Jump to content

வணக்கம்.....


Recommended Posts

எப்பிடி ஆக்கங்களை ஆரம்பிப்பது என்று யாரும் விளக்கம் தரமுடியுமா ?


எனது சிறு நினைவு குறிப்பை இணைக்க முடியுமா

 

யாழ் இந்துவின் பெருந்தன்மை

கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த காலங்கள் 1990 நடந்த சம்பவம் ஒன்று நினைவில். இந்தியன் இராணுவ கால கட்டத்தின் பின் கிரிகெட் 19 வயது அணி சிரமத்தின் மத்தியில் மீளமைக்கப்பட்டது. பல வீரர்கள் குடாவை விட்டு பிரிந்தோ பறந்தோ சென்ற காலங்கள். தயாளன் அண்ணை அவரகள் சிரமப்பட்டு ஒரு அணியை ஒழுங்கு செயதார். அணிக்கான உபகரணங்கள் தேடி எடுக்கப்பட்டன. பல மிகவும் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்தது. அத்துடன் பல காணமல் களவு போய்விடது. இன்றுவரை நினைத்ததுண்டு அந்த கனமான துடுப்பாட்ட உபகரணங்கள் எந்த வகையில் அவர்களுக்கு உபயோகபட்டிருக்கும் ?

இருந்த உபகரணங்களை வைத்து பயிற்சி ஆரம்பமாகியது, உடல் பயிற்சி, கள தடுப்பு முதலில் ஆரம்பமாகியது. 7 – 9 வீரர்கள் மட்டுமே ஆரம்பத்தில் வந்திருந்தார்கள் எனவே மாணவர் மத்தியில் மீண்டும் விளம்பரம் செய்ய பட 19 வயதிலும் குறைந்த மாணவர் சிலர் ஒன்று சேர அணி ஓரளவு நிறைவாகியது. போர் நிறுத்த காலத்தில் லொத்தர் அடித்த மாதிரி ஸ்ரீ லங்கா அரசு பல புதிய உபகரணங்களளை அனுப்பிவைத்தது. ஒரு மாதிரி ST அண்ணை பாய் தரையை ஒழுங்கு அமைத்து கொடுத்தார். அணி பாடசாலை முடிவடைந்ததும் பயிற்சியை ஆரம்பிக்கும் இது மணி 6 வரை தொடரும். மாணவர் சிலர் பிரத்தியோக வகுப்புகளை கட் செய்து பயிற்சிகளை தொடந்தனர்.

உப அதிபர்கள் சோமசுந்தரம் , மகேந்திரன் ஆகியோர் அணியை மீளமைப்பதில் மிக்க கவனம் எடுத்துக் கொண்டார்கள் . நாங்களும் பந்து அவர் வீட்டுக்குள் போனால் மதில் பாய்ந்து செல்வதில் மிக்க ஆர்வம் காட்டியது வேறு கதை. ஒருவாறாக பிரபல வீரர்கள் (சுல்தான், வரதன், நரேன், ஜெயராஜ், கோபி ) ஒன்று  சேர அணி நல்ல வகையில் உருவாக தொடங்கியது. பயிற்சி முடிவில் தரும் நடா அண்ணையின் போண்டா , தேநீர் மட்டுமே என்னை அணியில் நிலைக்க வைத்தது.

பயிற்சி  சில வாரங்கள் பகிடியும் பம்பலுமாக சென்று கொண்டிருந்தது நானும் எனது கறுப்பு பாடசாலை சப்பாத்தில் இருந்து ஒரு பழைய விளையாட்டு சப்பாத்து ஒன்றை இரவல் வாங்கி இருந்தேன். அதை பலமுறை நய்லோன் நூல் வைத்து தைதத்தில் அதன் உருவமே மாறி இருந்தது. பதினைந்து வயது கூட முடியாத எனக்கு  கிரிக்கெட்ல் ஆர்வம் அதிகம் இருந்தாலும் இந்த ஜாம்பவான்களுடன் 19 வயதிற்கு உட்பட பிரிவில் விளையாட திறமை இருக்கவில்லை. என்னவே பத்தோடு பதினொன்றாக நானும் ஒட்டிகொண்டேன். பந்து பொறுக்குவதில் ஆரம்பித்து ஒரு சுழல் பந்து வீச்சுக்கான பிரிவில் சிறு இடம் இருப்பதை அறிந்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து ஓரளவு தேயற்சியும் அடைந்தேன். அணியில் இடம் பிடிக்க ஏற்கனவே பல முக்கிய புள்ளிகளின் பரீட்ச்சயம் பெரிதும் உதவியது. வாழ்க்கையில் கூட கதவுகள் திறபத்திற்கு அறிமுகம் அவசியம் பிறகு முன்னேற உங்கள் திறமை அவசியம்.

தயாளன் அண்ணையின் வழிநடத்தல் ரொம்பவித்தியாசம்தான். பிற பயிறுவிப்பாளர்கள் ரொம்பவே படுத்துவார்கள். அதிலும் பழய மாணவர் வந்து உதவி பயிறுவிப்பாளர்கள் ஆக இருந்தால் கதை கந்தல் நம்மை பிரட்டி ஓட உருள வைப்பார்கள். தயாளன் அண்ணை எங்களை பல வழிகளில் எம்மை தயார் படுத்தினார். போட்டிகள் தொடங்க சில வாரங்கள் இருக்கையிகல் ஜொலி ஸ்டார்ஸ் விளயாட்டு கழகம் நடத்தும் சுற்றுபோட்டியும் தொடங்க இருந்தது. Shabra நிதி நிறுவனம் உதயன் பத்திரிகை ஆதரவுடன் பல இந்து கல்லூரி மாணவர்கள் இடம் பெற்ற ஒரு அணி. இவர்கள் நாம் விளையாடுவதை அறிந்து ஒரு பயிற்சி போட்டி ஒன்றை ஒழுங்கு செய்தார்கள்.

நேரம் நாள் எல்லாம் குறித்து இந்து கல்லூரி மைதானத்தில் ஒரு சனிகிழமை போட்டி. தயாளன் அண்ணை எல்லோரையும் கண்டிப்பாக வரச்சொல்லி ஆர்டர் போட்டுவிட்டார். நாமும் PK பாலசிங்கதின் விஞ்ஞான வகுப்பை கட் செய்து வடிவேலு மாதிரி கட்டதுரை போல லோங்க்ஸ் ஒன்றை மாட்டிகொண்டு கல்லூரி மைதானத்தை நோக்கி சென்றேன்.

நேராக எமது மாற்றல் அறைக்கு சென்று உடைகளை மாறியபின் வெளியில் வந்து அழகான அந்த மைதானத்தை பார்கிறேன். மிக சிறிய மைதானம் ஒருபக்கம் மதிலாலும் மறுபக்கம் தகரதினாலும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆறு வயதில் இருந்து என்னோடு உறவாடிய அந்த மைதானம் எல்லோராலும் வளவு என்று பழிக்க பட்டாலும் இந்துவின் மைந்தர்களுக்கு அது ஒரு கோவில் என்றே சொல்ல வேண்டும். துவிச்சக்ர வண்டியை மதிலில் சாய்த்து விட்டு நடு உச்சி வெயிலில் மேட்ச் பார்ப்பது ஒரு தனி சுகம். மதிய போசன இடைவேளையில் துவிச்சக்ர வண்டியை வலித்து வீடு சென்று உணவருந்தி மீண்டும் ஓடி வருவது...எல்லாம் ஒரு கனா போல இப்போ

 

எமது மாற்றல் அறையில் இருந்து வலபக்கம் திரும்பி பார்கிறேன் SHABRA அணியினர் உடல் பயிற்சி செய்த படி மைதானத்தில் உலாவிய வண்ணம் இருந்தனர். அவரகளது உருவம் அந்த வயதில் என்னை பிரமிக்க வைத்தது. சரி நான் தான் விளையாட போவதில்லையே சும்மா ஓரமா இருந்து மேட்ச் பார்த்து பின் மதிய போசன இடைவேளையில் நல்ல கட்டு கட்டுவம் என்ற நினைப்பில் நான் . நினைப்பில் மண் போட தயாளன் அண்ணை  வந்து சொன்னார் சில பொடியள் பிரத்தியோக வகுப்புகள் காரணமாக வர முடியலை அதனால நீ இறங்கி விளையாடு.

 

பயம்மாக இருந்தாலும் கண்ணில காட்டி கொள்ளாமல் அதுக்கு என்ன என்று சொல்லி போட்டு திரும்பி பாகிரன் சும்மா மலை மாதிரி SHABRA அணி நிக்குது. இவர்கள் எல்லாம் நான் முன்பு  மேட்ச் பார்க்கேக்க சும்மா விசுக்கி விசுக்கி அடிச்ச ஆக்கள். முருகவேள் , வித்தி, ஜெயந்தன் , இளங்கோ, விஜயகுமார், வீரா ..மற்றும் சென்ற்றலிட்ஸ், KCC என்று பல பேர்கள். ஓகே நம்மட பொடியளும் சின்ன சைஸ் என்டாலும் விடாமல் அடிப்பாங்கள் என்ற நம்பிகையில நான். சுல்தான் பந்து போட்டு சமாளிப்பான் எண்டு தெரியும். சுல்தான் பந்து போடேக ரோம்ப அருகில் கள தடுப்பு செய்யிற நான், தரை பாயில் பந்து விழுந்து வரும் போது சும்மா சீறி கொண்டு வரும். பெரிய தேனீ போற சத்தம் ஒண்டு வரும் பக்கத்தில நிக்கிற என்னக்கே வயித்த கலக்கும். வெளிநாடுகளில் உள்ள  மண் தரையில அவ்விளவு வேகமோ சத்தமோ இல்லை. வரதன், நரேன் நல்லா பந்து  போடுவங்கள் சரி மட்சை வெளியில நிண்டு பாகிறதுகு உள்ள நிண்டு பார்ப்பம் எண்டு ஜோசிதுகொண்டு நிக்கேக்க ஜெயராஜ் டோஸ் போட்டு சைகை மூலம் துடுப்பு என்று காட்ட நான் சந்தோசமா மணல் கும்பல் நோக்கி நடை போட்டேன்.

 

 

மதியம் 11.30 யாழ் இந்து 19 வயது அணி 150 / 9 கடைசி துடுபாட நான் சரி போறது தான் போறம் ஸ்டைல் ஆக போவம் எண்டு எல்லை மண்ணை தொட்டு கும்பிட்டு மூலையில தெரிஞ்ச வயிரவரை நினைத்து கொண்டு உள்ளே போனேன். வயித்தில வண்ணத்தி பூச்சிகள் பறக்க முதல் 3 பந்துகள் ஒரு மாதிரி மறிச்சு போட்டன். ஒவ்வொரு பந்து மட்டையில படவும் கை தான் ரொம்ப அதறியது. பின்னால் இருந்த வித்தி அண்ணை சொல்லி கேக்குது முந்தி தான் கடைசி விக்கெட் சும்மா விசுகுவாங்கள் இப்ப நல்ல ஒட்டி விளையடுராங்கள் என்று. நமகுதானே தெரியும் நம்ம கஷ்டம்.

 

ஒருவாறாக யாழ் இந்து 160 ஓட்டங்களுக்கு ஆட்டமிளந்தது Shabra துடுப்பாட தொடங்கியது நானும் அரசமர நிழல் பார்த்து ஒதுங்கி கள தடுப்பில் ஈடுபட்டேன். போட்டி அமைதியாக சென்று கொண்டிருக்க தீடீரென்று யாரோ என் பெயர் சொல்லி கூப்பிட திடுகிட்டு திரும்பி பார்த்தேன். நம்மளை பந்து போட சொல்லி அன்பாக கேட்க ஒரு கணம் பதறி போனேன். சரி யார் தான் என்னை எதிர் கொள்ள போகிறார்கள் என்று பார்த்தல் அது வீரா (மனிப்பாய்) தாடியும் துடுப்புமாக ஒரு வைரவர் நிற்கும் போல இருந்தது. முதல் பந்து மெதுவாக விழுந்து திரும்ப சடார் என்று ஒரு சத்தம் அடிச்ச அடியில் பந்து மதிலில பட்டு திரும்பி எனக்கு  கிட்ட வந்து நின்றது. மயான அமைதி கோபி அண்ணை ஓடி வந்து சில அறிவுரை பகிர்ந்து சென்றார். இப்படி அடுத்த பந்துகளும் எல்லை கோடுகளுக்கு மேலலையும் கீழ்ழாலயும் போக அந்த ஓவர் முடிவுக்கு வந்தது. இனி மேல் பந்து போட கேட்டாலும் பந்து போடுவதில்லை என்ற முடிவுடன் நான் அரசமர நிழல் பார்த்து ஒதுங்கினேன். பிறகு பொடியள் நல்லா பந்து போட்டு SHABRA வை 190 குள் அவுட் ஆக்கி போட்டாங்கள். அப்படா என்று ஹொஸ்டல் பக்கம் நடையை கட்டினேன். அங்க தானே நல்ல மதிய சாப்பாடு பாயசத்தோட. இனி நம்ம பொடியள் மேட்ச்சை சமநிலை ஆக்கி போடூவாங்கள் என்ற நம்பிக்கையில் நான் அந்த சைவ சாப்பாடை நல்ல கட்டு கட்டினேன். வாழை இலையில் பாயாசத்தை விட்டு குடிப்பதை சிலர் விநோதமாக பார்த்த வண்ணம் கடந்து சென்றனர். நமக்கு அதுவா முக்கியம் பாயசம் தானே முக்கியம்.

 

இரண்டாம் இன்னிங்க்ஸ் யாழ் இந்து 160 / 5 நேரமும் இருட்டு பட தொடங்கியது. சரி நல்ல நாள் ஒருமாதிரி வீடு பொய் சேருவம் எண்டு நினைக்கேக்க வித்தி அண்ணையும் தயாளன் அண்ணையும் ஏதோ கதைக்கினம் சரி ஏதோ நடக்க போது எண்டு விளங்கீற்று. பார்த்தா யாழ் இந்து இரண்டாம் இன்னிங்க்ஸ் நிப்பாடி Shabra வுக்கு ஒரு 130 ஓட்டங்கள் ஒரு எட்டு ஓவரில் என்று தீர்மானிக்கபட்டது. இதை எப்படி அடிபாங்கள் அதுவும் சுல்தான் வரதன் நரேன் இருக்கேக்க. எல்லாரும் மைதானதில இறங்கியாச்சு Shabra முருகவேல் ஜெயந்தன் இறங்கி விளையாடினம். முருகவேல் அடிச்சு விளையாட பார்க்க பொடியள் ஒருமாதிரி அவுட் ஆக்கி போட்டாங்கள். அடுத்ததா பார்த்தா வித்தி அண்ணை  வாரார் என்ன இது இவர் நல்லா பின்னுக்கு தானே வாறவர் எண்டு யோசிக்க முதல் பந்துளால் மேலாலும் கீழ்ழாலயும் கதறி கொண்டு போகுது. பொடியள் வலு வேகமாக போட பந்து இன்னும் வேகமா வெளியில் போகுது. நானும் மதில் ஏறி பந்தெடுத்து களைச்சு போனேன். அடியெண்டா  மக்ஸ்வெல் / மில்லேர் கலந்து அடிச்சமாதிரி ஒரு அடி. நாங்கள் எல்லாம் கிலிச்சு போய் ஒராளை மாறி மற்றாள் பார்க்க முதல் மேட்ச் முடிஞ்சு போச்சு. நாளை உதயனில் (shabra நிறுவன பத்திரிகை ) யாழ் இந்து மானம் கப்பல் ஏற போகுது எண்ட நினைபோட வீடு நோக்கி ரொமபவே கடுப்போடு சென்றேன்.

 

மறுநாள் அதிகாலை துவிச்சக்ர வண்டியை வலித்து தட்டாதெரு சந்தியில் வாழைபழ கடையில் உதயன் பத்திரிகையும் வாழைபழமும் வாங்கி கொண்டு  லுமாலாவில் நின்றபடி கடைசி பக்கம் புரட்டிபார்கிறேன். பெரிய தலைப்பில் யாழ் இந்துவின் பெருந்தன்மை .....SHABRA வென்றது. அப்போது அறிந்து கொண்டேன் இந்துவின் மைந்தர்கள் எப்போதும் தங்கள் வெற்றியில் கூட யாழ் இந்துவை முதன்மை படுத்துவர் என்று .....

 

இது நடந்து 23 வருடங்கள் இப்பொது நிலமை வேறாக இருக்கலாம் ....

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாருங்கள்


"அது வீரா (மனிப்பாய்) தாடியும் துடுப்புமாக ஒரு வைரவர் நிற்கும் போல இருந்தது" :lol:  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சியை.... வருக, வருக என்று வரவேற்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குஞ்சி வாருங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  இந்துவின் பெருமையுடன் வரும் குஞ்சி அவர்களுக்கு வாத்தியாரின்  வந்தனங்கள் உரித்தாகட்டும் :D

Link to comment
Share on other sites

வணக்கம் தந்த உறவுகளுக்கு பதில் வணக்கம் ..

 

குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல .............................கல்வி அழகே அழகு ......

 

............( மறந்து விட்டது பெரியவர்கள் யாராவது உதவி செய்யவும் )

 

இதில் வரும் குஞ்சி அல்ல ...குண்சி.....என்பதே ...அல்லது குஞ்சி என்றே தொடருங்கள்  ...உங்கள் விருப்பம்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல, நெஞ்சத்து
நல்லம்யாம் எனும் நடுவு நிலையான்
கல்வி அழகே அழகு".

எந்த அழகான உடைகளோ சிங்காரித்த தலைமுடியின்   அழகோ அழகல்ல
மஞ்சள் பூசி மினுக்கி வெளிக்கிட்டாலும் நெஞ்சிலை வஞ்சம் இல்லாமல் எல்லாரையும் சமனாப் பாக்கின்றவர்களின்
கல்வி அறிவே மனிதனுக்கு அழகு

 


வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

நாலடியாரின் கல்வி அதிகாரத்தின் முதற் பா வை பொழிப்புரை உடன் தந்த பாரியாரிக்கு நன்றியும் வணக்கமும் ..இதன் மூலம் உலகத்திற்கு ஏதோ சொல்ல வாறிங்க போல உள்ளது.....

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் குஞ்சி! தங்கள் வரவு நல்வரவாகட்டும் !!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் குஞ்சி! தங்கள் வரவு நல்வரவாகட்டும் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

 

யாழ் இந்துவின் பெருந்தன்மை  பிடித்திருக்கு...!!!

Link to comment
Share on other sites

வாங்கோ சந்திக்கு ,

உங்கள் பதிவில் இருக்கும் பலர் எனக்கும் பழக்கம் ,(தயாளன் ,வித்தி,சுல்தான் சற்று யூனியர் )

உதே நேரம் கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் விளையாடிஇருப்பார்கள் என்று நம்புகின்றேன் .

சப்ரா சரவணபவன் பற்றி சொல்ல தேவையில்லை (வித்தியின் மச்சான் ).

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

இதில் வரும் குஞ்சி அல்ல ...குண்சி.....என்பதே ...அல்லது குஞ்சி என்றே தொடருங்கள்  ...உங்கள் விருப்பம்...

 

"குண்சி" என்று நாம் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது.... கடைசி எழுத்தை பிழையாக அடித்து விட்டால், வில்லங்கமாய் போய் விடும் என்ற படியால், நாங்க "குஞ்சி" என்றே கூப்பிடுகிறோம். :D

Link to comment
Share on other sites

"குண்சி" என்று நாம் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது.... கடைசி எழுத்தை பிழையாக அடித்து விட்டால், வில்லங்கமாய் போய் விடும் என்ற படியால், நாங்க "குஞ்சி" என்றே கூப்பிடுகிறோம். :D

 

நன்றி தமிழ் சிறி  உங்கள் அப்ப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு....

 

சரி குஞ்சிதபாதம் , குஞ்சம்மா , குஞ்சப்பு , குஞ்சாச்சி , குஞ்சு போன்றன நல்ல தமிழ் பெயர்கள் அது மாதிரி குஞ்சி யும் ஒன்று என்ன நினைகிறேன்....

Link to comment
Share on other sites

வாங்கோ சந்திக்கு ,

உங்கள் பதிவில் இருக்கும் பலர் எனக்கும் பழக்கம் ,(தயாளன் ,வித்தி,சுல்தான் சற்று யூனியர் )

உதே நேரம் கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் விளையாடிஇருப்பார்கள் என்று நம்புகின்றேன் .

சப்ரா சரவணபவன் பற்றி சொல்ல தேவையில்லை (வித்தியின் மச்சான் ).

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி .

 

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களின் பங்களிப்பு அளப்பெரியது அதிலும் விளையாட்டுத்துறையில்...சில குறைகள் பல நிறைகளை விட அதிகமாக பேசபடுவது நாம் ஊர் வழக்கம் தானே .....

 

கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் ..சிலர் நினைவில் உள்ளது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குஞ்சி வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.