Jump to content

வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா?


Recommended Posts

northern_map.jpgதென் இலங்கை அரசியல் தற்போது வடமாகாண சபைத் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில் மிகமுக்கியமாக வட மாகாண சபைத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டுமென சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம், அந்நாட்டின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அளிப்பதற்காக, இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் வழங்கியிருந்த கடிதமொன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கடிதத்திலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, வடமாகாணசபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற முடியாது என்பதாலேயே தேர்தலை நடத்தாது இழுத்தடிப்பு செய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளாமல் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என சிங்கள கடும்போக்குக் கட்சியான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தற்போது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமாயின், அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று, காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோருவார்கள் என்றும், அவ்வாறு கோரும் பட்சத்தில் அரசியலமைப்பின் பிரகாரம் அவற்றை வழங்க நேரிடும் என்றும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு இந்த அதிகாரிகள் வழங்கப்படுமாயின் அது நாட்டைத் துண்டாடுவதற்கு சமன் என்றும் எனவே தேர்தலை நடத்தாது 13ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தேசியப் பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற கட்சி மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு ஆதரவான கட்சி என்பதுடன் இந்தக் கட்சி மேற்கொள்ளும் அழுத்தங்களுக்கு அரசாங்கம் இதுவரை செவிசாய்த்தே வந்துள்ளது. அத்துடன், அரசாங்கத்திற்கு தேவையான சில பிரசாரங்கள், வேலைத்திட்டங்களை ஆகியவற்றை இந்தக் கட்சி ஊடாக அரசாங்கம் முன்னெடுக்கின்றமையும் சுட்டிக்காட்டத் தக்கது.

இந்த நிலையில், வடமாகாண சபைத் தேர்தலை செப்டம்பர் மாதத்தில் நடத்துவதாக முன்னர் பல முறை கூறியிருந்த அரசாங்கம் தற்போது தேர்தலை நடத்தாதிருப்பதற்கான பிரசாரத்தை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

http://tamilworldtoday.com/archives/4388

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.