Jump to content

தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல


Recommended Posts

தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல

அமெரிக்கா மற்றும் பல மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ளதாகிய இலங்கைக்கு எதிரானதென்று கூறப்படும் பிரேரணை மீது 22. 03. 2012 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இலங்கை இரு நாடுகள் தரப்பிலும் மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகள் மத்தியில் கடந்த பல நாட்களாக சூறாவளிப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். குறித்த பிரேரணையானது வெற்றியை எட்டக் கூடிய அளவுக்கு ஆதரவுள்ளதாக அறிக்கைகள் காணப்படுவதால் ராஜபக்ஷ அரசாங்கம் கவலை அடைந்துள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் இலங்கை தரப்பிலும் குறிப்பிடத்தக்களவு ஆதரவு திரட்டப்பட்டு வந்துள்ளதாக அறியக் கிடக்கிறது. இருந்த போதிலும் வெற்றி இலங்கையின் கைக்கெட்டும் என்று கூறுவதற்கில்லை என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்யப்படும் அதே வேளை இலங்கை தரப்பில் வேகமான காய் நகர்த்தல்கள் அதிகளவு அங்கலாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதியின் அறை கூவல்

சென்ற மாதம் 27 ஆம் திகதி முதல் இலங்கை அரச தரப்பில் மேற் குறித்த பிரேரணைக் கெதிராக நடத்தப்பட்டு வருவதற்கப்பால் “இலங்கை மீது கை வையாதே“ இலங்கை மக்களே கிளருங்கள் என ஜனாதிபதி ராஜபக்ஷ சென்ற வாரம் அலரி மாளிகையில் அமைச்சர் விமல் வீரவன்ச சகிதம் வீடமைப்பு விடயம் தொடர்பானதொரு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அறை கூவல் விடுத்தார்.

இலங்கைக்கு வெளிநாட்டு அறிவுறுத்தல்கள், தலையீடுகள் எதுவுமே தேவையில்லை என்று அவர் கூறியதோடு யுத்தத்தில் வெற்றியீட்டிய கட்டத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார். அதாவது பயங்கரவாதம் என்ற ஈனத்தை முறியடிப்பதற்கு கூலிப்படைகளை அமர்த்தவில்லை. உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட இராணுவ மூலோபாயத்தின் அடிப்படையில் எமது தளபதிகள் வழி நடத்தலில் முற்றிலும் எமது வீரதீரமான படையணியினராலேயே யுத்தம் நடத்தப்பட்டது என்று கூறியதோடு நின்று விடாமல் எமது கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களின் அடிப்படையில் நாட்டை நடத்திச் செல்வதற்கு வேண்டிய அறிவு, ஆற்றல், பலம் யாவும் இலங்கையில் உண்டு. அந்நிய சக்திகளிடமிருந்து கற்றுக் கொள்வதற்கோ எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழி காட்டுவதற்கோ ஒன்றுமே இல்லை என்று ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.

மேலும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்றெல்லாம் பிரதேச வேறு பாடின்றி இனம், மதம், குலம் போன்றவை ரீதியாக வேறுபாடின்றி கிளர்ந்தெழ வேண்டும் என்றும் ஒரு தாய் பிள்ளைகள் ஆகிய நாம் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறாகவே இலங்கை மக்கள் எல்லோரும் சமாதானத்தின் பலனை அனுபவிக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார் அல்லவா?

நல்லாட்சி என்பது பலத்த கேள்விக் குறியாகியுள்ளது

ஜனாதிபதி ராஜபக்ஷ அலரிமாளிகையில் நிகழ்த்திய “ மலைப் பிரசங்கம்“ ஒரு வகையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வந்ததன் மறு பதிப்பாகவும் நோக்க வேண்டியுள்ளது. பன்னிரண்டுக்கும் அதிகமான நாடுகள் யுத்தத்தின் வெற்றிக்குக் கை கொடுத்ததாக அன்று ஜனாதிபதி கூறி வைத்தது ஞாபகம்.

குறிப்பாக இந்தியா வழங்கிய பங்களிப்பினை அரசாங்க உயர் மட்டத்தினர் வெகுவாக பாராட்டினர். மற்றும் அமெரிக்கா வழங்கிய புலனாய்வு மற்றும் செய்மதி சேவைகள் யுத்த வெற்றிக்கு கைகொடுத்த விடயமும் தெரியாத ஒன்றல்ல. மற்றும் வெகு ஜீவகாருண்ய பாணியில் மிகக் கவனமாக அன்று நடத்தப்பட்டது “ மனிதாபிமான செயற்பாடுகள் என்று அரசாங்கம் நடித்து வந்ததாயினும் அதனை யுத்தம் என்று இன்று ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ளதைக் காணலாம்.

மற்றும் பிரதேச மற்றும் இன, மத, குல, வேறுபாடின்றி கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பதற்கு ஒரு தார்மீக யோக்கியதை வேண்டுமல்லவா?

ஏனென்றால் மேற் குறித்த சகல விதமான வேறுபாடுகளையும் களைந்து அனைத்து மக்களையும் உள்ளீர்த்து நல்லாட்சி நடத்துவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் புறப்படும் என்பது பலத்த கேள்விக்குறியாக உள்ளது. முற்றிலும் மாறாக அரசாங்கத்துக்குள்ளேயே இடம் பெற்று வரும் அடாவடித்தனங்களின் பெறுபேறுகள் வெளிவந்தவண்ணமுள்ளன. சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் கொலைகள் ஆங்காங்கே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவை கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாயினும் அது பொது மக்களால முறியடிக்கப்பட்டு கடத்தல் காரர்கள் ஒப்படைக்கப்பட்டனராயினும் அவர்கள் இராணுவத்தரப்பினர் என்பதும் விரைந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் உலகறிந்த விடயமாகி விட்டதல்லவா?

உதயசாந்த வேறு யாருமல்ல ஆளும் ஐ.ம.சு.மு. வைச் சேர்ந்த பிரமுகர் என்பதும் தெரியாததொன்றல்ல. கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி உதய சாந்தவின் சகோதரர் ஜானக்க பிரபாத் தொதபேக்ம இதே இராணுவ பிரமுகர்கள் சிலரால் கடத்தப்பட்டு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமலுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இன்று இலங்கை அரசாங்கம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த தருணத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றனவென்றால் தண்டனை விலக்கல் கலாசாரமானது எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையே வெள்ளிடை மலை போல காட்டுகின்றது. இன்று அரசாங்க கட்சிக்காரரே இலக்கு வைக்கப்பட்டு வரும் சூழலில் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்கும் நாள் வந்து கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி விமர்சகர்களால் எழுப்பப்படுவதைக் காண முடிகிறது.

சம்பிக்க ரணவக்கையின் சித்து விளையாட்டு மற்றும் இன்றைய ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுகள் மீது மீண்டும் நோக்குவோமாயின் முதற்கண் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் கவனத்தில் கொள்ளப்படக்கூடியதாகும். போர்க் குற்றச்சாட்டுகள் மீது விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனமான சர்வதேச சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் ( ஆயர்) வேண்டுகோள் விடுத்திருப்பதன் காரணமாகவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று தான் கூறியுள்ளதாக பத்திரிகையாளர்கள் மாநாட்டில் எழுப்பட்ட கேள்விக்கு ரணவக்க பதிலளித்தார்.

சரி அப்படியானால் இது தொடர்பான விண்ணப்பக் கடிதத்தில் ஒப்பமிட்ட ஏனைய 30 கத்தோலிக்க அடிகள் மாருக்கும் எதிராக வழக்குத் தொடர தேவையில்லையா என்று எழுப்பிய கேள்விக்கு மக்கள் யாரும் தத்தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குச் சுதந்திரம் உண்டு.

ஆயினும் அவர்கள் நல்லிணக்க முயற்சிக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்கள் மன்னிக்கும் மனப்பான்மையுடன் நலமான எதிர் காலத்தை நோக்கி நிற்க வேண்டும் என்று ரணவக்க பதிலளித்தார். இனவாதத்தை வெறியாகக் கொண்டு இனக் கலவரம் ஒன்றினைத் தூண்டும் மனோ பாவத்தைக் கொண்டிருப்பவராகிய சம்பிக்க ரணவக்க நல்லிணக்கம் பற்றிப் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. ரணவக்க தனது அறிவுக்கு எட்டாத விடயங்கள் பற்றியே பேசுகிறார் என்று ஆயர் பதிலடி கொடுத்துள்ளதையும் காண முடிகிறது.

தூதுவர் தமரா குணநாயகம் பேசுகிறார்

அமெரிக்காவின் பிரேரணையானது இலங்கையில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கு மேற்கு நாடுகள் கங்கணம் கட்டி நிற்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் கூறியதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் தமரா அம்மையார் அளித்த பேட்டியொன்றில் இப் பிரச்சினை எழுப்பப்பட்ட போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கு நாடுகளின் பார்வையில் இலங்கை புவியியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்திருப்பதாலும் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகவும் அதற்கப்பால் உலகில் மிக அதிகளவு பொருளாதார மற்றும் மனித வளங்களைக் கொண்டிருப்பதால் உலகாதிக்கம் செய்வதற்கு தென்கிழக்காசியாவில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறதாயினும் இது சுதந்திரமானதும் இறைமையுள்ளதுமான இலங்கை அரசாங்கத்துக்கு, அது மட்டுமல்லாமல் உலகில் படு மூர்க்கத் தனமான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்ததாகிய இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கையாண்டு வரும் தந்திரோபாயங்கள் நிச்சயமாக ஒத்து வராதவை என்றும் அவர்கள் விரும்பும் அடி பணியும் அரசாங்கம் இலங்கையில் இன்று இல்லை என்றும் அர்த்தப்பட தமரா அம்மையார் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கடைப்பிடித்து வருவது அப்பட்டமான இரட்டை வேடமும் ஆசாடபூதித்தனமும் ஆகுமென்றும் அவர் கடிந்துள்ளார். அது உண்மைதான் என்றாலும் கூட இலங்கை அரசாங்கமும் நிழற் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன்னைப் பார்க்க வேண்டிய தேவையை மறந்து விடமுடியாது.

மன்னார் ஆயருக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய ( ஜே. எச். யூ.) தரப்பினர் வழக்குத் தொடரப் போகிறார்களாமே என்று எழுப்பிய கேள்விக்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் (ஃஃகீஇ) ஏனையோரைப் போலவே ஆயரும் சாட்சியம் அளித்ததை அடுத்து அவர் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் ஆணைக்குழு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது என்று தூதுவர் தமரா கூறியதோடு நாம் இப்போது சமாதானம் மற்றும் நல்லிணக்கப் பாதையில் பயணிக்கத் தலைப்பட வேண்டுமே தவிர சர்ச்சைகளிலும் முரண்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கத் வேண்டியதில்லை என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். அத்தோடு நின்றுவிடாமல் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமரா அம்மையார் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ரோமா புரியில் வத்திக்கான் மையத்திற்கும் தான் சம காலத்தில் தூதுவராக பணியாற்றி வருவதால் ஙீஙஐ பாப்பாண்டவர் அருளப்பருடனும் வேறு பல வத்திக்கான உயர் மட்டத்தினரிடமும் கலந்துரையாடியதாகவும் அவர்கள் இலங்கை நிலைமை தொடர்பாக கொண்டிருக்கும் அறிவைப் பாராட்டியதோடு நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் அவர் அக மகிழ்ந்துள்ளதைக் காண முடிகிறது.

தூதுவர் என்பவர் ஒருவர் தனது நாட்டின் நன்மைக்காக வெளிநாடுகளில் தங்குபவர் என்று கூறப்படுவதுண்டு. அவர் பொய்களையும் கூறுபவர் என்றும் இது அர்த்தப்படும்.

மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக அதாவது வெளிநாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து வெளியிட்டுள்ளதை யாரும் அறிவர். அதில் தவறில்லை. ஆனால் அவர் அநேகமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலித்து வருவதும் இலங்கை கத்தோலிக்க சமூகத்திற்குள் வடக்கு தெற்கு விரிசல்கள் உருவாகுவதைப் பார்த்து வாளா விருப்பதும்தான் கவலைக்குரியதாகும்.

http://www.thinakkural.com/articles/11431-2012-03-20-19-05-50.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
    • நல்லா கேட்டியள் போங்கோ... நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்
    • போட்டியில் கலந்துகொண்ட @ஈழப்பிரியன் ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் மூன்று பேர் தேவை!
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG LSG   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பகிர்வுக்கு நன்றி. டொமினோஸ், பீட்சா ஹட் இரெண்டிலும் தக்காளி சோஸ்தான் கொடுத்தார்கள். யாழ்பாணத்து அரிய வகை ஏழைகள் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பதை பார்க்க - சிலருக்கு கரோலினா ரீப்பர் சோஸ் சாப்பிட்டது போல உறைக்கப்போகுது🤣. # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.