Jump to content

தமிழரசுக் கட்சியின் அறவழிப் போராட்டம் அரசின் வாக்குபலத்தையே பலப்படுத்தும்! - என்கிறார் தயான் ஜயதிலக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் அறவழிப் போராட்டம் அரசின் வாக்குபலத்தையே பலப்படுத்தும்! - என்கிறார் தயான் ஜயதிலக 

[Monday 2014-09-15 18:00]
Dayan-jeyathilake-150.jpg

விரைவில் தேசிய அளவிலான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் அறவழிப் போராட்ட அறிவிப்பு அரசாங்கத்தின் வாக்குபலத்தை மேலும் பலப்படுத்தி இலகுவான வெற்றியை உறுதி செய்வதாய் அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளார், கலாநிதி தயான் ஜயதிலக. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இந்து பத்திரிகைக்கு ஜனாதிபதி அளித்த செவ்வி, அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கலாநிதி தயான் ஜயதிலக,

 

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பழம்பெரும் அரசியல் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காது விட்டால் அறவழிப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்கும் பட்சத்தில் அது தற்போதுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெற்கு உட்பட சிங்கள மக்களின் அனுசரணையைப் பெறமுடியாது போகும் நிலைமையே தொடர்ந்தும் நீடிக்கும்.

காரணம் எதிர்வரும் ஜனவரிக்குப் பின்னர் ஜனாதிபதிதேர்தல், பாராளுமன்ற தேர்தல் என தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பை கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவைத் தவிர இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான சிங்களர்வர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அதேபோன்று சாத்திவீகப் போராட்டத்தையும் தெற்கிலுள்ள சிங்களவர்கள் விரும்பமாட்டார்கள். அவ்வாறான நிலையில் இந்த செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறுமாயின் அரசாங்கம் மீண்டும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு வடக்கு, கிழக்கு முனைகிறது எனப் பிரசாரப்படுத்தும். அதன் மூலம் தனது வாக்குவங்கியை காப்பற்றுவதோடு மட்டுமல்லாது மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர்வதாலேயே அதனைக்கட்டுப்படுத்தும் என்பதை முன்னிலைப்படுத்தும். இதன் மூலம் அரசாங்கம் அதிக பெரும்பான்மையைப் பெறுவதோடு இலகுவான வெற்றியையும் உறுதி செய்து கொள்ளும்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு மக்களை வாக்களிக்காது தடுத்து முட்டாள்த்தனமான செயற்பாட்டை மேற்கொண்டனர். அதேபோன்று பழம்பெரும் கட்சியான தமிழரசுக்கட்சியும் இவ்வாறன போராட்டத்தை மேற்கொள்வதால் மீண்டும் அதே தவறையே இழப்பதாய் அமையும். இவ்வாறான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க அத்தேர்தலில் போட்டியிடுவராயின் மீளமுடியாத வீழ்ச்சியடைவார் என்பதும் உறுதியானது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில காரணங்களை முன்வைத்திருக்கின்றபோதும் இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என த இந்து பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட சில காரணங்கள் அவருடைய தனிப்பட்ட காரணங்களா அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடா என்பது தெளிவில்லாதுள்ளது. எனினும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற கூற்று கடந்த காலத்தில் காணப்பட்ட நிலைமைகளில் பாரிய முன்னேற்றத்தையே காட்டுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தின் கண்காணிப்பு அல்லது மத்தியஸ்தம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கின்றது. இந்தக் கருத்தானது நல்ல சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருக்கின்ற தருணத்தில் அதனை வீணடிப்பதாய் அமைந்துள்ளது. முதலாவதாக ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரடியாகப் பேசுவதற்கு தமக்குள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கலாம். அதன்போது அதற்கு ஜனாதிபதி அளிக்கும் பதிலின் மூலம் அவர் பேச்சுவார்த்தைகளின் கொண்டிருக்கும் அக்கறையை பகிரங்கப்படுத்த முடியும்.

இரண்டாவதாக சர்வதேச கண்காணிப்பு அல்லது மத்தியஸ்தமே தேவை எனக் கூறுவதானது சந்தர்ப்பத்தை நழுவிடுவதற்கும் எதிர்காலத்திலும் இதேநிலைமையே தொடர்வதற்கும் காரணமாய் அமைந்துவிடும். சர்வதேச கண்காணிப்பு அவசியம் என கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு நம்பிக்கைக்குரிய நாடுகள் என இந்தியா உட்பட சில நாடுகளை முன்மொழியலாம். அவ்வாறான நிலையில் அரசாங்கத்தரப்பு தனது நம்பிக்கைக்குரிய நாடு என இந்தியாவை முன்மொழியும். இந்த முன்மொழிவுகள் நேரெதிராக இருக்கும் சமயத்தில் துரதிஷ்ட வசமாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையென்பது கேள்விக்குறியாகிவிடும்.

ஆகவே சர்வதேச கண்காணிப்பு அல்லது மத்தியஸ்தம் என்பது தேவையற்றதொன்றாகும். என்ன விடங்கள் பேசுவதென்றாலும் நாட்டின் அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. அந்நிலையில் தேசிய ரீதியில் பக்கச்சார்ப்பற்ற குழுவொன்றின் முன்னிலையில் பேச்சுக்களை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது. குறிப்பாக சிவில் சமூகத்தினர், புத்திஜீவிகள், சிரேஸ்ட சட்டத்தரணிகள், போன்றவர்களை உள்ளடக்கிய அனைத்து இனத்தவரும் அடங்கிய குழுவொன்றை அமைத்து அதன் முன்னிலையில் இனப்பிரச்சினை தொடர்பாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும்.

1980களில் இந்த நாட்டின் ஆட்சிப்பீடத்தில் காணப்பட்ட அரசாங்கத்தினைப் போன்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை. அந்த அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் இந்தியாவின் மத்தியஸ்த்தத்திற்கு அல்லது தலையீட்டு வழிவகுத்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் முழு இலங்கைத் தீவையும் ஆட்சிசெய்து வருகின்றமையால் அவ்வாறான நிலையொன்று ஏற்படுவதும் மிகவும் கடினமானதொன்றாகும் என்றார்

http://www.seithy.com/breifNews.php?newsID=116855&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடக்கும்  நாடு ரீதியிலான  எந்தத் தேர்தலானாலும் வெல்லப்போவது ஒரு சிங்களக்கட்சியே. எந்தச் சிங்கள இனவாதக் கட்சி  அரசு அமைத்தாலும் ஈழத் தமிழர்க்களின் நலன்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். இவர் ஏதோ குழந்தைகளுக்குப் பூச்சாண்டி காட்டுவது போல அறிக்கைகளை விடுகின்றார்.

எத்தனையோ பேச்சுவார்த்தைகளைச்  சிங்கள அரசும் தமிழ்ச் சமூகமும்
நடத்தி முடித்திருந்தும் இதுவரை எந்தத் தீர்வும் இல்லை. இதன் அடிப்படையில்தான் தமிழரசுக் கட்சி மூன்றாவது தரப்பாகச் சர்வதேசத்தை  அழைக்கின்றது. சர்வதேச ஒத்துழைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளிலேயே மக்களும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் தயானுக்கு மண்டை கழண்டு போய்விட்டதா அல்லது பயத்தில் பிதற்றுகின்றாரா?

சாத்வீகப் போராட்டம் அல்லது மக்கள் போராட்டம் தமிழ்க் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டால் சிங்கள அரசுகள் ஆட்டம் காணப்போவது உறுதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.