Jump to content

காஸா நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம்


Recommended Posts

காஸா நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம்

 

பலஸ்தீன தலைவருடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல்

n1407164.jpgபலஸ்தீனில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு ள்ளார்.

பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, பலஸ்தீனின் பிந்திய நிலவரங்கள் குறித்து அறிந்துகொண்டதுடன், உயிரிழந்த மக்களுக்குத் தனது ஆழ்ந்த கவலையையும் வெளியி ட்டார்.

காஸா பகுதியில் பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழ ப்புகள் குறித்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விளக்கமளித்தார். உயிரிழந்த மக்களுக்கு அனுதாபங்களைத் தெரி விப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் 170 பலஸ்தீனிய மக்கள்

உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காஸா பகுதியில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசு கவலை

காஸா பகுதியில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாக அப்பாவி உயிர்கள் பல இழக்கப்படுவதுடன், பாரிய சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவ தாகவும், எல்லைதாண்டிய ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்புக்கள் வன் முறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை யொன்றை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும். பிராந்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த க்கூடிய இறுதித் தீர்வை பேச்சுவார்த்தை மூலமே எட்ட முடியும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் உயிர்களைப் பாதுகாக்கக் கூடிய சரியான தீர்வொன்றுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக் கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://thinakaran.lk/2014/07/16/?fn=n1407164

Link to comment
Share on other sites

கொடுங்கோலன் ராஜபக்சவின் நண்பர்களான பலஸ்தீனிய தலைவர்கள் தர்மம் ஏதுமில்லாமல் நம்மீது இலங்கை நடத்திய இனப்படுகொளையை ஆதரித்து நின்றாலும் நாம் தர்மநெறிநின்று மனிதாபிமானத்துடன் பலஸ்தீனிய மக்கள் சார்பாக குரல்கொடுப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.