Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

டொராண்டோவில் இன்று

இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday :icon_mrgreen: )

இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை

காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன்

விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து :o

0cfff6b0-5ae1-4c87-baab-855e38f1e33f_500.jpg

12eb0c92-f46d-47b1-aac8-c8d2d5fd5169_500.jpg

23a55957-951d-4794-86e4-bae273bc50fc_500.jpg

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.

(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).

கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.

இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!

Link to comment
Share on other sites

நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.

(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).

கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.

இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!

ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..! :(

நானே வெளியிட்ட புத்தகத்தில் அன்றே கூறியிருந்தேன். இதற்கு ஒரு வழி சொல்கின்றேன் கேளுங்கள் என. ஆனால் யூதர்கள் கேட்கவில்லை.

உலக நடப்புக்களைக்கவனிக்கவில்லை.

இன்று தமக்குள் அதுவும் தமது குடும்பத்துக்குள் குத்துப்பட்டு அழிகின்றனர்.

நான் அன்றே எழுதினேன்......................................தொடரும்..................

:( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி, சைக்கிள்ள ஆர் எங்கட அர்ஜுன் ரணதுங்க அண்ணையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் வேலைக்குப் போகும் வழியில் ஒரு ட்ரக் மோதி பெண்ணொருவர் அபாயநிலையில் இருந்தார் வழிகள் அடைக்கப்பட்டதால் வேலைக்கு லேட்

இன்று நேற்று நான் கண்ட விபத்திற்கு அடுத்த இரு சந்திகளில் இருவேறுவாகனவிபத்துகள் இன்று வேலைக்கு லேட்.... :(

Link to comment
Share on other sites

சமூக விரோதிகளுக்கு எம்மவர் செய்யும் இப்படியான செய்கைகளை சுட்டிக்காட்டும் போது கடுப்பு ஏறத்தான் செய்யும் .

90 களில் டொரான்டோவில் இடம் பெற்ற எம்மவரின் வன்முறைகளால் ஒரு கலைநிகழ்ச்சி வைக்க மண்டபம் எடுக்க முடியாத நிலையும் ,சில மண்டபங்கள் பொலிஸ் பாதுகாப்பு இருந்தால் மாத்திரம் என்றும் (அதற்கு இரண்டாயிரம் டொலர் வரும் )உதைபாந்தட்டம் வைக்க மைதானம் கொடுக்கமாட்டதாத நிலையும் ,எம்மவர் ஆட்டத்திற்கு நடுவர்கள் வரமாட்டம் என்ற நிலையும் இருந்தது .மைதானம் எடுக்க ,மண்டபம் எடுக்க அலைந்தவ்ர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்

அதைவிட பாடசாலைகளில் ,வேலைத்தளங்களில் தமிழன் என்றால் வன்முறையாளன் என்ற பெயர் கூட உருவாகி இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர்கள்தான்இருக்கின்றார்கள்.

இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.

கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.

எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது

சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.

பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .அதைவிட 2009 இற்கு பின் எதற்கெடுத்தாலும் நாட்டில போராட்டம்,விடுதலை ,தேசியம் என்று சுத்தி திரிந்தவர்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது

சர்வதேசம் நாட்டில் செய்தது ? அதை ஏன் எழுதுவான் .

Link to comment
Share on other sites

இவ்வளவும் எழுதும் அர்சுனுக்கு அமெரிக்க ஈரூந்து படை ஆப்கான மக்களின் பிணத்துக்கு மேல் என்ன நடந்தது (சரி அல்லது பிழை) என எழுத பயம் அல்லது பக்தி இருக்க வேண்டும்(அமெரிக்கர்களிடம்).

மற்றைய இனத்தின் கெட்டவைகள் இவருக்கு தெரியாதது போல் நடிப்பது இவர் எப்படியான நடிகர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Link to comment
Share on other sites

இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.

இல்லை வந்திருக்கின்றது, இருந்திருக்கின்றது.

கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.

எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது

சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.

பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற 9/11 க்குப்பிறகான காலத்தில் உண்மையான போராட்டம் அகப்பட்டுவிட்டது. கன்சவேட்டிவ் அரசு இன்று ஓரளவுக்கு எமக்காக குரல் கொடுக்கின்றது, ஏமாந்தது சிங்களத்திடம்.

Link to comment
Share on other sites

ரொறன்றோ காவல்துறை போதைப் பொருட் தடுப்புப் பிரிவினருக்கு எதிரான வழக்கு இன்று ஆரம்பமாகிறது

main_10749.jpg

ரொறன்றோ காவல்துறையின் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிறது.

சந்தேக நபர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தையும், போதைப் பொருட்களையும் கொள்ளையிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

காவல்துறை ஆவணங்களில் தவறான தகவல்களைப் பதிவு செய்து, தமது குற்றங்களை மறைத்த குற்றச்சாட்டில் அவர்கள் மீது வழக்கு இடம்பெறம்.

தம்மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளார்கள்.

2004 ஆம் ஆண்டு அவர்கள் மீது முதன் முறையாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை மிகுந்த கால தாமதமாக இடம்பெறுவதாக முடிவு செய்த நீதிமன்றம், 2008 ஆம் ஆண்டு அவர்கள் மீதான வழக்கை நிறுத்தி வைத்தது.

ஆனால், அந்த முடிவை ஒன்றாரியோவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மாற்றி, வழக்கு விசாரணை இடம்பெறவேண்டுமென உத்தரவிட்டது.

கனடாவில் காவல்துறையில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் ஊழல் குறித்த மிகப் பெரும் வழக்காக இது அமைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/...l.aspx?ID=10749

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் பணமுள்ளவனும், அதிகாரத்தில் உள்ளவனும் செய்யும் ஊழல்கள் கொஞ்சமா நஞ்சமா? வெளியில் வருவதில்லை. பணமில்லாத ஏழைகள் செய்துவிட்டால் பிடித்து பெரிதாகப்போட்டுக்காட்டி தண்டனையும் வழங்கி சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என்று பறைசாற்றுகின்றார்கள். ஆதிவேகமாக வாகனம் செலுத்தி பிடிபட்டால் ஒரு சட்டவல்லுனர் ஊடாகச்செல்லும்போது இது 95வீதம் தள்ளுபடியாகின்றது.. நீங்களாகச்சென்று வாதிடடால் வாதிட விடமாட்டார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த அபராதம் என்று சொல்லி குறைந்த கட்டணம் அறவிடுவார்கள். எப்படிப் பார்த்தாலும் கூண்டில் நிற்பவர் பணத்தை இழந்தாகவேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் சட்டமா?

நான் நினைக்கின்றேன் சட்டவல்லுனர் ஊடாகச்செல்லும்போது சட்டவல்லுனருக்குக் கொடுத்தபணத்தில் ஒரு பங்கு அங்கும் செல்கிறது என்று. இது பற்றி ஒரு ஆராய்ச்சி செய்யவேண்டும். எங்கும் அபத்தம் எதிலும்; அபத்தம். உலகம் அழிந்து புது உலகம் உருவாகக் கடவுளை வேண்டுகின்றேன். காப்பதற்கு நல்ல மனிதரே இல்லாததால் கடவுள் ஆவதாரம் எடுக்கவில்லைப்போலும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளுக்கால் நுழையத்தெரிந்தவன் தான் கனடாவில் வாழலாம். அதற்கு பணமும் வேண்டும். முடிந்தால் பாருங்கள் ஆமலே இருக்கும் வழக்கு ஒரு வகையாக தள்ளப்பட்டுவிடும்

Link to comment
Share on other sites

கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர் :D :D

jan2012-newcupsizes-release-en-v2.jpg

Link to comment
Share on other sites

கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர் :D :D

jan2012-newcupsizes-release-en-v2.jpg

மிக முட்டாள்தனமான யோசனை.... புதிதாக அறிமுகப்படுத்தும் அளவுக்கு ஒரு புது பெயர் (அளவீடு சம்பந்தமான) பெயர் வைக்காமல், முன்னம் இருந்த அனைத்தின் பெயரையும் மாற்ற வேண்டிய தேவை ஏன் 'ரிம்' இற்கு வந்தது

வழக்கமான வாடிக்கையாளர்களை முற்றாக குழப்ப போகின்றது இந்த அளவீடுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கொஞ்சம் வித்தியாசமான இடமா இருக்கும் போல கிடக்கு!!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கனடாவின் கடற்படை அதிகாரி ஒருவர் இரகசியங்களை வெளிநாடு ஒன்றிற்கு கொடுத்ததாக அரசால் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

A Halifax-area Royal Canadian Navy sub-lieutenant and intelligence officer has been charged under this country’s secrets law with passing secret government information to “a foreign entity.”

Jeffrey Paul Delisle of Bedford, N.S., has been charged under the 2001 Security of Information Act with criminal breach of trust and communicating “to a foreign entity information that the government of Canada is taking measures to safeguard.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்.. :rolleyes::lol:

நீங்கள் உங்கள் குவளையை கொண்டு சென்றால், ஐந்து சதம் மிச்சம் + குழப்பத்தையும் குறைக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா :unsure:

Link to comment
Share on other sites

ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா :unsure:

ஆமாம். இங்கே மூலைக்கு மூலை இருக்கும் கடை. கோப்பி மட்டுமல்லாது, குளிர்பானங்கள், உணவுகளையும் வழங்குகின்றனர்.

இது கனேடியர்களின் அடையாள சின்னமாக பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கனடிய துருப்புக்கள் சண்டையிட சென்ற பொழுதும் அங்கே ஒரு கடை போட்டார்கள்.

Link to comment
Share on other sites

இன்று கனடாவின் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார் ஐரோப்பாவின் தொடரும் யூரோ பிரச்சனையால் நாட்டுக்கு இந்த ஆண்டு பத்து பில்லியன்கள் (10,000,000,000 CAD ) பொருளாதார நட்டம் வரும் என்று.

http://www.theglobea...article2306524/

இன்றைய உலகமயமாக்கலில் புலம்பெயர் கனடாவாழ் மக்கள் 250,000 என வைத்தாலும் இதில் ஒவ்வொரு தமிழனின் பங்கும் / இழப்பு 40,000 CAD :o

Link to comment
Share on other sites

கடந்த வார இறுதியில் ஒரு பிரபல்ய தொடரடுக்கு வர்த்த சாவடியில் ஒருவர் சில ஆயிரம் டாலர்களுக்கு ஆப்பிள் பொருட்களை வாங்கி தனது மோட்டார்வண்டியில் வைத்துவிட்டு மீண்டும் வேறு பொருட்கள் வாங்க திரும்பியுள்ளார். பின்னால் வந்த திருடர்கள் தமது கைவரிசையை கா ட்டி விட்டனர்.

பொருட்களை தொலைத்தவர் ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு போட்டுள்ளார் ( வசதியானவர் போலுள்ளது). காரணம் - ஆப்பிள் நிறுவனம் இந்தப்பொருட்களை திருடர்கள் அபகரிப்பார்கள் என எச்சரிக்கவில்லையாம் என்பதே

ஆப்பிள் நிறுவனம் அவருக்கு அவரின் பணத்தை திரும்பி தந்ததுடன் மேலதிக பணத்தையும் கொடுத்துள்ளது.

இதுவே ஒரு தமிழருக்கு நடத்திருந்தால், அம்போ தான் இப்படி வழக்கு போடலாம் என்பதும் தெரியாது, தெரிந்தாலும் பண / நேர வசதிகள் இருக்காது :wub:

Link to comment
Share on other sites

உங்க ஆசை ஓவரா தெரியல ? மோடார்வன்டி பொருட்களை திருடியது தமிழாரய் இருககூடாது என்டு ஆசைபடுங்க அஆ :unsure:

Link to comment
Share on other sites

:Dஇலவசம் இலவசம் முற்றிலும் இலவசம் :D

கனடாவில் வரும் ஒரு தேசியப்பத்திரிகையான நசனல் போஸ்ட்டை இலவசமாக மூன்று மாதங்கள் பெறலாம். இது அரசியல் ரீதியாக வலதுசார் கொள்கை உடைய பத்திரிகை, ஆனால் பொருளாதார செய்திகளை தரம் வாய்ந்ததாக தருகின்றது.

https://subscriptions.nationalpost.com/parknfly/

மூன்று மாதம் முடிய 'வேண்டாம்' என கூற மறக்காதீர்கள் :D

Link to comment
Share on other sites

கனடாவின் சனத்தொகை அண்ணளவாக 34 மில்லியன்கள். அதில் தமிழர்கள் அண்ணளவாக 250,000 - 300,000

கனடாவில் கிட்டத்தட்ட 33% பேர் வாடகை வீட்டில் வாழுகின்றனர். தமிழர்கள் எவ்வளவு பேர் வாழுகிறார்கள் வாடகை வீட்டில் எனத்தெரியவில்லை. ஆனால், எமது சமூகத்தில் அதிகளவில் வீடு முகவர்கள் உள்ளனர். அந்த வகையில் எமது மக்கள் வீடுகளில் முதலீடு அதிகளவில் செய்கிறார்கள்.

ஒரு வீடு விற்கப்போட்டு அது எவ்வளவு காலத்தில் விலைபோனது என்பதை வைத்து எந்தெந்த இடங்கள் முறையே 'கொதிப்பாக' 'சூடாக' 'குளிராக; உள்ளது என்பதை டொராண்டோ பெரும்பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.thestar.com/news/article/1119423--toronto-real-estate-watch-is-your-neighbourhood-hot-or-not?bn=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.