Jump to content

சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான முடிவுகளை எடுக்கப் போகிறது இந்தியா – கொழும்பு ஆங்கில ஊடகம்


Recommended Posts

அடுத்த சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான பல முடிவுகளை எடுக்கும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது.

இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது.

அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளதும் இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

http://thaaitamil.com/?p=29574

Link to comment
Share on other sites

:D :D :D

கைகட்டி, வாய்பொத்தி, மானம் மரியாதையை அடகு வைத்து சேவகம் செய்த போர்குற்றத்தின் பங்குதாரர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சீற்றம் விரைவில் தலைகீழாக மாறிவிடுவதே வரலாறு!

Link to comment
Share on other sites

கடும் சீற்றம் ஏற்பட்டால் டில்லியில் நின்று கொண்டு கம்பு சுத்தலாம்.. :D கிட்ட வரமுடியாது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை சீற்றமடையவும்... விடமாட்டார்கள் போலுள்ளது.

எத்தனை... நாளைக்குத்தான், மனதுக்குள்ளேயே... புழுங்கிக் கொண்டிருப்பது. :D:lol:

Link to comment
Share on other sites

[size=4]இந்திய மத்திய அரசில் கேரள அன்பர்களும் இத்தாலிய நண்பியும் இருக்கும் வரை சீற்றம் நாக்கு நுனி வரைக்கும் தான். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

Aug 22, 2012[/size]

[size=5]சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான முடிவுகளை எடுக்கப் போகிறது இந்தியா - கொழும்பு ஆங்கில ஊடகம்[/size] [size=5] [/size]

[size=4]அடுத்த சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான பல முடிவுகளை எடுக்கும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [/size]

[size=4]

India-tn.jpg

இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது.

இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது.

அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளதும் இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.[/size]

www.pathivu.com/news/21747/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது. இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது.

அதைவிட எத்தனோ மடங்கு பெரிய பதிலடி, பயணத்தை நிறுத்தியவுடன் இலங்கை 8 விமானத்தளங்களை சீனாவுக்கு கொடுத்தது. இந்த சின்ன தீவில் எட்டு விமானத்தளங்களில் சீனா மாதிரி பலம் பொருந்திய நாடு கை வைத்திருந்தால் அமெரிக்கா மாதிரி நாடுகளுக்கே தீவை அண்டும் பலம் இருக்காது.

இந்தியா சீனாவின் பிரச்சனையாலேயே 1960 களுக்கு முன்னர் தொடக்கம், தென் பகுதிகளில் தனது அணு, ஆகாய ஆராச்சிகளை ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. இதானாலேயே சீனா 1970 களில் இலங்கையை அணுகி பண்டாரநாயக்கா நினைவு மண்டபம் கட்டி இலங்கையை வாரி அணைக்க தொடங்கியது. சீனா தான் தனது முத்துமாலை திட்டங்களை விட இந்தியாவின் திட்டங்களுக்கு பதிலாக மிகவும் வெற்றிகரமான பதிலடி திட்டங்களையும் நீண்டகாலமாக போட்டு செயல்முறைப்படுத்தி வெற்றியும்கண்டு வருகிறது.

இதில் இந்திரா காந்தியின் திட்டங்களில் இருந்து விலத்திபோய் விட்ட காங்கிரசால் இலங்கையில் இனி ஒன்றும் செய்ய முடியாது. மேலும் சீனாவும் இந்தியாவின் தென் பகுதிகளில் இருக்கும் பிரதான இலக்குகளை தாக்குவதாயின் இலங்கையை இந்தியா மிரட்டி தனது கையுக்குள் போட முயல்வதை சும்மா பார்த்துக்கொண்டும் இருக்க முடியாது.

இந்தியாவின் வரவிருக்கும் கடுமையான முடிவுகளுக்கு, சீனாவும் இலங்கையும் ஏற்கனவே தங்கள் புலனாய்வுகளை வைத்து சரியான பதில்களையும் தயாரித்திருப்பார்கள். இதில் இந்தியா இனி மேலே போக ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

நேரு குடும்பத்திற்கும் இராஜபக்ச குடும்பத்திற்கும் காணி பிரச்சினை. அதற்குள் நாடுகளை ஏன் இழுக்கிறார்கள்?

இரண்டும் பெயரவில் மக்களாட்சி செய்யும் நாடுகளாக உள்ளதால் :D

Link to comment
Share on other sites

[size=4]சுண்டைக்காய் நாடான இலங்கை, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது எ‌ன்று‌ம் இதைவிட இந்திய அரசு‌க்கு ஏற்பட்டு‌ள்ள வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை எ‌ன்று‌ம் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், கச்சத்தீவை மீட்கவோ, கடலோர மீனவர்களின் ரத்தக் கண்ணீரைத் துடைக்கவோ திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் வழி காணப்படவில்லை. ராமே‌ஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் சோகக் கதையாக உள்ளது. மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கும் கடிதங்கள் எழுதியும் இன்றுவரை பலனில்லை.

தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து அண்மையில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அவரவர் இயல்புக்கும், அவரவர் சக்திக்கும் ஏற்றவாறு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் காதில் விழுந்ததாகவோ, அந்தப் பிரச்சனை பற்றிப் பேசவோ மத்திய அரசு முன்வரவில்லை. சுண்டைக்காய் நாடான இலங்கை இப்போது கூட, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதைவிட இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் கட்சி பாகுபாடின்றி ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும். மீனவர் நிலைமையை பிரதமரிடம் விளக்கி தீர்வு காண்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

[size=2][size=2]http://tamil.webduni...120822003_1.htm[/size][/size][/size]

Link to comment
Share on other sites

இந்தியா என்னத்தை குத்தி முறிஞ்சாலும் சிங்களவனிட்ட ஒண்டும் எடுபடாது.

கொம்பு சீவி விட்டவர்கள் அவர்கள் தானே வாங்கி முறியட்டும்.

.. .

இதுக்கேல்லாத்துக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது அதுதான் தமிழ் ஈழம்

Link to comment
Share on other sites

சும்மா போங்கப்பா, சீறிச் சீறி மூக்கும் பழுதாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் எல்லாம் ஆண்மை உள்ளவங்களுக்குத்தான் வரும். பிரதமருக்கு துவக்குப் பிடியாலை அடித்த போதே வராத கோபம் இனி எப்பிடி வரும்?இந்தியாவால் இனி ஒண்டம் படுங்க முடியாது.அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கினால் எல்லாம் சரிவரும்.அமெரிக்காவோடு பேசுவதை விடுத்து கூட்டமைப்பு இந்தியாவின் கு-டியைக் கழுவிக் கொண்டிருப்பதுதான் வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.