Jump to content

சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?


Recommended Posts

சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?

ஒன்றுமே இல்லாத இடத்தில், இது பரவாயில்லை என்கிற விதத்தில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து, சில அமைப்புக்கள் ஆறுதலடைகின்றன .

 

'இதில் ஒன்றுமே இல்லை' என்பதை இவர்கள் எப்போதும் புரிந்து கொள்ளப்போவதுமில்லை.
இலங்கை மீது தீர்மானம் கொண்டு வந்தாலே போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பாத நாற்காலிக் கனவான்கள் என்று இலகுவில் சொல்லிவிடலாம்.
அமெரிக்கா சமர்ப்பித்த நகல் தீர்மானத்தில், நவநீதம் பிள்ளை அம்மையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் 'சர்வதேச சுயாதீன விசாரணை' என்கிற சொல்லாடலை இணைத்தவுடன், அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது என சில நுனிப்புல் மேய்வோர் ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

சர்வதேச விசாரணை செய்யப்படவேண்டுமென அமெரிக்கா எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அம்மையார் குறிப்பிட்டுள்ளார் என்றுதான் அமெரிக்க வரைபு கூறுகிறது.

 

அமெரிக்கா ஊடாக சிங்களத்தை தண்டித்துவிடலாம் என்கிற பெருத்த நம்பிக்கையோடு வாழ்பவர்கள், தமது நம்பிக்கை தோற்றுப்போய் விடக்கூடாது என்பதற்காக ,இல்லாததை இருப்பது போல் காண்பிக்க முயல்கின்றார்கள்.

 

இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா பயிற்சி கொடுப்பதை பற்றி இந்தத் தரகர்கள் மூச்சு விடமாட்டார்கள். இராஜபக்சவின் இந்தியத்தரகர் சு.சுவாமி , அமெரிக்கா சென்று அந்நாட்டின் தலைவர்களையும், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்தது குறித்து பேசமாட்டார்கள். எல்லாமே எமக்குச் சாதகமாக நடப்பது போல் காட்டுபவர்கள் , தமது பலவீனமான இராஜதந்திரப் பக்கங்களை மிக நேர்த்தியாக மறைத்து விடுகின்றார்கள்.


இது குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்தால், இவர்களையும் விட்டால் 'இனம் அழிந்துவிடும்' என்று கவலை கொள்வதுபோல் பாசாங்கு செய்கின்றார்கள்.

 

இந்த அமெரிக்க மீட்பர்களின் ,சமகால பின் நவீனத்துவ [ இலக்கியத்தில் மட்டுமே இச்சொல்லை பாவிக்க முடியுமென்று யார் சொன்னது?] முகத்தினை , இத் தரகர்கள் கண்டு கொள்ள மறுத்தாலும், அதனை வெளிக்கொணர வேண்டியது ஊடகங்களின் கடமை.

 

அண்மைக்காலமாக ஒரு முன்னாள் பேரினவாத அதிபர் ஒருவரின் பெயர் பலமாக அடிபடுவதை அறிந்திருப்பீர்கள். அவர் வேறு யாருமல்ல. நாமறிந்த, நாடறிந்த, செம்மணியறிந்த, யாழில் சிங்கக் கொடியேற்றிய ரத்வத்தையின் மருமகள் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா என்பவரே.
இவர் இந்தியா செல்கின்றார். இந்த முன்னாளை , இந்திய வெளிவிகார அமைச்சர், அவரின் செயலாளர் ரஞ்சன் மாதாய் , மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கூட்டாகச் சந்திக்கின்றனர்.

 

அதிகாரத்தில் இல்லாத ஒருவரை , ஏன் இந்த முன்னணி அரசியல் அதிகாரவாசிகள் சந்திக்கின்றனர்?. இதையிட்டு மகிந்த கம்பனி குழப்பமடைகிறது. ஆனால் இந்தியாவோடு முரண்பட விரும்பாத காரணத்தால் கறுவிக்கொண்டு நிற்கிறது.

 

ஒரே நேரத்தில் இரண்டு எதிர்களோடு மோதக்கூடாது என்கிற தந்திரோபாய உத்தியைக் கடைப்பிடித்து, பேசாமல் இருக்கிறது சிங்களம்.

 

ஆனால் மகிந்த சகோதரர்களின் தற்போதைய பெருங்கவலை என்னவென்றால், தமது சிறி லங்கா சுதந்திரக் கட்சியை ,பண்டாரநாயக்காவின் வாரிசு உடைத்து பலவீனமானதாக மாற்றிவிடு
வார் என்பதுதான்.

 

மைத்திரிபால சிறிசேன என்பவர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் . இவர் பண்டாரநாயக்கா குடும்பத்தின் நிரந்தர ஆதரவாளர். இவர் ஊடாக கட்சியை உடைத்துவிடுவார் சந்திரிக்கா என்று மகிந்தர் உணர்ந்ததால், சிரிசேனா மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அண்மையில் செய்தியொன்று வெளிவந்தது. இத்தகைய நடப்புச் செய்திகளின் பின்புலத்தில், ஒரு ஆட்சிமாற்ற நகர்விற்கான சதியொன்று உண்டென, சர்வாதிகாரத்தை நோக்கி நடைபோடும் மகிந்த சகோதரர்கள் உணர்ந்து விட்டார்கள்.

 

உலக வலம்வரும் சந்திரிக்கா , 'தேசிய அரசாங்கம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் ' என்று அடிக்கடி கூறிவரும் நிலையில், இது எவ்வாறு சாத்தியமாகும் என்கிற கேள்வி எம்மிடம் எழுவது இயல்பு .

 

இருந்தாலும் ,அதனை ரணிலை மட்டும் வைத்துக் கொண்டு உருவாக்க முடியாது என்பதை மகிந்தர் புரிந்து கொள்வார்.ஆகவேதான் சுதந்திரக் கட்சிக்குள் உடைப்பு வேலையை சந்திரிக்கா செய்ய முயற்சிக்கின்றார் என்று சந்தேகிக்கின்றார்.

 

மகிந்தர் இல்லாமல்,தேசிய அரசாங்கத்தை எப்படி அமைக்க முடியும் என்கிற கேள்விற்கு , உடைக்கப்பட்ட ஸ்ரீ.சு.கவும் ,யு.என்.பி யும், தமிழ் கூட்டமைப்பும்,இணைந்துதான் அதனை நிஜமாக்க முடியும் என்பதாக பதில் அமையும்.

 

அதேவேளை, மேற்குலகப் பின்புலத்தில் உருவாகும் இந்நகர்வில் , தானொரு பலவீனமானதொரு பங்காளியாக இருக்கப்போகிறேன் என்பதை யூகித்துக் கொண்டதால்தான், 'இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தவிடமாட்டேன். தலைமை வகித்த நானே அதற்கான பொறுப்பினை ஏற்கிறேன்' என்று வீரவசனங்களை உதிர்க்க ஆரம்பித்துள்ளார் சரத் பொன்சேக்கா.
பொன்சேக்காவை உள்வாங்காமல் விட்டால், சந்திரிக்காவின் தேசிய அரசாங்கக் கனவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகும் நபரும் அவர்தான்.

 

கடந்த நான்கு வருடங்களில் ஆட்சிமாற்றத்திக்கான முயற்சிகளைப் பார்த்தால், முதல் தோல்வி ஆரம்பமாகிறது சரத் பொன்சேக்காவின் வீழ்ச்சியில் இருந்துதான்.

 

பொது எதிரணித் தலைமையை யார் பொறுப்பேற்பது என்கிற போட்டி வந்தபோது, சனாதிபதி தேர்தலில் ஓரணியில் நின்றவர்கள் பிரிந்து விட்டார்கள். ரணிலின் தலைமையால் , உள்ளூராட்சி சபைத்தேர்தல்களில் தமது பலத்தினை நிரூபிக்க முடியவில்லை.

 

இந்நிலையில் மகிந்தரின் அதிகார மையத்துள் பிளவினை ஏற்படுத்தாமல், பலமான எதிரணியை கட்டமைக்க முடியாது என்கிற முடிவுக்கு வருகின்றார்கள் ஆட்சி மாற்றமொன்றினை விரும்புவோர்.
ஆகவே , தீர்மானங்கள் ஊடாக சர்வதேச அளவில் மகிந்த சர்வாதிகார ஆட்சியை தனிமைப்படுத்துவது, பொருளாதார நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, சந்திரிக்கா ஊடாக அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை மகிந்தருக்கு எதிராக திருப்புவது, இரண்டு பலமற்ற அரசியல் சக்திகளை [இரணில் + சந்திரிக்கா] இணைத்து ஓரளவு பலமான எதிரணியை உருவாக்குவது என்பதுதான் ஆட்சிமாற்றத்தை விரும்பும் வல்லரசாளர்கள் மேற்கொள்ளும் தந்திரோபாய நகர்வாக இருக்கிறது.
ஆளும் கட்சியினுள் உடைப்பு வேலை தீவிரமடைந்தால், அடுத்த சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் வாய்ப்புண்டு.

 

இல்லையேல், அடுத்த தேர்தல்வரை இம்முயற்சிகள் தொடரும். சர்வதேச சுயாதீன விசாரணையை முன்வைக்காத தீர்மானங்களும் ஐ.நா.வில் வந்து போகும்.

 

ஆனால், 'பொது பல சேனா' பலமடையும் அதேவேளை, பிரதமர் பதவி தருவேனென சரத் பொன்செக்காவிற்கு மகிந்தர் வாக்குறுதி கொடுத்தால், ஆட்சிமாற்றம் கானல் நீராக மாறும்.
பொன்சேக்காவை எவ்வாறு கையாள்வது என்பதில்தான் ஆட்சி மாற்றத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படுமென எதிர்பார்க்கலாம்.

 

ஆனாலும் இதில் எந்தக் கூட்டு வந்தாலும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்போவதில்லை. அதனை வழங்குவோமெனக் கூறி எவரும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் எல்லோரும், 'புலிகளை போரில் வென்று விட்டோம்' என்கிற மமதையில் வாழ்கின்றார்கள் என்பதே நிஜம்.

 

தமிழ் மக்களின் உரிமைகளை கொடுங்கள் என்று அழுத்தினால், ஆட்சி மாற்றம் நிகழாது. அத்தோடு, இராணுவத்திற்கெதிராக சர்வதேச விசாரணை தேவை என்று கூறினால், ஒட்டுமொத்த சிங்கள மக்களும் எதிர்ப்பார்கள் என்பதையும் அமெரிக்கா புரிந்து கொள்ளும்.

 

இந்த நிஜங்களை மறைப்பதால் யாருக்கு என்ன நன்மை?

 

 

ஆக்கம்: இதயச்சந்திரன்

 

மூலம்: தமிழ் கனேடியன் - பங்குனி 13, 2013
பிரசுரித்த நாள்: Mar 14, 2013 19:31:55 GMT

 

 

Link to comment
Share on other sites

சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?

 

சர்வதேச விசாரணை செய்யப்படவேண்டுமென அமெரிக்கா எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அம்மையார் குறிப்பிட்டுள்ளார் என்றுதான் அமெரிக்க வரைபு கூறுகிறது.

 

இரண்டாவது வரைபு இலங்கையில் பிரவேசித்து விசாரணை நடத்த முயகின்றது என்பது சரியானது சட்டதுறையில் முன்னால் இருக்கும் வரைபொன்றை குறிக்கும் பின்னால் வரும் வரைபு குறிப்பிடும் போது அது அங்கீகரிக்கபட்டால் இரண்டும் அங்கீகரிக்கப்பட்டவைதான். 

 

அமெரிக்கா ஊடாக சிங்களத்தை தண்டித்துவிடலாம் என்கிற பெருத்த நம்பிக்கையோடு வாழ்பவர்கள், தமது நம்பிக்கை தோற்றுப்போய் விடக்கூடாது என்பதற்காக ,இல்லாததை இருப்பது போல் காண்பிக்க முயல்கின்றார்கள்.

அமெரிக்காவுக்கு நிச்சயம் தனது நலன்கள் இலங்கையில் இருக்கு.  GSP+ யை இன்னமும் நீக்கவில்லை.

 

ஆனால் இலங்கைக்கு தேவையான உதவிகள் எல்லாவற்றையும் போரின் போது பெற்றுக்கொடுத்த அமெரிக்க அதிகாரி பிளேக் போர் முடிந்தவுடன் கூறிய கூற்று "அரசு பொறுப்பு கூறலை கவனத்தில் எடுக்க வேண்டும்" என்பது. அதை அவர் மட்டும் கூறவில்லை, போரை செய்மதிகளை வைத்து படம் எடுத்துகோண்டு எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா.வின் பிரதம  காரியதரிசி இலங்கையில் வைத்து கூறியதும் அதுவேதான். எனவே இந்த பிரேரணைகள் பொறுப்பு கூறலை நோக்கி கட்டாயம் நகரும். எண்ணை சுடாக இருக்கும்போது தமது வடையையும் சுட்டுக்கொள்ள தமிழ் மக்களுக்கு தேவையான நகர்வுகளை புலம் பெயர் மக்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். இது சும்மா வாளாவிருந்துகொண்டு "மேற்குநாடுகள் தங்கள் நலனுக்குதான் பிரேரணையை கொண்டுவருகின்றன என்ற சோபேறித்தனமாக கட்டுரைகளை எழுத்துவதல்ல". எல்லோரும் தாங்கள் பொறுத்த தருணத்தில் மேற்கு நாடுகளை அணைத்து எமது தேவைகளையும் நிறிவேற்றிக்கொள்ள முயல வேண்டும்.

 

 

இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா பயிற்சி கொடுப்பதை பற்றி இந்தத் தரகர்கள் மூச்சு விடமாட்டார்கள்.

"அமெரிக்கா பயிற்சி கொடுத்தது என்பது" அடுத்த சோம்பேறிக்கதை. இந்தியா எத்தனையோ இராணுவ பயிற்சிகள் கொடுத்துவிட்டுத்தான் தமிழரை காக்க போவத்தாக நடிக்கிறது. ஆனால் அமெரிக்க கொடுத்தாக கூறிவது இராணுவ பயிற்சி அல்ல. இது அமெரிக்க இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தாலும், இதை டென் மார்க், சுவீடன், நோர்வே, அவுஸ்திரேலிய நாட்டு தொண்டு நிறுவனக்கள் தமிழ் பொதுமக்களுக்கும் போரின் பின்னால் வழங்கியுள்ளார்கள். அதில் மூச்சுவிட ஒன்றும் இல்லை.  

 

இருந்தாலும் ,அதனை ரணிலை மட்டும் வைத்துக் கொண்டு உருவாக்க முடியாது என்பதை மகிந்தர் புரிந்து கொள்வார்.ஆகவேதான் சுதந்திரக் கட்சிக்குள் உடைப்பு வேலையை சந்திரிக்கா செய்ய முயற்சிக்கின்றார் என்று சந்தேகிக்கின்றார்........................................

 

சந்திரிக்காவின் தேசிய அரசாங்கக் கனவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகும் நபரும் அவர்தான்.

...................

.....................

இந்நிலையில் மகிந்தரின் அதிகார மையத்துள் பிளவினை ஏற்படுத்தாமல், பலமான எதிரணியை கட்டமைக்க முடியாது என்கிற முடிவுக்கு வருகின்றார்கள் ஆட்சி மாற்றமொன்றினை விரும்புவோர்.

 

 

 ரணிலும் சந்திரிக்கவும் சேர்ந்ததின் பின்னர் தேசிய அரசாங்கம் பற்றி பேசலாம். பொன்சேக்காவுக்கு வாக்காளர் பினபலம் இருக்கு என்பது இன்னமும் நிரூபிக்கபடவில்லை. அவர் எதிர் கட்சியில் ஒருதடவை வென்றால் இலங்கை முழுவதாக முதலாளித்துவக் கோட்பாடுகளை ஒதுக்கி விட்டதாகத்தான் கருதலாம். அது நடக்கப் போவதில்லை. சந்திரிக்காவுக்கு SLFP யை உடைக்கும் பலம் இருந்தால் அதை காட்ட வேண்டும். மங்கள எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் மகிந்தா UNPயையும் JVP யையும் சின்னாபின்னப்படுத்திவிட்டார்.

 

 தீர்மானங்கள் ஊடாக சர்வதேச அளவில் மகிந்த சர்வாதிகார ஆட்சியை தனிமைப்படுத்துவது, பொருளாதார நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது,

 

இப்படி ஒரு பொருளாதார தடை வரவேண்டுமாயின் போர்குற்றம்(இனவழிப்பு) சர்வதேச ரீதியில் ஏற்றுககொள்ளப்படத்தக்க விசாரணை அல்லது தீர்மானம்  முதலில் வரவேண்டும். இல்லையேல் அது EU போன்ற தனிப்பட்டதொன்றாகவே இருக்கமுடியும்.

 

 ஆளும் கட்சியினுள் உடைப்பு வேலை தீவிரமடைந்தால், அடுத்த சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் வாய்ப்புண்டு.

 

இது வெறும் ஆசை வார்த்தைகள். அரசு தமிழ் எதிப்பை காட்டும் வரை தேர்தலில் வெல்லல்லம் என்ரதை இப்போ மேற்கு நாடுகள் எற்றுக்கொள்கின்றன. அவர்கள் பொன்சேக்கவை அதை வைத்துதான் தூக்கிவிட முயன்றார்கள். சந்திரிக்க-ரணில்- பொன்சேக்கா கூட்டு வெல்ல வேண்டுமாயின் மேர்குநாடுகள் அவர்கள் தமிழர் எதிர்பை ஆரம்பிக்க்  தமது ஆதரவை கொடுக்க வேண்டும். ஆகவே இது எல்லாம் சும்மா சங்கிலித்தொடர் கற்பனைகள் மட்டுமே..

 

 சர்வதேச சுயாதீன விசாரணையை முன்வைக்காத தீர்மானங்களும் ஐ.நா.வில் வந்து போகும்.

 

இது ஆதாரமில்லாத எதிவு கூறல். போக போக பிரேரணைகள் இறுக்கமதை தவிர வேறு வழி இல்லை.

 

 

 பிரதமர் பதவி தருவேனென சரத் பொன்செக்காவிற்கு மகிந்தர் வாக்குறுதி கொடுத்தால், ஆட்சிமாற்றம் கானல் நீராக மாறும்................

......................பிரதமர் பதவி தருவேனென சரத் பொன்செக்காவிற்கு மகிந்தர் வாக்குறுதி கொடுத்தால், ஆட்சிமாற்றம் கானல் நீராக மாறும்

 

பொன்சேக்கவை பிரதமர் ஆக்க வேண்டுமாயின் கோட்டு தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும்.  அது புலியை கூண்டுக்கு வெளியே அவிட்டு விட்டு சார்க்கஸ் காட்டுவது போல. பொன்சேக்கா என்ற புலி பிரதமர் பதவியை விட ஜனாதிபதி என்ற பதவிக்காக மகிந்தவை அடிக்கும். மகிந்தா கையாள வேண்டியது சிராணி சரத் சில்வா போன்றவர்களே. பொன்சேக்காவுக்கு தூதுவர் பதவிக்கு மேல் கொடுப்பது மகிந்தாமீது பழிவாங்க இடம் அளிக்கும். இராணுவத்தினர் பற்றி(சவேந்திரா) அண்மையில் மகிந்தா கோத்தாவுக்கு பாடம் கொடுத்திருந்தார்.  

 

 ஆனாலும் இதில் எந்தக் கூட்டு வந்தாலும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்போவதில்லை. அதனை வழங்குவோமெனக் கூறி எவரும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் எல்லோரும், 'புலிகளை போரில் வென்று விட்டோம்' என்கிற மமதையில் வாழ்கின்றார்கள் என்பதே நிஜம்.

 

தமிழ் மக்களின் உரிமைகளை கொடுங்கள் என்று அழுத்தினால், ஆட்சி மாற்றம் நிகழாது. அத்தோடு, இராணுவத்திற்கெதிராக சர்வதேச விசாரணை தேவை என்று கூறினால், ஒட்டுமொத்த சிங்கள மக்களும் எதிர்ப்பார்கள் என்பதையும் அமெரிக்கா புரிந்து கொள்ளும்.

 

இந்த நிஜங்களை மறைப்பதால் யாருக்கு என்ன நன்மை?

 

திடுதிப்பென்று இதயசந்திரன் தான் என்ன சொல்ல வந்தேன் என்று மறந்து குழப்பிபோய்விட்டார். இதை யார் எங்கு மறுத்தார்கள். இதனால்தானே தீர்வு வேண்டும் என்றால் விசர்ரணை வரட்டும் என்று புல்ம் பெயர் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

 தீர்வு ஒன்று இல்லாமல் ஆமிதன்னும் வடக்கு கிழக்கை விட்டு வெளியேற வேண்டுமாயின் விசாரணை வேண்டும். அது இல்லாமல் இலங்கையில் எதுவும் நடக்காது. அதாவது அமெரிக்காவின் கேள்வியான பொறுப்பு கூறலிற்கு என்ன பதில்?

 

இந்த கேள்விக்கு அமெரிக்கா பதில் கண்டால் மட்டுமே எதையாவது முன்னால் நகர்த்தலாம். இல்லாமல் அமெரிக்கா இலங்கையில் முதலிடத்தன்னும் முயன்றால் அது திரும்பவும் டோல் கம்பனி கதையாகத்தான் முடியலாம். இல்லையேல் ஆடைத்தொழில் நடப்பது போல இலங்கை கம்பனிகளைத்தான் கட்டி எழுப்பமுடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.