Jump to content

இத்தால் சகலரும் அறிவது


Recommended Posts

அறிவித்தல்

யாழ் இணைய கருத்துக்களத்தின் மட்டுறுத்தினர்களாக பணியாற்றிய இராவணன், மதன் ஆகியோர் நேரமின்மை போன்ற காரணங்களால் தொடர்ந்து கருத்துக்களத்துக்கு வருகை தருவதில்லை - மட்டுறுத்தல் பணிகளில் தொடர்ந்து செயலாற்ற முடியவில்லை. இதன் காரணமாக மேலும் அவர்களுக்கு சுமையைக் கூட்டாமல், மட்டுறுத்தல் பணிகளில் இருந்து விடுவிக்கிறோம்.

கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றி, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள்:

யாழ் (சுரதா)

இளைஞன்

இராவணன்

மதன்

இளங்கோ

கரவை பரணி

கபிலன்

கவிதன்

யாழரசி

யாழினி

இதுவரை காலமும் கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றியதற்கும், பல்லாயிரக் கணக்கானோர் பார்வையிடும் இக் கருத்துக்களத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உதவியமைக்கும் கருத்துக்கள நிர்வாகம் இவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. கருத்துக்களத்தில் அவர்களின் பணியும், தமது பெறுமதிமிக்க நேரத்தை ஒதுக்கி வழங்கிய ஒத்துழைப்பும் என்றும் நினைவிலும், குறிப்பிலும் இருக்கும்.

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டும், ஒவ்வொருநாளும் எழுதப்படும் கருத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டும் புதிய மட்டுறுத்துனர் ஒருவரை இன்று இணைத்துக் கொள்கிறோம். இவரது நிர்வாகப் பெயர்: எழுவான்.

இதனடிப்படையில் இப்போது கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றும் மட்டுறுத்தினர்கள்:

யாழ்பிரியா

யாழ்பாடி

இணையவன்

எழுவான்

கருத்துக்கள உறவுகள் அனைவரும் கருத்துக்கள விதிமுறைகளை மதித்து செயற்படுவதோடு, கருத்துக்கள மட்டுறுத்துனர்களின் மட்டுறுத்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நட்புடன் கேட்டுக்கொள்கின்றோம். :huh:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 75
  • Created
  • Last Reply

அறிவித்தல்

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்,

நாளுக்கு நாள் யாழ் இணையத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியே கருத்துக்களம் பகுதி மட்டுமல்லாது, யாழ் இணையத்தின் ஒளித்தடம் பகுதியும் பலராலும் தொடர்ந்து பார்க்கப்படுகிற ஒரு பகுதியாக இருக்கிறது. ஒருநாளைக்கு ஒருவராலேயே பல தடவைகள் பல பக்கங்கள் பார்க்கப்படுகின்றன. அந்தவகையில் யாழ் இணையத் தளத்தின் பாவனையின் அளவு அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக இது மேலும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நேற்றும் இன்றும் தகவல் வங்கியின் செயற்பாட்டில் இடையிடையே தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தடங்கல்களை களைந்து யாழ் இணையத்தின் இயக்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். தகவல் வங்கி, தள வழங்கி ஆகியவற்றின் செயற்திறனை அதிகரித்து வேகமாகவும், தடங்கல் இன்றியும் யாழ் இணையப் பக்கங்களைப் பார்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எனவே, அதுவரை ஏற்படும் தடங்கல்களுக்கு வருந்துகிறோம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

நன்றி

நட்புடன்,

யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

திருத்தம் செய்தல்

கருத்துக்கள உறவுகளே,

கருத்துக்களத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் புதிய பதிவைத் தொடங்குவதற்கும், தொடங்கிய தலைப்புக்கு பதிலளிப்பதற்கும், உங்கள் பதிவுகளில் உள்ள (எழுத்துப்)பிழைகளைத் திருத்துவதற்கும் உங்களுக்கு அனுமதியுள்ளது. இதனை, குறிப்பாக திருத்தம் செய்வதற்கான அனுமதியை, நீங்கள் தவறாகப் பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தோம்.

ஆனால், புதிதாக களத்தில் இணைந்துகொண்ட உறுப்பினர் கரிகாலன் நேற்று இரவு தான் தொடங்கிய தலைப்பில் தனது கருத்துக்களையெல்லாம் நீக்கியிருக்கிறார். இது அவருக்கு பதிலெழுதிய அனைத்து கருத்துக்கள உறவுகளையும் அவமதிக்கிற அதேவேளை, கருத்துக்கள நிர்வாகத்தினரை மேலும் மேலும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இறுக்கமாக்கச் செய்கிறது.

ஒரு புதிய தலைப்பை தொடங்குவதற்கு முதல் அல்லது ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் பொறுமையுடன் யோசிக்கவேண்டும். கருத்தை எழுதியதன் பின்னும் - மற்றவர்கள் உங்கள் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - உங்கள் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், உங்கள் கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் உங்கள் கருத்தை முற்றாக நீக்குவதோ, உங்கள் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதோ தவறானது. ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் பலதடவை யோசியுங்கள். எழுதியதன் பின் அதற்கான விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற விடயங்கள் நடைபெறாது என நம்புகிறோம். கருத்துக்கள உறவு கரிகாலன் அவர்களுக்கு இன்றிலிருந்து தனது ஆக்கங்களைத் திருத்துவதற்கு அனுமதி இல்லை. அத்துடன் எச்சரிக்கை ஒன்றும் வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • 6 months later...

அறிவித்தல்

இனிவரும் காலங்களில் நிர்வாகம் தொடர்பான கருத்துக்களை நேரடியாக எமக்கு (தனிமடலூடாக) அறியத்தரலாம். பொதுவான கருத்துக்களம் தொடர்பான அல்லது கருத்தாடல்கள் தொடர்பான கருத்துக்களை யாழ் உறவோசை பகுதியில் முன்வைக்கலாம். ஆலோசனைகளையும் அங்கே பதியலாம். இது கருத்தியல் அடக்குமுறையாகப் படலாம். ஆனால், இப்படியான ஒரு முடிவை மேற்கொள்வதற்கு இன்றைய கருத்துக்கள சூழலே காரணம்.

இதுவரைகாலமும் மென்போக்கை நாம் கடைப்பிடித்து வந்தோம். ஆனால், கருத்துக்களம் குப்பைக்கூடமாகவும் - மனவக்கிரங்களையும், மனோவிகாரங்களையும் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் - இனிவரும் காலங்களில் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்க இருக்கிறோம். ஈவிரக்கம் இன்றி கருத்துக்கள விதிமுறைகள் அமுல்படுத்தப்படும். கருத்துக்கள விதிமுறைகளுக்கு உட்பட்டு சுதந்திரமான கருத்தாடலை செய்ய இங்கு அனுமதியுண்டு. கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை வாசிக்காதவர்கள் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கருத்துக்கள விதிமுறைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனின் கருத்துக்களத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது கருத்துக்களை எழுதாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிகம் கோபப்படுபவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், உளநலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கருத்துக்களத்தில் எழுதுவதையோ அல்லது கருத்துக்களத்தில் கருது்துக்களை வாசிப்பதையோ தவிர்த்துக்கொள்வது நல்லது. கருத்துக்களத்துக்கு வருகை தருவதால் உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கோ அல்லது உளவியல் தாக்கங்களுக்கோ நாம் பொறுப்பாளியாக முடியாது.

கருத்துக்கள நிர்வாகம் தொடர்பாக குறைகள் இருப்பின், அவற்றை பட்டியலிட்டு கருத்துக்கள நிரந்தரப் பொறுப்பாளர் மோகனுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கலாம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பதிலளிக்கப்படும். உங்கள் ஆலோசனைகளையும் எமக்கு தனிமடலில் அனுப்பி வைக்கலாம். பரிசீலிக்கப்படும்.

Link to comment
Share on other sites

அறிவுறுத்தல்

யாழ் இணைய கருத்துக்களம் ஒரு தமிழ்க் கருத்துக்களம். தமிழில் கருத்துக்களைப் பதிவதற்கான களம். இங்கே ஆங்கிலத்தில் கருத்துக்கள் எழுதப்படுவது தவிர்க்கப்படவேண்டும். கருத்தாடலின் தேவை கருதி ஆங்கில மொழியிலான ஆவணங்களை இணைக்கலாம். ஆனால், கருத்துக்கள் தமிழிலே அமையவேண்டும். முக்கிய செய்திகளை ஆங்கில மொழியில் வருகிறபோது அவற்றின் சுருக்கத்தை தமிழில் எழுதி அதன்கீழே ஆங்கிலச் செய்தியை இணைக்கலாம்.

அதேபோல், கருத்துக்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும். தமிழ் தெரியாத ஆங்கிலச் சொற்களென்றால் அவற்றை ஆங்கிலத்திலேயே எழுதலாம். ஆனால், தமிழ் தெரிந்தும் - கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் (பட், டியர், ஹல்லோ போன்றன:lol: தமிழில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களில் இவற்றை உறுப்பினர்கள் கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்தும் இதுபோன்ற கோமாளித்தனமான - தமிழ் மொழியைச் சிதைக்கும் வகையிலான கருத்துக்கள் இடம்பெறின் நடவடிக்கை எடுக்கப்படும். கருத்துக்களில் இடம்பெறும் குறிப்பிட்ட தமிழில் எழுதப்படும் ஆங்கிலச் சொற்களை (பட், டியர், ஹல்லோ போன்றன) மட்டுறுத்துனர்கள் தமிழில் மாத்துவார்கள் என்றோ அல்லது குறிப்பிட்ட அந்த சொற்களை மட்டும் நீக்கிவிட்டு முழுக் கருத்தையும் அனுமதிப்பார்கள் என்றோ எதிர்பார்க்கவேண்டாம். அப்படியான சொற்கள் இடம்பெறும் கருத்துக்கள் முற்று முழுதாக நீக்கப்படும். எனவே, இனிமேல் கருத்துக்கள் எழுதும்போது இதனைக் கவனத்தில் கொள்ளுங்கள். எழுதிய பின்னரும் ஒருமுறை படித்துப் பார்த்து அப்படிச் சொற்கள் இடம்பெற்றிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 1 year later...

kumuthan என்கிற உறுப்பினர் யாழ் இணைய கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

பின்வரும் காரணங்களால் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது:

1. பிற இணையத்தள செய்திகளை தனது வலைப்பதிவில் இணைத்துவிட்டு, அதனை பின்பு யாழ் கருத்துக்களத்தில் தனது செய்தியாக இணைத்தமை.

2. ஆக்கங்களின் உண்மையான மூலத்தை குறிப்பிடாமல், யாழ் கருத்துக்களத்தில் அவற்றை இணைத்தமை.

3. யாழ் கருத்துக்களத்தை கருத்தாடலுக்கான களமாகப் பயன்படுத்தாமல், தனது வலைப்பதிவுக்கான விளம்பரத்தளமாக பயன்படுத்தியமை.

4. பலமுறை அறிவுறுத்தியும், அதனைப் புறந்தள்ளி, கருத்துக்கள விதிமுறைகளை மீறியமை.

Link to comment
Share on other sites

archunan என்னும் பெயரில் கருத்தெழுதும் உறுப்பினர் கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்

தடை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு:

1. பல தடவைகள் தலைப்புக்கு பொருத்தமில்லாமல் வேறு ஒரு விடயத்தை திணிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை.

2. ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இல்லாமல் வெறுமனே தனிநபர் தாக்குதலாக கருத்துகளை எழுதியமை.

3. கருத்துக்களத்தை ஆக்கபூர்வமான கருத்தாடற் களமாக பயன்படுத்தாமல் தமது தனிப்பட்ட விரோதங்களை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்தியமை.

4. அதை மட்டுமே முதன்மை நோக்காக கொண்டு கருத்துக்களத்தில் எழுதியமை.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

paranthan என்னும் பெயரில் கருத்தெழுதும் உறுப்பினர் கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்

தடை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு:

1. செய்திகளின் நேரடி மூலத்தினை குறிப்பிடாமை

2. பலமுறை அறிவுறுத்தப்பட்டும், கருத்துக்கள விதிமுறையை பின்பற்றாமை

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நம்பி என்கிற உறுப்பினர் யாழ் இணைய கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

பின்வரும் காரணங்களால் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது:

- செய்திகளை முழுமையாக இணைக்காமை

- செய்திகளின் மூலத்தை நேரடியாக எழுதாமை

Link to comment
Share on other sites

  • 2 years later...

விருப்பு வழங்கும் (like) முறைமை

நேற்றில் இருந்து (08-ஏப்ரல்-2012) பச்சை / சிவப்பு புள்ளிகள் வழங்கும் முறைமை மாற்றப்பட்டு விருப்பு வழங்கும் (like) முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த முறை மாற்றம் தொழில்நுட்ப ரீதியான மாற்றம் என்பதால் கள உறுப்பினர்கள் ஏற்கனவே பெற்றிருந்த பச்சை மற்றும் சிவப்பு புள்ளிகளின் எண்ணிக்கை அனைத்தும் பூச்சியத்துக்கு வந்துள்ளது (reset ஆகியுள்ளது).

Link to comment
Share on other sites

  • 5 months later...

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மற்றும் கருத்துக்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு நிழலி, இணையவனுக்கு உதவியாக புதிய மட்டுறுத்துனர்களாக நுணாவிலான் மற்றும் நியானி ஆகியோரை இன்று முதல் யாழ் கருத்துக்களத்தில் இணைத்துக் கொள்கிறோம். கருத்துக்கள உறவுகள் அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை நுணாவிலான் மற்றும் நியானி ஆகியோருக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

எச்சரிக்கை

 

கள உறவுகள் மட்டுமே பார்க்கக்கூடிய நாற்சந்தியில் உள்ள விடயத்தை உறவோசைப் பகுதிக்கு காவி வந்ததாலும், பூட்டப்பட்ட திரியின் கருத்தாடலை வேறு திரியில் தொடர முனைந்ததாலும் துளசிக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

எச்சரிக்கை


நாற்சந்தியில் பூட்டப்பட்ட திரியின் கருத்தாடலை மீண்டும் உறவோசை பகுதியில் தொடர முனைந்ததால் ரதி, விசுகு ஆகியோருக்கு தலா ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.


 

Link to comment
Share on other sites

எச்சரிக்கை


தொடர்ந்தும் கள உறவுகள் சிலரைச் சீண்டும் கருத்துக்களைப் பதிந்ததால் வண்டுமுருகனுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

easyjobs  க்கு ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டுள்ளது. காரணங்கள்:
 
முழு இணைப்பையும் கொடுக்காமை.இரு முறை சொல்லியும் மீண்டும் முழு இணைப்பையும் கொடுக்காமல் வாசர்கர்களை தனது தளத்துக்கு இழுக்கும் தந்திரம்.அதற்காக யாழ்களத்தை பயன்படுத்துதல்.    
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை


கள விதிகளை முற்றாக புறக்கணித்து மிக அநாகரீகமான சொற்பதங்களைப் பல கருத்துக்களில் பாவித்தமை காரணமாக தமிழ் சிறிக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பல தடவைகள் அறிவுறுத்தப்பட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டும் அவற்றை அலட்சியம் செய்து ஒரே விதமான செய்திகளைத் தனித் தலைப்புகளில் ஆரம்பிப்பதால் chinnavan னுக்கு 3 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

யாழில் பதியப்படும் செய்திகளுக்கு வெளியே இணைப்புக் கொடுக்கப்படுவதால் முன்பு போன்று ஒரே மாதிரியான செய்திகளை ஒரே தலைப்பில் ஒன்றிணைப்பதில் சிரமங்களை மட்டுறுத்தினர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒரே விடயத்தை இரு தலைப்புகளில் கருத்தாடல் செய்வதும் சாத்தியமற்றது. ஆகவே செய்திகளை இணைக்கும்போது அது ஏற்கனவே உள்ளதா எனக் கவனிக்குமாறு தயவுடன் வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

எச்சரிக்கை



மட்டுறுத்தப்பட்ட கருத்தை திரும்பவும் இரு தடவைகள் பதிந்தமைக்காக யாழ்அன்புக்கு இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

களவிதி: மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்

Link to comment
Share on other sites

திரிக்கு சம்பந்தமில்லாமல் வெறுமனே ஆத்திரமூட்டுவதற்காக பதில்களை வழங்கியமைக்காக அர்ஜுனுக்கு எச்சரிக்கைப் புள்ளி 1 வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை

 

யாழின் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து மூலம் குறிப்பிடாமல் செய்தி ஒன்றை இணைத்தமைக்காக துன்னையூரானுக்கு இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.
 

 

Link to comment
Share on other sites

எச்சரிக்கை

 

--நிர்வாகத்தினர் தனிமடல்களில் வேண்டுகோள்கள் விடுத்தும், தொடர்ந்தும் கள விதிகளை கருத்தில் எடுக்காது தொடர்ச்சியாக கண்ணியமற்ற சொற்களை பயன்படுத்தியமையால் ஆசான் இற்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

அநாகரீகமான முறையில் கருத்துக்கள் எழுதியதனால் துன்னையூரான் 7 நாட்கள் கருத்துக் களத்தில் தடை செய்யப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

 
யாழ்கள உறவுகளுக்கு, புங்கையூரானுக்கு வாழ்த்து தெரிவித்து (பச்சை புள்ளிகளுக்கு) திறக்கப்பட்ட திரி சில கோப்புக்களை  ஒருங்கிணைக்க முற்பட்ட போது தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது என்பதை மிக்க மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை


திரி ஒன்றில் சக கள உறவு ஒருவரை அநாகரீகமான முறையில் நையாண்டி செய்ததற்காக சுண்டலுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்குகின்றேன். பாலியல் ரீதியான வசைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அனுமதிக்கப்படமாட்டாது.

Link to comment
Share on other sites

நிர்வாகத்தினரை விமர்சித்துத் திண்ணையில் எழுதியமைக்காக துளசிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.