Jump to content

தமிழ் தேசியவாதத்தை விட்டு விட்டு யுத்தத்துக்கு பின்னரான வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் -கோதாபய ராஜபக்ஷ


Recommended Posts

இலங்கையின் வடபகுதி இராணுவ மயமாக்கப்பட்டிருப்பதை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உறுதியாக நிராகரித்துள்ளார். 22 மாவட்டங்களிலும் படையினர் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அத்தியாவசியமான பிரசன்னத்தையே படையினர் வட பிராந்தியத்தில் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

முப்பது மாதங்களுக்கு முன்னர் யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னரும் கூட வடக்கில் அதிகளவு இராணுவ முகாம்கள் இருப்பதாக தமிழ்க் கட்சிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் குற்றஞ்சாட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவ அதிகாரியின் பிரசன்னம் இல்லாமல் குடும்ப கொண்டாட்டங்கள் கூட அதாவது எந்தவொரு பொதுமக்கள் நடவடிக்கையும் வடக்கில் இடம்பெறுவதில்லையென தமிழ்க் கட்சிகளும் புலம்பெயர்ந்த சமூகம் குற்றச்சாட்டு தெரிவிப்பது குறித்து கொழும்பிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து டெக்கான் குரோனிக்கல் பத்திரிகைக்களித்த பேட்டியிலே அவர் இதனைத் தெரிவித்தாக த ஏசியன் ஏஜ் குறிப்பிட்டிருக்கிறது.

யுத்தத்தில் வெற்றிபெற்ற இரண்டரை வருட காலத்தில் நாங்கள் அதிகளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக சிலர் இதனை அங்கீகரிக்காமல் தேவையற்ற விடயங்களை எடுத்துக்கொள்கின்றனர். தடைகள் பற்றி கதைக்கின்றனர். இது சாதாரணமான கிளர்ச்சியல்ல. உண்மையான யுத்தமாக இருந்தது. எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் புலிகளை ஒப்பிட முடியாது. அல்ஹைடாவைக் கூட புலிகளுடன் ஒப்பிட இயலாது என்று கோதாபய ராஜபக்ஷ அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியவாதத்தைக் கைவிட்டு யுத்தத்திற்குப் பின்னரான வாய்ப்புக்களைப் பயன்படுத்துமாறு தமிழ் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். குறுகிய காலப்பகுதியில் நாடு ஈட்டிய வெற்றியை எவரும் மெச்சவில்லையென அவர் கவலை தெரிவித்துள்ளார். சுமார் 3 இலட்சம் இடம்பெயர்ந்தவர்களைப் பராமரிக்கும் பாரிய பணியை அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது. அத்துடன் சுமார் 11 ஆயிரம் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து வருகிறது. இந்த முன்னாள் உறுப்பினர்களை சமூத்துடன் ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். அவர்களை சிறைகளில் வைத்திருப்பதிலும் பார்க்க சமூகத்துடன் ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தை நாம் மேற்கொண்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட சகலரும் பொதுமக்கள் எனவும் அதில் தமிழர்களும் உள்ளடங்கியிருந்ததாக கோதாபய கூறியுள்ளார். சரணடைந்த உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 700 முன்னாள் போராளிகள் மட்டுமே இன்னரும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

புலிகளின் சிரேஷ்ட தலைவர் பாலகுமாரின் நிலைமை பற்றி கேட்கப்பட்ட போது விசேடமான விடயங்கள் குறித்து எனக்கு தெரியாது. அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தாரா என்பது எனக்குத் தெரியாது. அறியப்பட்ட பலர் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டனர். சரணடையும் நடவடிக்கைகளின் போது ஐ.சி.ஆர்.சி.யும் ஏனைய முகவரமைப்புகளும் இருந்தன என்று அவர் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த கோதாபய பிரான்ஸின் எம்.எஸ்.எவ்., இந்திய மருத்துவக் குழு உட்பட சர்வதேச முகவரமைப்புகள் மோதல் வலயத்தில் பிரசன்னமாகியிருந்தன. உயிருடன் இருந்தவர்களையும் சரணடைந்த போராளிகளையும் ஏற்றுக்கொள்ளும்போது அவை மோதல் வலயத்தில் பிரசன்னமாகியிருந்தன என்று கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகமாக இருப்பது தொடர்பான முறைப்பாடு குறித்து கேட்கப்பட்ட போது, நாங்கள் ஆகக்குறைந்த அளவு இராணுவ பிரசன்னத்தையே அங்கு கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் மற்றும் தமிழ் நாட்டில் கூட இராணுவ அணிகள் உள்ளன. ஆனால், இப்போது வடக்கில் வீதித்தடைகளோ தேடுதல்களோ இடம்பெறவில்லை. நாங்கள் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை பொலிஸாருக்கு மாற்றியுள்ளோம். தமிழ்ப் பொலிஸாரை பணிக்கமர்த்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் இராணுவத்திற்கான ஆள்திரட்டல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், ஓய்வுபெற்றதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் கூட நிரப்பப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு படை வீரரைப் பயன்படுத்திய பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பிமுடியாது என்று கூறியுள்ள அவர் அவர்கள் குடும்பத்திற்கு உழைப்பவர்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம் கடந்த கால விடயங்கள் மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த கணிசமான அளவு இராணுவத்தின் பிரசன்னம் வடக்கில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.ilankathir.com/?p=4077

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.