Jump to content

சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபெறுவோம்


Recommended Posts

சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபெறுவோம் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு :!!:

சிறீலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி (Gloucestershire County Cricket Club, Nevil Rd, Bristol, BS7 9EJ) மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20–20 கிரிக்கெட் விளையாட்டின்போது, பிரித்தானிய தமிழர் இளையோர் அமைப்பினால் மேற்கோள்ளப்படவிருக்கும் ‘சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு’ போராட்டத்தில் பங்குபற்றி போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்குமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களிலும் சிறிலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின்போது தமிழ் இளையோர் அமைப்பு தொடர்ச்சியாக சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியிருந்தது. இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட தமிழ் மக்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு பற்றிய தகவல்களை பார்வையாளர்களுக்கு எடுத்துக்கூறியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சிறிலங்காவின் கிரிக்கெட்டை புறக்கணிக்குமாறு கோரி வருகின்றமை பல்வேறு மட்டங்களிலும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இந்த நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி பிரிஸ்டலில் (Bristol) நடைபெறவிருக்கும் முதலாவது 20-20 போட்டியின்போது ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் நடைபெறவிருக்கும் ‘சிறீலங்கா கிரிகெட் புறக்கணிப்பு’ போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது. சனல் 4 தொலைக்காட்சியில் ‘சிறீலங்காவின் கொலைக்களங்கள்;;’ எனும் மிகக் கொடூரமான ஆவணப்படம் வெளியாகி அனைத்து இன மக்களும் சிறிலங்கா அரசின் இன அழிப்பினை அறிந்திருக்கும் இந்த வேளையில், இந்தப் போட்டியில், போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கமான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜெயசூரியாவும் விளையாட இருப்பதால், அன்றைய போராட்டம் முக்கியம் பெறுகின்றது.

தென்னாபிரிக்காவின் முன்னைய நிறவெறி அரசாங்கத்திற்கெதிரான ஒரு நடவடிக்கையாக, அந்நாட்டின் கிரிக்கெட் மற்றும் ரக்பி அணிகளுக்கு சர்வதேச ரீதியில் 1970 மற்றும் 1980 களில் தடை விதிக்கப்பட்டதுடன், அந்நாடு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், சிம்பாவே அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கெதிரான ஒரு நடவடிக்கையாக, அந்நாட்டின் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்வற்கெதிரான ஒரு தடையை 2008 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் விதித்திருந்தது. சிறீலங்கா அரசாங்கம் அதன் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படும்வரை சர்வதேச ரீதியிலான சகல விளையாட்டுப் போட்டிகளிலும் சிறீலங்கா பங்குபற்றுவதை தடை விதிப்பதற்கு, அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை தமிழ் மக்கள் சர்வதேச அளவில் இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்த வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB), சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC), சர்வதேச விளையாட்டு வீரர்கள், உள்ளுர் விளையாட்டுக் கழகங்கள், ஊடகங்கள், கிரிக்கெட் கவுன்டிஸ் (Cricket county), உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரிற்கு இலங்கையின் இன அழிப்பு தொடர்பாகவும், தாய்நாட்டில் தமிழர்களின் இன்றைய அவல நிலை தொடர்பாகவும் கடிதங்கள் எழுதி, ஆவணங்களை அனுப்பி அவர்கள் மூலமாக சர்வதேச விளையாட்டு அரங்குகளில் இருந்து சிறிலங்காவை தடைசெய்ய உதவுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

இப்புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்காக பிரித்தானியாவின் சகல பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து ஒழுங்குகளை தமிழ் இளையோர் அமைப்பு செய்துள்ளதையும், பிரித்தானிய தமிழர் பேரவை இங்கு சுட்டிக்காட்டுகின்றது. தொடர்புகளுக்கு :- பிரித்தானிய தமிழர் பேரவை தொலைபேசி: 020 8808 0465 078 1448 4938

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.