Jump to content

அப்கானிஸ்தான்: 10 இடங்களில் குண்டு வெடிப்பு !


Recommended Posts

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10 இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அருகில் உயர் அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தபட்டதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தூதரகத்தின் மீது எவ்வித தாக்குதலும் நடக்கவில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 10 இடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து சில நிமிடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தனர். துப்பாக்கியால் சுட்டனர். ஆப்கன் பார்லி., மீதும் ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் வீசப்பட்டன.

நேட்டோ படைகள் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து ஆப்கனில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இன்றைய தாக்குதலுக்கு தலிபான் இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதற்கிடையில் ஜலால்பாத்தில் தற்கொலை படையை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

http://tamil.yahoo.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2%E0%AF%8D-105400311.html

Link to comment
Share on other sites

ஆப்கான் தலைநகர் காபூலில் திடீரென நுழைந்த தலபான்கள் தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். முதலாவதாக தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தலைநகரில் உள்ள கோட்டல் ஒன்றிற்குள் நுழைந்து, அங்கிருந்தபடியே சரமாரியான தாக்குதல்களை நடாத்தினார். இந்த கோட்டல் ஈரானிய தூதராலயத்திற்கும், அதிபர் மாளிகைக்கும் அருகில் உள்ளது. இவர் அங்கு சென்றதும் பெரும் புகை மூட்டம் கோட்டலில் இருந்து கிளம்பியது. அடுத்து ரஸ்ய தூதரலயம் கிரனைட் தாக்குதலுக்கு இலக்கானது. மறுபுறம் ஜலலாபாத்தில் இருந்த விமான நிலையம் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இவருடைய தாக்குதல்களில் ராக்கட் தாக்குதல்கள் முக்கியம் பெற்றது.

காபூலில் உள்ள வெளிநாட்டு தூதராலயங்கள், பாராளுமன்றம் என்பன பல்வேறு தாக்குதல்களுக்குள் சிக்குண்டுள்ளன. முதலாவதாக ஜேர்மனிய, பிரிட்டன் தூதராலயங்கள் மீது பெருமளவு மோட்டார் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஜேர்மனிய தூதராலயம் சேதமடைந்துள்ளதாக சற்றுமுன் ஜேர்மனி தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதராலயத்தை நோக்கி தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. அதுபோல பாராளுமன்றத்திற்குள் பல குழுக்களின் தாக்கதல் நடாத்தியுள்ளன. அனைத்தையும் தாமே நடாத்திக் கொண்டிருப்பதாக தலபான்கள் தெரிவித்தார்கள்.

மொத்தத்தில் காபூல் நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வரும் 2014ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்ற பேச்சுக்கள் நடைபெறும்வேளையில் தலபான்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளமை பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

http://www.alaikal.com/news/?p=102819

Link to comment
Share on other sites

தாக்குதல் நடாத்திய தலபான்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்

நேற்று ஆப்கான் காபுல் நகரின் கண்களுக்குள் சுமார் 18 மணி நேரம் விரலை விட்டு குடைந்தெடுத்த தலபான் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ஆப்கான் போலீசாரும், அரசும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆப்கான் தலைநகருக்குள் நுழைந்த தலபான் தற்கொலைப் படையினர், அந் நாட்டின் பாராளுமன்றம், வெளிநாட்டு தூதராலயங்கள் உட்பட மேலை நாடுகளின் அத்தனை இலக்குகளையும் தாக்கி அழிக்கும் பணிகளை முன்னெடுத்தன. தாக்குதல் ஆரம்பித்தபோதே சுமார் 16 பேர்வரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் மேலை நாடுகளில் வெளியான செய்திகள் தாக்குதல்களைத் தெரிவித்தாலும் சேத விபரங்களை வெளியிடாது அடக்கி வாசித்துக் கொண்டிருந்தன. இன்று காலையில் அனைத்து தலபான்களும் கொல்லப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியிட்டன.

சேத விபரங்களை வெளியிட்டால் மேலை நாடுகளில் பலத்த எதிர்ப்பு கிளம்பும், ஆப்கான் போர் பற்றிய விமர்சனங்கள் இரட்டிப்பாகும் என்பது தெரிந்ததே. அதே நேரம் இந்தத் தாக்குதலை முறியடிக்க நேட்டோவின் வான் படைகளும் துணைக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை மட்டும் பிரலாபித்து பேசப்படுகிறது.

மேலை நாடுகளின் முக்கிய வல்லரசுகள் அனைத்தினதும் தூதராலயங்கள் சேதமடைந்துள்ளன. அத்தோடு தலபான்களின் பழைய விரோதியான ரஸ்ய தூதராலயமும் தாக்குலுக்குள்ளானது. முன்னர் தற்கொலைப் படையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் நுழைந்து நடாத்திய தாக்குதல் போல இதனுடைய வியூகம் இருந்தது கவனிக்கத்தக்கது.

ஆப்கானில் நுழைந்த மேலை நாடுகள் வரும் 2014ல் அங்கிருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்த பேச்சுக்கள் சென்ற வாரம் நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனுக்கும், ஆப்கான் அதிபர் ஹர்மீட் கார்சாய்க்கும் இடையில் நடந்துள்ளன. வரும் 2014 ல் ஆப்கானுக்கு புதிய அதிபர் வரவிருக்கிறார், அவரால் பதவிக்கு வந்தவுடன் தலபான்களை எதிர் கொள்ள முடியாது ஆகவே நேட்டோ படைகள் மேலும் சில காலம் நிலை கொள்ள வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

நேற்று சிறிய ரக இயந்திரத் துப்பாக்கியை தூக்கி ஆப்கான் போலீசார் போர் நடாத்தும் இலட்சணத்தை மேலை நாட்டு ஊடகங்கள் காட்டின. அவர்களுடைய திறமை சிரிப்பார் சிரிக்கும்படியாக இருந்தது. பழைய தேவர்; பிலிம்ஸ் படங்களில் ; எம்.ஜி.ஆரை சுடப்போகும் நம்பியார் அவரைச் சுடாமல் மண் சட்டிக்கு சுடுவதுபோல ஆப்கான் போலீசாரின் உடல் மொழி இருந்தது.

இந்த நிலையை அவதானித்துத்தான் தலபான்கள் சரியான தருணத்தில் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலானது மேலை நாடுகளுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்த வகுக்கப்பட்ட வியூகமாக இருக்கிறது. ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறினால் ஈரான், வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அது பலத்த சிக்கலாக மாறும். எனவே நேட்டோவை ஆப்கான் சகதிக்குள் சிக்கவைக்க வேண்டிய தேவை எதிரணிக்கு இருக்கிறது. மேலை நாடுகளை மேலும் பொருளாதார மந்தத்திற்குள் சிக்குப்பட வைக்க அது அவசியமாகவும் உள்ளது. இந்த விவகாரத்தின் சூத்திரதாரி பின்லேடனோ, ஓமர் முல்லாவோ அல்ல, அதற்கு அப்பால் மறைந்துள்ளது தெரிகிறது.

தலபான்களின் தாக்குதல் மிகப்பெரிய இராஜதந்திரப் பின்னணியில் நடந்துள்ளதாகவே மேலை நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேட்டோ அமைதிக்காக எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தகர்ப்பதற்கு தலபான்கள் எடுத்த முயற்சியே இந்தத் தாக்குதல் என்று டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லி சுவிண்டேல் கூறியுள்ளதை இங்கு அவதானிக்க வேண்டும்.

கேள்விகள்…

ரஸ்ய தூதராலயத்தை ஏன் அவர்கள் தாக்கினார்கள்… இது முதல் கேள்வி..

அதுபோல சீன தூதராயத்தை ஏன் தாக்கவில்லை.. இது இரண்டாவது கேள்வி.

நேற்றய 18 மணி நேர தலபான்களின் தாக்குதல்களின் மர்ம முடிச்சு இந்த இரண்டு கேள்விகளுக்குள்ளும் முயங்கி நிற்கிறது அம்ம.. என்க..

http://www.alaikal.com/news/?p=102897

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.