Jump to content

சரியான பாதையில் ஜே.வி.பி


Recommended Posts

சரியான பாதையில் ஜே.வி.பி

இன்றைக்குச் சிறிலங்காவிலே இனவாதம் கக்குகின்ற கட்சிகள் என்றதுமே எம் நினைவில் வருவது ஜாதிக ஹெல உறுமயவும் ஜனதா விமுக்தி பெரமுன என்கின்ற ஜே.வி.பியும் தான்.

ஆனால் இலங்கையின் அரசியலையும் ஜெ.வி.பி.யின் கடந்த காலத்தையும் பின்நோக்கிப் பார்த்தால் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சரியான பாதையிலே செல்லுகின்ற அரசியல் கட்சியாகவே ஜெ.வி.பியைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

முதலாவதாக மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜெ.வி.பியினர் ஜனநாயகத்திலே பாராளுமன்ற அரசியலிலோ எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களல்ல.

ஒரு மருத்துவ பீட மாணவனாக ரஸ்யாவிலே கல்வி கற்றுக் கொண்டிருந்த றோஹண விஜேவீரா அவர்கள் மாக்சியத் தத்துவங்களால் கவரப்பட்டவராய் இருந்தார். கியுபப் புரட்சி அவரைப் பெரிதும் கவர்;ந்திருந்தது. குறிப்பாக புரட்சியாளர் சேகுவேராவின் வழியை அவர் பெரிதும் விரும்பினார்.

அவர் ரஸ்ய அரசு தொடர்பான விமர்சனங்களை முன்வைத்த காரணத்தால் தன்னுடைய கல்வியைத் ரஸ்யாவில் தொடரமுடியாமல் போனது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நாட்டம் காட்டத் தொடங்கிய விஜேவீரா இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறையால் ஏழை மக்கள் எந்தப் பலனையும் பெறப் போவதில்லை, ஆயுதப் புரட்சி மூலமே மக்கள் விடிவு பெறலாம் என்ற பிரச்சாரத்தை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பின்தங்கிய கிராமப் பகுதிகளில் இரகசியமாக முன்னெடுத்தார்.

இதன் அடுத்த கட்டமாக 1971ம் ஆண்டிலே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக ஒரு ஆயுதப் புரட்சிக்கு ஏற்பாடு செய்தார். சரியான திட்டமிடலில்லாத காரணத்தால் சிறிமாவோ அரசாங்கத்தால் அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டது. கொடுங் கரங் கொண்டு ஒடுக்கப்பட்ட இந்தப் புரட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். றோஹண விஜேவீரா உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்;டு வெளியில் வந்த விஜேவீராவின் மனதில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றும் எண்ணம் கருகிவிடவில்லை.

ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் சுனந்த தேசப்பிரிய , விக்டர் ஐவன் உள்ளிட்ட பலர் கருத்து முரண்பாடுகளினால் வெளியேறிய நிலையிலும் உடனடியாக இன்னொரு புரட்சியை நடத்த முடியாதென்பதை உணர்ந்து காலங் கனியும் வரை ஜனநாயக அரசியல் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு காலங்தள்ள முடிவு செய்தார்.

தமது அரசால் கடடவிழ்த்து விடப்பட்ட 83ம் ஆண்டுக் கலவரத்திலிருந்து தமது முகத்தை சர்வதேச அரங்கில் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தப் பழியை ஜே.வி.பி மற்றும் இடது சாரிக் கட்சிகளின் தலையில் போட்டு அவற்றைத் தடை செய்யும் கைங்காரியத்தை ஜே.ஆர்.

இந்த நிலையில் இரண்டாவது புரட்சியை தான் எதிர்பார்தததற்கு முன்னதாகவே ஆரம்பிக்க வேண்டிய நிலை ஜெ.வி.பிக்கு இருந்தது.

1980 களின் இறுதிப் பகுதியில் கிட்டத்தட்ட சிங்களப் பிரதேசத்தை ஒரு காகிதத் துண்டின் மூலம் கட்டுப்படுத்தும் அளவிற்கு அவர்கள் பலம் பெற்றிருந்தார்கள். ஆனால் உள்வீட்டுப் பிரச்சினைகள் காரணமாக அந்தப் போராட்டமும் நசுக்கப்பட்டதுடன் விஜேவீரா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். சிலர் நாட்டை விட்டுத் தப்பியோடினர்.

இந்த நிலையில் பழைய குருவி கதவைத் திறவடி பாணியில் மீண்டும் ஜனநாயகம் பேச வேண்டிய நிலை அவர்களுக்கு எற்பட்டது. அதனால் ஜனநாயக அரசியலில் கால் வைத்திருந்தாலும் அடுத்த புரட்சிக்கான காலம் கனியும் வரை காத்திருக்கும் ஒரு அமைப்பாகவே ஜெ.வி.பி இருக்கிறது.

இலங்கையின் போர்ச் சூழல் தமது திட்டத்ததை நிறைவேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது, தொடர்ந்து இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் யுத்தம் நீடிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் யுத்த மனநிலை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

அத்துடன் முதலிரு சந்தர்ப்பங்களைப் போலன்றி இம்முறை ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் செல்வாக்கைப் குறிப்பாக நகரப் பகுதிகளில் பெற்றுவிட வேண்டுமென்பதிலும் குறியாக இருக்கின்றனர்.

சிங்கள மக்களிடம் அரசியல் ரீதியாகக் குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெறுவதற்கான வழி இனவாத சிங்களக் கோசமே என்பதை அனைவரும் அறிந்ததே. பண்டாரநாயக்காவின் தனிச் சிங்களச் சட்டம் என்ற கோசம் கட்சியைத் தொடங்கி சில காலத்திலேயே அரசுக் கடடிலில் அமரும் அளவிற்கு அவர்களை உயர்த்தியதும் அனைவரும் அறிந்ததே.

எனவே ஜெ.வி.பியும் இனவாதத்தையே தன்னுடைய அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருகிறது. ஆதன் மூலம் கறிப்பிடத்தக்க மக்களின் செல்வாக்கையும் பெற்றிருக்கிறது.

அது மட்டுமன்றி சிறிலங்கா அரசாங்கம் போர்ச் சூழல் காரணமாக அவசர அவசரமாக பினபுலத்தை நோக்காது பலரையும் இராணுவத்தில் சேரத்து வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல ஜே.வி.பியினர் இன்றைக்கு சிறிலங்கா இராணுவத்திற்கள் நுழைந்து விட்டனர்.

அத்துடன் 80களின் இறுதிப்பகுதியில் பெருமளவு ஆயுதங்களைக் கொண்டிருந்த இவர்களின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட போதிலும் பெருமளவிலே ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை.

அந்த ஆயுதங்கள் எங்கே என்ற கேள்வியும் அவற்றை அரசிடம் கையளிக்காமல் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் நியாயமானதே. ஆனால் பதவிக் கதிரையில் அமர்ந்திருப்பதற்கு இவர்களின் ஆதரவு தேவையாயிருப்பதால் சிங்கள அரசாங்கங்கள் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.

இவை எல்லாவற்றையும் கவனிக்கின்ற போது இம்முறை ஜனநாயகப் போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றிப் பின் தமது திட்டத்தை நிறைவேற்றுவது அல்லது முன்னரைப் போலல்லாது இராணுவம். அரச நிர்வாகம், தொழிற்சங்கங்கள் என்பவற்றுக்குள் பெருமளவில் ஊடுருவி சரியான திட்டமிடலுடன் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற இரட்டைத் திட்டத்துடன் சரியான பாதையில் ஜெ.வி.பி செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

மணி அத்தான் தங்களது அரசியல் அலசல் நன்றாக இருந்தது அறியாத பல விசயங்களை இதன் மூலம் அறிந்து கொண்டேன்........ :lol:

அப்ப ரோகண விஜவீரவின் கனவை நிறைவேற்ற தற்போது அரசியல் கதைரையில் உள்ள ஜே.வி.பி உறுப்பினர்கள் செயற்பட்டு கொண்டிருகிறார்கள் என்று கூறுகிறீர்கள்..............ஆனால் தற்போது உள்ளவர்கள் பணத்திற்காக அரசியல் துறையில் வந்தவர்கள் போல் அல்லவா இருகிறார்கள் இவர்கள் புரட்ச்சி செய்வார்கள் என்று எண்ணுகிறீர்களா...............

மற்றும் நீங்கள் கொடுத்த விளக்கம் ஏற்று கொள்ளகூடியது இவர்களின் ஆயுதங்கள் எங்கே அதை ஏன் இன்னும் மறைவாகவே வைத்துள்ளார்கள் என்பது எல்லாம் ஆனால்..........இவர்களின் புரட்சி எல்லாம் காலத்தின் ஓட்டத்தில் கரைந்துவிட்டன என்று எடுகோள் எடுக்க முடியாதா மணி அத்தான்............

Link to comment
Share on other sites

தற்போதைய ஜே.வி.பியினர் மக்களுக்காகப் புரட்சி செய்யப் போவதில்லை என்பது உண்மை.

காரணம் அத்தகைய எண்ணத்துடன் 1971ம் ஆண்டுப் புரட்சியில் ஈடுபட்ட றோஹணவிஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்கா உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டு விட்டனர். சுனந்த தேசப்பிரிய, விகடர் ஐவன் உள்ளிட்ட பலர் வேறு பாதைகளில் செல்லத் தொடங்கி விட்டனர்.

ஆனால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதப் புரட்சி என்ற எண்ணம் இன்றைய தலைவர்களிடமும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலங்களில் ஜேவிபி யினருடன் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு இருந்த தொடர்புகள் எத்தகையது. ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயற்படக் கூடிய வாய்ப்புகள் அப்போது இருந்தனவா? தெற்கில் ஜேவிபி யினர் மக்கள் அல்லது ஆயுதப் புரட்சியினூடாக அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வடக்குக் கிழக்கில் தோன்றிய தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அதற்கான ஆதரவையளித்தனவா? அப்படியான ஒரு ஆதரவை அளிப்பதனூடாக தெற்கில் ஒரு புரட்சி நடக்க, தமிழீழ விடுதலைக்கு எதிரான சிங்களப் பேரினவாத + முதலாளித்துவ அரசு பலமிழக்க தமிழீழ விடுதலை என்பது எளிதில் அடையக்கூடிய ஒன்றாக இருந்திருக்குமா? ஜேவிபி யினரின் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்ட இன்றைய காலகட்டத்திலும் கூட தெற்கிலே பொதுவுடமையின் அடிப்படையிலான ஆயுதப் புரட்சியை ஊக்குவிப்பது தமிழர் தரப்புக்கு சாதகமான விடயமாக இருக்குமா? அது சாத்தியமா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் வகையில் ஒட்டுக்குழுக்களை உருவாக்கி வளர்த்துவிட்டது இலங்கை அரசு (பின்னணியில் வேறு நாடுகளும்). அதற்கான காரணங்களாக பிரதேசவாதம் போன்றவற்றை அது கண்டறிந்து செயற்பட்டது. இதேபோன்று தெற்கில் சிறு சிறு ஆயுதக் குழுக்களை அரசுக்கெதிராக உருவாக்குவனால் தமிழர் தரப்பு முயற்சி எப்படியாக அமையும்? இதற்கான காரணமாக கொமுயூனிசத்தையும், தெற்கின் பலவீனங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியாதா?

இப்படியான எனது அப்பாவித்தனமான கேள்விகளுக்கு பதில்கள் உண்டா :) அல்லது இவை கற்பனைத்தனமான கேள்விகளா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி. ஆரம்பித்த வரலாறு பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள் .

வாழ்த்துகள் மணிவாசகன்.

மேலும் தொடருங்கள்.

சரியான பாதையில் ஜே.வி.பி. என்ற தலைப்பை விட ஜே.வி.பி.யின் அரசியல் தந்திரம் என்று தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

மிகவும் முக்கியமான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் இளைஞன்.தென்னிலங்கையில் இருக்கிற மாக்சிய வாதிகள் (உண்மையான) அதிகமான மக்கள் செல்வாகில்லாமல் இருப்பது துரதிஸ்டமே.அடுத்ததாக நாமும் ஒரு பெரிய தவறிழைப்பதாய் கருதுகிறேன். சிங்கள மக்களிடமிருக்கின்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட தலைவர்களைக் கூட (விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையுடையவர்களாக இருந்தாலும்) நாம் எம்முடன் இணைத்துக் கொண்டு செல்லத் தயங்குகிறோம்.தமிழருக்கெதிரா? சர்வதேசப் பிரச்சாரங்களுக்கு அநியாய சங்கரி உள்ளிட்ட ஒட்டுக்குழுக்களை மிகச் சாதுரியமாகச் சிங்கள் அரசு பயன்படுத்துகின்ற அதே வேளை தமிழருக்கான உள்ளக சயநிர்ணய உரிமையை சிங்கள அரசு அங்கீகரிக்காவிட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துகின்ற உரிமை அவர்களுக்கு உண்டு என்று துணிந்து சொல்லக் கூடிய விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை நாம் எந்த அளவிற்குப் பயன்படுத்தியுள்ளோம் என்று சிந்தித்தால் தவறு புரியும்.அது மட்டுமல்லாமல் தமிழருக்கு உரிமை வழங்க வேண்டும் என்று காலம் காலமாகச் சொல்லி வருவதால் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வி காணும் விக்கிரமபாகு கருணாரட்ணவிற்கு கொழும்பு வாழ் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். மாறாக ரணில் விக்கிரமசிங்க, மிலிந்த மொரகொட போன்றவர்களுக்கே வாக்களிப்பார்கள்

ஜே.வி.பி. ஆரம்பித்த வரலாறு பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள் . வாழ்த்துகள் மணிவாசகன். மேலும் தொடருங்கள்.சரியான பாதையில் ஜே.வி.பி. என்ற தலைப்பை விட ஜே.வி.பி.யின் அரசியல் தந்திரம் என்று தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
கறுப்பி,நாட்டின் ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தை அடைவதற்கான 'சரியான பாதையில் ஜேவிபியினர் செல்கின்றார்கள்' என்ற அர்த்தத்தில் தான் அந்தத் தலைப்பை இட்டேன்.
Link to comment
Share on other sites

மணிவாசகனின் ஆக்கத்திற்கு எனது பாராட்டுக்கள்.

இலங்கையின் ஆட்சியானது இராணுவத்தால் கவிழ்க்க முடியாதது. அப்படி நடந்தால், இராணுவம் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்வதாக முடியும். இராணுவம் பிளவுபட்டு புலிகளையும் சமாளிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

Link to comment
Share on other sites

நன்றி இணையவன்,

இலங்கையின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இராணுவம் மிகப் பெரியது. அது மட்டுமன்றி அவசர காலச் சட்டத்தின் கீழ் பல காலமாக நாடு ஆளப்பட்டு வருவதால் இராணுவம் பல சலுகைகளைப் பெற்று வருகிறது.

வடக்கு கிழக்கில் உத்தியோகப்பற்றற்ற அரசாங்கமாக இராணுவமே செயல்பட்டு வருகிறது. கிழக்கு மாகாண ஆளுனர்களாக இராணுவத் தலைவர்களே உள்ளனர்.

இந்த நிலையில் தமது அதிகார மையம் தகர்க்கப்பட்டால் அல்லது ஆளும் அரசுகளுடன் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டால் ராணுவ ஆட்சி உருவாகக் கூடிய கூ+ழல் சிறிலங்காவில் காணப்படுகிறது.

என்னைப் பொறுத்த வரையில் தெற்காசியாவில் அடுத்ததாக இராணுவ ஆட்சி எற்படக் கூடிய நாடென்றால் அது சிறிலங்காவாகத் தானிருக்கும்.

Link to comment
Share on other sites

மணிவாசகன், நல்லதொரு கட்டுரை. மாறுபட்ட பார்வை. தொடர்ந்தும் இதுபோன்ற அலசல்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

ஏற்கனவே ஜே வி பியில் இருந்து விலகிய ஒரு முக்கிய புள்ளியின் பேட்டி (அல்லது ஜே வி பியினருக்கு மிக நெருக்கமானவர் ஜே வி பியினரின் தற்போதைய தலைவர் இயக்கத்தின் பணத்தை சூறையாடியதுடன்,முக்கிய உறுப்பினர்களை காட்டி கொடுத்ததுடன் அப்போதைய அரசின் முக்கிய அமைச்சரின் உதவியுடன் நாட்டை விட்டு லண்டனுக்கு ஓடியர்.இப்படியானவர் சரியான பாதையில் நாட்டை கொண்டுபோவார் என்பது சந்தேகமே.மிகுதி சிங்கள இளைஞர்களை காவு கொடுக்கவும் இவர் தயங்க மாட்டார்.சோமவன்ச அமரசிங்கவை பற்றி விக்டர் ஐவனை கேட்டால் எப்படியான துரோகி என கூறுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறுபட்ட அலசலை தந்த மணிவாசகனுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

உள் பூசல்கள் காரணமாகவே றோஹண வீஜேவீராவை கூட இலகுவில் கைது செய்யக் கூடியதாக இருந்தது. அந்த வகையில் சோமவன்ச மீது கூட உண்மையான ஜே.வி.பித் தொண்டர்களுக்கு ச்நதேகம் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான எனது அப்பாவித்தனமான கேள்விகளுக்கு பதில்கள் உண்டா அல்லது இவை கற்பனைத்தனமான கேள்விகளா

இது அப்பாவிதனமான கேள்வி அல்ல கற்பனைவாதமும் அல்ல 80 களிள் ஆரம்ப காலகட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராட வெளிகிட்ட சில ஆயுதகுழுக்கள் இந்த ஜே.வி.பி யுடன் தாங்களும் சேர்ந்து இலங்கை பூராகவும் ஒரு புரட்சியை வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்தார்கள்,அவர்களுடன? தொடர்பும் வைத்திருந்தார்கள் அவர்களில் சிலர் இப்போதும் இருகின்றார்கள்,ஜே.வி.பி யினர் தலைமறைவாக வாழ்வதிற்கு இந்த தமிழ் குழுக்கள் உதவி புரிந்தும் இருக்கின்றன,

காலஓட்டத்தில் அவர்களின் பாதையும் வேறுபட இவர்கள் பாதையும் வேறுபட புரட்சியும் வெடிக்கவில்லை தமிழ் விடுதலைக்கும் அவர்களாள் ஆதரவு கொடுக்க முடியவில்லை.

மறைந்த மாமனிதர் சிவராம் கூட ஒரு இடத்தில் கூறி இருகிறார்,ஒரு கால கட்டத்தில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற இந்த சிவப்பு சட்டைகள் எப்படி இவ்வாறு மாறிவிட்டார்கள் என்று வியப்பாக கேட்டிருந்தார்,அதாவது தற்போது உல்ல சில ஜே.வி.பி தலைவர்களை பற்றி.

தெற்கில் ஜேவிபி யினர் மக்கள் அல்லது ஆயுதப் புரட்சியினூடாக அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டபோது

ஜே.வி.பி யின் ஆயுத புரட்சி 1971 யில் நடந்தது அப்பொழுது எமது போராட்டம் வளர்ச்சியடையவில்லை அது போக சிறிமாவே யாழ்பாணத்தில் தான் பாதுகாப்பு காரணதிற்காக தங்கி இருந்ததாக கேள்வி,ரோகரணவிஜவீர யாழ்சிறைசாலையில் தான் வைத்தும் இருந்தவர்கள்..

அப்படியான ஒரு ஆதரவை அளிப்பதனூடாக தெற்கில் ஒரு புரட்சி நடக்க, தமிழீழ விடுதலைக்கு எதிரான சிங்களப் பேரினவாத + முதலாளித்துவ அரசு பலமிழக்க தமிழீழ விடுதலை என்பது எளிதில் அடையக்கூடிய ஒன்றாக இருந்திருக்குமா?

எமது போராட்டம் மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளித்து எமது போராட்டத்தை வெல்ல கூடிய நிலை ஏற்படமாட்டாது,அவர்களுக்கு ஆதரவு அளிக்க வெளிகிட்டால் எமது போராட்டம் பின்னடைவுகளை சந்திக்கும் ஒழிய வெற்றியடைய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில் தெற்காசியாவில் அடுத்ததாக இராணுவ ஆட்சி எற்படக் கூடிய நாடென்றால் அது சிறிலங்காவாகத் தானிருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.