Jump to content

ஜாம்பவான் நாடுகளிலெல்லாம் அதிர வைக்கும் இலங்கைக் குட்டித்தீவு!


Recommended Posts

srilanka-granade-cartoon.jpghttp://tamilworldtoday.com/archives/4701

 

இலங்கைத் தீவின் பரப்பளவு வேண்டுமானால் ஒப்பீட்டு ரீதியில் ஒரு குட்டித் தீவாக இருக்கக்கூடும். ஆனால் அது உலக அரங்கில் எழுப்பும் அதிர்வலைகள் மட்டும் ஒப்பீட்டு ரீதியில் பெரிதானவை. கடுகு சிறிது காரம் பெரிது என்பார்களே.. அதுபோல வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கிய பெரிய ஜாம்பவான் நாடுகளிலெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்த இலங்கைத்தீவின் நிலவரங்களால் முடிகின்றது.

உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் ஐயம் இருந்தால், இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணங்களை முன்னிறுத்தி இன்றும் கங்காரு தேசத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மேற்கொண்ட 'இரும்புப்பிடி' கருத்தியல் தாக்குதல்களை சற்றுக் கவனியுங்கள்.

கிறிஸ்மஸ் தீவு என்ற தமது இலங்கையும் தாண்டி முன்னேறி, அவுஸ்திரேலியாவின் மேற்குக்கரை 'பேர்த்' பிராந்திய பெருநிலப்பரப்புக்குள் 66 இலங்கையர் நுழைந்ததன் எதிர்வினை மீண்டும் ஒருமுறை அவுஸ்திலேியாவில் கொதிநிலையைக் கிறப்புகின்றது.

அதுவும் 5 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைத் தீவின் படகுப் பயணிகள் இவ்வாறு அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்பை அடைந்தது ஒருபுறமிருக்க, துறைமுகப்பகுதி கண்காணிப்பையும் மீறி அவர்களின் படகு நுழைந்தமை, எதிர்க்கட்சித் தலைவர் ரொனி அபோட் (Tony Abbott) உள்ளிட்டவர்களுக்கு 'சூடாக' மெல்லக்கிடைத்த அவலாகியும் விட்டது.

படகுப் பயணங்களைத் தடுக்கும் விடயத்தில் யூலியா கில்லார்ட் அரசாங்கம் சரணடைந்து விட்டதாக அபோட் சீறும் நிலையில், அரச தரப்பும் அதே சூட்டுடன் அபோட் மீது பாய்ந்திருந்தது. 66 இலங்கையர்கள் வேண்டாத விருந்தாளிகளாக தமது நாட்டுக்குள் நுழைந்துவிட்டதான 'சூட்டுடன்' அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் படகுப் பயண அரசியல் தொடர்கிறது. ஆனால் கங்காரு தேசத்தின் இவ்வாறான படகுப் பயண அரசியலின் மூலோபாய விசை, கன்பராவில் இல்லை. அதற்கு மாறாக சில ஆயிரம் கிலோமீற்றர்களைத் தாண்டியுள்ள கொழும்பில் உள்ளதுதான் யதார்த்தம்!

பூகோளக் கடற்பரப்புகளில் இருந்து அடிக்கடி இவ்வாறான அவலமான செய்திகளை வழங்க வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் முற்பிறப்புப் பாக்கியமும் அல்ல. மாறாக போர் முடிவுக்கு வந்துவிட்டதாக பகிரங்க அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இவ்வாறாக வெளிவரும் செய்திகள் இலங்கைத்தீவின் கந்தறுந்த நல்லிணக்கக் கதையையும் கூடவே கூறுகின்றன.

இலங்கைத்தீவை விட்டு மிகத் துரிதமாக புலம்பெயர முயற்சிப்பவர்களுக்கு, பொருளாதாரக் காரண ஆதாயப் பட்டங்கள் சூட்டப்பட்டாலும், அதற்கான நியாயங்கள் ஓரளவுக்கே ஏற்கக்கூடியதென்பதும், முக்கியமான வகிபாகத்தை இலங்கைத்தீவின் அச்சுறுத்தல் நிலையே ஏற்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இலங்கைத்தீவில் தற்போதுள்ள மகிந்த அதிகார மையத்தின் அச்சுறுத்தல் நிலையைக் களைவதற்கு மந்தமாக செயற்படும் அல்லது இதுவரை செயற்படாது விட்ட அனைத்துலக அரங்கமும் இதற்குப் பொறுப்பு என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது.

நேற்று முன்தினம்கூட தமது நாடாளுமன்றத்தில் வெளிவிவகாரப் பீரிஸார் விட்ட பேட்டிகள், கொழும்பு அதிகார மையத்தின் எதிர்மறைப்போக்கான குழப்பங்களை அம்பலப்படுத்துகிறது. அமெரிக்காவினால் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே தாம் ஏற்றுக்கொள்ளதாதபோது, அவ்வாறான இலங்கை குறித்த தேவையற்ற அக்கறை எவ்வாறு ஏற்புடையதாக மாறும் என மிஷேல் ஜே.சிசனின் பாட்டுக்கு, இரட்டைத் தாழ்ப்பாள் எனவும் நிறுவ பீரிஸ் முனைகிறார்.

இதனைவிட, நவநீதம்பிள்ளையின் அனைத்துலக விசாரணை என்ற பொறிமுறையே, இலங்கைத்தீவை மையப்படுத்திய கருத்து மோதலுக்கும் களம் அமைத்துவிட்டதாக 'பீரிஸின்' மொட்டைத்தலை முடிச்சு கருத்தியல் முன்வைக்கப்படுகிறது. அதாவது ஶ்ரீலங்கா துடுப்பாட்டக்காரர்களைப் புறக்கணிக்கும் சென்னையும், தமிழக திரைப்படங்களைப் புறக்கணிக்க முனையும் கொழும்பும் நவிபிள்ளையின் தூண்டுதல் எதிர்விளைவுகள் என்பதும் மெத்தப்படித்த பேராசிரியர் மஹத்தயாவின் அபிப்பிராயம்!

198.jpg1978 இல் தமிழகத்தின் கலைக்குரிசில் சிவாஜி கணேசன், பைலட் பிரேமநாத்தாக மாறி, இலங்கையின் இளங்குயிலாக வர்ணித்து ஆடிப்பாடிய அன்றைய மாலினி பொன்சேக்கா, இன்று ஒரு நாடாளுமன்ற + நடிகை பாட்டியாக மாறிவிட்டாலும், தமிழகத்துக்கு எதிரான அவரது எதிர்ப்புணர்வில் மட்டும் சிங்கள வீரம் கோலோச்சுகிறது.

நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட என வாயசைத்த அழகி மாலினி பொன்சேகாவும், தமிழக கலைஞர்களுக்கு எதிரான போராட்டத்துக்காக சிங்களக் கலைஞர்களை சுதந்திர சதுக்கத்தில் அணிதிரட்டியதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத் திரைப்படங்குப் பதிலாக மலையாளத் திரைப்படங்களை கேரளாவில் இருந்து பெறுமாறு சிங்கள பௌத்த கடும்போக்கு ராவணாக்கள் கெக்கரிக்கும் நிலையில், மறுமுனையில் பாட்டி மாலினியும் தனது தரப்பில் சிங்களக் கலைத்தொட்டிலை ஆட்டுகிறார்.

பாக்குநீரிணையின் இக்கரையும் தமது ஏட்டிக்குப் போட்டியான நகர்வுகளை உசுப்பேற்றிவிடும் பின்னணியில் 'இந்தியா கூரை போட்டுக் கொடுத்த வீடுகளின்' தராதரம் குறித்து நோட்டமிடும் இந்தியத் தூதுக்குழுவின் யாழ் பயணமும் தொடர்ந்திருந்தது. 'பெரியண்ணன்' வீட்டுத் தூதுக்குழு என்ற தோரணையோடு தமிழர்கள் அல்லாத முகங்கள் இவ்வாறு உலாவரும் நிலையில், தமது பங்காளியான பாகிஸ்தானிலிருந்தும் 19 உறுப்பினர்களைக் கொண்ட அதன் தேசிய பாதுகாப்பு உயர்மட்டக் குழு ஒன்றும் கொழும்பில் முகாமிட்டிருப்பது குறித்து அவர்கள் அறிந்தார்களோ, இல்லையோ என்பதும் தெரியவில்லை.

இலங்கையின் பாதுகாப்பு, அபிவிருத்தி, வெளிநாட்டுக் கொள்கை உட்பட்ட விடயங்களில் இஸ்லாமாபாத் உயர்மட்டக் குழு ஆய்வு செய்யும் நிலையில், சிங்களத்தின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு அனைத்துலக நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால சபையை வடகிழக்குத் தமிழ் மக்களுக்காக இந்தியா உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தியக் குழுவிடம் தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்படுகிறது.

ஜே.ஆர் - ராஜீவ் ஊடாக பெரியண்ணன் உருவாக்கிய 13 ஆவது திருத்தம் கிழடு தட்டிவிட்டதால், அது இன்று சவாரிக்கு உதாவது என்ற கரிசனையுடன் யாழில், தமிழ்த் தரப்பு இந்தப் புதியநுட்பமான கோரிக்கையை முன்வைப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்களத்தின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை நுழைந்துகொள்ளுமாறும், அதற்கு அழுத்தம் வழங்குமாறு மகிந்த அதிகார மையத்தின் யாழ் முகவர் குரல்கள் இந்தியக் குழுவிடம் ஓதிய போதும் சிங்களத்தின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட அனைத்துலக கண்காணிப்பு 'இடைக்கால சபை' என்ற புதிய நுட்பம் இங்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் பிரயோகிக்கப்படும் போதிலும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்ன என்பதும் ஆவலுக்குரியது!

தமிழர் தரப்பு முன்வைக்கும் கோரிக்கைகளுக்குரிய சடுதி எதிர்வினைகள் கொழும்பிடமிருந்து வருகின்றன. உதாரணமாக இரா.சம்பந்தனும், கொழும்பிற்கான அமெரிக்கத் தூதரும், இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் மீதான அண்மைக்கால அச்சுறுத்தல்கள் குறித்த கரிசனையை வெளிப்படுத்திய சமகாலத்தில், யாழ் பல்லைக்கழகத்திலுள்ள முஸ்லிம் மக்களின் தொழுகையறைக்கும் 'கழிவு எண்ணெய்க் கலாச்சாரம்' பிரயோகிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 180 முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமை குறித்த பிரக்ஞையின் தேவையை சீர்குலைக்க 'கழிவு' எண்ணெய் ஆயுதம் தூக்கப்படுகிறது.

இலங்கைத் தீவின் 'பொதுபல சேனா சண்டியர்கள்' தமது அனைத்துலக வலையமைப்பை நிறுவ அமெரிக்காவுக்குப் பரிந்துரைத்துள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவச் சமூகத்தின் மத்தியிலும் தமிழ் - முஸ்லிம் வேறுபாடுகளை உருவாக்கும் சூட்சுமங்கள் உருவாகின்றன.

இரு கோடுகள் தத்துவத்தைப் போல தமிழ் மக்களின் அரசியலுரிமைத் தேவை குறித்த உற்று நோக்கலைத் திசைத் திருப்ப இவ்வாறான தூண்டுதல்களை வீசக் காத்திருக்கும் தூண்டிற்காரனே, தனது தூண்டிலின் மிதவை மீது நோட்டமிட்டபடியே சாதாரணமாக அரசியல் செய்கின்றான். இவ்வாறான தூண்டிற்காரர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்ளும் துல்லியமான நோக்கத்தை இலங்கையர்களில் பெரும்பான்மையனோர் அறியாவிட்டாலும், தமிழர்களில் கணிசமானோர் அதனை அறிந்துதான் வைத்துள்ளனர்.

 

எழுத்து : பிரேம்

முன்னைய பதிவு
பல சேனாக்களின் நகர்வுகளும்! பிளான் Bயும்!

http://tamilworldtoday.com/home

Link to comment
Share on other sites

சிங்கள இனவாதத்தை தெரிந்தும் மேற்குலகம் பல உதவிகளை செய்து வந்தது. ஆனால், மகிந்த கூட்டம் ஆட்சியில் மேலும் நீடிக்க அதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தந்து வந்தால் அவர்களின் நிலை பரிதாப நிலைக்குள் தள்ளப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.