுக்க வேண்டும். கடந்த 2011 ஆண்டில் பல நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்து, அவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் செய்து தமது தேவையை நிறைவேற்றினார்கள் (உதாரணமாக எகிப்து Egypt, துனிசியா Tunisia போன்ற நாடுகளில்).

எமது பிரச்சனைக்கு நாம் தான் போராட வேண்டும். மக்கள் ஒன்று பட்டு தொடர்ச்சியாக புறக்கணிப்புகளும், போராட்டங்களும், எமக்கு உள்ள பிரச்சனைகளையும், எமது மக்களுக்கு நடந்த அவலங்களையும் உலக்கு தெரியப்படுத்துவதன் முலமே எமக்கு விடிவு மற்றும் விடுதலை கிடைக்கும்.

இல்லையேல், வெளிநாடுகளில் எமது ஆயுட் காலத்தை தொலைத்து விட்டு, எமது கலாச்சாரத்தையும் தொலைத்து விட்டு, தொடர்ச்சியாக வாழுவோமே அனால் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவருமே தொலைந்து போய்விடுவோம். தமிழன் என்ற ஒரு இனம் படிப்படியாக பல வழிகளிலும் அளிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இல்லாமல் போய்விடும்.

நாம் ஒன்றுதிரண்டு எமக்குள் கருது வேறுபாடுகள் இல்லாமல் தொடர்ச்சியாக புறக்கணிப்புகளும், போராட்டங்களும் செய்வதன் மூலம் எமது பிரச்சனைகளை உலகுக்கு தெரியப்படுத்தலாம்.

தமிழ் மக்களை நேசிக்கும் உங்களில் ஒருவன்.

தமிழமகன்

சுவிஸ் தமிழ் சங்கம்

www.swisstamilsangam.blogspot.com

Link to comment
Share on other sites

தமிழ் கடைகள் விற்பனை செய்யிறதே சிறிலங்கா பொருட்களைத்தான்.ஆனால் தற்போது புதிய சட்டமொன்று அமுலுக்கு வருகிறது

முழு ஆடைப்பால்மா மற்றும் மோல்டட் பானங்களை கனடாவில் தடை செய்யவிருக்கிறார்கள்.

கனடாவில் தமிழர்கள் விற்காவிட்டால் சிங்களவன் கடை திறந்து விற்பான்.ஆகவே வேண்டுபவர்கள் அதாவது பாவனையாளர்களாகிய நாம் திருந்தினால் தான் முடிவு வரும்

Link to comment
Share on other sites

இந்த விடயத்தை அறிவுபூர்வமாகவும் வர்த்தக - பொருளாதார அடிப்படையிலும் அணுகவேண்டும்:

அ) தரவுகள் சேகரித்தல்

- என்னென்ன பொருட்கள் சிங்கள் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன?

- இவை ஒரு வருடத்திற்கு எவ்வளவு யூரோ / டாலர் பெறுமதி கொண்டவை?

- இதில் எவ்வளவு தமிழீழ பகுதிகளில் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது?

- எத்தனை கடைகளில் சில்லறையாக விற்கப்படுகின்றது?

ஆ) மாற்று வழிகளை ஆராய்தல் / பிரேரித்தல் / ஆதரவு சேர்த்தல்

- என்னென்ன பொருட்களை (மீன், மரக்கறி வகைகள்) மாற்று நாடுகளில் (தமிழ் நாடு உட்பட ) இருந்து இறக்குமதி செய்யலாம் என ஆராய்தல்

- என்னென்ன பொருட்களுக்கு மாற்று பொருட்களை (மலிபான், நெக்டோ) மலிவாகவும் தரமாகவும் விற்பனை செய்யலாம் என பட்டியல் இடல்

- சகல மொத்த சில்லறை வியாபாரிகளையும் இணைத்தல். அவர்களை இணைத்து அவர்களை பங்குதாரர்களாக்கி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தல்

- அந்த நிறுவனம் ஊடாக இறக்குமதி, சந்தைப்படுத்தலை செய்தல்

- மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல்

- மலிபான், நெக்டோ பொருட்களை விட புதிய மாற்று பொருட்களை அரைவிலையில் சில காலத்திற்கு விற்றல் போன்ற வியாபார தந்திரங்களை கையாளுதல்

- வரும் இலாபத்தில் மக்களுக்கு ( புலமைப்பரிசில் திட்டம், முதியோர் கவனிப்பு) , தாயக உறவுகளுக்கு சேவை செய்தல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.