Jump to content

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனை புலியாக்க கொழும்பு ஊடகங்கள் தீவிரம்


Recommended Posts

Flash%20news1_CI.jpg

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய உளவாளி ஒர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அண்மையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில் உளவுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்திய தேசிய விசாரணை முகவர் நிறுவன அதிகாரிகள் குறித்த இலங்கையரை கைது செய்திருந்தனர்.

அருண் செல்வராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் குறித்த விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. எனினும் இது வரை அருண் செல்வராஜனின் பூர்வீகம் குறித்தோ அல்லது அவரது முழுமையான பின்னணி குறித்தோ இந்திய தமிழக அரசாங்கங்கள் மற்றும் புலனாய்வு மையங்கள் எந்த தகவல்களையும் வெளியிட்டு இருக்கவில்லை.

இது குறித்து தமிழகத்தின் முக்கிய ஊடகவியலாளர் ஒருவரை குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்டு விசாரித்த போது அருண் செல்வராஜனுக்கும் முன்னாள் இன்னாள் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியாவின் எந்த ஊடகங்களும் தகவல்களை வெளியிடவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் கொழும்பின் ஊடகங்கள் அருண் செல்வராஜனை  தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என உறுதியாகக் கூறுவதன் பின்னணியில் இலங்கை பாதுகாப்பு அமைச்சும் புலனாய்வுப் பிரிவும் முக்கிய பங்கு வகிக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டு உள்ளார்.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு மையங்கள் பாகிஸ்தானுடன் நெருங்கிப் பணியாற்றுவதும், அதன் பின்னணியில் அருண் செல்வராஜனுக்கும் இலங்கைப் புலனாய்வு மட்டங்களுக்கும் உள்ள தொடர்பு இருக்கும் பட்சத்தில் அதனை திசைதிருப்புவதற்கான நடவடிக்கையாக இந்த செய்திகள் அமையலாம் எனவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  அவர் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111509/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய உளவாளி ஒர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

-----

 

கொழும்பு ஊடகமும், இந்திய புலனாய்வுத் துறையும் மண்டை கழண்டுதுகள்.

தங்களது வசதிக்கு, ஏற்றபடி.... அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதுகளைப்போல.... எத்தினையப் பாத்திட்டம். வெட்கம் கெட்டவர்கள்.

 

புலி செய்தால், நெத்திக்கு... நேரே தான் செய்யும்.

 

போயும்... போயும், முஸ்லீம் பாகிஸ்தானுக்கு.... புலியா? உளவு பாக்குது.... த்தூ.........

 

Link to comment
Share on other sites

தமிழகத்திற்கு குறி வைத்த புலிகளுக்கு உதவியவர்கள் யார்?'பகீர்' தகவலால் மத்திய, மாநில போலீஸ் விசாரணை

 

சென்னையில் கைது செய்யப்பட்ட, பாக்., உளவாளியும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவருமான, அருண் செல்வராஜுடன், ரகசிய உறவு வைத்து இருந்த, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரின் பட்டியலை, மத்திய, மாநில போலீசார் தயாரித்து வருகின்றனர். மேலும், அவருடன் தங்கி, உளவு தகவல்களை சேகரித்த இளம் பெண்ணை தேடும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது.

 
கடந்த 2008ல், இலங்கையில் இருந்து, பெற்றோருடன், அகதியாக, தமிழகத்திற்கு வந்து, விமான பயிற்சி பெற்று, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவியுடன், மக்கள் தொடர்பு அலுவலகம் துவங்கி, பிரபலங்களின் நட்பை பெற்று, உளவு தகவல்களை சேகரித்த, அருண் செல்வராஜ் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
யார் அவர்கள்?
 
பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம், 2 கோடி ரூபாய் பெற்று, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உளவு தகவல்களை சேகரித்த, அருண் செல்வராஜ், சென்னை, சாலிகிராமத்தில் தங்கியிருந்த வீட்டுக்கு இரவு நேரத்தில் மட்டுமே ஆட்கள் வருவர்; அதிகாலையில் அவர்கள் கிளம்பி விடுவர் என, தேசிய புலனாய்வு அமைப்பினரிடம், அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், கடந்த 2009ல், இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது, சில பிரபலங்கள் மற்றும் இரண்டாம் கட்ட நிலையில் உள்ளவர்களின் நட்பை பெற்றுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவன் என, தெரிவித்ததாலேயே, அவருக்கு சிலர் அடைக்கலம் கொடுத்து உதவியதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என்பது பற்றிய விவரங்களை, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில போலீசார் சேகரித்து வருகின்றனர். அருண் செல்வராஜ் தங்கியிருந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட, மொபைல் போன்களை ஆராய்ந்த போது, யார் யாருடன் தொடர்பில் இருந்தார்; அவர்களுடன் பேசிய பேச்சு, உளவு தகவல்கள் என, அனைத்தும், தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்துள்ளன. 
 
காதலி எங்கே?
 
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற அறிமுகத்துடன், சுற்றி வந்த அருண் செல்வராஜ், சில உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்களுடனும் தொடர்பில் இருந்துள்ளான். அவர்களிடம் பெறப்பட்ட உளவு தகவல்களும், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், அவனுக்கு ஒரு காதலி இருந்து உள்ளார். ரகசியமாக தங்கி உளவு பார்த்து வந்த அந்த பெண், தற்போது தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அடுத்த மாதம், அந்த பெண்ணை திருமணம் செய்யவும், அருண் செல்வராஜ் முடிவு செய்து இருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த பெண் அடிக்கடி வெளியூர் சென்று வந்ததால், உளவு அமைப்பின் பெண் பிரிவு தலைவராக அவர் செயல்பட்டு இருக்கலாம் என, தேசிய புலனாய்வு அமைப்பினர் சந்தேகிக்கின்றனர்.அதனால், அந்த பெண்ணை நேரில் பார்த்த, சாலிகிராமவாசிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு மற்றும் மத்திய, மாநில உளவு போலீசார், அவரது உருவப்படத்தை வரைந்து தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
கூட்டாளிகளுக்கு வலை:
 
கைதின் போது, அருண் செல்வராஜ் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவனது கூட்டாளிகள், நான்கு பேரையும், தேசிய புலனாய்வு அமைப்பினர் சுற்றி வளைத்து விட்டதாகக் கூறுகின்றனர்.சென்னை தவிர பிற மாவட்டங்களிலும், உளவாளிகளை தேடும் பணி நடந்து வருவதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.
 
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:தமிழக பிரபலங்களை கவர, அருண் செல்வராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள், விடுதலைப்புலிகள் என்ற அஸ்திரத்தை பயன்படுத்தியுள்ளனர். பயங்கர சதித் திட்டத்துடன், தமிழகத்திற்கு குறி வைத்து செயல்பட்ட அவர்களுக்கு, பிரபலங்களோடு கூடவே இருப்பவர்கள் பலரும் உதவி செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.இவ்வாறு, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்திக்கு நேர எண்டா - அமிரை பேச என்று அழைத்து செய்தது போலவா?

90 இல் சரணடைந்த 600 பொலிஸ் காரருக்கு செய்தது போலவா?

அல்லது கந்தன் கருணையில் தடுப்புக் காவலில் இருந்த சக தமிழ் இளைஞருக்கு செய்தது போலவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்திக்கு நேர எண்டா - அமிரை பேச என்று அழைத்து செய்தது போலவா?

90 இல் சரணடைந்த 600 பொலிஸ் காரருக்கு செய்தது போலவா?

அல்லது கந்தன் கருணையில் தடுப்புக் காவலில் இருந்த சக தமிழ் இளைஞருக்கு செய்தது போலவா?

 

ஹலோ....   கோசான்,

நீங்கள், எந்த இடத்தில்... எந்த உதாரணத்தை, கொண்டு வர வேண்டும் என்ற, அடிப்படை அறிவு தன்னும், உங்களுக்கு இருக்கும் என்று, நினைத்தேன். அது, தப்பு.

Link to comment
Share on other sites

பாக். உளவாளி விமானப்பயிற்சியும் பெற்றவராம்! விமானத்தைக்கடத்த திட்டமா?
 

arun2-300x225.jpgசென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தைக் கடத்திச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றாரா என புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக தமிழகத்தில் உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அருண் செல்வராஜன், சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்தவாறே தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

அவரிடம் தற்போது தேசியப் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு

நிறுவனத்தை நடத்திய அருண், அதன் மூலம் முக்கியப் பிரமுகர்களின் நட்பை வளர்த்து, அவர்கள் மூலம் முக்கிய இடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தகவல்களை தேசியப் புலனாய்வு அமைப்பினருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு, பல்வேறு வழிமுறைகளில் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வித்தியாசமான நடைமுறையை அருண் கையாண்டுள்ளார். அதன்மூலம், குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில், தகவல்களைப் பதிவேற்றம் செய்து அதனை “டிராஃப்ட்’ எனப்படும் பிரிவில் வைத்துவிடுவார். அந்தக் குறிப்பிட்ட இ-மெயில் முகவரியின் கடவுச்சொல், ஐ.எஸ்.ஐ. அமைப்பினருக்குத் தெரியும். அதன் மூலம் இ-மெயிலை திறந்து தகவல்களை எடுத்துக் கொள்வார்கள். இதனால், தகவல்களை மின்னஞ்சலில் அனுப்பத் தேவையில்லை.

மின்னஞ்சல் அனுப்பினால், யாருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை புலனாய்வு அதிகாரிகள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அவர் இந்த முறையைக் கையாண்டுள்ளார்.

மேலும் ஐ.எஸ்.ஐ. அமைப்பினரிடம் தொலைபேசியில் பேசிய உரையாடல்களையும் அருண் செல்வராஜன் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளார். அவர், விமானம் ஓட்டவும் பயிற்சி பெற்றுள்ளார். இந்தத் தகவல்களை அருண் செல்வராஜன், தேசியப் புலனாய்வு அமைப்பினரிடம் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. சென்னையில் இருந்து விமானத்தைக் கடத்திச் செல்லும் திட்டத்துடன் அவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றாரா என்ற ரீதியிலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அருண் செல்வராஜனை விசாரிக்க ரா, ஐ.பி. போன்ற பல்வேறு புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டால், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பு: தனது நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மூலம் பல்வேறு அரசு அதிகாரிகள், பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் என பலரது நட்பை அருண் செல்வராஜன் பெற்றுள்ளார். அவர் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர், பிரபல பாடகர் உள்பட பலருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திய அருண், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சுலபமாகச் சென்று, அவற்றை புகைப்படங்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், தமிழகத்தில் பதுங்கியுள்ள மற்ற ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் குறித்தும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்கள் குறித்தும் தெரிய வரும் என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகிறார்கள்.

 

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு

 

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசியப் புலனாய்வு போலீஸார் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தை உளவுப் பார்த்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தேசியப் புலனாய்வு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோனி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதில் அருண் செல்வராஜனை வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நீதிமன்றக் காவலில் உள்ள அருண் செல்வராஜனை 7 நாள்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய தேசியப் புலனாய்வு போலீஸார், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

மனுவைப் பெற்று கொண்ட நீதிபதி மோனி, “16-ஆம் தேதி செல்வராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதன் பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கான கால அவகாசம் அறிவிக்கப்படும்’ என்றார் நீதிபதி.

http://tamilleader.com/?p=41042

Link to comment
Share on other sites

நெத்திக்கு நேர எண்டா - அமிரை பேச என்று அழைத்து செய்தது போலவா?

90 இல் சரணடைந்த 600 பொலிஸ் காரருக்கு செய்தது போலவா?

அல்லது கந்தன் கருணையில் தடுப்புக் காவலில் இருந்த சக தமிழ் இளைஞருக்கு செய்தது போலவா?

 

இல்லைஎன்றா ராஜீவுக்கு வைச்ச (வைக்காத) மாதிரியோ தெரியாது...அதுவும் நெத்திக்கு நேரே தான் வைச்சது...ராஜீவ் மாலைக்கு குனிஞ்ச பொது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைஎன்றா ராஜீவுக்கு வைச்ச (வைக்காத) மாதிரியோ தெரியாது...அதுவும் நெத்திக்கு நேரே தான் வைச்சது...ராஜீவ் மாலைக்கு குனிஞ்ச பொது....

பிச்சைக்காரன் தன்ர புண்ணை மாறவிடாமல் சொறியுறமாதிரி,நீங்களும் கிளறிக்கொண்டே இருங்கோ அப்பதான் உங்கள் பிழைப்பும் ஓடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரன் தன்ர புண்ணை மாறவிடாமல் சொறியுறமாதிரி,நீங்களும் கிளறிக்கொண்டே இருங்கோ அப்பதான் உங்கள் பிழைப்பும் ஓடும்.

 

என்ன  செய்வது?

நாம பலிகளை  தியாகிகளாக நினைக்கின்றோம்

அவர்

சொறிவதற்கு பயன்படும் பொருளாகவாவது நினைக்கிறாரே.. :(

Link to comment
Share on other sites

என்ன  செய்வது?

நாம பலிகளை  தியாகிகளாக நினைக்கின்றோம்

அவர்

சொறிவதற்கு பயன்படும் பொருளாகவாவது நினைக்கிறாரே.. :(

 

இந்த திரி தலைப்பை விட்டு சென்றதற்கு முதல் காரணம் தமிழ்சிறி எழுதிய கருத்து. ஒரு ஈழ‌ தமிழரை பிடித்ததை புலி பிடிபட்டது என்று சிங்கள ஊடகங்கள் பொய்யாக எழுத அதற்கு ஏதாவது கருத்தெழுதாமல் புலி செஞ்சா நெத்திக்கு நேரா தான் செய்யும் என்ட வீர வசனம் தேவையா? 
அதற்கு தான் கோசானும் நாந்தானும் பதிலலித்தார்கள். நெத்திக்கு நேரா தான் செய்வார்கள் என்ற கருத்துக்கு நேரடியான உதாரணங்களை கோசான் தந்தார. அதை ஏற்கிற பக்குவம் தமிழ்சிறிக்கோ மற்றவர்களுக்கோ இல்லை. இதுக்கு கோசானையும் நாந்தானையும் புண்ணை சொறிகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த திரி தலைப்பை விட்டு சென்றதற்கு முதல் காரணம் தமிழ்சிறி எழுதிய கருத்து. ஒரு ஈழ‌ தமிழரை பிடித்ததை புலி பிடிபட்டது என்று சிங்கள ஊடகங்கள் பொய்யாக எழுத அதற்கு ஏதாவது கருத்தெழுதாமல் புலி செஞ்சா நெத்திக்கு நேரா தான் செய்யும் என்ட வீர வசனம் தேவையா? 
அதற்கு தான் கோசானும் நாந்தானும் பதிலலித்தார்கள். நெத்திக்கு நேரா தான் செய்வார்கள் என்ற கருத்துக்கு நேரடியான உதாரணங்களை கோசான் தந்தார. அதை ஏற்கிற பக்குவம் தமிழ்சிறிக்கோ மற்றவர்களுக்கோ இல்லை. இதுக்கு கோசானையும் நாந்தானையும் புண்ணை சொறிகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதா?

 

இது எனது பதில்..

 

நான் 90 வீதத்தையை   எனது முடிவுகளை  எடுக்கின்றேன்

நீங்கள் 10 வீதத்தையா??  முன் நிறுத்துவீர்கள்:??

 

புலிகளிடம் 90 வீதம் சரியாக  இருந்ததே

அதை இவர்கள் எப்பொழுதாவது எழுதியதுண்டா??

 

90 வீதத்தை  புறக்கணிக்கும் போது...........??? :(

 

தோல்வியை  வைத்துக்கொண்டு

கணிப்பீடுகளைச்செய்வது சரியா??... :(

 

புலிகள் இல்லாத காலத்தில்

எந்தளவுக்கு  இவர்கள் வழியில் முன்னேறியுள்ளோம் என்பதைச்சொன்னால் நாமும் யோசிக்கலாம்.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு புலி இருந்தாலும் தலையிடி இல்லாவிட்டாலும் தலையிடி

Link to comment
Share on other sites

இது எனது பதில்..

 

நான் 90 வீதத்தையை   எனது முடிவுகளை  எடுக்கின்றேன்

நீங்கள் 10 வீதத்தையா??  முன் நிறுத்துவீர்கள்:??

 

புலிகளிடம் 90 வீதம் சரியாக  இருந்ததே

அதை இவர்கள் எப்பொழுதாவது எழுதியதுண்டா??

 

90 வீதத்தை  புறக்கணிக்கும் போது...........??? :(

 

தோல்வியை  வைத்துக்கொண்டு

கணிப்பீடுகளைச்செய்வது சரியா??... :(

 

புலிகள் இல்லாத காலத்தில்

எந்தளவுக்கு  இவர்கள் வழியில் முன்னேறியுள்ளோம் என்பதைச்சொன்னால் நாமும் யோசிக்கலாம்.. :(

 

90:10

99:1

50:50

5:95

 

யார் முடிவு செய்வது????

 

90% வீதமான பாலில் 10% விசத்தை கலந்துவிட்டு அண்ணை சந்தோசமா குடிப்பார்...மற்றவர்கள் குடிக்கவேண்டும் என்று இல்லை....

 

தாங்கள் செய்தால் பழைய புண்ணை கிளற கூடாது...அதுவே மற்றவர்கள் செய்தான் நோண்டோ..நொண்டு என்று நோண்டுவார்கள் :)

 

Link to comment
Share on other sites

தாங்கள் செய்தால் பழைய புண்ணை கிளற கூடாது...அதுவே மற்றவர்கள் செய்தால்  நோண்டோ..நொண்டு என்று நோண்டுவார்கள்  :)
 

பலர் வாழ்க்கையின் மிக பெரிய தத்துவம் இதுதான். :o  

Link to comment
Share on other sites

ஈழத்தமிழருக்கு வர இருந்த பெரிய பிரச்சினை தீர்ந்தது எண்டு நினைக்க வேண்டியது தான்...

தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் ஆதரவு நிலையை குலைக்க சிங்களமும் பாக்கிஸ்தானும் இணைந்து எதையாவது புலிகளின் பெயராலோ இல்லை ஈழத்தவர் பெயரில் செய்து இருந்தாலோ நிலைமை தலைகீழாக மாறி இருக்கும் அந்த வையில் சந்தோசமே....!!

மற்றய இயக்கங்களுக்கோ , இல்லை இலங்கை அரசுக்கோ இல்லை பாக்கிஸ்தானுக்கோ புலிகளின் பெயரால் தாக்குதல் நடத்துவதும் கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும் ஒண்டும் புதிது இல்லை தானே...?

Link to comment
Share on other sites

மேலுள்ள செய்தியெல்லாம் ISIS, AlQuida போன்றவர்கள் ஊடுருவாமல் அல்லது அவர்களோடு தொடர்பில் இருக்கும் (இருப்பதாக சந்தேகப்படும்) முஸ்லீம்களை கண்காணிக்கவும், warrant இல்லாமல் கைது செய்யவும் ஒரு களநிலைமையை இந்தியாவில் உருவாக்குகிறார்கள்..

இந்த செய்தியால் என்ன பிரச்னை என்றால்...முஸ்லீம் அல்லாத ஈழ தமிழரை/அல்லது வெளிநாட்டவர்களையும் பணத்துக்காகவும் நோண்டலாம்...

Link to comment
Share on other sites

தாங்கள் செய்தால் பழைய புண்ணை கிளற கூடாது...அதுவே மற்றவர்கள் செய்தால்  நோண்டோ..நொண்டு என்று நோண்டுவார்கள்  :)

 

பலர் வாழ்க்கையின் மிக பெரிய தத்துவம் இதுதான். :o  

 

 

10599249_523764884421499_187447279244538

Link to comment
Share on other sites

பெண்களை வைத்து பலவீனமான அதிகாரிகளுக்கு தூண்டில்: 'பப்'பில் ஆடவைத்து உளவு பார்த்த அருண் செல்வராஜ்.

 

'ஹைடெக்' நிகழ்ச்சி தயாரிப்பாளர், போலி பத்திரிகையாளர் போல், சென்னையில் உலா வந்த பாக்., உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை, 'பப்பு'களில் கிறங்க வைத்து, ரகசிய தகவல்களை கறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

 
சென்னை, சாலிகிராமம், கே.கே.சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த, பாக்., உளவாளியும், இலங்கை தமிழருமான அருண் செல்வராஜை, 26, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.கோடிகளில் புரண்டு, பெரும் தொழில் அதிபர் போல், ஆடம்பர வாழ்வு நடத்தி, உளவுத் தகவல்களை சேகரித்து வந்த, அருண் பற்றி, பூதம் கிளம்பியது போல் ஏராளமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
'ஐஸ் ஈவென்ட்':
 
இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:பட்டதாரி வாலிபரான அருண் செல்வராஜ், இலங்கையில் உள்ள, பாக்., துணை துாதரக அதிகாரிகள் அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் கொடுத்து அனுப்பிய, ௨ கோடி ரூபாயுடன், சென்னையில் கால்பதித்தான்.நுங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி பிரதான சாலையில், டி.எம்.ஏ., டவர்ஸ் குடியிருப்பில், 'பேஷன் ஷோ' நடத்தி வந்த நிறுவனத்துடன் இணைந்து, பி.ஆர்., (மக்கள் தொடர்பு) அலுவலகம் துவங்கினான்.
 
விமான நிலைய அதிகாரி:
 
அப்போது, பெரும் நிறுவனங்களுக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து தருதல், சினிமா பிரபலங்களை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துதல் உள்ளிட்டவற்றை செய்தான்.அது தொடர்பான ஆல்பத்தை, எப்போதும் கை வசம் வைத்து இருந்த அருண் செல்ராஜ், 2009ல், நுங்கம்பாக்கத்தில் உள்ள 'பப்' ஒன்றில், மது மயக்கத்தில் இருந்த விமான நிலைய அதிகாரி ஒருவருக்கு துாண்டில் போட்டான்.அவரிடம், 'பேஷன் ஷோ' ஏற்பாட்டாளராக அறிமுகமான அருண், பளபளப்பான அந்த ஆல்பத்தை, அதிகாரியின் கைகளில் தவழவிட்டுள்ளான். அதன்பின், இருவரும் அடிக்கடி சந்தித்ததில், நட்பு வட்டம் விரிவடைந்து, பல அதிகாரிகள், அருணின் வலையில் சிக்கினர்.அதன்பின், விமான நிலைய அதிகாரிகளின் செல்லப்பிள்ளையாகவே மாறினான் அருண். இந்த யுத்தியை பயன்படுத்தியே, பல அதிகாரிகளை தன் வலையில் வீழ்த்தினான்.
 
சாலிகிராமத்தில் மையம்:
 
தனியாக, 'வெப் சைட்' துவக்கி, 'ஹைடெக்' நிகழ்ச்சி ஏற்பட்டாளர், போலி பத்திரிகையாளர் என, காட்டிக் கொண்ட அருண், தன் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, சாதுர்யமாக, சாலிகிராமத்தில் தங்கி, சினிமா தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளான். பாகிஸ்தானில் இருந்த வந்த பணம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் கிடைத்த வருமானம் என, கோடிகளில் புரண்ட அருணின் நட்பு வட்டத்தில், பெண்களே அதிகம்.பெண்களை வைத்தே, அதிகாரிகளுக்கு துாண்டில் போட்டு, பல நேரங்களில் உளவுத் தகவல்களை சேகரித்துள்ளான். அது பற்றிய குறிப்புகள், அவன் டைரியில் இருந்து கிடைத்துள்ளன.
 
உளவு தகவல் சேகரிப்பு:
 
மேலும், அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, 'லேப்-டாப், கேமரா, ஹார்டு டிஸ்க், 'சிடி' போன்றவற்றை ஆய்வு செய்த போது, அந்த இளம் பெண்கள், ஐதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களுடன் இருக்கும் நபர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். மொபைல் போனில், யார் பெயரும் இல்லை. ஆனால், முதல் எழுத்தை மட்டுமே பதிந்துள்ளான்.பெரிய மனிதர்களின் நட்பு, அதிகாரிகளின் செல்லப்பிள்ளையாக மாறிப்போன அருண் செல்வராஜ், பத்திரிகை குறிப்பு தயாரிப்புக்கு என, பல்வேறு இடங்களுக்கு சென்று, உளவு பார்த்துள்ளான்.அவன் எடுத்துள்ள படம் மற்றும் வீடியோ பதிவுகள் அனைத்தும், கடல் வழி ஊடுருவலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில் உள்ள, அவன் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
 
நீதிமன்றத்தில் இன்று ஆஜர்:
 
கைது செய்யப்பட்ட, அருண் செல்வராஜ், பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும்,' பொடா' கோர்ட்டில், இன்று காலை ஆஜர்படுத்தப்படுகிறான். அவனை, 10 நாட்கள், காவலில் எடுத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு அமைப்பினர் மனு செய்ய உள்ளனர்.
 
மாமல்லபுரத்தில் பாக்., உளவாளி நடமாட்டம்?
 
பாக்., உளவாளி அருண் செல்வராஜ், மாமல்லபுரம் வந்து சென்றதாக, பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னையில், தொழில் அதிபர் போர்வையில், பாக்., உளவாளியாக செயல்பட்டு வந்த, இலங்கை தமிழர் அருண் செல்வராஜை, தேசிய புலனாய்வு அமைப்பினர், கடந்த 10ம் தேதி, சென்னை, சாலிகிராமத்தில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சென்னை மற்றும் கல்பாக்கம் அணுசக்தி வளாகம் ஆகிய இடங்களில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சதி அம்பலமானது. இதுகுறித்த செய்தி, ஊடகங்களில் வெளியானதை அடுத்து, நாடு முழுவதும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உளவாளி அருண் செல்வராஜ், மாமல்லபுரத்தில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.கல்பாக்கம், அணுசக்தி வளாகத்திலிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதையடுத்து, உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள், இங்குள்ள விடுதிகளில் தங்குகின்றனர்.கல்பாக்கம் பாதுகாப்பு கருதி, இந்நகரமும், போலீஸ் மற்றும் உளவு ஆகிய துறைகளின் கண்காணிப்பில் உள்ள நிலையில், உளவாளி அருண் செல்வராஜ், அவ்வப்போது இங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. முக்கிய விடுதிகள், உணவகங்கள் ஆகியவை இயங்கி வரும், ஒற்றைவாடை தெரு உட்பட சில பகுதிகளில், அவர் வலம் வந்ததாகக் கூறப்படுகிறது.சில நாட்களாக, ஊடகங்களில் வெளியான அவரின் புகைப்படத்தை கண்ட நபர்கள், ஒற்றைவாடை தெரு உணவகங்களுக்கு அவர் வந்ததாகவும், உணவு பரிமாறியவர்களுக்கு, தாராளமாக 'டிப்ஸ்' வழங்கியதாகவும் கூறுகின்றனர்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.