Jump to content

மிதிவண்டி உதவி வழங்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளுக்கும், யாழ்க்கள உறவுகளுக்கும்,

சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பதிவுசெய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருகின்றது. முழுமையாக இந்த நிலையம் செயல்ப்படத்தொடங்கியவுடன், புனர்வாழ்வுத் திட்டங்களில் முதல் சுற்றில் தவறவிடப்பட்டோர்களை தேடி அவர்களுக்கு உதவிகளை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், வடக்குக், கிழக்கில் கடும்சேதமடைந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் அடிக்கடி உரையாடிவருகிறோம். இந்த உரையாடல்கள், அரசியல் கலப்பில்லாத, பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வறுமையிலிருந்து விடுதலை காண்பது என்பதைப்பற்றிய பேச்சு வார்த்தைகளாகும். இந்த உரையாடல்களில் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டப்படும் ஒரு பிரதானமான விடயம், ஈழ தேசத்தின் வருங்காலம் காக்கப்படவேண்டுமாயின், சிறார்களின் பள்ளிப்படிப்பு பேணப்படவேண்டுமென்பதாகும். என்னிடம் இன்னமும் எல்லாப் புள்ளிவிபரங்களும் இல்லாவிட்டாலும், கிழக்கு மாகாணத்தில் விரைவாக முன்னேறி வரும் முஸ்லீம் சமுதாயத்துடன் பார்க்கும் பொது நம்மவர்களின் நிலை தாழ்வாக இருப்பதுடன் கிளிநொச்சியில் பள்ளிப்படிப்பு மிகவும் கவலைக்கிடமாகவும் இருக்கிறது.

ஆகவே நாங்கள் முதலில் கிளிநொச்சித் தொகுதியிலிருந்து சில நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்தச் சிறார்களுக்கு, தற்சமயம், பலவிதமான தேவைகள் இருப்பதாக நமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. சில பிள்ளைகள் தமது கல்வித்தேவைக்கு ஒரு பள்ளியை சென்றடைய, காலையும், மாலையும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த விடையத்தில் இவர்களுக்கு உதவயாரும் இல்லையானால் இவர்களால் இனிமேல் பள்ளி செல்ல முடியாத நிலையொன்றிருக்கிறது. ஆனால் நாங்கள் இவர்களுக்கு ஒவ்வொரு மிதிவண்டி கொடுத்துதவ முன்வந்தால், இவர்களால் தங்கள் படிப்புக்களைத் தொடர முடியும். மேலும் இந்தச் சிறார்கள் பலரிலேயே, அவர்களின் குடும்பங்கள், தங்கள் வாழ்வூதியத்திற்கும் தங்கியிருப்பதால், இந்த மிதிவண்டிகளைப் பயன்படுத்தி தங்கள் குடும்பங்களுக்கும் அவர்களால் உதவ முடியும்.

நாங்கள் அளிக்க இருக்கும் முதல் தொகுதியான 50 மிதிவண்டிகளிலும், குறைந்தது 30 வண்டிகளையாவது, அமெரிக்கா வாழ் உறவுகளிடமிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கிறோம். இதற்கான செலவு $3000-$4000 வரையிலாகும். நாம் எல்லோரும் மனதார சிறு சிறு உதவிகள் செய்ய முன்வந்தால் இது ஒரு பெரிய சுமையாக இருக்கமுடியாது. இதில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து நீங்கள் அவர்களுக்கும் இந்த தொண்டு வாழ்க்கை பயிற்றுவிக்கலாம். எப்படி நீங்கள் இந்த உதவியைச் செய்தாலும், இது வருங்கால தமிழீழத்தின் இளம் தளிர்கள் கருகிவிடாது நீர்வார்க்கும் அரிய கைங்கரியம் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். இதில் நீங்கள் எவ்வளவு கொடுக்கலாம் என்று இல்லாவிட்டாலும், உங்கள் குடும்பத்திலிருந்து, தயவுசெய்து, ஒரு மிதிவண்டியாவது தந்துதவுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எமது இந்த மிதிவண்டி இலக்குக்கு மேலாக பணங்கொடுத்து உதவப்பட்டால் அதில், பாடப்புத்தகங்கள், எழுத்து உபகரணங்கள் போன்றவையும் அன்பளிப்பு செய்யலாமென்றிருக்கிறோம்.

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

or please visit

nowwow-us.org

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ... ஆனால் ..

... சிலவற்றை நீங்கள் புரிய வேண்டும், ஏன் அள்ளி எறிந்தவர்கள் எல்லாம் இப்போ பின் நிற்கிறார்கள் என்று??? ...

... மக்களின் அவலங்களை கூறி வாங்கியவர்களில் சிலர் சுருட்டி விட்டனர்! ,,, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் போய் சேரவில்லை ,,, பாதிக்கப்பட்டதாக கொடுக்கப்படும் பல தரவுகளில் சந்தேகங்கள் ... இவைகளுக்கு மேலாக பல உதவி கோரும் அமைப்புக்கள் ... அவைகளுக்குள் எந்த வித தொடர்புகளும் இல்லை ... ஒரு அமைப்பு மூலம் உதவி பெற்றவர்கள், அடுத்த அமைப்புகளின் மூலமும் பெற வாய்ப்புகள்/பெற்றும் உள்ளனர்! ..

... இப்படியாக பல பிரட்சனைகளினால் எட்டு விலகி நிற்கிறார்கள் ...

... இப்படியான சில பிரட்சனைகளை தீர்க்கும் மட்டும் ... கிள்ளியாவது தருபவர்கள் பின்னிக்கவே செய்வார்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்க்காலில் ஓடும் நீரை வரம்பு ஒருபோதும் தடுத்து நிறுத்துவதில்லை. வரம்பின் நோக்கமும் பணியும் நீர் எங்கே போய்ச்சேரவேண்டும் என்று வாய்க்காற் பள்ளத்துக்கு நினவூட்டுவது தான்.அந்த வகையில் பார்த்தால் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை, நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியவை. ஆட்சேபிக்கப்படக்கொடாதவை. மூன்றாண்டுகளாக நாங்கள் தயங்கித் தயங்கி நின்றமைக்குக்காரணமே நாங்கள் கண்ணால் கண்டவைகளும் காதால் கேட்டவைகளும் மட்டும் தான். ஆனால் இப்போது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நவ்வவ்" என்றொரு அறக்கட்டளை அமைப்பொன்றை உருவாக்கியுள்ளோம். நாம் செய்யும் பணிகள் பயங்கரவாதத்துக்குத் துணை போவது என்ற ஐயம் யாருக்குமே இருக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்க வருமானத் திணைக்களத்திடம் இது பற்றிய குறீப்புக்களை அனுப்பி அவர்களிடம் அவற்றுக்கான விளக்கங்களையும் கேட்டுள்ளோம். அவர்கள் சொல்வதை அப்படியே நிறைவேற்றுவோம்.

மறு புறத்தில், எமது உதவிகளை யாருமே "இலவசமாகக் கிடைப்பவை தாமே!" என்ற எண்ணத்தில் தப்பாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கிழக்கிலொருவரும் வடக்கிலொருவருமாக மக்கள் பிரதிநிதிகள் இருவர் எமக்கு இந்த உதவிகளைப் பகிர்வதிலும் தேவைகளை அடையாளப்படுத்துவதிலும் உதவுவார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் இருவரும் "ஊழிக்காலம்" என்று வருணிக்கப்படக்கூடிய, அந்தக் கொடிய நாட்களில் தம் சேவை மனப்பான்மையை நன்கு நிரூபித்தவர்கள். இதைவிடவும் கத்தோலிக்க திருச்சபையும் இதில் எங்களுடன் பங்கு கொண்டு உழைக்கும். மதபேதங்களைப்பாராது உண்மையான தேவைகளை மட்டும் கணக்கிலெடுக்கும் தகுதியும், திறமையும், கண்ணியமும், பாரதூரமான பொறுப்புக்களை சுமக்கும் தைரியமும் தனக்கு உண்டென்று கத்தோலிக்க திருச்சபை ஏற்கெனவே எமக்கு நிரூபித்துள்ளது.

இந்த ஈருருளித் திட்டம் ஒரு ஆரம்பம் மட்டும் தான், நாம் கிழக்கில் கிராமப்புறங்களில் சரிந்து விழுந்துள்ள கல்விப்பிரச்சினயை அடுத்ததாக எதிர் நோக்கவுள்ளோம். அங்கே எதிர்காலம் தெரியாது தவிக்கும் இளம் பட்டதாரிகளுக்கு ஏதாவது கஞ்சிக்கு வாய்ப்புக்கொடுப்பதன் மூலம் கல்வியில் திசை தெரியாது தவிக்கும் எமது வளர்ந்த பிள்ளைகளுக்கு உயர்தரப் பரீட்சை நிலைக்கு இலவசமாகப்படம் சொல்லித்தர இருக்கின்றோம். முடிந்தவரை அவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களையும் தர இருக்கின்றோம். அவ்வாறு எம்மிடம் உதவி பெற்றவர்கள் இளஞ்சிறார்க்குத் தம்மால் இயன்றளவு பாடம் புகட்டித்தரவேண்டுமென்று நாம் எதிர்பார்ப்போம். இதில் கிழக்கத்தைய மக்கள் பிரதிநிதியே எமக்குத் திட்டங்களை வரைந்து தந்து மேற்பார்வையும் செய்வார். இவ்வளவுக்கும் பணம் ஏதும் எம்மிடம் இல்லை. திரும்பத் திரும்ப "பணத்தைக் கொடுங்கள்" என்று கூவிக்கொண்டு உங்களிடமே வருவோம். "தந்த பணத்துக்கு என்னாச்சு" என்று கேட்கும் உரிமை உங்களுக்குண்டு. அப்படிக் கேளாத வரையில் நீங்களும் தான் கடமை தவறுபவர்கள் ஆகிறீர்கள். நாம் இதுவரை மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் அனைத்துமே தனிமனிதர்களின் பொறுப்புக்களாக எவையுமே நடை பெற்று எவருக்குமே தம்மைத் தாமே களங்கப்படுத்தும் சந்தர்ப்பங்கள் வந்தமைந்து விடக்கூடாது என்ற அடிப்படையைப் பலப்படுத்தும் நோக்கிலானவை. இதற்கு மேல் ஏதாவது நடந்துவிட்டால் அது ஆண்டவன் விட்ட வழி. அங்கே குழந்தைகளினதும் இனத்தினதும் கல்வியினதும் எதிர்காலம் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது "முன்பு இருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்களே, இதற்குள்ளே எமக்கேன் வீண் பேர்" என்ற தயக்கம் ஒரு சில நாட்கள் இருக்கலாம். ஆனால் அந்தத் தயக்கம் என்றென்றைக்குமே எம்மைஅடிமைப்படுத்திவிடுவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பது தான் எமது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம். பாராட்டுக்கள். 

இப்போது ஒ. எல். பெயிலானவர்கள் இலஞ்சம் குடுத்து வேலை எடுத்து கல்வி தரத்தை குறைக்கிறார்கள். 

மற்றும், குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் சிறி லங்கா கல்வி முறையையும் மாற்றவேண்டும்.  பல மாணவர்கள் தற்கொலை செய்வதை எமது சமுதாயம் பெரிது படுத்துவதில்லை.

அதே நேரம் எல்லோரும் படித்து ஆறடி பெட்டிக்குள் இருக்க ஆசை படுவதால் மற்றைய தொழில் துறைகளில் ஆள் பற்றாக்குறை. 

We need more Tamil skilled labours and respect for all types of jobs. Local economy won't take off without skilled labours.

Are you partnering with any American colleges for school adoption programs?

Link to comment
Share on other sites

உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் போய் சேரவில்லை ,,, பாதிக்கப்பட்டதாக கொடுக்கப்படும் பல தரவுகளில் சந்தேகங்கள் ... இவைகளுக்கு மேலாக பல உதவி கோரும் அமைப்புக்கள் ... அவைகளுக்குள் எந்த வித தொடர்புகளும் இல்லை ... ஒரு அமைப்பு மூலம் உதவி பெற்றவர்கள், அடுத்த அமைப்புகளின் மூலமும் பெற வாய்ப்புகள்/பெற்றும் உள்ளனர்! ..

மூலத்தின் ஆரம்பத்தில் இந்த பிரச்சனைகளை நீண்டகால அடிப்படையில் கவனிக்கப்போவதாகத்தானே கூறியிருக்கிறார்கள் நெல்லையான்.

சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பதிவுசெய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருகின்றது. முழுமையாக இந்த நிலையம் செயல்ப்படத்தொடங்கியவுடன், புனர்வாழ்வுத் திட்டங்களில் முதல் சுற்றில் தவறவிடப்பட்டோர்களை தேடி அவர்களுக்கு உதவிகளை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

இன்றும் ... லண்டனில் இருந்து கடந்த பல வருடங்களாக தாயக மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் ஓர் முக்கிய ஆலய நிர்வாகமான ஈலிங் கனக துர்க்கை அம்மன் நிர்வாகத்திடம் இக்கேள்வியை கேட்டேன்!!! .. பதில் வந்தது ... இன்றுவரை புலத்தில் இருந்து உதவி வழங்கும் அமைப்புகளுக்குக்குள் இது தொடர்பாக எந்த தொடர்பாடல்களும் இல்லை என்று!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த நெல்லையான், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் இதிலே எங்களுக்குப் புரிந்த வகையில் தான் நாம் தொழிற்படமுடியும்.

இது தான் எமது வேலைத்திட்டம்: எமது விண்ணப்பப் படிவத்திலேயே எம்மிடம் உதவி கோருவோர் வேறெங்கெங்கு உதவி பெறுகிறார்கள் என்று விளக்கம் கோருவது வழக்கம். உண்மையிலயே அவ்வாறு பெறப்படும் உதவிகள் வாழ்க்கை ஆட்டம் காணாமற் தடுக்கபோதாது என்ற நிலையில் எம்மிடம் மேலதிக உதவி கோரினால் அதனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது எமது வழக்கமல்ல.

எமது விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு வருபவையல்ல. ஒன்றில் மதகுருமாருக்கூடாக அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கூடாக மட்டுமே எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவர்கள் அவதானித்துள்ள எல்லைநிலை விண்ணப்பதாரிகளிடம், எங்களைப்பற்றி அறிமுகம் செய்துவைத்து, எம்மிடம் உதவி கோரச் சொல்லி அறிவுறுத்தி விண்ணப்பங்களைச் சேர்த்து அனுப்பிவைக்கிறார்கள். தேவையற்ற வீண் விரயங்களைத் தடுப்பதற்கான எமது பாதுகாப்புக்கவசமானது மண்ணுடனான பாசத்தொடர்புகள் அறுக்கப்பட முடியாத இந்த ஆலோசகர்களுக்கும் எமக்கும் இடையிலான நன்னம்பிக்கைத் தொடர்புகள் தான்! இவை எமக்குப்போதுமானவை என்பது எமது கருத்து,

மண்ணிலேயே கண்டறியப்பட வேண்டியவையான இந்தத் தவறான வகையிலமைந்த உதவி இரட்டிப்புக்கள் ஒருபோதும் புலத்துக்கப்பால் இயங்கும் அறக்கட்டளை அமைப்புக்களிடையேயான தகவல் பரிமாறல்கள் மூலம் சரிசெய்யப்படப்போவதில்லை. அந்த முயற்சியானது இரட்டிப்பு உதவி மூலம்அங்கே விரயம் செய்யப்படும் பணத்தைவிடப் பலமடங்கான தொகையை இங்கே வேவு பார்ப்பதில் செலவிடத்தூண்டும். அன்றியும் அறக்கட்டளைகளுக்கிடையேயான இந்தவிதமான செய்திப்பரிமாறல்கள் தனிமனித கவுரவத்தையும், நாட்டுச் சட்டங்களையும் நாடுகளுக்கிடயிலான சட்டங்களையும் மீறுவதாகக் கூட அமையலாம். இதனைத் தான் சொல்வார்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையென்று!

நாம் இங்கே மறக்க விரும்பாத விடயம் ஒன்று உண்டென்றால் அது இது தான்: மே 19க்கு முன்னாலேயே வன்னியில் தெருவில் கையேந்திநின்று கதறிய கவுரவமான குடும்பப்பெண்களின் வீடியோ காட்சி ஒன்றை சாமியார் ஒருவர் செல்வி ஜெயலலிதாவுக்குக் காண்பித்து "இன்றும் கூடவழிப்போக்கர்களுக்கு விருந்தளித்துக் களை தீர்க்கும் பாரம்பரியம் அகலாத வன்னிப்பெண்கள் தான் இவ்வாறு கதறுகிறார்கள்" என்று விளக்கமளித்தபோது அம்மையாரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியதாக அந்தச் சாமியார் பிற்பாடு கூறியிருந்தார். போரென்று ஒன்று வந்தால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எம்மைப்பற்றி வெறும் புள்ளிவிவரமாகக் கருதிய செல்வி ஜெயலலிதாவுக்கே இந்தக்கதியென்றால் எமது இதயம் அதைவிடக் கொஞ்சம் வேகமாகத்தான் அடித்துக்கொள்ளவேண்டும், இல்லையா?. அந்தமக்கள் இன்றைய பொழுது இருவேறு வீடுகளில் இரந்து சாப்பிட்டார்களா என்று எல்லாம் நாம் வேவு பார்க்கப்போவதில்லை. அது எமக்கும் இழுக்கு, அவர்களுக்கும் இழுக்கு. எண்ணிப்பார்க்க முடியாத அந்தக்கொடிய இடர்களுக்கிடயில் இருந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தாம் அவர்கள். இப்போது ஒருவருடைய உணவை மற்றவர் பறித்துச் சாப்பிடும் எண்ணம் அவர்களுக்கு வருமா, என்ன? அவர்களுக்குப் புதிதாகப் பாடம் எதுவும் புகட்டும் எண்ணப்பாடு எதுவும் எமக்கில்லை.

போக்கிரிகள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் ஓரிருவர் இருப்பார்கள். அது தான் யதார்த்தம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கே உங்களுக்குச் சொல்லலாம்: அமெரிக்கப்பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி தந்த அனைத்துலக அரசு சாரா அமைப்பொன்றின் பிரதிநிதி ஹைத்தியில் உதவி விநியோகத்டுடன் வன்னி உதவி விநியோகத்தை ஒப்பிட்டு வன்னியில்மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து தங்களுக்கான உதவிகளை தாமே விநியோகிக்க உதவுவதால், வாகனச் செலவு, எரிபொருட்செலவு, காவு கூலி, பாதுகாப்புச் செலவு எல்லாம் மிகமிகக் குறைவு, விநியோக வினைத்திறன் மிக மிக அதிகம். ஹைத்தியின் செலவினம் இதற்கு நேர்மாறு. அங்குஉதவிகள் வழங்குவதற்கான செலவினம் உதவித் தொகையை விட அதிகம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வளவு கொடுமையிலும் கூட கை நீட்டிப் பிச்சை வாங்காது கைகுலுக்கி உதவி வாங்கும் எமது மக்களைப்பற்றி பெருமைப்பட்டு அவர்களுக்கு உதவ முடிந்தமை பற்றி நாமும் பெருமைப்படுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த நெல்லையான், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் இதிலே எங்களுக்குப் புரிந்த வகையில் தான் நாம் தொழிற்படமுடியும்.

இது தான் எமது வேலைத்திட்டம்: எமது விண்ணப்பப் படிவத்திலேயே எம்மிடம் உதவி கோருவோர் வேறெங்கெங்கு உதவி பெறுகிறார்கள் என்று விளக்கம் கோருவது வழக்கம். உண்மையிலயே அவ்வாறு பெறப்படும் உதவிகள் வாழ்க்கை ஆட்டம் காணாமற் தடுக்கபோதாது என்ற நிலையில் எம்மிடம் மேலதிக உதவி கோரினால் அதனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது எமது வழக்கமல்ல.

எமது விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு வருபவையல்ல. ஒன்றில் மதகுருமாருக்கூடாக அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கூடாக மட்டுமே எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவர்கள் அவதானித்துள்ள எல்லைநிலை விண்ணப்பதாரிகளிடம், எங்களைப்பற்றி அறிமுகம் செய்துவைத்து, எம்மிடம் உதவி கோரச் சொல்லி அறிவுறுத்தி விண்ணப்பங்களைச் சேர்த்து அனுப்பிவைக்கிறார்கள். தேவையற்ற வீண் விரயங்களைத் தடுப்பதற்கான எமது பாதுகாப்புக்கவசமானது மண்ணுடனான பாசத்தொடர்புகள் அறுக்கப்பட முடியாத இந்த ஆலோசகர்களுக்கும் எமக்கும் இடையிலான நன்னம்பிக்கைத் தொடர்புகள் தான்! இவை எமக்குப்போதுமானவை என்பது எமது கருத்து,

மண்ணிலேயே கண்டறியப்பட வேண்டியவையான இந்தத் தவறான வகையிலமைந்த உதவி இரட்டிப்புக்கள் ஒருபோதும் புலத்துக்கப்பால் இயங்கும் அறக்கட்டளை அமைப்புக்களிடையேயான தகவல் பரிமாறல்கள் மூலம் சரிசெய்யப்படப்போவதில்லை. அந்த முயற்சியானது இரட்டிப்பு உதவி மூலம்அங்கே விரயம் செய்யப்படும் பணத்தைவிடப் பலமடங்கான தொகையை இங்கே வேவு பார்ப்பதில் செலவிடத்தூண்டும். அன்றியும் அறக்கட்டளைகளுக்கிடையேயான இந்தவிதமான செய்திப்பரிமாறல்கள் தனிமனித கவுரவத்தையும், நாட்டுச் சட்டங்களையும் நாடுகளுக்கிடயிலான சட்டங்களையும் மீறுவதாகக் கூட அமையலாம். இதனைத் தான் சொல்வார்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையென்று!

நாம் இங்கே மறக்க விரும்பாத விடயம் ஒன்று உண்டென்றால் அது இது தான்: மே 19க்கு முன்னாலேயே வன்னியில் தெருவில் கையேந்திநின்று கதறிய கவுரவமான குடும்பப்பெண்களின் வீடியோ காட்சி ஒன்றை சாமியார் ஒருவர் செல்வி ஜெயலலிதாவுக்குக் காண்பித்து "இன்றும் கூடவழிப்போக்கர்களுக்கு விருந்தளித்துக் களை தீர்க்கும் பாரம்பரியம் அகலாத வன்னிப்பெண்கள் தான் இவ்வாறு கதறுகிறார்கள்" என்று விளக்கமளித்தபோது அம்மையாரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியதாக அந்தச் சாமியார் பிற்பாடு கூறியிருந்தார். போரென்று ஒன்று வந்தால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எம்மைப்பற்றி வெறும் புள்ளிவிவரமாகக் கருதிய செல்வி ஜெயலலிதாவுக்கே இந்தக்கதியென்றால் எமது இதயம் அதைவிடக் கொஞ்சம் வேகமாகத்தான் அடித்துக்கொள்ளவேண்டும், இல்லையா?. அந்தமக்கள் இன்றைய பொழுது இருவேறு வீடுகளில் இரந்து சாப்பிட்டார்களா என்று எல்லாம் நாம் வேவு பார்க்கப்போவதில்லை. அது எமக்கும் இழுக்கு, அவர்களுக்கும் இழுக்கு. எண்ணிப்பார்க்க முடியாத அந்தக்கொடிய இடர்களுக்கிடயில் இருந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தாம் அவர்கள். இப்போது ஒருவருடைய உணவை மற்றவர் பறித்துச் சாப்பிடும் எண்ணம் அவர்களுக்கு வருமா, என்ன? அவர்களுக்குப் புதிதாகப் பாடம் எதுவும் புகட்டும் எண்ணப்பாடு எதுவும் எமக்கில்லை.

போக்கிரிகள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் ஓரிருவர் இருப்பார்கள். அது தான் யதார்த்தம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கே உங்களுக்குச் சொல்லலாம்: அமெரிக்கப்பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி தந்த அனைத்துலக அரசு சாரா அமைப்பொன்றின் பிரதிநிதி ஹைத்தியில் உதவி விநியோகத்டுடன் வன்னி உதவி விநியோகத்தை ஒப்பிட்டு வன்னியில்மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து தங்களுக்கான உதவிகளை தாமே விநியோகிக்க உதவுவதால், வாகனச் செலவு, எரிபொருட்செலவு, காவு கூலி, பாதுகாப்புச் செலவு எல்லாம் மிகமிகக் குறைவு, விநியோக வினைத்திறன் மிக மிக அதிகம். ஹைத்தியின் செலவினம் இதற்கு நேர்மாறு. அங்குஉதவிகள் வழங்குவதற்கான செலவினம் உதவித் தொகையை விட அதிகம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வளவு கொடுமையிலும் கூட கை நீட்டிப் பிச்சை வாங்காது கைகுலுக்கி உதவி வாங்கும் எமது மக்களைப்பற்றி பெருமைப்பட்டு அவர்களுக்கு உதவ முடிந்தமை பற்றி நாமும் பெருமைப்படுவோம்.

அக்கா, எனது இருபது வருட ஈழ அரசியல் போராட்டத்தில் கண்டுபிடித்தது, எம்மக்களுக்கு உதவுவது மிகவும் கடினம். 

இங்கேயே மலையாள மாந்திரி நாளை கேரளா காடுக்கு செல்கிறார் கையின் படத்தை அனுப்பினால் போதும் என்று திரி தொடங்கியிருந்தால் நூறு ஈருருளிகள் தேறி இருக்கும். 

Link to comment
Share on other sites

நன்றிகள், ... சில தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகளை கூறினேன் உங்களுக்கு, மற்றும்படி உங்கள் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கவல்ல! உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ... என் கணக்கிலும் ஒரு சைக்கிளை சேருங்கள் .. தொடர்பு கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள், ... சில தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகளை கூறினேன் உங்களுக்கு, மற்றும்படி உங்கள் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கவல்ல! உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ... என் கணக்கிலும் ஒரு சைக்கிளை சேருங்கள் .. தொடர்பு கொள்கிறேன்!

நெல்லையர்,  நான் கேட்க இருந்த கேள்விகள் பல கேட்டு உதவியதற்கு நன்றி.  தீர விசாரித்து குடுப்பது தான் சரி. 

மற்றும், சைக்கிள் உதவிக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மீண்டும் கூறிகொள்ள விரும்புவது "தந்த பணத்துக்கு என்னாச்சு" என்று கேட்கும் உரிமை உங்களுக்குண்டு. அப்படிக் கேளாத வரையில் நீங்களும் தான் கடமை தவறுபவர்கள் ஆகிறீர்கள். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. இன்னும் 12 மிதிவண்டிக்கான கொடையாளிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உதவி செய்ய விரும்புபவர்கள் தயவு செய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

nowwow-us.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 6 மிதிவண்டிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. விரைவில் இந்தத் திட்டம் உங்கள் ஆசியுடன் பூர்த்தியடையும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிதிவண்டி வழங்குவதற்கு உதவி செய்த அனைவருக்கும் NOWWOW என்ற அமைப்பின் சார்பில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலதிக விபரங்களுக்கு,

http://tamilwin.com/show-RUmqyGTZOWis3.html

அத்துடன் எமது சேவை முடிந்து விடவில்லை.

அடுத்தபடியாக கடந்த 2009 ம் ஆண்டு யுத்த சூழலினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடியேறியுள்ள மிகவும் வறிய குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மிகவும் கஷ்டப்பிரதேசமான வாகரை, கிரான், வாழைச்சேனை, செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள 3300 வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு சுமார் 10,000.00 USD உடனடியாகத் தேவைப்படுகிறது. மேலதிக விபரம் தேவைப்படின் அதனை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம். இப்பண உதவியை நீங்கள் வங்கிக் காசோலை மூலமாகவோ அல்லது பின்வரும் இணையதளத்தினுடாகவோ அனுப்பலாம்.

http://nowwow-us.org/

பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்கு கைகொடுப்போம்.

தாழ்மையுடன் உங்கள் மக்கள் பிரதிநிதி,

சுபா சுந்தரலிங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே அந்த மக்களுக்கு

சேவை செய்பவர்கள் போற்றுதலுக்கு

உரியவர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.