Jump to content

சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம்......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10635895_554838257974972_162012542828699

 

நீங்கள் பல இடங்களில் குதிரையுடன் கூடிய அரச சிலைகளைக் கண்டிருப்பீர்கள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு ஆனால் உண்மை காரணம் அதுவல்ல அச் சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்...
அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்...
அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித் தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்...
அந்த மன்னர் இயற்கை மரணமெய்து விட்டார் என்பதைக் குறிக்கும்.

இப்போது காரணம் புரிந்திருக்குமே.. :)
 

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலைகளை வடிவமைப்பது.... சிற்பியின் வெளிப்பாடு என, இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.
புதிய தகவல், குமாரசாமி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒரு சர்வதேச விதி என்று சொல்வதற்கில்லை. அதிகளவில் அமெரிகாவும் இங்கிலாந்தும் இதை பின்பற்றினாலும் அங்கும் பல விதிவிலக்குகள் உள்ளதாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலைகளை வடிவமைப்பது.... சிற்பியின் வெளிப்பாடு என, இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.

புதிய தகவல், குமாரசாமி அண்ணா.

 

சிறித்தம்பி! எனக்கும் உங்கள் நிலமைதான்.. :D ...இந்த செய்தியை வாசித்த பின்னர்தான் ஐரோப்பிய நாடுகளின் சிலைகளை கூகுள் மூலம் பார்த்தேன். உண்மை இல்லாமலில்லை. உதாரணத்திற்கு யாழில் இருக்கும் சங்கிலியன் சிலையின் மாற்றம்.

இதை ஒரு சர்வதேச விதி என்று சொல்வதற்கில்லை. அதிகளவில் அமெரிகாவும் இங்கிலாந்தும் இதை பின்பற்றினாலும் அங்கும் பல விதிவிலக்குகள் உள்ளதாகவே தெரிகிறது.

 

ரஷ்யாவும் அதனை சார்ந்த நாடுகளும் இன்னும் பின்பற்றுகின்றன என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல் கு. சா . நன்றி...!
சங்கிலியன் சிலையில் அவர் குதிரையின் மேல் இருக்கின்றார். குதிரை ஒரு காலைத் தூக்கி நிக்குது...!

800px-Sankiliyan.JPG

Link to comment
Share on other sites

சென்னையில் கலைஞர் இரண்டு காலில் நிற்கும் சிலை ஒன்றை முன்பு அடித்து உடைத்தார்கள். :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தகவல், குமாரசாமி அண்ணா.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியா விஷயம் இன்று தான் தெரிகிறது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.