Jump to content

பெங்களூரில் அதிர்ச்சிகர சம்பவம்: 6 வயது சிறுமி பள்ளியில் கூட்டு பலாத்காரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு: பெங்களூருவில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி 2 பேரால் பள்ளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவின் கிழக்குப்பகுதியில் விப்கியார் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நிஷா ( பெயர் மாற்றம்) என்ற சிறுமியை அப்பள்ளியில் பணிபுரியும் உடற் பயிற்சியாளரும், காவலாளியும் சேர்ந்து பள்ளியின் மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அச்சிறுமி கழிப்பறைக்கு சென்றபோதே அவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 2 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சிறுமியின் தாய் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணி புரிகிறார்.

சம்பவம் நிகழ்ந்த பின் வீடு திரும்பிய அச்சிறுமி தனக்கு சோர்வாகவும், உடல் வேதனையாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே தனக்கு நிகழ்ந்த கொடுமையை அச்சிறுமி தெரிவித்துள்ளார். அதன் பின்னரே இதுகுறித்த விவரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  சிறுமியிடம் கொடூரமாக நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் 20 க்கும் அதிகமான உடற் பயிற்சியாளர்கள் பணிபுரிவதால், குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள அணி வகுப்பு ஒன்றை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுவரை 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ள அந்த பள்ளி நிர்வாகிகளும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

இதனிடையே இதுகுறித்த தகவல் இதர பெற்றோர்களுக்கும் தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் ஒன்று திரண்டு, பள்ளி நேரத்தில் தங்களது குழந்தைகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி,  பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பள்ளிக்குள் புகுந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

bangalore%20school.jpg

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதானப்படுத்திய பள்ளி நிர்வாகி ஒருவர், இனிமேல் பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும், பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதனிடையே இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த பள்ளி முதல்வர்,  பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்துவது குறைகளை தெரிவிக்கும் முறை அல்ல என்றும், இதுபோன்ற குறைகளை தெரிவிக்க தனியாக ஒரு இமெயில் முகவரி அளிக்கப்படும்; அந்த முகவரியில் பெற்றோர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

இந்தியாவில் பரவலாக பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்திலேயே ஒரு 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம், இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்னையின் தீவிரத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக உள்ளது.

இதற்கான தீர்வு அரசிடம் மட்டுமல்ல...ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளிடம் நல்லொழுக்கத்தை கற்பித்து வளர்க்க வேண்டிய பெற்றோர்களிடமும் உள்ளது! 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30276

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.