Jump to content

நீதியமைச்சில் வருவாய் இல்லை- கப்பல் துறைமுகங்கள் அமைச்சு வேண்டும்- ஹக்கீம் அடம்பிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]rav%20hakkiim.jpg

[size=4]தனக்கு நீதியமைச்சு தேவையில்லை என்றும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தரவேண்டும் என அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.[/size]

[size=4]மேலதிகமாக இன்னும் இரண்டு அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு தரவேண்டும் என்றும் அவற்றில் ஒன்று புனர்வாழ்வு புனரமைப்பு மீள்கட்டுமான அமைச்சு என்றும் மற்றுமொரு வருவாய் தரக் கூடிய அமைச்சையும் தருமாறு ஹக்கீம் கோரியுள்ளார் என அரசதரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நீதியமைச்சில் வருவாய் மிகக்குறைவு என்றும் இலங்கையில் ஒப்பந்தங்கள் வருவாய்கள் தரக் கூடிய அமைச்சாக இருக்கும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தனக்கு தரவேண்டும் என்றும் ஹக்கீம் கோரியிருப்பதாக அரச தரப்பு கூறுகிறது. கப்பல் துறைமுகங்கள் அமைச்சே இறக்குமதி ஏற்றுமதி அனுமதி உட்பட உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களை கையாளும் அமைச்சாகவும் உள்ளது. இதனால் இந்த அமைச்சராகவும் செயலாளர்களாகவும் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் கிடைப்பது வழமையாகும்.

இதனால் இந்த அமைச்சை தனக்கு தருமாறு ஹக்கீம் அடம்பிடிப்பதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திணைக்கள கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக முஸ்லீம் காங்கிரஷ் கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தூதுவர்களாக தமது கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஹக்கீம் கோரியுள்ளார்.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

Link to comment
Share on other sites

அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,

துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சு.[size=3] [/size]

[size=3]அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்பொழுது துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியை வகிக்கின்ற அதேநேரத்தில், அத்துறை தொடர்பாகத் தலைசிறந்த அனுபவமும் திறமையும் அவரிடம் உண்டு. [/size]

[size=3]1994ஆம் ஆண்டு அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராகவும் பின்னர் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சராகவும் அவர் செயலாற்றினார். இலங்கையைச் சுற்றியுள்ள சமுத்திரப் பிரதேசத்தில் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய வரையறையற்ற வளங்களைப்பற்றி அவருக்கிருக்கும் அறிவு தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்கின்ற முற்போக்கு முயற்சிகள் பலவற்றின் ஆரம்பமாக இருந்தது. சமுத்திரவியல் தொடர்பாகப் பல்கலைக்கழகமொன்றை நிறுவியமை, கரையோரப் பாதுகாப்பு அலகொன்றை ஆரம்பித்தமை என்பவை இவற்றில் தனித்துவமானவையாகும். இந்து சமுத்திரத்தில் சர்வதேசக் கடற்பாதை ஊடாக அமைந்துள்ள உபாய முறையில் முக்கியத்துவம் வாய்ந்த இடமான அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகமொன்றை அமைப்பது அவருடைய கருத்தாகும். [/size]

[size=3]2004 ஏப்ரில் மாதம் அவர் பிரதம அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டதோடு, அதனோடிணைந்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியையும் வகித்தார்.[/size]

[size=3]2008ஆம் ஆண்டில் அமைச்சர் ஜெயராஜ் பர்னாந்துபுள்ளே மரணமடைந்ததையடுத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியை சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.[/size]

[size=3]சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சீனா, இந்தியா, ஈரான், சவுதிஅரேபியா, கொரியா போன்ற ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்சு போன்ற நாடுகளிடமிருந்து துறைமுக, நெடுஞ்சாலைகள் துறைக்காகக் கணிசமானளவு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. சர்வதேச நன்கொடை வழங்கும் நிறுவனமான உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜப்பான் வங்கி போன்ற நிறுவனங்களும் நிதி உதவிகளை வழங்கின.[/size]

[size=3]தென்னிலங்கையில் தோன்றிய மக்கள் தலைவரான சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏழு தசாப்தங்களுக்கும் சில சந்ததிகள் வரையும் விரிவடைந்து செல்கின்ற அரசியல் சந்ததியொன்றின் மரபுரிமை உடையவராவார். தமது தந்தையான டீ.ஏ. ராஜபக்ஷ அவர்களின் பின்னர் 1970ஆம் ஆண்டு பெலிஅத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைப் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். [/size]

[size=3]சமூக சேவைகள் அமைப்புகள் பலவற்றுக்குத் தலைமை தாங்குகின்ற ஊக்கமிகு சமூக சேவையாளரான சிரந்தி ராஜபக்ஷவைத் திருமணம் புரிந்துள்ளார். முன்பள்ளிச் சிறார்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அவர் பெரிதும் அக்கறை காட்டுகின்றார். பயங்கரவாதத்தின் காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவி உபகாரம் செய்வதற்காக அவர் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். [/size]

[size=3]அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் இருக்கின்றனர். அவர்களில் மூத்தவரான நாமல், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார். இரண்டாவது புதல்வாரன யொசித்த, ஐக்கிய இராச்சியத்தில் னுயசவஅழரவா ல் பயிற்சி பெற்றதன் பின்னர் இலங்கைக் கடற்படையில் உப லெப்டினனாகச் சேவையாற்றுகின்றார். மூன்றாவது மகனான ரோஹித்த, வான் பயணவியல் மற்றும் விண்வெளி ஆய்வியல் என்பவை தொடர்பாக ஐக்கிய இராச்உpயத்தில் உயர் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்.[/size]

[size=3]-[/size][size=3]துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு[/size]

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு

Link to comment
Share on other sites

சிறி லங்கா முன்னேற போகுது!

[size=5]ஆனாலும் இந்தியாவை "பீட்" பண்ண நாளாகும் :D:lol: [/size]

Link to comment
Share on other sites

[size=3][size=4]ரவூப் ஹக்கீம் [/size][/size] கூட்டணியுடன் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது நீதி அமைச்சின் நிலை எப்படி இருக்கும் இலங்கையின்; நீதி எபப்டி இருந்திருக்கும் என்பதற்கு இவை உதாரணம். மேலும் நிதி அமைச்சுக்கும் நீதி அமைச்சுக்கும் சின்ன வித்தியாசம் தானே அதை ஏன் இவர் கேட்கவில்லை?

Link to comment
Share on other sites

மு.காவின் தேர்தல் நாடகம் முடிவுக்கு வந்தது! பஷீரின் பதவிக்காக அலைகிறது கட்சி!

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மீண்டும் பிரதியமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பேசச்சுவார்த்தை நடத்தி வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் இடையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு மற்றும் வர்த்தக துறை பிரதியமைச்சராக பதவி வகித்த சேகுதாவூத், மாகாண சபைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கில் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

http://tamilleader.com/tamilleadernews/6155-2012-09-15-17-59-53.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.