Jump to content

பர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாளத்தை தக்கவைக்கும் முயற்சிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Myanmar%20-%20tamil%20-%20temple.jpg

மியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர். 

1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்டில் பர்மா என அறியப்படும் மியான்மாருக்கு புலம்பெயர்ந்தனர். 

தென்னிந்தியாவிலிருந்து சிறிலங்கா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்த மக்களைப் போலல்லாது பர்மாவில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் கொலனித்துவ ஆட்சியில் சரியான முறையில் நடாத்தப்படவில்லை. இவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்ப்பதற்குப் பதிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர். 

"1836ல் கட்டப்பட்ட ஆலயம் ஒன்றை நாம் கொண்டுள்ளோம். பர்மாவுக்கு முதன்முதலாக 1824ல் தமிழர்கள் குடியேறியதாகக் கூறப்படுகிறது" என்கிறார் மாவ்லம்யினே என்கின்ற துறைமுக நகரில் வாழும் வர்த்தகரான தனபால். இதன்பின்னர் 20ம் நூற்றாண்டில் பர்மாவில் குடியேறிய தமிழ் மக்கள் விவசாயம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினர். பர்மா மீது யப்பானியர்கள் ஆக்கிரமிப்பை மேற்கொண்டதன் பின்னர், பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் நகரங்களில் பணிபுரிந்த பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மீண்டும் பர்மாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினர். இதனைத் தொடர்ந்து பர்மா சுதந்திரமடைந்ததன் பின்னர், பர்மா அரசாங்கம் நிலச்சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதுடன், தேசியமயமாக்கல் என்ற பெயரில் விவசாய நிலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 

பர்மாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து இங்கு பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டதால் தமிழ் மக்கள் 1960களில் தமது பாடசாலைகளை மூடவேண்டிய நிலையேற்பட்டது. ஆனால் பர்மாவில் இந்திய வம்சாவளியினர் மிக ஆழமாக நிலைத்துள்ளனர். இவர்கள் அரசியலிலிருந்து விலகி, பெரும்பான்மை பர்மிய சமூகத்தவருடன் நட்புறவைப் பூண்டு இன்றும் வாழ்கின்றனர். 

50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பாடசாலைகளை பர்மிய அரசாங்கம் மூடியதால் தமிழ் சமூகத்தின் மத்தியில் நிரந்தர அழிவொன்று ஏற்பட்டதாக நைனார் முகமட் கூறுகிறார். "நான் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தமிழ்ப் பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்த பெண்கள் சிலரைக் கண்டேன். அவர்கள் நீண்ட தலைமுடியைக் கொண்டிருந்தனர். பூக்கள் சூடியிருந்தனர். அவர்களிடம் நான் தமிழில் பேச முயற்சித்த போது அவர்கள் ஒரு தமிழ் வார்த்தையைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழில் எழுதவோ, வாசிக்கவோ கதைக்கக் கூடத் தெரியாதவர்களாக உள்ளனர்" என நைனார் முகமட் குறிப்பிட்டார். 

20 வயதையுடைய சுமதி பர்மாவில் வாழும் இந்தியத் தமிழ் வம்சாவளியின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் தமிழ் குடும்பங்கள் அதிகம் வாழும் மௌலம்யினே என்கின்ற இடத்தில் வசிக்கிறார். பாரம்பரிய பர்மிய ஆடை அணிவதென்பது இவருக்கு நல்ல விருப்பமாகும். "நான் உள்ளுர் கடையொன்றில் பணிபுரிகிறேன். நான் வீட்டில் பர்மிய மொழியில் கதைக்கிறேன். எனது தமிழ் நண்பர்கள் கூட பர்மிய மொழியில் பேசவே விரும்புகின்றனர். தமிழ் மொழியை என்னால் மிகச் சிறிதளவில் விளங்க முடிகிறது. ஆனால் என்னால் தமிழ் மொழியைப் பேச முடியவில்லை" என்கிறார் சுமதி. இவர் தமிழ் வகுப்புகளுக்குச் செல்வதிலும் ஆர்வம் காட்டவில்லை. 

சுமதியின் அயலில் உள்ள தமிழர்கள் வெளியில் பார்ப்பதற்கு தமிழ் கலாசாரத்தைப் பேணுபவர்கள் போல் தென்பட்டாலும் கூட, இவர்கள் தமிழ் மொழியில் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பர்மாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் பர்மிய உணவுகளையே உண்கின்றனர். இவர்கள் வீடுகளிலும் பர்மிய மொழியையே பேசுகின்றனர். இவர்கள் அதிகம் பர்மிய பாரம்பரிய ஆடைகளை அணியவே விரும்புகின்றனர். 

பர்மாவில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மூத்த தலைமுறையினர் போலல்லாது, தற்போது உள்ள இளம் தலைமுறையினர் தமக்கான காணி உரிமைகள் மறுக்கப்பட்டமை தொடர்பில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. 

"எங்களுடைய இளையோர்களுக்கு தமிழ் மொழி தெரியாது. இவர்களுக்கு எமது வரலாறு, கலாசார பாரம்பரியங்கள் போன்றன தெரியாது. சிலர் தற்போது வேறு மதங்களுக்கு மாற விரும்புகின்றனர்" என 'றங்கூன் ஆலயத்தின்' தர்மகர்த்தாவான தேவராஜ் கூறினார். 

இவ்வாறான போக்கைக் கட்டுப்படுத்துவதற்காக தேவராஜ் தற்போது இந்து மாணவர்களுக்காக சமய வகுப்புக்களை நடாத்தி வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களுள் மிகச் சிறிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இந்துக்களாவர். 

இங்கு பௌத்தமதத்திற்கும் இந்துமதத்திற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. தற்போது மியான்மாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உள்ளன. எல்லா இந்து ஆலயங்களிலும் புத்தரின் சிலை அல்லது உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. விஸ்ணு கடவுளின் அவதாரம் தான் புத்தர் என சில இந்துக்கள் நம்புகின்றனர். இந்தியாவிலுள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கவில்லை. இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் மத்தியில் பாரபட்சம் நிலவாததால் இங்கு மத வன்முறைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாகவும் இரு தரப்பினரும் புரிந்துணர்வுடன் வாழ்வதாகவும் பர்மிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகின்றனர். 

மியான்மார் இராணுவ ஆட்சியாளர்கள் மத நிர்வாகங்களில் தலையிடாவிட்டாலும் கூட, ஆலயங்களில் மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்பட முடிகிறது. அதாவது அறநெறிக் கற்கை மற்றும் சங்கீதம், நடனம் போன்றவற்றைப் பரப்பும் நோக்குடன் இவை ஆலயங்களில் வைத்துக் கற்பிக்கப்படுகின்றன. 

பர்மிய தமிழ் சமூகம் பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பர்மிய தமிழ் சமூகம் தமிழ்நாட்டுடன் அல்லது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் தமிழ் சமூகங்களுடன் மிகக் குறைந்த தொடர்பையே கொண்டுள்ளன. பர்மாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் இளையோர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு ஒருதடவை கூடப் பயணித்ததில்லை. 

ஆனால் அறநெறிக் கற்கைகளுக்கு அப்பால் மியான்மாரில் பல புதிய தமிழ்ப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. "நாங்கள் பாடத்திட்டங்களைத் தயாரித்து, பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்குகிறோம். நாங்கள் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்குறோம். மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என பர்மாவிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளைக் கண்காணித்து வரும் பி.சண்முகநாதன் ஆசிரியர் விளக்கினார். 

பர்மாவின் சில கிராமங்களைத் தவிர ஏனைய இடங்களில் தமிழர்கள் மிகக் குறைந்தளவில் வசிக்கின்றனர். சில இடங்களில் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கேற்ற மாணவர்களை பாடசாலையில் இணைப்பது கூடக் கடினமாகக் காணப்படுகிறது. தமிழ் வர்த்தகர்களிடமிருந்து பெறுகின்ற நன்கொடைகளைக் கொண்டே ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. 

"தொழில் வாய்ப்புக்களை வழங்காத மொழியை நாங்கள் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும் என சிலர் என்னிடம் வினவுகின்றனர். இது எமது சொந்த வரலாறு மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது என நான் பதிலளிப்பேன். நாங்கள் எமது மொழியை இழந்தால் எங்களை நாங்களே தமிழர்கள் என அழைக்க முடியாது" என திரு.சண்முகநாதன் சுட்டிக்காட்டினார். 

தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகள் நிலைபெற்று வெற்றியளித்தால், பர்மாவில் வாழும் தமிழ் சமூகம் தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை பல ஆண்டுகள் வரைக் கடைப்பிடிக்க முடியும் என தமிழ் ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

கட்டுரை வழிமூலம் - BBC By Swaminathan Natarajan. 

மொழியாக்கம் : நித்தியபாரதி.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140313110129

Link to comment
Share on other sites

பர்மாவில் தமிழர் எப்பவோ குடியேறிவிட்டார்கள்.

அங்கோர் வாட் கோவில் சிவன் கோவிலா இருந்து கிருஸ்னர் கோவிலாகி இப்போது புத்த கோவிலாகிவிட்டது.

லாஓஸ் மக்களின், வியட்னாம் மக்களின் கலாச்சாரத்தில் பண்டைய தமிழ் கலாச்சாரம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.