Jump to content

'இஸ்ரேலின் தாக்குதலில் பலியானவர்கள் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள்'


Recommended Posts

140711142852_gaza_index_11_07_304x171_af

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் 120க்கும் மேற்பட்ட மக்கள் பலி

காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.

ராக்கெட் தாக்குதல்களில் எந்தவொரு இஸ்ரேலியரும் கொல்லப்படவில்லை.

பீய்ட் லாஹியா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று பயன்படுத்திவந்த கட்டடம் மீது நடந்துள்ள வான் தாக்குதல்களில் அங்கவீனச் சிறார்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மருத்துவத்துறை தகவல்கள் கூறுகின்றன.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140712_israel_gasa.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா: இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளப்படுகின்றன.

 

மக்கள்: ஆமா.. எங்கட சாவை எண்ணிக்கிட்டு.. நீங்க கதிரையில இருந்து பாடம் படிங்க. :(:icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.
உதை சொல்ல நீங்கள் ஏன்? பத்திரிகை நிருபர்கள் சொல்லுவார்கள் தானே.....சாதாரண பொதுமக்களின் உயிரிழப்பை தடுக்க எதாவது நடவடிக்கை எடுங்கள் ....அப்பதான் ஐ.நா சபை மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.

 

 

இதை நான் மறுக்கின்றேன்....இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கனேடிய பிரதமர் இஸ்ரேலியரின் பலஸ்தீனியர் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி உள்ளார். இதுவே கனேடியர்களூக்கு மேல் யாராவது குண்டு தாக்குதல் நடாத்தி 75 கனேடியர்கள் இறந்திருந்தால் அதனை இன்னுமொரு நாடு நியாயப்படுத்தி இருந்தால் அவர்களை நிச்சயமாக கனடா பயங்கரவாதி என கூறும். இவர்களின் இரட்டை முகத்தை ஒரு சிலரை தவிர உலகம் நன்கே அறிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பாலூட்டி வளர்த்தகிளி கனடா அல்லவா? :D     அமெரிக்காவில் காட்சிகள் மாறும் போது கனடாவின் கானங்களும் மாறும்..... :icon_idea:

Link to comment
Share on other sites

அமேரிக்கா பாலூட்டி வளர்க்கும் கிளி இஸ்ரேல்....கனடா அமெரிக்காவின் பட்டியில் உள்ள ஒரு செம்மறி...அவர்களுக்கு அமெரிக்காவை மீறிய சுயாதீனமான வெளியுறவு கொள்கை இல்லை...அதுவும் இஸ்ரேல் விடயத்தில் அறவே இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இறந்தது பொதுமக்களாக இருக்கலாம்.
ஆனால் போர் பயங்கர வாதிகளுக்கு எதிரானது என்பதை மறந்தவர்கள்தான். கனடா அமெரிக்க விற்கு எதிராக கருத்து வைக்கிறார்கள். 
Link to comment
Share on other sites

காஸாவை பார்த்த பிறகும் உலகம் இலங்கையை தண்டிக்கும் என்றால் அது கனவுலகில் மட்டுமே சாத்தியம்......

முட்டாள் ஹமாஸ்...பெண்கள்..பிள்ளைகள்...மருத்துவனைகளுள் ஒழிந்திருந்தால் இது தான் பலன்.... :) (அது தான் ஸ்டீவின் கார்பர் சொல்லுவது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இறந்தது பொதுமக்களாக இருக்கலாம்.
ஆனால் போர் பயங்கர வாதிகளுக்கு எதிரானது என்பதை மறந்தவர்கள்தான். கனடா அமெரிக்க விற்கு எதிராக கருத்து வைக்கிறார்கள். 

 

 

இஸ்ரேலினால் காஸாமீது நடத்தப்படும் தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் என்றால், ஈழத்தில் தமிழர்கள் மேல் நடத்தப்பட்டதும் பயங்கரவாதிகளது தாக்குதல் என்று நாம் ஏற்றுக்கொள்வோமா ?

 

எனென்றால், இன்று ஹமாஸ் இஸ்ரேலின்மேல் ராக்கெட் தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானதுதான் 2009 இற்குமுன்னர் புலிகள் தெற்கில் நடத்திய தாக்குதல்கள். தமது பொதுமக்களைக் கொல்கிறார்கள் என்று கூறித்தான் புலிகளை அழிக்கிறோம் என்று சிங்களம் புலிகளோடு மக்களையும் அழித்தது.

 

இன்று இஸ்ரேல் செய்வதை வேடிக்கை பார்ப்பதுபோலத்தான் அன்று இலங்கை செய்ததையும் உலகம் வேடிக்கை பார்த்தது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த நாடும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

 

2009 வரை சிங்களம் தமிழருக்குச் செய்ததற்கு நிகராக இன்றுளைஸ்ரேல் பாள்ஸ்த்தினியர்களுக்கு செய்கிறது. ஆகவே இஸ்ரேலின் நடவடிக்கையை நாம் சரியென்று வாதிடுவது எமக்கு நடந்ததையும் சரியென்று ஏற்றுக்கொள்வதற்குச் சமம்.

 

ஹமாஸும் பாலஸ்த்தீனியர்களும் முஸ்லீம்கள் என்பதை ஒதுக்கிவைத்துப் பார்த்தால், அவர்களுக்கும் எமக்கும் அதிக வேற்றுமையில்லை என்பது புரியும்.

 

இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பாலஸ்த்தீனத்தில் இன்று நடப்பது இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கெதிரான போரில்லை. ஆக்கிரமிப்பாளனுக்கும், ஆக்கிரமிப்பிற்குள்ளாவனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பாலஸ்த்தீனத்தில் இன்று நடப்பது இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கெதிரான போரில்லை. ஆக்கிரமிப்பாளனுக்கும், ஆக்கிரமிப்பிற்குள்ளாவனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

 

தமிழ்புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.....இது தமிழ் மக்களுக்கு எதிரான போரில்லை ....இப்படி சொல்லிதான் அமேரிக்கா,நோர்வே,இந்தியா,இங்கிலாந்து,அவுஸ்ரேலியா,சீனா ,போன்ற நாடுகள் ஒத்த கருத்துடன் சிறிலங்காவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் பீரங்கி குண்டுகளை மலர் மாலை என்கிறதா அமேரிக்கா...?
 
இஸ்ரேலின் விமான தாக்குதலை - பீரங்கி தாக்குதலை உலக நாடுகள் ஆதரிக்கின்றன....?
 

கனேடிய பிரதமர் இஸ்ரேலியரின் பலஸ்தீனியர் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி உள்ளார். 

 
காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.
 
இஸ்ரேல் நாடு தங்களை பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது - அமேரிக்கா..!
 
இஸ்ரேல் நாட்டின் தாக்குதலை / தற்காத்துக் கொள்வதை அமேரிக்கா ஆதரிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துரையின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்...
 
இந்திய பாராளுமன்றத்தில் இஸ்ரேலின் பாலஸ்தீனிய தாக்குதலை பற்றி பேசுவதற்கு மறுத்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்..!
 
இஸ்ரேல் இந்தியாவின் நட்பு நாடு என்று கூறினார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்....எனவே இஸ்ரேல் குறித்து இந்திய பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்க முடியாது என்றார்...
 
- சங்கிலிக்கருப்பு - 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.....இது தமிழ் மக்களுக்கு எதிரான போரில்லை ....இப்படி சொல்லிதான் அமேரிக்கா,நோர்வே,இந்தியா,இங்கிலாந்து,அவுஸ்ரேலியா,சீனா ,போன்ற நாடுகள் ஒத்த கருத்துடன் சிறிலங்காவுக்கு ஆதரவு கொடுத்தவர்க

 

 

அண்ணா,

 

அதுதான் சொல்லிவிட்டேனே பாலஸ்த்தீனத்தில் நடப்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கெதிரான போரில்லையென்று. அது ஆக்கிரமிப்பாளனுக்கும், ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படுபவனுக்குமான போர் என்று !

 

ஆனால் ஒன்று, இன்று பாலஸ்த்தீனத்தில் நடப்பதற்கும் அன்று வன்னியில் நடந்ததற்கும் அதிக வேறுபாடில்லை. பாவிக்கப்படும் சொற்பதங்களுக்கு அதிக வேறுபாடில்லை. உதாரணத்திற்கு, "மனிதக் கேட்யங்கள்", "மக்களுக்கான பாதுகாப்பு வலயங்கள்" "யுத்த நிறுத்த ஒப்பந்தம் - ஒப்பந்தமில்லை ", " மக்களுக்கான உணவு, மருத்துவ வசதிகளுக்கான தடை", "மக்கள் வாழிடங்களில் ராணுவ நிலைகளை அமைத்த போராளிகள்". "ஐ. நா வின் வேண்டுகோள்", " மக்களைக் காப்பதற்கான மனிதாபிமான போர் நடவடிக்கை "....இப்படிப் பல.

 

நாம் செய்தபோது சரியென்று பட்டவை மற்றையவன் செய்யும்போது பிழயென்று தெரிவது ஏனோ ??? விடை தெரியாக் கேள்விகள் இப்போது எழுகின்றன...என்ன செய்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை... இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து,,,,
இலங்கை முஸ்லிம்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யாமல், இருப்பதன் மர்மம் என்னவோ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை... இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து,,,,

இலங்கை முஸ்லிம்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யாமல், இருப்பதன் மர்மம் என்னவோ......

 

எல்லாம் ஒரு பாதுகாப்புகருதித்தான்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.