Jump to content

தொடர்ந்து செயலற்ற கேப்டனாக இருக்கிறார் தோனி: இயன் சாப்பல்


Recommended Posts

தொடர்ந்து செயலற்ற கேப்டனாக இருக்கிறார் தோனி: இயன் சாப்பல்
 

 

2011ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இழந்த பிறகு தற்போது 3-1 என்று தோல்வி தழுவியதற்கு தோனியின் செயலற்ற கேப்டன்சியும் பெரிதளவு பங்களிப்பு செய்தது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

 

கிரிக்கெட் எழுத்தாளர் மார்டின் ஜான்சன் என்பவர் இங்கிலாந்தின் தொடர் தோல்விகளை வர்ணிக்கும் போது “இங்கி்லாந்து அணியிடத்தில் 3 விஷயங்கள் தவறு. அவர்களால் பேட் செய்ய முடியாது, பந்து வீச முடியாது, பீல்ட் செய்ய முடியாது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை இப்போது தோனி தலைமையிலான இந்திய அணிக்கும் குறிப்பிடலாம்.

லார்ட்சில் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற தோனி அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தவறுகளைச் செய்தார். அதுவும் செய்த தவறுகளையே மீணடும் மீண்டும் செய்தார்.

 

அவரது தலைமை முறை இந்திய அணி பெற்ற மரண அடிக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்தது. 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு தோனி தடுப்பு உத்திக்குச் சென்றத் முதல் சரிவு தொடங்கியது.

அவரது கேப்டன்சி பிற்போக்கானது, வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது தூங்கிவிடுவதற்கு ஒப்பானது அவரது தலைமை முறை.

அவரது கேப்டன்சி மட்டுமல்ல அவரது விக்கெட் கீப்பிங் பவுலர்களின் பந்து வீச்சையும் காலி செய்யும் அளவுக்கு மோசமாக உள்ளது. ஆஃப் திசையில் கைக்கு வரும் கேட்ச்கள் தவிர அவர் வேறு கேட்ச்களுக்குச் செல்லக் கூடாது என்று முடிவெடுத்துள்ளார். இவரது குறையை மறைக்க ஸ்லிப் திசையில் அடிக்கடி பீலடர்களை மாற்றியபடி இருந்தார். அவரது செயலின்மை ஸ்லிப் பீல்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

 

இதனால் ஸ்லிப் திசையில் வந்த கேட்ச்களை விடுவதோடு, நிறைய எட்ஜ்கள் கேட்ச் என்றே கூட உணரமுடியாத அளவுக்கு தரையில் விழுந்தன.

இவை ஒரு புறமிருக்க, அவரது குளறுபடியான அணித் தேர்வு மற்றொரு புறம். அணித் தேர்வில் கேப்டனுக்கு அதிகாரம் அளிப்பதில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கையில்லை. இந்த தொடரில் ஸ்டூவர்ட் பின்னியை ஆல்ரவுண்டராகத் தேர்வு செய்தது நகைச்சுவையானது. சரி, அப்படி வாய்ப்பு கொடுத்தால் கூட அவரைப் பயன்படுத்திய விதம் அதைவிடவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. அவரை 8ஆம் நிலையில் களமிறக்கினார். ஆனால் பவுலிங் கொடுக்கவில்லை.

 

ஜடேஜாவை முன்னணி ஸ்பின்னராகத் தேர்வு செய்தது சீரியசான தவறு. ஆனால் அவரைப் பயன்படுத்திய விதமோ அவரை ஒரு முன்னணி ஸ்பின்னர் என்று கருத இடமில்லாமல் செய்தது.

இதையெல்லாம் கொடுத்த குழப்பங்கள், அதிர்ச்சிகள் போதாதென்று 4வது டெஸ்ட் சரணாகதிக்குப் பிறகு அவர் கூறியது மேலும் அதிர்ச்சிகரமானது. அதாவது, வெற்றி தோல்விகள் முக்கியமல்ல வழிமுறையே முக்கியம் என்றார்.

ஒரு தொடரில் 46 முறை வழிமுறை சரியாக இருக்கும் அணி அதைவிட தவறான வழிமுறைகளைக் கொண்ட அணியை வென்றதாக நான் இதுவரை பார்த்ததில்லை.

 

தோனியை எந்த அளவுக்கு குறைகூறுகிறோமோ அதே அளவுக்கு பிசிசிஐ-யின் செயல்பாடுகளையும் குறை கூற வேண்டும். அயல்நாட்டுத் தோல்விகளை சகஜமானதாக எடுத்துக் கொண்டு நிதி மேல் அதிகப் பற்று வைத்திருப்பது பயணம் செய்யும் அணியினரை மிகவும் வசதியாக உணரச் செய்கிறது. இதனால் தோல்விகளும் கூட வசதிகரமாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் இப்போதைய தலைவலி என்னவெனில் தோனிக்கு மாற்று இல்லாமலிருப்பது, கோலியின் தொடர் பேட்டிங் தோல்விகளால் தோனிக்கு மாற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தோனி இப்படியே கேப்டன்சி செய்து கொண்டு போனால் ஆஸ்திரேலியாவில் இதைவிடப் பெரிய தலைகுனிவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இவ்வாறு அந்தப் பத்தியில் கூறியுள்ளார் இயன் சாப்பல்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article6349938.ece

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.