Jump to content

பிளெட்சர் பற்றிய தோனியின் கருத்திற்கு பிசிசிஐ கடும் அதிருப்தி


Recommended Posts

பிளெட்சர் பற்றிய தோனியின் கருத்திற்கு பிசிசிஐ கடும் அதிருப்தி
 

 

ரவிசாஸ்திரி அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்றாலும் பிளெட்சர்தான் எங்கள் பாஸ், அவர் 2015 உலகக் கோப்பையிலும் எங்களை வழிநடத்திச் செல்வார் என்று தோனி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் சானலுக்கு அவர் கூறும்போது, “நான் தோனியிடம் இதுபற்றிப் பேசவில்லை, பிசிசிஐ அவரது கருத்துக்கு வினையாற்றாது. தோனி பிளெட்சர் பற்றிக் கூறியது அவரது சொந்தக் கருத்தே” என்று கூறிய அவர், கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை அவரது கருத்துக் கட்டுப்படுத்தாது என்று தெளிவுபடுத்தினார்.

 

இது குறித்து பிசிசிஐயின் முக்கிய அதிகாரி ஒருவர் பெயரைக் குறிப்பிடாமல் செய்தி நிறுவனம் ஒன்றிற்குக் கூறுகையில், ”தோனி தன் எல்லையை மீறியுள்ளார். அவரது கூற்று பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய கேப்டன் கூறியது பற்றி கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அணியின் பாஸ் யார் என்பதை தோனி தீர்மானிக்கக் கூடாது.

 

இந்திய கேப்டனாக தோனி கொஞ்சம் எல்லை மீறிவிட்டார். ஊடகங்கள் எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்கும், ஆனால் ஒரு கேப்டனாகவும் முதிர்ந்த கிரிக்கெட் வீரராகவும் தனது எல்லைகளை அவர் வரையறுத்துக் கொள்வது அவசியம். அணியில் விளையாடும் 11 வீரர்கள் யார் என்பதை எப்படி பிசிசிஐ தீர்மானிக்காதோ அதேபோல் அணியின் பயிற்சியாளர் எதுவரை நீடிப்பார் என்பதை தோனி தீர்மானிக்க முடியாது” என்று கடுமையாக சாடியுள்ளார்.

 

முன்னதாக தோனி பிளெட்சர் பற்றியும் ரவிசாஸ்திரி பற்றியும் கூறுகையில், ரவி சாஸ்திரி அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொள்வார், ஒரு மேலாளர் போல் செயல்படுவார். ஆனால் பிளெட்சர்தான் பாஸ். 2015 உலகக் கோப்பை போட்டிகளுக்கும் அவர் எங்களை வழி நடத்திச் செல்வார் என்றார்.

 

மேலும் ரவி சாஸ்திரி இந்தியாவுக்கு விளையாடியதை பெரும் பேறாகக் கருதும் ஒரு முன்னாள் வீரர், அவர் மிகவும் பாசிடிவ் மனநிலை படைத்தவர்.

போராடும் குணத்தையும், சரியான இயல்பூக்கங்களை நம்புவதிலும் ரவி சாஸ்திரி சிறந்தவர் ஆகவே அவர் இருப்பது மிக நல்ல விஷயம்.

வீரர்களுடன் அவர்களது மொழியிலேயே உரையாட அவரால் முடியும் இது பெரிய அளவுக்கு அணிக்கு உதவும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6350667.ece

Link to comment
Share on other sites

எல்லை மீறினாரா தோனி: கடும் கோபத்தில் பி.சி.சி.ஐ.,
ஆகஸ்ட் 25, 2014.

மும்பை: பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தோனிக்கு, பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது.     

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டு, இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். விரைவில் பிளட்சர் நீக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.                                   

இதனை மறுத்த கேப்டன் தோனி கூறுகையில்,‘‘உலக கோப்பை தொடர்(2015) வரை இந்திய அணிக்கு பிளட்சர் தான் பயிற்சியாளர். இவர் தான் ‘பாஸ்’. இவரது அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ரவி சாஸ்திரி மேற்பார்வை மட்டும் செய்வார்,’’ என்றார்.   

  

பொதுவாக பயிற்சியாளர் தொடர்பான முடிவுகளை பி.சி.சி.ஐ., தான் எடுக்கும். இந்தச் சூழலில் தோனி தன்னிச்சையாக கருத்து வெளியிட்டது மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.     

அதிகாரம் இல்லை: இது குறித்து பி.சி.சி.ஐ.,யின் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி மற்றும் இந்திய அணியுடன் பல தொடர்களில் மானேஜராக சென்ற ஒருவர் கூறியது: இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் இருக்க வேண்டும் என்பதை தோனி முடிவு செய்ய முடியாது. இதை பி.சி.சி.ஐ., தான் தீர்மானிக்க வேண்டும். வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டன் யார், பயிற்சியாளர் யார் என்பதை தேர்வுக்குழு  தான் முடிவு செய்யும். இந்திய அணி கேப்டனிடம் இருந்து இது போன்ற கருத்து வெளியானது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அடுத்த செயற்குழு கூட்டத்தில் இது குறித்து கட்டாயம் விவாதிக்கப்படும்.    

       

அணியின் ‘பாஸ்’ யார் என்பது குறித்து தோனி கருத்து தெரிவித்திருக்கக் கூடாது. இதற்கான அதிகாரம் இவருக்கு கிடையாது.            

இவ்விஷயத்தில் தோனி வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். ‘மீடியா’ தரப்பில் இருந்து எப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கத்தான் செய்வர். அனுபவம் நிறைந்த கிரிக்கெட் வீரராக இருப்பவர், தனது எல்லை என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்குத் தகுந்து பதில் தர வேண்டும். போட்டியில் களமிறங்கும் 11 வீரர்கள் யார் என்பதை, பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் முடிவு செய்ய முடியாது. அதேபோல, யார், எத்தனை காலத்துக்கு பதவியில் இருப்பர் என்பதை தோனி முடிவு செய்யக் கூடாது. அணியின் துணை பயிற்சியாளர்களை நியமிப்பது,  தொடர்பாக கருத்து தெரிவிக்கும் உரிமையும் இவருக்கு கிடையாது.     இவ்வாறு அவர் கூறினார்.           

மோதல் ஆரம்பம்: பயிற்சியாளரை ஓரங்கட்ட வேண்டும் என்று தான் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இது தோனிக்கு பிடிக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் தான் வெளிப்படையாக பிளட்சருக்கு ஆதரவு தெரிவித்தார். இது தோனி–பி.சி.சி.ஐ., இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

சொந்தக் கருத்து                 

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,‘‘ தோனியிடம் நான் எதுவும் பேசவில்லை. இவரது கருத்துக்கு, பி.சி.சி,ஐ., தரப்பில் எதுவும் தெரிவிக்க விருப்பம் இல்லை. இருப்பினும், என்னைப் பொறுத்தவரையில் பிளட்சர் குறித்து தோனி கூறியது, அவரது சொந்த கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/08/1408981365/DhoniFletcherIndiaCricketBCCI.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.