Jump to content

வேட்டி கட்டியோரை அனுமதிக்காத கிளப்புகளின் அனுமதி ரத்து செய்யப்படும்: முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை! Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/tn-cm-jayalalithaa-warns-clubs-on-dhoti-issue-206087.html


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டி கட்டியோரை அனுமதிக்காத கிளப்புகளின் அனுமதி ரத்து செய்யப்படும்: முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை! Posted by: Mathi Published: Wednesday, July 16, 2014, 12:31 [iST] சென்னை: வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டி சென்ற காரணத்தால் நீதிபதி ஹரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர்கள் ஆர். காந்தி, சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக சட்டசபையிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் வேட்டி விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது: வேட்டி கட்டிக் கொண்டு சென்ற நீதிபதியை அனுமதிக்காத கிளப்பின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காதது தமிழர் நாகரிகத்தை அவமதிக்கும் செயல். தமிழர் நாகரிகத்தைக் கொச்சைப்படுத்தும் செயல். வேட்டி கட்டியோரை அனுமதிக்கமாட்டேன் என்று அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்று 67 ஆண்டுகளான பின்னரும் வேட்டி கட்டியோரை அனுமதிக்கமாட்டோம் என்பது வேதனைக்குரியது. வேட்டி கட்டியவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய கிளப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் கிளப்புகள் சட்டத்தில் நடப்பு கூட்டத் தொடரிலேயே திருத்தங்கள் கொண்டுவரப்படும். இந்த பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட கிளப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்பட்டால் இத்தகைய கிளப்புகளின் அனுமதி ரத்து செய்யப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/tn-cm-jayalalithaa-warns-clubs-on-dhoti-issue-206087.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட்டி அரசியல் செய்யும் தமிழக கட்சிகள்.....?

 
வேட்டி தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம்....தமிழ் நாட்டில் இருந்து கொண்டு செயல்படும் தனியார் கிளப்புகள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் ( இது தமிழ் நாட்டில் சொசைட்டி அதாவது கூட்டுறவு சங்கம் என்ற அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டவை...)
 
மற்றும் தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்தும் கூட்டங்களில் வேட்டி கட்டிக் கொண்டு தமிழன் மட்டுமல்ல வேறு யாருமே அணிந்து வரக் கூடாது....
 
மீறி அணிந்து வந்தால் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை....
 
இந்த விவகாரத்தில் சமீபத்தில் சிக்கிய தமிழக நீதிபதியும் உயர்நீதிமன்ற வழக்குரைஞரும் வெளியேற்றப்பட்டவுடன்....கொந்தளித்த தமிழக கட்சிகள் காங்கிரஸ் கட்சி உட்பட...
 
இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வரும் இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளார்....ஆக வேட்டிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேட்டி கட்டும் தமிழனுக்கு இல்லை எனலாமா..?
 
- சங்கிலிக்கருப்பு - 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வரின், இந்த நடவடிக்கை நியாயமானது.
வேட்டி கட்டிய தமிழன், உங்கள் கிளப்புக்கு வரக் கூடாதென்றால்....
உங்கள் கிளப்பை, தமிழ் நாட்டில் மூடி விட்டு... இங்கிலாந்தில் நடத்துங்கள்.

வெள்ளைக்காரன் வைத்த சட்டத்தை... இன்றும், கண்மூடி... பின்பற்றிக் கொண்டு இருக்கும் தமிழனை...

லைட் போஸ்டில் கட்டி வைத்து, நெத்தியில் (நெருப்பால்) சூடு வைக்கணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.