Jump to content

MH370 விமானத்தில் பணித்த பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம்  நொறுங்கியதற்கான காரணம், அதற்கான ஆதாரம் என  எதையும் மலேசிய அரசு வெளிப்படையாக தெரிவிக்காததால் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் கடும்  ஆத்திரம் அடைந்துள்ளனர்.
article-2588678-1C8C1E8B00000578-90_634x
 
இந்நிலையில் பேரணியாக மலேசிய  தூதரகத்தை நோக்கி சென்ற அவர்கள், 'மலேசியா ஒரு கொலைகார  அரசு" , 'மலேசிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது", 'எங்கள் உறவினர்களின்  உயிரை திருப்பி கொடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியவாறு  கோஷமிட்டபடி சென்றனர்.
 
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த  8ஆம் திகதி புறப்பட்ட மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.  
 
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த ஏராளமான  போர் விமானங்களும், கப்பல்களும் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. 
article-2588678-1C8C18C200000578-965_634
2 வாரத்துக்கும் மேலாக நடந்த தேடுதல் பணியின் போது தினமும் ஒவ்வொரு தகவல்கள் கூறப்பட்டன. விமானம் கடத்தப்பட்டதாகவும்,  விபத்துக்குள்ளானதாகவும் மலேசிய அரசு மாறி மாறி குழப்பியது. விசாரணை  குறித்த தகவல்களையும் அந்நாட்டு அரசு முழுமையாக வெளியிடவில்லை. 
Relatives-of-passengers-o-011.jpg
இந்நிலையில், தெற்கு இந்திய பெருங்கடலில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்  இருந்து 2,500 கி.மீ. தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியாவும் சீனாவும் தெரிவித்தன. 
article-2588678-1C8C18C200000578-965_634
இவற்றை கைப்பற்ற கப்பல்கள் விரைந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென  ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டிய மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்,  
article-2587209-1C88B10100000578-90_634x
இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் இன்மர்சாட் அளித்த தகவலின்  அடிப்படையில் மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து  நொறுங்கிவிட்டதாகவும், அதில் பயணம் செய்த விமான ஊழியர்கள் உட்பட  மொத்தம் 239 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆழ்ந்த  வருத்தத்துடன் தெரிவித்தார். 
article-2588678-1C8CD25000000578-665_634
இது, உலகம் முழுவதும் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்களில்  பெரும்பாலானோர் சீனர்கள் தான். 154 சீன பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  அவர்களின் உறவினர்கள் பீஜிங்கில் மலேசிய தூதரம் அருகே உள்ள ஹோட்டலில்  தங்கி தினமும் தகவல்களை கேட்டறிந்து வந்தனர். விமானம் நொறுங்கிய  தகவலை அவர்களுக்கு குறுந்தகவல் மூலம் சீன அரசு உடனடியாக தெரிவித்தது.  இதனால் சீன மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
 
அதே சமயம், விமானம் நொறுங்கியதற்கான காரணம், அதற்கான ஆதாரம் என  எதையும் மலேசிய அரசு வெளிப்படையாக தெரிவிக்காததால் அவர்கள் கடும்  ஆத்திரம் அடைந்தனர். 
article-2588678-1C8C412200000578-518_634
இந்நிலையில், நேற்று காலை சீன பயணிகளின்  உறவினர்கள், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பேரணியாக மலேசிய  தூதரகத்தை நோக்கி சென்றனர். 
அவர்கள் கையில், 'மலேசியா ஒரு கொலைகார  அரசு", 'மலேசிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது", 'எங்கள் உறவினர்களின்  உயிரை திருப்பி கொடு" என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தி  கோஷமிட்டபடி சென்றனர். 
article-2588678-1C8C223700000578-827_634
மலேசிய தூதரகத்தை சுற்றி பலத்த பொலிஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூதரகத்தில் நுழைய முயன்றவர்களை பொலிசார்  தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.  கற்களையும், வெற்றுப் போத்தல்களையும் தூதரகம் மீது வீசினர். 'மலேசிய அரசு  தவறான தகவல்களை தந்து விசாரணையை திசை திருப்பியுள்ளது. மனித  உழைப்பும், காலமும் வீணடிக்கப்பட்டுள்ளது.
article-2588678-1C8C29C000000578-725_634
இதில் பல நாடுகளின் பணமும் நேரமும் விரயமாக்கப்பட்டுள்ளது. மலேசிய  அரசும்இராணுவமும், ஏயார்லைன்சும் எங்கள் மதிப்பு மிகுந்த உறவினர்களின்  வாழ்க்கையோடு விளையாடி அவர்களை கொன்றுவிட்ட கொலைகாரர்கள், பொய்யர்கள், அவர்களால் எங்கள் உறவினர்களை திருப்பித் தர முடியுமா" என  கேட்டு கோஷமிட்டனர். 
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக மலேசிய அரசு முடிவுக்கு வந்தது  எப்படி என்பதை விளக்க வேண்டும் என சீன அரசு கேட்டுள்ளது. 
 
இது குறித்து,  மலேசிய தூதருடன் பேசிய சீனாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி  ஹாங்ஷெங், 'மலேசியாவிடம் உள்ள அனைத்து தகவல்களையும்,  ஆதாரங்களையும், செயற்கைகோள் தகவல்களையும் வெளியிட வேண்டும்" என  கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சீனாவைத் தொடர்ந்து மற்ற உலக நாடுகளும் மலேசியாவுக்கு நெருக்கடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பத்திரிகைகளில் கறுப்பு பக்கம்
 
மலேசியாவின் நியூ ஸ்ரைட் டைம்ஸ் என்ற செய்தித்தாள் முதல் பக்கம்  முழுவதையும் கறுப்பு நிறத்தில் அச்சிட்டுள்ளது. மேலும், அப்பக்கத்தில் 'குட் நைட்  எம்எச்370" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதுதான் மாயமான  மலேசிய விமானத்தில் இருந்து வந்த கடைசி செய்தி. மலாய் மற்றும் சீன மொழி  பத்திரிகைகளும் முதல் பக்கத்தை கறுப்பு நிற பின்னணியுடன் வெளியிட்டுள்ளன.
article-2587209-1C89281900000578-563_634
ஆங்கில பத்திரிக்கையான சன் தனது செய்தித்தாளின் பெயரை கருப்பு நிறத்தில்  வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப்,  'காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த  அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த விசாரணையை திசை  திருப்புகிறது. மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான தகவல்களையே வெளியிட்டு  உள்ளனர். விமானம் குறித்து விசாரணை நடத்தியவர்களிடம் எந்த தகவலையும்  அவர்கள் சரிபார்க்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது.
 
கறுப்பு பெட்டி?
 
கடலில் மூழ்கிய மலேசிய ஏயார்லைன்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை  கண்டுபிடிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கறுப்புப்  பெட்டியின் பற்றரி 30 அல்லது 40 நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில்  இருக்குமாம். 
 
அதற்குள் கண்டுபிடிக்காவிட்டால், கறுப்பு பெட்டியை தேடுவது  மிகவும் கடினமாகி விடும் என கூறப்படுகிறது. ஆனாலும் எப்போது  கண்டுபிடித்தாலும் அதில் உள்ள தகவல்கள் அழியாமல் இருக்கும். இதற்கு முன்,  ஏயார் பிரான்ஸ் 447 என்ற விமானம் விபத்துக்குள்ளாகி 2 ஆண்டுக்கு பிறகுதான்  அதன் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தகவல்கள் அனைத்தும்  பத்திரமாக இருந்துள்ளன என இங்கிலாந்தின் இன்மர்சாட் செயற்கைகோள்  நிறுவனம் கூறியுள்ளது.
 
உயிரின் விலை ரூ.3 இலட்சமா?
 
விமான விபத்தில் பலியான பயணிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம்  வழங்குவதாக மலேசிய ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தேவைப்பட்டால்  கூடுதல் நிதியையும் தருவதாக கூறியுள்ளனர். இது பயணிகளின் உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு உயிரின் விலை ரூ.3 இலட்சமா  என மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.
article-2587209-1C890DB500000578-926_634article-2588678-1C8D19CF00000578-44_634xarticle-2587209-1C88A58A00000578-348_634
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.