Jump to content

வேஷம் கலைந்த கலைஞர்


Recommended Posts

வேஷம் கலைந்த கலைஞர்

[04 - January - 2009] [Font Size - A - A - A]

கலைஞன்

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வாரா... மாட்டாரா என்பது இன்று இரு நாடுகளிலும விவாதத்திற்குரிய விடயமாகியுள்ள அதேவேளை அவ்வாறு அவர் சென்றாலும் எந்தவிதப் பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லையென்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் என்ற தமிழக அரசியல் தலைவர்களின் ஒட்டு மொத்த குரலும் இன்று சுருதி மாறி இலங்கைக்கு பிரணாப்பின் விஜயம் என்ற தொனியில் ஒலிக்குமளவுக்கு மத்திய அரசின் செயற்பாடுகள் தமிழகத்திற்கு விராதமான போக்கிலும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நோக்கிலும் சென்றுகொண்டிருக்கின்றன.

தமிழக அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக இலங்கைத் தமிழர் ஆதரவுக் காஷத்தை சற்று அதிகமாகவ எழுப்பிய தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இன்று வேஷம் கலைந்து விட்ட நிலையில், தனது சுயலாப அரசியல் சித்தாந்தத்தை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டு மத்திய அரசின் புகழ்பாடிச் சித்தனாகிவிட்டார்.

தமிழக எம்.பிக்கள் 40 பரும் பதவி துறப்பு, உண்ணாவிரதப் போராட்டம், மனித சங்கிலிப் போராட்டம், இலங்கைத் தமிழர்களுக்கான நிதி, பொருள் சகரிப்பு என்ற பெயர்களில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து நடித்த திரைப்படங்களின், அரசியல், வியாபார சூட்சுமங்களை இன்று தமிழக மக்கள் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்களும் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

"இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவேன்' என்று சூளுரைத்து வீரவாளெடுத்த கருணாநிதி, இன்று டில்லி அரங்கற்றும் அரசியல் நாடகத்தில் கோமாளி வேடமற்று சிறப்பாக நடித்து "சிறந்த தமிழக நடிகர்' என்ற பெயரை பெற்றுக் கொண்டு ஏனையவர்களைப் பார்த்து மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்கிறார்.

"இலங்கையில் போர் நிறுத்தம்' என்ற கருணாநிதியின் கோஷம் இன்று, "இலங்கைக்கு பிரணாப் பாவார்' என்ற தொனிக்கு சுருதி இறங்கிவிட்டது. இலங்கைக்கு பிரணாப்பைய அனுப்ப மறுக்கும் மத்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தத்தை ஒரு பாதும் ஏற்படுத்த முற்படாது என்பது கருணாநிதிக்கு தெரியாதவிடயமல்ல. எனவ கருணாநிதி தெரிந்து கொண்ட தமிழக மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றார்.

தமிழ் நாட்டு அரசியலை சூதாட்ட களமாக மாற்றிவிட்ட தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை பகடைக்காயாக்கி அம் மக்கள் சிந்தும் குருதியில் குளித்து கும்மாளமடித்து அரசியல் ஆதாயங்களுக்காக அந்தரத்தில் பறக்கின்றன. தமிழின உணர்வு அரசியல் சாக்கடையுடன் கலந்து விட்டதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறந்த உதாரணங்களாகியுள்ள சம்பவங்கள தற்போது, தமிழகத்தில் நடந்தறி வருகின்றன.

தி.மு.ககாங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்காக "புலி ஆதரவு தி.மு.க.' என்ற ஆயுதத்தை கையிலெடுத்துக் கொண்ட அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா அதன் மூலம் தி.மு.க.வை கண்மூடித்தனமாக தாக்கியதினால் திக்குமுக்காடிப் போன கருணாநிதி தான் காங்கிரஸ் விசுவாசி என்பதைக் காட்டி கூட்டணியை தக்க வைப்பதற்காகவ சில கைது நடவடிக்கைகளை அரசியல் அதிரடியாக மேற்கொண்டார்.

கருணாநிதியின் இந்த அரசியல் சகுனித்தனத்தினாலேயே, எந்தவித அரசியல் நாக்கமுமின்றி தமிழன் என்ற உணர்வினால் மட்டும் இலங்கைத் தமிழர்களையும் அவர்களின் போராட்டத்தையும் ஆதரித்துப் பேசிய திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றார் சிறையிலடைக்கப்பட்டனர். இன்று கூட தனது இனத்துக்காக பேசிய ஒர குற்றத்திற்காக இயக்குநர் சீமான் சிறை வாசம் அனுபவிக்கின்றார்.

எதிர்காலத் தேர்தல் ஆதாயம் ஒன்றுக்காக புதுடில்லியுடன் செய்து கொண்ட அதிகார சமரசத்தின் விளைவாகவ இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழகத்தில் குழிதாண்டிப் புதைக்கும் வலையில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகவும் அவர்களின் போராட்டம் தொடர்பாகவும் தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும் தான் முன்னர் நியாயப்படுத்தி பேசிய பல விடயங்களை தற்போது அரசியல் நலன்களுக்காக தான எதிர்த்துப் பேசுகிறார்.

இலங்கைத் தமிழர் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழகத்தில் மீண்டும் ஆதரவு பெருவாரியாக அதிகரித்து வருவதினால் தமிழக காங்கிரஸ் கட்சியும் சில பார்ப்பன ஊடகங்களும கதி கலங்கிப் போயுள்ளன. இவர்கள் வைக்கும ஒப்பாரிகளினால் தனது குடும்ப அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து வந்து விடுமா என்ற அச்சத்திலும் டில்லியின் மிரட்டலுக்கு அடிபணிந்தும தமிழகத்தில் சில இலங்கைத்தமிழர் விரோத நடவடிக்கைகளை கருணாநிதி முன்னெடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராக பேசுவோர் செயற்படுவோர் மீது தமிழகத்தில் தமிழின உணர்வாளர்கள் மற்கொண்ட சில நடவடிக்கைகள் டில்லி வரை எதிரொலித்தன. இதன் விளைவாகவே "இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பசினாலும், செயற்பட்டாலும் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்காது இந்த எச்சரிக்கை எல்லாருக்கும் பொருந்தும்' என்று கருணாநிதி அறிக்கை வெளியிட வேண்டி வந்தது.

காங்கிரஸ் மேலிடம் கொடுத்த அழுத்தம கருணாநிதியின் இந்த அறிவிப்பின் பின்னணியாகும். தமிழக சட்டப் பேரவையில் தி.மு.க.விற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும் இல்லாத நிலையில் காங்கிரஸின் ஆதரவுடன் தான் ஆட்சியில் நீடிக்க முடியுமென்ற நிலையில் தனது அரசை காப்பாற்றிக் கொள்ளவ காங்கிரஸ் விடுக்கும் கைதுக் காரிக்கைகளை தமிழக அரசு அவசர நடவடிக்கைகளாக நிறைவற்றி வருகின்றது.

தி.மு.க.அரசின் ஆயுட் காலம் தற்போது காங்கிரஸ் கட்சியின் கைகளில்தான் உள்ளது. அதனால் தான் காங்கிரஸ் சொல்வதையெல்லாம் கருணாநிதி சிரமற் கொண்டு செய்து வருகின்றார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பது தான் தி.மு.க.அரசின் குறிக்காள் என்று கூறும் கருணாநிதியால் அத குறிக்காளை அடையவே இலங்கையில் ஒரு போராட்டம் நடைபெற்று வருகின்றதென்பதை மறுக்க முடியுமா?

2007 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழீழ ஆதரவு மாநாட்டின் போது திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பேசியதை கண்டித்து தமிழக சட்டப்பரவையில் காங்கிரஸ் கட்சியினர் பசிய போது அவர்களுக்கு பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் கருணாநிதி "தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது அந்த இயக்கத்திற்கு உதவுவதாக ஆகாது' என்று பொடா சட்டத்தின் கீழ் வைகா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீமன்ற நீதிபதிகள் கூறியதை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். ஆனால் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு எதிராகவ செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வண்டும். இலங்கைக்கான இராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டுமென கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த தமிழகமும் போராடி வருகின்றது. தமிழக மக்களின் உணர்வு ரீதியான போராட்டத்தை தனது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி இன்று அந்தப் போராட்டத்தைக் காட்டியும் கொடுத்துவிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வண்டுமென்ற தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களினதும் தீர்மானத்தை ஆதரித்து அவர்களை டில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் கழுத்தறுத்து போர் நிறுத்தமென்ற தீர்மானத்தை பிரணாப்பின் இலங்கை விஜயமாக மாற்றிய சதிவலையை கருணாநிதி திட்டமிட்ட செய்து முடித்தார்.

மத்திய அரசு இலங்கையரசின் பக்கம நிற்கும். இலங்கையில் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த மத்திய அரசு ஒரு போதும் இலங்கையரசுக்கு அழுத்தங்களை கொடுக்காது என்பது கருணாநிதிக்கு நன்கு தெரிந்த விடயம். அதனால் தான் கருணாநிதி மத்திய அரசைக் காக்கும் விதத்திலும் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதிலும் தனது சாணக்கியத்தை பயன்படுத்தி வருகின்றார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை இந்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது. காஸா பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரல் நடத்தி வரும் இராணுவ நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வண்டுமென்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளதுடன் இஸ்ரல் கட்டுப்பாட்டுடன் செயற்பட வண்டுமென்றும் எச்சரித்துள்ளது.

காஸா பகுதி மீது இஸ்ரல் நடத்தும் தாக்குதலுக்காக துள்ளிக் குதித்து ஆவசப்படும் இந்தியா தனது அயல் நாடான இலங்கையில் ஒரு இனம் மீது இனவழிப்பு யுத்தத்தை நடத்தி வரும் அரசுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையைக் கூட இதுவரை விடுத்ததில்லை. மாறாக அந்த அரசின் இனவழிப்பு போருக்கு உதவியாக இராணுவ தளபாடங்களையும் நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசிற்கும் இலங்கை அரசிற்குமிடைய சிறந்த புரிந்துணர்வு உள்ளது. அதனால் தான் இன்று வரை இலங்கை அரசை, அதன் தமிழர் ஒழிப்புக் கொள்கையை எதிர்த்து இந்திய அரசு ஒரு கண்டன அறிக்கையைக் கூட விடுக்க வில்லை. இலங்கைத் தமிழர் தொடர்பான காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள "பார்வை' இதுதான்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இந்திய அரசு ஒருபாதும் முயற்சிக்காது என்பது தெளிவானது.அதனால் தான் கருணாநிதி அக்காரிக்கையின் வீரியத்தை குறைத்து பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதன் மூலமாவது தமிழக மக்களையும் இலங்கை தமிழர்களையும் திருப்திப்படுத்திவிடலாமென கணக்குப் போட்டு அது தொடர்பான காரிக்கையை பிரதமரிடம் விடுத்தார்.

கருணாநிதியின் இக்காரிக்கையினால் பெரும் நெருக்கடிக்குள்ளிலிருந்து தப்பித்துக் கொண்ட மத்திய அரசு இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு உடனடியாக அனுப்புவதாக டில்லி சென்ற தமிழக அனைத்துக் கட்சிக் குழுவிடம் உறுதியளித்தது. இதில் பல தலைவர்களுக்கு உடன்பாடில்லாத போதும் கருணாநிதி மீதிருந்த மரியாதையாலும், நம்பிக்கையாலும் அரை மனதுடன் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் ஒன்றரை மாதங்கள் கடந்த விட்ட பாதும் இதுவரை பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லவும் இல்லை. இலங்கையில் பார்நிறுத்தம் ஏற்படவும் இல்லை. அதவளை இலங்கைத் தமிழர் தொடர்பான நாடகத்தை கருணாநிதி அரங்கற்றத் தொடங்கி 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இக்காலப்பகுதியில் மட்டும் இலங்கையில் நூற்றுக்கு மற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கு மற்பட்டார் படுகாயப்படுத்தப்பட்டுமுள்ள

Link to comment
Share on other sites

தினக்குரல்.......உது சிங்களவர்களின் மேற்பார்வையில் உள்ள பத்திரிகையல்லவா? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.