Jump to content

ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது


Recommended Posts

ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது
 
ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னரே தனது தோல்வியினை உணர்த்தும் தேர்தலாக ஊவா தேர்தல் அமையும் என எச்சரிக்கும் ஜே.வி.பி. இராணுவ மயப்படுத்தப்பட்ட தேர்தலில் மக்களின் பலத்தினை காட்ட வேண்டுமெனவும் தெரிவித்தது.
tilvin-silva-jvp.jpg
 
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று பத்திரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
 
ஊவா மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலையினை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
அரசாங்க அடியாட்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளும் அரசாங்க உடமைகளை பயன்படுத்துவதும் மிகவும் அதிகரித்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் மாகாண சபைத் தேர்தலுக்காக அரச உடமைகளை அதிகமாக பயன்படுத்திய தேர்தல் இதுவே. இதற்குக் காரணம் அரசாங்கத்தின் தோல்வி இப்போதே அவர்களுக்கு தெரிந்து விட்டமையே. ஊவாவில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக லஞ்சம் கொடுக்கப்படுகின்றது. மறுபுறம் பாதுகாப்பு பிரிவினரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அச்சுறுத்துகின்றனர். எதிர்க்கட்சிகளின் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊவாவில் அரசாங்கம் வெற்றியினை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை செய்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.
 
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது சிம்மாசனத்தை விட்டு கீழிறங்க வேண்டிய காலம் வந்து விட்டது. மக்கள் இன்று இந்த அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையினை இழந்து விட்டனர். மக்களின் பலமும் ஆதரவும் அரசாங்கத்திற்கு இருக்குமாயின் அரசாங்க தரப்பினர் அடாவடித்தனத்தினை கையாள வேண்டிய அவசியம் ஏற்படாது.
 
எனினும் இன்று நிலைமை மாற்றமடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை விடவும் ஆளும் தரப்பினரே அதிக குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமன்றி இன்று ஊவாவில் இராணுவ படைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் ஊவா தேர்தலுக்காகவே நூற்றுக்கணக்கான இராணுவ மற்றும் அதிரடிப்படை வீரர்களை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடுகள் செய்துள்ளோம். அதேபோல் தேர்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அரசாங்கங்களுடன் முறைப்பாடுகளை செய்துள்ளோம். எனினும் இது தொடர்பில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படுவதில் சந்தேகம் உள்ளது.
 
எது எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் எதைச் செய்தாலும் மக்கள் தைரியமாகவும் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முன்னரே அரசாங்கம் தனது தோல்வியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேர்தலாக இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தல் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லிச் சொல்லியே அவரை சிம்மாசனத்தில ஏற்றிடுறாங்க. சொல்ல விட செயல் கஸ்டமப்பு..! :lol::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.