Jump to content

சிறிலங்காவின் மோடியாக அதிபர் ராஜபக்ச உள்ளார் - இந்திய ஆய்வாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத் தேசியவாத அமைப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்டியிலுள்ள தலதா மாளிகை போன்றன மதிப்பளிக்கப்படுதல் போன்றன சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலைக் கட்டியம் கூறுகின்றன.

இவ்வாறு Swapan Dasgupta என்னும் இந்திய ஊடகவியலாளர் THE ASIAN AGE ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2015ன் முற்பகுதியில் இடம்பெறுவதற்கான சாத்தியமுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெறுகின்றன. சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்திற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண சபைக்கும் இடையில் நிலவும் முடிவுறாத குழப்பநிலையானது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. வடக்கு மாகாண அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, வடக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்வாகம் மேற்கொள்வதற்கு முன்னரான நாட்களில் பேணப்பட்ட அரசியலைத் தற்போது தொடர்கின்றது.

சிறிலங்கா இராணுவத்தினரால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர், வடக்கு மாகாணத்தின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், இதன்மூலம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய கடப்பாட்டைத் தாம் கொண்டுள்ளனர் என்பதை வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் நன்கறிவர்.

13 மாதங்களுக்கு முன்னர் நான் சிறிலங்காவில் இருந்தபோது, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நிறுத்துவது அல்லது சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளுக்குச் சார்பாக வாக்குகளைப் பதிவு செய்தல் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் 'இரகசிய' சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ராஜபக்ச அரசாங்கத்திலுள்ள கடும்போக்காளர்கள் ஒருபோதும் தமிழர் பகுதிகளில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கமாட்டார்கள் என அக்காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறான எதிர்வுகூறலை அடுத்து, ராஜபக்ச அரசாங்கத்தின் சதித் திட்டமானது பொய்யாகியது. சிறிலங்கா அதிபரின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணத்தில் தேர்தல்கள் இடம்பெற்றன. இத்தேர்தலில் வடக்கில் வாழ்ந்த பெருமளவான மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். எவ்வித தேர்தல் மீறல்களும் இன்றி வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இத்தேர்தல் இடம்பெற்றதிலிருந்து கூட்டமைப்பிற்கும் கொழும்பிலுள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் வடக்கின் அரசியல் அதிகாரம் தொடர்பில் பனிப்போர் இடம்பெறுகிறது. குறிப்பாக 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. வடக்கில் தனது பாதுகாப்பைத் தளர்த்துவதன் மூலம் இங்கே பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. 1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையில் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஏற்றுக்கொண்டதற்கமைவாக வடக்கில் இறையாண்மை ஆட்சி இடம்பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடையாக உள்ளதாக த.தே.கூட்டமைப்பினர் கருதுகின்றனர்.

ஈழத்தமிழர்கள் தொடர்பாக 370வது நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள 'சிறப்புத் தகுதியை' பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியா தனது முழுஅதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1980களின் பிற்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையானது சிறிலங்காவில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் பின்னர் இந்திய மத்திய அரசாங்கமானது, சிறிலங்கா விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான வரையறையைப் பின்பற்றுகிறது. அதாவது சிறிலங்காவிற்குள் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகளில் தனது தலையீட்டை மேற்கொள்வதை இந்தியா தவிர்த்து வருகிறது.

எதுஎவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கமானது சிறிலங்காவுடன் பேரம் பேசவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது. ஆனால் இந்த நகர்வானது பூச்சியமாகக் காணப்படுகின்றது. ஆனால் இந்திய நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக இந்திய மத்திய அரசாங்கமானது ஈழத்தமிழர் பிரச்சினைகளில் தலையீடு செய்ய முற்படுவதால் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையைப் பயன்படுத்தி சிறிலங்காவின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதானது முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. இந்த இடைவெளியானது சீனா, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில் அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தற்போது கொழும்பில் எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன.

முதலாவதாக, பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் தேர்தலில் வெற்றியீட்டிய பாரதீய ஜனதாக் கட்சியானது தமிழ்நாட்டிலிருந்து முன்வைக்கப்படும் நியாயமற்ற கோரிக்கைகளைத் தீர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவானது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தமை மற்றும் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்களின்; மாநாட்டை மன்மோகன் சிங் புறக்கணித்தமை போன்ற செயல்கள் மீண்டும் மோடியின் ஆட்சிக்காலத்தில் இடம்பெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவதாக, அனைத்துலக மனித உரிமை விவகாரம் தொடர்பில் திரு.மோடி போதியளவு அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளாமையானது, சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் அந்நாடு பெற்றுக் கொண்டுள்ள கசப்பான அனுபவங்களை இந்தியா மேலும் புரிந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவில் மனித உரிமைகள் மற்றும் மீளிணக்கப்பாடு போன்றவற்றை அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஊடாகச் செயற்படுத்த முனையும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ராஜபக்ச அரசாங்கம் அதிருப்தி கொள்வது தற்போது அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான போக்கிற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கும் என்கின்ற நம்பிக்கை நிலவுகிறது.

நிச்சயமாக, கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தால் நிறுவப்படும் முன்னோடித் திட்டங்கள் தொடர்பில் இந்தியா கவலை கொள்வதற்கு நியாயமான காரணம் முன்வைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கடந்த மாதம் சிறிலங்காவில் உள்ள ஐ.நா பணியகமானது, 'வாக்குப் பதிவு முறைமை' தொடர்பான கருத்தரங்குகளை நடாத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது வாக்களிப்பதில் இந்தியாவுக்கு முன்னரே உரிமையை வழங்கிய, வாக்களிப்பு வீதம் அதிகமுள்ள நாடான சிறிலங்காவில் ஐ.நா வாக்குப் பதிவு முறைமை தொடர்பில் கருத்தரங்குகளை வழங்குவதற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. ஐ.நா வின் இத்தகைய நகர்வானது, ராஜபக்ச எதிர்ப்பை உருவாக்கும் அரசியலுக்கான அனுசரணையா என எனக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மூன்றாவதாக, தமிழர் பிரச்சினையின் ஊடாக சிறிலங்காவுடனான உறவுநிலையை நோக்குபவர்களை விட, சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலை பாரதீய ஜனதாக் கட்சி நன்றாக ஆராய்ந்துள்ளது. மகாபோதி அமைப்பை நிறுவுவதற்காகவும் புத்தகாயாவை பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகவும் சியாமா பிரசாத் முகேர்ஜி நடவடிக்கைகள் எடுத்தமை மற்றும் இந்துத் தேசியவாத அமைப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்டியிலுள்ள தலதா மாளிகை போன்றன மதிப்பளிக்கப்படுதல் போன்றன சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலைக் கட்டியம் கூறுகின்றன. இவ்வாறான பண்பாட்டுத் தொடர்பாடலானது தற்போது, இரு நாடுகளுக்கும் இடையில் சேதுத் திட்டத்தைத் தொடர்வதற்கு மத்திய அரசாங்கமும் கொழும்பும் தமது ஆதரவுகளை வழங்கிவருதல் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இவ்வாறான பண்பாடு சார் தொடர்புகள் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலைத்திருந்தாலும் கூட, அண்மையில் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் பௌத்த சிங்கள அமைப்பான பொது பல சேனவுக்கும் இந்தியாவின் இந்துத் தேசியவாத அமைப்பான Rashtriya Swayamsevak Sangh அமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. சிறிலங்காவில் உள்ள முஸ்லீம் கலாசாரத்தை அழிப்பதற்காக கொழும்பு மற்றும் மத்திய மாகாணங்களில் இந்து-பௌத்த கூட்டணியை உருவாக்குவதற்கான சதித்திட்டத்தில் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பின்னணியில் செயற்படுவதாகவும் ஊடகங்களில் கூறப்படலாம்.

இந்தியாவில் திரு.மோடி போன்று சிறிலங்காவின் மோடியாக அதிபர் ராஜபக்ச உள்ளார் என ஊடகத்தில் செய்தி வெளியிடப்படும். மேற்குலகத்தால் வரையறுக்கப்பட்ட உயர் நெறிமுறை நியமங்களுக்கேற்ப மக்களின் வாக்குகள் பெறப்படுவதை உறுதிப்படுத்துவது தமது பொறுப்பென இந்தியாவைப் போன்று, வெளிநாட்டு ஊடகங்களும் சிறிலங்காவில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நம்புகின்றன.

 

http://www.puthinappalakai.com/view.php?20140728110970

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.