Jump to content

இந்தி பேசத்தெரியாத காரணத்தால் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை: ப.சிதம்பரம் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி பேசத்தெரியாத காரணத்தால் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை: ப.சிதம்பரம் பேட்டி 

[Tuesday, 2014-04-01 12:10:27]
P-chidamparam-150-seithy.jpg

எனக்கு இந்தி பேசத்தெரியாததால் தான் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்றுமுன்தினம் மிகவும் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார். அதற்கு பதிலடி கொடுப்பதுபோல நேற்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் நிலை குறித்துப் பேசினார். பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கை பற்றியும் அக்கட்சியின் தலைமை பற்றியும் கடுமையாக விமர்சித்தார்.

  

மேலும் ப.சிதம்பரம் கூறியதாவது:

இந்தியாவின் அன்னிய செலாவணி மதிப்பு தற்போது ரூ.18 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 35 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டுள்ளது. நேரடி ஏற்றுமதி ரூ.19.56 லட்சம் கோடி அளவில் உயர்ந்திருக்கிறது. அன்னிய நேரடி முதலீடு ரூ.19.800 லட்சம் கோடியாக உள்ளது.

பணவீக்கம் 5.9 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. எந்த வகையிலும் கவலை அளிப்பதாக இல்லை. திட்டச்செலவை நாங்கள் குறைக்கவில்லை.

தங்கம் இறக்குமதி

தங்கத்தின் இறக்குமதியை அதிகரிக்க ரிசர்வ் வங்கியுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறோம். தங்கம் இறக்குமதியில் மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் சிறந்து விளங்கியது.

கல்வியில் புரட்சி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத விகிதம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை விட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் வெகுவாக குறைந்துள்ளது.

நினைவில் பின்தங்கினார்

2001–ம் ஆண்டில் இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சி அடைந்தபோது பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இருந்தது. பா.ஜனதாவை சேர்ந்த யஷ்வந்த் சின்கா நிதி அமைச்சராக இருந்த போது இந்திய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.

சின்கா இந்திய மக்களின் நினைவில் நெடிய தூரம் பின் தங்கி நிற்கிறார். அவர் நீண்ட காலம் அனைவரின் நினைவுகளிலும் இப்படியே பின்தங்கித்தான் இருப்பார் என்று நம்புகிறேன். அவருடைய கேள்விகள் அனைத்தும் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன.

மோடி மீது தாக்கு

மோடி ஆழமான குணாதிசய கோளாறுகள் உள்ளவர். இந்தக் குறைபாட்டை பா.ஜ.க.வின் தலைவர்கள் யாரும் அவரிடம் எடுத்துக்கூறுவதில்லை. மோடியால் அடுத்தவர்களைப்பற்றி மோசமாக பேசாமல் இருக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங்கை வணிகத்துறையில் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள்.

எடுபிடித்தனங்களை விரும்பும் முதலாளித்துவ சக்திகள் மட்டுமே மோடியை விரும்புவார்கள். ஏனென்றால் மோடி நம்பும் முதலாளித்துவம் எடுபிடித்தன்மையை விரும்பும் முதலாளித்துவம் ஆகும்.

எனக்கு இந்தி தெரியாததால், வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை. மோடிக்கு தமிழ் தெரியாது என்பதால், அவர் சிவகங்கை தொகுதியில் போட்டியிட முன்வர மாட்டார் என்று ப.சிதம்பரம் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106902&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை மேற்குலகின் நவீன அடிமையாக்கிய புன்னியவான் மீண்டும் டெல்லி போக வழியற்று புலம்பத்தொடங்கியிட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.