Jump to content

ஈழத்தமிழர் விவகாரம் - இந்தியாவின் வரலாற்றுத் தவறும்


Recommended Posts

இந்தியாவின் காங்கிரஸ்கட்சி அரசினதும் பார்ப்பணிய வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களின் பழிவாங்கல் பாணியிலான ஈழத்தமிழர் நோக்கிய அணுகுமுறையானது இந்தியாவின் நலன்களை நீண்டகால நோக்கில் பாதிக்கும் என்பது பற்றி பல கல்விமான்கள் கொள்கை வகுப்பாளர்கள் கருத்துக்களை கடந்த காலத்தில் வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆய்வுகள் இந்தியாவின் பிராந்திய வல்லரசு மற்றும் இந்துசமுத்திரத்தின் ஆதிக்கம் என்பவற்றின் கண்ணோட்டத்தில் சீனாவை பின்னணியாக கொண்டு உலகளாவியரீதியில் பொருளாதாரா அபிவிருத்தி அசுரவோகத்தில் நடந்த பொழுது செய்யப்பட்டவை.

நாடுகளின் மற்றும் பொருளாதார வர்த்தக பிராந்தியாங்களின் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் என்ன என்று பாரிய எதிர்பார்ப்புகளை தரும் தரவுகள் கொண்ட ஒப்பீட்டு ஆய்வுகள் செய்த காலம் மலையேறிவிட, பொருளாதார நடவடிக்கைகள் என்ன வேகத்தில் சுருங்குகிறது என்பது பற்றி பதட்டமான ஆய்வுகள் செய்யும் காலத்தில் இன்று இருக்கிறோம்.

இன்று உலகமயமாக்கல் பின்னகர்த்தப்படல் (deglobalisation) என்பது அடிக்கடி பேசப்படும் விடையமாக இருக்கிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் நுகர்விற்கு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் குறைந்த விலையில் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்து தம்மை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டிருந்தனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் நுகர்வோரின் பொருளாதார பலம், கடன் வசதிகள், நாணயமாற்று வீதத்தின் அனுகூலம், வேலை தேடுவோர் உதவித்தொகை, இலவச வைத்திய சேவை போன்ற சமூக காப்பு வசதிகள் என்பன கடந்த சில பத்துவருடங்களாக உலகமயமாக்கலின் மறு பக்கத்தை அறிந்து கொள்வதை பிற்போட்டிருந்தது.

2008 இன் ஆரம்பம் வரை விரிவாக்கல் நிலையில் இருந்த பல முன்னணி அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரம் இன்று கட்டுப்பாடற்றமுறையில் சுருங்கிவரும் நிலைக்கு மாறிவருகிறது. இசுப்பானியா போன்ற நாடுகளில் வேலையில்லாதோர் தொகை 17 விகிதத்தை இந்த வருட இறுதியிலும் 19.4 விகிதத்தை அடுத்த வருடத்தில் அடையும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. உலகளாவிய ரீதியில் அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற வேறுபாடு இன்றி வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருவதும் அதனால் மெதுமெதூவக அதிகரித்து வரும் சமூக அழுத்தங்களும் அவற்றின் எதிர்கால பிராந்திய உலக அரசியல் பரிமாணங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

இலங்கைத்தீவில் சிறீலங்கா இனவெறி அரசு நடத்தும் ஈழத்தமிழர் இன அழிப்பிற்கு இந்தியாவின் காங்கிரஸ் அரசும் இந்திய பாதுகாப்பு புலநாய்வு மற்றும் வெளியுறவுத்துறைகள் உடந்தையாக இருப்பது உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிற்கும் ஈழத்தமிழர் தேசியதலமைக்கும் ஏமாற்றத்திற்கும் வேதனைக்கும் உரிய ஒன்றாக உள்ளது. இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டதரப்புகளால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கி

Link to comment
Share on other sites

இந்திய வெளிநாட்டு கொள்கை, கட்சிகள் சம்பந்தபட்ட விடையம் அல்ல என்பது எனது தாழ்வான அபிப்பிராயமுங்கோ.... :lol:

Link to comment
Share on other sites

இந்திய வெளிநாட்டு கொள்கை, கட்சிகள் சம்பந்தபட்ட விடையம் அல்ல என்பது எனது தாழ்வான அபிப்பிராயமுங்கோ.... :lol:

ஆம்....!! அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படுமே ஒழிய கொள்கைகளில் அல்ல

Link to comment
Share on other sites

இன்னுமொரு விஷியம்.. 90% தொடக்கம் 98 % 'சதவீதமான' இந்தியர்களுக்கு சிரி லன்காவும் ஒண்டுதான் சோமாலியாவும் ஒண்டுதான்.....

அவர்களுக்கு கணக்கில்லை............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.