Jump to content

போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும் - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும் - யதீந்திரா

War.jpg

படம் | PEDRO UGARTE/AFP/Getty Images

இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர் டெஸ்மன் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் கிறேன் ஆகியோரே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்கள் ஆவர். பிரித்தானிய சட்டவாளரான சேர் டெஸ்மன் டி சில்வா (Sir Desmond de Silva) சர்வதேச போர் குற்ற விடயங்களை கையாளுவதில் மிகுந்த தேர்ச்சியுடைவராவார். சியாரா லியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் தலைமை சட்டவாளராக தொழிற்பட்ட டெஸ்மன், பின்னர் ஜ.நாவின் தலைமைச் சட்டவாளராக நியமிக்கப்பட்டவராவார். சேர் ஜெப்ரி நைஸ் (Sir Geoffrey Nice) புகழ்பெற்ற சட்டத்துறை பேராசிரியராவார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் ஜெப்ரி, யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் பிரதி சட்டவாளராக செயற்பட்டவர். இறுதியானவர் பேராசிரியர் டேவிட் கிறேன் (Prof. David Crane) அமெரிக்காவின் புகழ்பெற்ற சட்டத்துறை பேராசிரியராவார். டெஸ்மன் டி சில்வாவிற்கு முன்னர் சியாரோ லியோனின் சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை சட்டவாளராக பணியாற்றியிருந்த இவர், அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு பணியகத்தின் (Defense Intelligence Agency) பிரதி தலைவராகவும் இருந்தவர். இவ்வாறானவர்களே தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கவுள்ளனர்.

நவிப்பிள்ளையினால் நியமிக்கப்பட்டுள்ள 12 பேர் அடங்கிய குழுவினருக்கு ஆலோசனை வழங்குவதற்கான மூவர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதை அறிவோம். அதனை எதிர்கொள்ளும் வகையில் அரசும் மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை தற்போது களத்தில் இறக்கியுள்ளது. போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை, அத்துறைகளில் சர்வதேச அளவில் அனுபவமுள்ள நிபுணர்களைக் கொண்டு எதிர்கொள்ளும் இராஜதந்திர முயற்சியிலேயேஅரசு இறங்கியிருக்கிறது என்பதையே மேற்படி நிபுணர்களின் நியமனம் தெளிவுறுத்துகின்றது. அரசு இதனை செய்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒவ்வொரு அரசும் தான் எதிர்கொண்டிருக்கிற நெருக்கடிகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் முடிந்தவரை முயற்சிக்கும். அத்தகைய முயற்சிகளில் அது வெற்றியை பெற்றுவிடவும் கூடும்; அல்லது வெற்றி பெறாதும் போகலாம்.

ஆளும் மஹிந்த அரசைப் பொறுத்தவரையில் அது, இரண்டு முனைகளின் ஊடாக செலாற்றுகிறது. ஒன்று, உலகம், ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கின்ற சூழலில், ஆசியாவில் எழுச்சியடைந்துவரும் பொருளாதார சக்திகளான சீனாவுடனும், இந்தியாவுடனும் சமளவான உறவை பேணுவதன் ஊடாக, மேற்குலக நெருக்கடிகளை தணிக்க அல்லது ஒரு எல்லைக்குள் முடக்கிவைக்க முயற்சிக்கிறது. உள்நாட்டு விவகாரங்களுக்குள் தலையிடாக் கொள்கையை தங்களுடைய வெளிவிவகாரக் கொள்கையாக கொண்டிருக்கும் சீனாவின் ஆதரவும், இலங்கையின் உள்விவகாரங்கள் அதிகம் சர்வதேச மயப்படுவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் மோடி தலைமையிலான இந்தியாவும் இப்போது கொழும்பிற்கு சாதகமாகவே இருக்கிறது. ஒரு புறம் இவ்வாறுஎழுச்சியடைந்து வரும் பிராந்திய சக்திகளின் நலன்களுடன் இணைந்து நிற்பதன் மூலம், கொழும்பு தற்போதைய மேற்குலக அழுத்தங்களை சமாளிக்க முயல்கிறது. இது ஒரு முனை நகர்வு என்றால், பிறிதொரு முனையில் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடான மேற்குலக அழுத்தங்களை, இவ்வாறான நிபுணர்களை வாடகைக்கு அமர்த்துவதன் ஊடாக, ஒரு எதிர் நிபுணத்துவ சவாலை கொடுக்க முயற்சிக்கிறது. இதற்கு முன்னரும் ஒரு அமெரிக்க நிபுணத்துவ அமைப்பை அரசு வாடகைக்கு அமர்த்தியிருந்தது. ஆனால், தற்போது சற்று மாறுபட்ட வகையில், அரசால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆணைக்குழுவிற்கு, ஆலோசனை வழங்கும் நோக்கிலேயேஜ.நா. குற்றவியல் நடைமுறைகளில் மிகுந்த தேர்ச்சியும் அனுபவமும் மிக்க மூவரை கொழும்பு நியமித்திருக்கின்றது. அரசால் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு அமைவாக இடம்பெறவில்லை என்னும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே, தற்போது மேற்படி சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளை அரசு உள்ளவாக்கிச் செயலாற்ற முனைந்திருக்கிறது. இதன் மூலம் இலங்கைக்குள் இடம்பெறும் விசாணைக்கும் ஒரு சர்வதேச தரம் உண்டு என்பதையேஅரசு நிரூபிக்க முயல்கிறது. இவைகள் அனைத்தையும் தொகுத்து, ஒரு வரியில் சொல்வதானால், அரசு அதன் பணியை செய்கிறது. தமிழர் தரப்பினர் எப்பணியை ஆற்றுவது?

தமிழ் மக்களுக்கான தேவை, இலங்கை தீவில் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழ்வதற்கான ஒரு ஏற்பாடு. அப்படியொரு ஏற்பாடு, வெளியிலிருந்து வரும் அழுத்தங்களால் சித்திக்குமா என்பது ஒரு கேள்வியென்றால், இவ்வாறான அழுத்தங்கள் நான் மேலே குறிப்பிட்டவாறான அரசின் இரு முனைப்பட்ட உபாயங்களால் வெற்றிகொள்ளப்பட்டு விடுமாயின், தமிழர் கோரிக்கைகளுக்கு என்ன நிகழும் என்பது அடுத்த கேள்வியாகிறது. நிலைமைகள் மாற்றமடைந்து கொண்டு செல்கின்றன. இலங்கையின் தமிழர் பிரச்சினையில் தாக்கம் செலுத்தக் கூடிய ஒரேயொரு நாடு என்று கருதப்படும் இந்தியா, கொழும்பை தனிமைப்படுத்தும் நோக்கிலான, சர்வதேச அழுத்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்று குறிப்பிடுகிறது. இலங்கை விவகாரத்தை கொழும்பு – புதுடில்லி என்னும் இருதரப்பு உரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமென்று குறிப்பிடுகிறது. அவ்வாறான இருதரப்பு உரையாடலில் கூட்டமைப்பும் ஒரு அங்கமாக இருக்கும். அத்தகைய சூழலில், கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணை விவகாரத்தை கையில் எடுக்க முடியுமா? தண்டிக்கும் நோக்கிலான ஒரு செயலுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு, இணங்கிப் போவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியுமா? இந்த இடத்தில் போர்குற்ற விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பு தன்னுடைய நிலைப்பாட்டை தமிழ் மக்கள் முன்வைக்க வேண்டுமா, இல்லையா? போர் குற்ற விசாரணையோ அல்லது வேறு ஏதும் தண்டிக்கும் நோக்கிலான சர்வதேச அணுகுமுறைகளோ தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் எந்தவொரு பங்களிப்பையும் வழங்கப் போவதில்லை.

மேலும், இங்கு அரசியல் தீர்வு குறித்து சிந்திக்கும்போதுபிறிதொரு விடயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக போர்ச் சூழலுக்குள் அகப்பட்டுக்கிடந்தனர். இந்தக் காலத்தில் வசதியுள்ள ஒரு தமிழ் மத்தியதர வர்க்கமானது, ஜரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டது. அவ்வாறு சென்றவர்கள் எப்போதும் சென்றவர்களே! இப்போதும் இங்கிருக்கிற தமிழ் மத்தியதர வர்க்கம், அந்த விருப்புடனனேயே இருக்கிறது. சமீபத்தில் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரத்தான் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருந்தார். யாழ்பாண பல்கலைக்கழகத்தில் “தமிழர்களின் எதிர்காலம்: சனத்தொகை ரீதியான ஒரு நோக்கு” (Future of Tamils: A demographic perspective) என்னும் தலைப்பில் இடம்பெற்ற உரையின்போதே, வல்லிபுரத்தான் மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார். 2031ஆம் ஆண்டளவில் தமிழர்கள் 10.3 வீதமாகவும், முஸ்லிம்கள் 10.8 வீதமாகவும் இருப்பர். இதன் மூலம் தமிழர்கள் இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இடத்திற்கு சென்றுவிடுவர். அவர் தன்னுடைய உரையின்போதுசுவாரஷ்யமான ஒரு உதாரணத்தை எடுத்தாண்டிருந்தார். இலங்கையில் அருகிவரும் (Endangered) மிருகங்களான யானை, புலி மற்றும் டொல்பின் போன்று இந்துத் தமிழர்களும் அருகிவிடுவர். தமிழ் அரசியல் தலைமைகள் என்போர் மிகவும் ஊன்றிக் கவனிக்கவேண்டிய கருத்திது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக் கோஷங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்ற சூழலில், அவ்வாறான ஒரு தீர்வானது, காலப்போக்கில் தேவையற்ற ஒன்றாக்கிவிடக் கூடியளவிற்கு நிலைமைகள் மாற்றமடைந்து செல்கின்றன.

எனவே, இன்றைய சூழலில் சாத்தியமான விடயங்களை முன்னிறுத்தி அதனூடாக பயணிப்பதற்கான வழிகளை தமிழர் தரப்புக்கள் கண்டடைய வேண்டியுள்ளது. போர்க்குற்றம், சர்வதேச அழுத்தம் போன்ற சொற்களில் குளிர்காய்ந்து கொண்டிருந்தால், இறுதியில் தமிழர் அரசியல் கோரிக்கைகள் என்பது, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடலாம். முன்னர் மாகாண சபை விடயத்தில் நடந்ததும் இதுதான். யதார்த்தத்தை புறம்தள்ளி வீரவசனங்களை உரைத்தோரின் பக்கமாக வசியப்பட்டதன் விளைவு, தற்போது அந்த மாகாண சபை முறைமையில் உள்ளதைக் கூட பெற முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

http://maatram.org/?p=1703

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.