Jump to content

விடுதலைப்புலிகள் மீதான தடை : இந்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன?


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இவ்வாறு செய்தி மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான Eurasia Review என்னும் இணையத்தளத்தில் ஆய்வாளர் J Jeganaathan எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது:

இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் 1991ல் முதன் முதலாக இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்தது.

"தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இந்திய தேசியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாலும், புலிகள் தொடர்ந்தும் இந்திய எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளதாலும் இது ஒரு 'சட்ட ரீதியற்ற அமைப்பாக' உள்ளதாலும் புலிகள் அமைப்பால் திடீர் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என இந்திய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு இந்திய உயர் மட்ட அரசியற் தலைவர்களும், இராஜதந்திரிகளுமே பொறுப்பாளிகள் என்ற கருத்துப்பட இணையங்கள் ஊடாக ஆக்கங்களைப் பிரசுரித்து சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும்; நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்படுவதாகவும் இந்திய உள்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீட்டிப்புக்கான அடிப்படைக் காரணம் என்ன? இதன் மூலம் ஏற்படவல்ல உள்ளக, இருதரப்பு மற்றும் அனைத்துலக ரீதியான தாக்கங்கள் எவை? என்பனவே அவ்விரு வினாக்களுமாகும்.

'நல்ல சாத்தானுக்குள்' குடிகொண்டுள்ள 'பேயானது' இந்திய பாதுகாப்புக்கு தற்போதும் அச்சுறுத்தலை விளைவிப்பதாக கருதியே இந்திய அரசாங்கமானது தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளது.

புலிகள் அமைப்பானது நீண்ட காலமாக இந்திய இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைக்கும் தீங்குவிளைவிக்கவில்லை. புலிகள் அமைப்பின் அனைத்துலக கிளையானது தற்போது வித்தியாசமான கட்டமைப்புடன் செயற்படுகின்ற போதிலும் கூட அதன் தலைமைத்துவத்தின் ஆளுமைக் குறைபாடு காரணமாக இதனால் தமிழ்நாட்டு மக்களின் அனுதாபத்தை மிக இலகுவாக கவர்ந்து கொள்ள முடியாது.

இந்திய அரசாங்கமானது புலிகள் அமைப்பின் அனைத்துலக வலைப்பின்னல் தொடர்பில் கவனம் செலுத்தினால், உண்மையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு மீதான தடை கேள்விக்குரியதாகலாம். ஏனெனில் தற்போது புலிகளின் அனைத்துலக வலையமைப்பு வேறுபட்ட பெயருடன் செயற்பட்டு வருகின்றது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், தமிழ்நாட்டில் செயற்படும் புலி ஆதரவுக் கட்டமைப்பை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. இதனால் புலி ஆதரவு அமைப்புக்கள் மீதான குற்றச்சாட்டும் வலிதற்றதாகிறது.

தமிழ்நாட்டில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள், இதற்கு முன்னர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் கைகளில் அகப்படாமல் மிக வெற்றிகரமாக தப்பித்துக்கொண்டன. இந்த முறைமை தொடர்ந்தும் நடைமுறையிலிருந்தால், யுத்தமானது மிகக் குறுகிய காலத்தில் நிறைவுக்கு கொண்டுவரப்பட முடியாது. அண்மைக்காலத்தில், தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட்டுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புலிகள் அமைப்பு மீதான இந்திய அரசாங்கத்தின் தடைநீடிப்பானது எதனை நோக்காகக் கொண்டுள்ளது? புலிகள் தொடர்பான வழக்குகள் முடிவடையும் வரை, இந்தியப் பாதுகாப்புக்கு புலிகள் மீதான தடை அவசியமானதாக காணப்படுகிறது. இந்தியாவின் உள்ளக ரீதியாக நோக்கில், இத்தடையானது புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடர்பான வழக்கு விசாரணையில் நீதியை எட்டி, அதனுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை இனங்கண்டு, தண்டனை வழங்குவதற்கு உதவுகின்றது.

இத்தடை காரணமாக புலிகள் அமைப்பானது தனக்கான வளங்களை பெற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுகளையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் புலிகள் அமைப்பு தலையிடாததன் பின்னர், தற்போது புலிகள் அமைப்பு மீதான தடையானது அத்தியாவசியமற்ற ஒன்றாக மட்டுமல்ல, எதிர் விளைவையும் ஏற்படுத்தாது.

இத்தடை நீட்டிப்பானது பிரபாகரனின் கொலை அறிவித்தல் மீது பல்வேறு வதந்திகளை ஏற்படுத்துவதுடன், புலிகள் அமைப்பு மீள்எழுகை கொள்கின்ற செய்தியை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

புலிகள் மீதான தடை நீட்டிப்பானது சட்ட ரீதியற்ற செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் இந்திய எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்ணுவதுடன், இந்திய அரசாங்கம் தற்போது இந்நீட்டிப்பின் மூலம் அரசியலைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்கின்ற நிலையை உருவாக்கும். புலிகள் அமைப்பால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு மிகப் பலமான அச்சுறுத்தல் காணப்படவில்லை என்பது தெளிவான விடயமாகும். இந்நிலையில் தடை நீட்டிப்பானது இந்திய அரசியலில் சாத்தியமான உந்துதலை ஏற்படுத்தும் எனக் கருதமுடியாது.

தமிழ்நாட்டு அரசியலை தமிழ்த் தேசியவாதம் மற்றும் மொழிசார் அடையாளங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒரேதளத்தில் நின்று செயற்படாவிட்டாலும் கூட, சிறிலங்காத் தமிழர் விவகாரம் தமிழ்நாட்டில் செயற்படும் அனைத்துக் கட்சிகளினதும் பொதுவான நிகழ்ச்சி நிரலாக காணப்படுகின்றது.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், சிறிலங்காத் தமிழர்களின் சமூக-அரசியல் பிரச்சினை தொடர்பாக உரத்துப் பேசுகின்ற போதிலும் கூட, தமிழ்நாட்டின் அகதிமுகாங்களில் வாழும் இதே சிறிலங்காத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதியளவு கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையாகும். இதுவே சிறிலங்காத் தமிழர் விவகாரம் தொடர்பான தமிழ்நாட்டு அரசியலின் உண்மை நிலைப்பாடாகும்.

தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கு [TESO] மீண்டும் புத்துயிரளிப்பது தொடர்பாக இந்திய ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திட்டமிட்ட போது, புலிகள் மீதான தடை நீட்டிப்பு தொடர்பான தகவலும் வெளிவந்தது.

சென்னையிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிறிலங்கா இராணுவ வீரர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்புமாறு கோரி தற்போது தமிழ்நாட்டை ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர்களையோ ஆதரிக்கும் கட்சிகளல்ல. இவ்விரு கட்சிகளும் சிறிலங்காத் தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை மனிதாபிமானத் தளத்தில் நின்று ஆதரிக்கின்றன. அத்துடன் மிகக் கொடிய சிறிலங்கா அரசாங்கத்தை இவை எதிர்த்து நிற்கின்றன.

சிறிலங்காத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு அரசியலை இந்திய மத்திய அரசானது தவறாக விளங்கிவைத்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும், அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இந்திய மத்திய அரசானது போதியளவில் கவனம் செலுத்தவில்லை என்பதன் பெறுபேறாகவே தற்போது தமிழ்நாட்டு தமிழ் மக்கள், சிறிலங்காத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஆதரித்து ஒன்றுதிரண்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவப் படைகளால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பல்வேறு படுகொலைகள் மற்றும் ஏனைய யுத்த கால மீறல்களை தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் இந்திய தேசியவாதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அதேவேளையில், சிறிலங்கா விவகாரம் மட்டுமல்ல, முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நீர் வழங்கல் விவகாரம் மற்றும் கூடங்குள விவகாரம் போன்றவை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மாறுபட்ட, நீதியற்ற முறையில் நடந்து கொள்வதை இந்திய தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து நிற்பதுடன், இவ்வாறான விடயங்களில் நீதி வேண்டி ஒத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20120727106680

Link to comment
Share on other sites

[size=4]சிறிலங்கா விவகாரம் மட்டுமல்ல, முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நீர் வழங்கல் விவகாரம் மற்றும் கூடங்குள விவகாரம் போன்றவை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மாறுபட்ட, நீதியற்ற முறையில் நடந்து கொள்வதை இந்திய தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து நிற்பதுடன், இவ்வாறான விடயங்களில் நீதி வேண்டி ஒத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.[/size]

Link to comment
Share on other sites

செயற்படாத ஒரு இயக்கத்துக்கு மேலும் இரு வருடங்கள் தடை போடுவதால் யாருக்கும் நன்மை இல்லை.ஒரு நாள் எஞ்சிய வி.புலிகளை சாட்சியமளிக்க ஐ.நா அழைக்கும்.அப்போ புலிகளின் தடையை எடுக்க வேண்டும்.மேலும் இந்தியா எப்படித்தான் தமிழர்களை வதைத்தாலும் சிறிலங்காவின் நெருங்கிய நண்பன் சீனா என்பதையும் இந்தியாவுக்கு தக்க தருணத்தில் காலை வார சிறிலங்கா ஒருபோதும் தயங்காது என்பதை இந்தியா உணரும் போது எல்லாமே பிந்திவிடும்.

Link to comment
Share on other sites

சிங்களப் பயங்கரவாதிகள் வீசும் எலும்புத் துண்டை நக்கிப் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரக் கும்பலிடம் இதைவிட வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.