Jump to content

மகிந்தவை அழைக்கும் சுஷ்மாவின் வீட்டை முற்றுகையிட இந்து மக்கள் கட்சி முடிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]sushma%20swaraj.jpg[/size][/size]

[size=3][size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை தனது தொகுதிக்கு அழைத்து புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ள இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவியும் பாரதிய ஜனதா கட்சி தலைவியுமான சுஷ்மா சுவராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.[/size]

[size=4]எதிர்வரும் 21ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ராஜபக்ச இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரது சொந்தத் தொகுதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் நடைபெறும் புத்த மத விழாவிற்கு பங்கேற்க வருகை தருகிறார். இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சுமார் இரண்டு லட்சம் இந்துக்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜ பக்ஷே இன்றளவும் இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு எவ்வித சம உரிமையும் வழங்கவில்லை. புத்த மதத்தின் பேரில் இலங்கைத் தமிழ் இந்துக்களின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை இடித்து தள்ளி பல கோயில்களை புத்தமத விகாரங்களாக மாற்றி வருகின்றார். சமீபத்தில் கூட இலங்கை இந்துத் தமிழர்கள் தங்கள் கோயில்களில் இந்துமத அடிப்படை சடங்குகளான காதணி விழா, ஆடு கோழி பழியிடுதல் உள்ளிட்ட இந்து சமய பூஜைகளை நடத்த தடை விதித்துள்ளார்.

சீனாவிற்கு இராணுவ தளம் அமைக்க இடம் கொடுத்து இலங்கை மண்ணில் இந்தியாவிற்கு எதிரான சதிச் செயல்களை ஊக்கு வித்து வருகிறார். இலங்கை கடற்படை அன்றாடம் இந்தியத்தமிழ் மீனவர்களை தாக்குவதும் படுகொலை செய்வதும் தொடர்கிறது. போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்துத் தமிழர்கள் இன்றும் முள்வேலி முகாம்களிலேயே உள்ளனர். இந்துத் தமிழர்களின் பூர்வீக நிலங்களான வயல்வெளிகள் குடியிருப்புக்கள் ஆகியவை இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மூலம் பௌத்த மயமாக்கப்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சி கடைபிடித்து வரும் இந்துத்துவ கொள்கைகளுக்கு விரோதமாகவும் வாஜ்பாய் அவர்கள் கடைபிடித்த வெளியுறவுக் கொள்கைகளுக்கு மாறாகவும் சுஷ்மா சுவராஜ் செயல்படுகிறார். காங்கிரசின் இந்த விரோத வெளியுறவுக் கொள்கைகளை சுஷ்மா சுவராஜ் கடைபிடிக்கத் துவங்கியுள்ளார். காங்கிரஸ் மற்றும் இராஜ பக்ஷேவின் இராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு சுஷ்மாசுவராஜ் பலியாகி உள்ளார்.

தமிழக பா.ஜ.க-வின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி உள்ளார். இலங்கை கடற்படையில் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு கடந்த வருடத்தில் நேரடியாக வந்து நிதி உதவி செய்த சுஷ்மா சுவராஜ் இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டு உள்ளது தமிழக இந்துக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுஷ்மா சுவராஜின் இந்து தமிழர் விரோத கொள்கைகளை கண்டித்தும் சுஷ்மா சுவராஜ் வீடு முற்றுகை போராட்டத்தை டெல்லியில் உள்ள இந்து அமைப்புக்களுடன் இணைந்து எதிர்வரும் வாரத்தில் நடத்திட தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி டெல்லி மாநிலக்கிளை தலைவர் வழக்கறிஞர் சங்கர் முன்னின்று நடத்துகிறார். தமிழகத்திலிருந்து இ.ம.க தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் தோழமை அமைப்புக்களின் நிர்வாகிகளும் சுஷ்மா வீடு முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்துசமய உணர்வாளர்கள் அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம்.

அர்ஜூன் சம்பத்

(இந்து மக்கள் கட்சி).[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

Link to comment
Share on other sites

சபாஸ் சரியான போட்டி இந்து மக்கள் கட்சி வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகலரும் அரசியல் செய்வதற்கு அரியபொக்கிஷம் தமிழீழகோமணத்தமிழன்.

Link to comment
Share on other sites

அட சீனாக்காறன் ரொம்ப ரொம்ப பணக்கரன்தான். மலையாளிகள், ரொபேட் வாதராவின் மாமி சோனியா மட்டுமல்ல சுஸ்மாவையும் வாங்கியிருக்கிறார்கள். எதற்கும் அமெரிக்கா வரையும் காசு எறிகிறவர்கள் ஆயிற்ரே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.