Jump to content

நான் பார்த்த சாத்திரி!!


Recommended Posts

ஆரம்பத்திலே சாத்திரியார் ஒரு உண்மை சம்பவத்தை சிறுகதையாக யாழில் எழுதினார்.. அதுதான் அவரது முதலாவது படைப்போ என்னமோ.. சில வசன நடைகளை தவிர்த்து பார்க்கும்போது அங்கே அவரது எழுத்தார்வம் மிகவும் தாராளமாகவே பொதிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதிலிருந்து அவரை அவரது ஆக்கங்கள் மூலமாக அவதானிக்க ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் கடந்தகால அனுபவங்களாக.. நிகழ்வுகளின் விமர்சனங்களாக.. கட்டுரைகளாக வெகுவேகமாகவே அவரது எழுத்தாற்றலும் சிந்தனைகளும் விரிந்துகொண்டே சென்றன.

அவரது ஆரம்பகால விமர்சனக் கட்டுரைகள் மூஞ்சையைப் பொத்தி அடிக்கிறமாதிரி இருக்கும். மூஞ்சையைப் பொத்தி அடிச்சால் அடிவாங்கினவனும் திருப்பி அடிக்கத்தானே முயற்சிப்பான்.. அதேபோல எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் சிலர் மிகவும் சினத்துடன் 'அவர் ஒரு மனுசனா..' என்னும் போக்கில் என்னுடன் தொலைபேசியில் பேசுவார்கள். நானும் அப்போது யாழில் இணைந்து பதில் எழுதுங்கள் என்று கூறிவிடுவேன். அவர்கள் யாழில் உள்ளார்களா இல்லையா என்பதை நான் அறியேன். :)

ஆனால் சாத்திரியின் அந்தக் கட்டுரைகளைப் பார்க்கும்போது எனக்கு மனதுள் சிரிப்பாக இருக்கும். ஏனெனில் 90களில் Dosல் ஆதமி போன்ற தமிழ் எழுத்துகளை பாவித்த காலத்தில் வெளியிட்ட கடல் என்ற சஞ்சிகையிலும் இப்படியான வகை கட்டுரைகளை எழுதியிருந்தோம். அதனால் திரும்ப வந்த அடிகளையும் தாங்கியிருக்கிறோம். அதற்கும் ஒரு துணிவும் அதன் தாக்கங்களைத் தாங்கும் குடும்பமும் வேண்டுமல்லவா?! :)

எழுத்தாளன் என்பவன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன். அவன் எளிதில் உணர்ச்சிவசப்படுவதால்தான் அந்த உணர்வுகளை எழுத்தில் இறக்கிவைக்க முடிகிறது. அதுமட்டுமல்ல.. தனது உணர்வுகளை மற்றவனுடன் பகிர்ந்துகொண்டு அதை ஒரு அறிவித்தலாக அல்லது அனுபவமாக தான் சார்ந்த சமுதாயத்தில் பதிவுசெய்ய விளைகிறான். இந்த விளைவு இல்லாவிட்டால் தாக்கும் உணர்வுகளைச் சமாளிக்க மது.. போன்ற எத்தனையோ விடயங்களை நாடிவிட்டுப் போகலாம்.

ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படும் எழுத்தாளன்.. அந்த உணர்வுகளை தனது எழுத்தனுபவங்களைக் கொண்டு நிதானமாகச் சிந்தித்து ஒரு சீரான முறையில் எழுத்தாக்குகிறான் என்பதுதானே உண்மை?! ஆக உணர்ச்சிவசப்படுபவன் அந்த உணர்வுகளை ஒரு பக்குவமான நிலைக்குகொண்டு வரும்போதுதானே எழுத்தாளனாகிறான். இது அந்த எழுத்தாளனது அனுபவங்களைப் பொறுத்தே காத்திரமாகிறது.

நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.

தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.

உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.

எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு காலத்தில் ஏதாவது ஒன்று பேசப்படும் பொருளாக இருக்கும்

தற்போது யாழில் "சாத்திரி" :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழி அண்ணா தனது அனுபவத்தில் சாத்திரி என்ற கள உறவு பற்றி தெளிவுறச் சொல்லி இருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றே..!

சாத்திரி ஒரு எழுத்தாளனாக தான் சொல்ல விரும்புவதை தனது வடிவில் சொல்லக் கூடியவர். அதனால் அவர் தனது எழுத்துக்கள் மூலம் நிறைய வாசகர்களைக் கவர்ந்தும் இருக்கிறார். பிரச்சனையும் பட்டிருக்கிறார்.

அவருடைய பல ஆக்கங்களோடு முரண்படாத போதும் சில ஆக்கங்கள் மக்களது மேன்மை பொருந்திய நம்பிக்கைகளுக்கு பாதகமாக அமைந்திருந்த நிலையில் அவற்றோடு இணைந்து அவரோடு விவாதம் செய்திருக்கிறேன். என்ன அவர் இலகுவில் தனது தவறை ஒத்துக் கொள்ளமாட்டார்..! ஆனால் கோபப் படுவார். அது சோழியண்ணா சொன்னது போல.. எழுத்தாளர்களின் சுபாவம் போலும்..!

அண்மையில் அவர் கள விதிக்கு மாறாக நடந்து கொண்டதை இட்டு ஏற்பட்ட தடை என்பது அவருக்கான ஒரு வழிகாட்டலாக இருக்குமே தவிர அவரின் எழுத்தாளுமையை அது பாதிக்காது என்றே நம்புகிறேன். சோழியண்ணா சொன்னது போல தடையை + ve ஆக எடுத்து சாத்திரி தனது படைப்புக்களை இன்னும் ஸ்திரமாக உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நிச்சயமா.. சாத்திரியோ.. எவருமோ.. அவரவரின் படைப்பளவில் நாம் தவறு காணும் போது.. அதை நிச்சயம் சுட்டிக்காட்டியும்.. மெருகு காணும் போது வாழ்த்தியும் நிற்போம்..! சாத்திரியும் வாசகர்களின் விமர்சனங்களை நக்கலாக நளினமாக நோக்காது அதனுள் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த கருத்துக்களை சிந்தனைகளை உணர்ந்து ஆக்கங்களில் அவற்றை பிரதிபலிப்பது.. இன்னும் இன்னும் அவர் தன்னை எழுத்துலகில் ஸ்தரப்படுத்த உதவும்.

எழுத்துக்களுக்கு அப்பால்.. யாழ் கள உறவாக.. சாத்திரி எமக்கும் நல்ல நண்பரே. அவரோடு தனிப்பட்ட முறையில் தொடர்புகள் இல்லாத போதும் பிரச்சனைகளும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி விழும். என்ட பாசையில சொன்னா வடிவான பெட்டயளத்தான் பெடியள் சுழட்டுவாங்கள் (இதுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை, எதோ அனுபவத்தில கண்டதை எழுதியிருக்கிறன் :icon_mrgreen:)

Link to comment
Share on other sites

காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி விழும். என்ட பாசையில சொன்னா வடிவான பெட்டயளத்தான் பெடியள் சுழட்டுவாங்கள் (இதுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை, எதோ அனுபவத்தில கண்டதை எழுதியிருக்கிறன் :icon_mrgreen:)

அப்பிடியும் மரம் அந்த இடத்திலயே நின்று காய்க்கும்.. ஆனா...?? மரம் பெட்டர் என்கிறீங்க.. அப்படித்தானே?!! :)

Link to comment
Share on other sites

தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.

உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.

எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!! :rolleyes:

அவரது எழுத்துக்களை யாழ்களத்தில் மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கதைகளும் நாட்குறிப்புகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. நகைச்சுவையாகவும் இரட்டை அர்த்தத்திலும் எழுதும் திறமை கொண்டவர். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

அவரோடு நான் சில சமயங்களில் முரண்பட்டே வந்துள்ளேன். அதை அவருக்கு தெரிவித்தும் வந்துள்ளேன். அவரும் சில திரிகளுக்கு என் போன்றவர்களை வரவேண்டாம் எழுதவேண்டாம் என்று சொல்லியே திரியை ஆரம்பிக்கும் அளவுக்கு எமக்குள் புரிந்துணர்வு இருந்துள்ளது. இருக்கிறது.

அதேநேரம் எதைப்பகிடியாக எழுதணும் எதை எழுதக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டையும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அதைர அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது நடப்பது சட்டமீறல் சம்பந்தமானது. அதை நிர்வாகமும் அவரும்தான் தீர்க்கணும்.

அதேநேரம் காமம் என எழுதப்பட்ட திரியில் முழுப்போராளிகளையும் ஒருவித காமகளியாட்டக்காறர்கள் என திசை திருப்பியதால் அதை மட்டுப்படுத்தும்படி நிர்வாகத்திடம் நானும் கேட்டுக்கொண்டேன் என்பதை தெரிவிப்பதிலலிருந்து நான் ஒழிந்து கொள்ளமாட்டேன்.

நான் யாழில் செலவிடும் நேரம் எவருக்கானது என்பதை என்றும் ஞாபகம் வைத்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியால் "கலாச்சாரக் காவலர்" என்று பட்டம் வழங்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். கோமகன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் காட்டிய எதிர்ப்பு தவறாகப் புரியப் பட்டு இப்படி ஒரு பெயர் கிடைத்தது. சாத்திரி உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை விபரித்து அல்லது முன்னிறுத்தி எழுதுவதை "முற் போக்கு" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யாராவது முகம் சுழித்தாலும் "இது எல்லா சமூகத்திலும் நடப்பது தான், தமிழர்கள் விதி விலக்கா? " என்பார்கள். நான் இவர்களுக்கு எப்போதும் சொல்லும் பதில்: காமம், கலவி, ஓரினச் சேர்க்கை, பாலியல் தொழில் இவையெல்லாம் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலங்களிலும் நடப்பது, மனித இனம் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு விஷயம் பல ஆண்டுகளாக நடக்கிறது என்பதற்காக அதை நாங்கள் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. "பெண்ணடிமைத் தனம் கூட பல ஆண்டுகள் பழையது, அதனால் இது சாதாரணமான விஷயம்" என ஒரு "முற்போக்கு" எழுத்தாளர் எழுதி விட முடியுமா? பாலியல் தொழிலும் அன்ரி மாரோடான காம லீலைகளும் சாதாரணமான விடயங்கள் என்ற பிரதிமையை சாத்திரி உட்பட யாழில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதை எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யாழ் பல வயதினரும் பார்க்கும் ஒரு தளம். எதை எழுதுகிறோம் என்ற கட்டுப் பாடு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரி நல்லவர், வல்லவர், வடிவானவர், நல்லா எழுதக் கூடியவர். அண்மைய கால அவரது எழுத்துக்கள் நிலாந்தன் தன் ஆறாவடு விமர்சனத்தில் சொல்லியிருந்தது போன்று யுத்தகாலங்களின் இன்னுமொரு சாட்சியாக நாளை நிச்சயம் பார்க்கப்படும். முள்ளிவாய்க்காள் கதிக்கு பின்னால் உறைந்து இருக்கும் பல உண்மைகளை துணிவுடன் எழுதி வருகின்றவர். சிலரது எழுத்துக்கள் வாசிக்கும் போது visual லாக மனதுக்குள் விரிந்து செல்லும்; சாத்திரியின் எழுத்து நடையும்இவ்வாறானதே.

எழுத்துகளுக்கு அப்பால், பல சமயங்களில் அவரது அலைவரிசையும் எனது அலைவரிசையும் ஒத்து போயிருப்பதை அவதானித்துள்ளேன். யாழுக்கு வெளியேயும் நண்பர்களாக தொடர்ந்து இருக்க இந்த அலைவரிசை தான் உதவுகின்றது என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நல்லவர், வல்லவர், வடிவானவர், நல்லா எழுதக் கூடியவர். அண்மைய கால அவரது எழுத்துக்கள் நிலாந்தன் தன் ஆறாவடு விமர்சனத்தில் சொல்லியிருந்தது போன்று யுத்தகாலங்களின் இன்னுமொரு சாட்சியாக நாளை நிச்சயம் பார்க்கப்படும். முள்ளிவாய்க்காள் கதிக்கு பின்னால் உறைந்து இருக்கும் பல உண்மைகளை துணிவுடன் எழுதி வருகின்றவர். சிலரது எழுத்துக்கள் வாசிக்கும் போது visual லாக மனதுக்குள் விரிந்து செல்லும்; சாத்திரியின் எழுத்து நடையும்இவ்வாறானதே.

எழுத்துகளுக்கு அப்பால், பல சமயங்களில் அவரது அலைவரிசையும் எனது அலைவரிசையும் ஒத்து போயிருப்பதை அவதானித்துள்ளேன். யாழுக்கு வெளியேயும் நண்பர்களாக தொடர்ந்து இருக்க இந்த அலைவரிசை தான் உதவுகின்றது என நினைக்கின்றேன்

அது நிலாந்தனா அல்லது சயந்தனா :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

ஆகா மொத்தத்தில் சாத்திரி எழுதுவதிலும் தவறில்லை அவரை 15 நாள்மாட்டும் தடைசெய்ததும் தவறில்லை என்ற நிலைப்பாட்டுக்கே அனைவரும் வருகிறார்கள் போல?

சோழியன் அண்ணா சொன்னது போல்:

நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.

அந்த உணர்வுக்கு சாத்திரி ஜயா அடிமையானார் அதனால் அவர் ஆக்கங்களை நீக்கினார்

அதே போல் யாழ்கள விதிகளுக்கு நிழலி கட்டுப்பட்டு அவரை தடை செய்தார்.

தட்ஸ் ஆல்.,,

இனி சாத்திரி செய்ய வேண்டியது 15 நாள் முடியா தனது பயனத்தை யாழில் தொடரவேண்டியது தான் அந்த பயணத்தில் நானும் ஒரு வாசகனாக வருகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னனைப்பொறுத்த வைரைக்கும் சாத்துக்கு நடந்தது எப்ப பிழை விடுவான் அதுவும் தேசியம் அல்லது புலி என்று பா(கா)த்து இருந்து பழி தீர்க்கப்பட்டிருக்கு.இங்கு யாரோ சொன்ன மாதிரி காய்கிற மரம் தான் எறி வாங்கும்.சாத்து தொடர்ந்தும் எறி வாங்க எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சோழியன் அண்ணை! கன காலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்......ஒருசில விடயங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் எழுத்து பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல எழுத்தாளர். அவர் தொடர்ந்து யாழில் எழுதவேண்டும். எங்களால் அறியபடாத பல சம்பவங்களை அவருடைய பார்வையில் மிக தெளிவாக தருவதில் அவருக்கு நிகர் யாருமில்லை. அவருடைய எழுத்துகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தளபதி சோழியானை களத்தில் கண்டது மகிழ்ச்சி.

மறப்போம் மன்னிப்போம்

தடையை எடுத்து உடனேயே ஆளை உள்ளுக்கு விடுங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாத்தண்ணாவின் எழுத்தைவிட தலைவருடன் நின்று போராடிய முன்னாள் போராளி என்பதால்தான் அதிக விருப்பம், தலைவரின் மூச்சு காற்று பட கொடுத்து வைத்தவர்,

இதுவரை அவருடன் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளவில்லை, அவரில் உள்ள மதிப்பு பன்மடங்கு,

பிரான்ஸ் வரும் போது சந்திக்க விரும்பும் முதல் உறவு அவர்தான்

Link to comment
Share on other sites

மூத்த தளபதி சோழியானை களத்தில் கண்டது மகிழ்ச்சி.

மறப்போம் மன்னிப்போம்

தடையை எடுத்து உடனேயே ஆளை உள்ளுக்கு விடுங்கப்பா.

ஆகா.. இந்த தள(அதி)பதி மோகன்தானே?!! :)

வணக்கம் சோழியன் அண்ணை! கன காலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்......ஒருசில விடயங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

தொடர்ந்து எழுதுபவர்களை இழக்கக் கூடாது என்ற உணர்வுதான்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவின் இணைப்பில், சாத்திரிக்கு ஏன் முன்னறிவித்தல் கொடுக்கப் படவில்லை என்பதற்கான விளக்கம், மிகத் தெளிவாகவேயுள்ளது!

சாத்திரியும், ஒரு எழுத்தாளன் என்ற முறையில், மனத்தின் ஆதங்கத்தால், எடுக்கப்படும் முடிவுகள் நிலையானவை அல்ல என்பதை அறிவார்!

எத்தனை தடவைகள், நாங்கள் ஒரு காலத்தில் எடுத்த முடிவுகளைத் திரும்பிப்பார்க்கும் போது, நமக்குள்ளேயே சிரித்து விட்டிருக்கின்றோம்!

பதினைந்து நாட்கள், சாத்திரியார் தனது முடிவைத் திரும்பத் திரும்பச் சிந்தித்து இருப்பார்! ஒரு தெளிவையும் அடைந்திருப்பார்!

திரும்பி வருவார் என்றே நினைக்கிறேன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில்... அவரின் எழுத்துக்களில் பல மாற்றங்களை காணக் கூடியதாகவிருந்தது.

உதாரணத்துக்கு, சனல் 4 சம்பந்தமான தலைப்பு ஒன்றில்... "காந்தி செத்துட்டாரா?" என்று எழுதியதை வாசித்து முகம் சுழிக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்னும் ஒரு கிழமையில் மீண்டும் வருவார், என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியால் "கலாச்சாரக் காவலர்" என்று பட்டம் வழங்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். கோமகன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் காட்டிய எதிர்ப்பு தவறாகப் புரியப் பட்டு இப்படி ஒரு பெயர் கிடைத்தது. சாத்திரி உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை விபரித்து அல்லது முன்னிறுத்தி எழுதுவதை "முற் போக்கு" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யாராவது முகம் சுழித்தாலும் "இது எல்லா சமூகத்திலும் நடப்பது தான், தமிழர்கள் விதி விலக்கா? " என்பார்கள். நான் இவர்களுக்கு எப்போதும் சொல்லும் பதில்: காமம், கலவி, ஓரினச் சேர்க்கை, பாலியல் தொழில் இவையெல்லாம் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலங்களிலும் நடப்பது, மனித இனம் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு விஷயம் பல ஆண்டுகளாக நடக்கிறது என்பதற்காக அதை நாங்கள் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. "பெண்ணடிமைத் தனம் கூட பல ஆண்டுகள் பழையது, அதனால் இது சாதாரணமான விஷயம்" என ஒரு "முற்போக்கு" எழுத்தாளர் எழுதி விட முடியுமா? பாலியல் தொழிலும் அன்ரி மாரோடான காம லீலைகளும் சாதாரணமான விடயங்கள் என்ற பிரதிமையை சாத்திரி உட்பட யாழில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதை எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யாழ் பல வயதினரும் பார்க்கும் ஒரு தளம். எதை எழுதுகிறோம் என்ற கட்டுப் பாடு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

நன்றி ஜஸ்டின்,

எனது கருத்தும் இதுதான்.

நானும் சாத்தண்ணாவின் எழுத்தைவிட தலைவருடன் நின்று போராடிய முன்னாள் போராளி என்பதால்தான் அதிக விருப்பம், தலைவரின் மூச்சு காற்று பட கொடுத்து வைத்தவர்,

இதுவரை அவருடன் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளவில்லை, அவரில் உள்ள மதிப்பு பன்மடங்கு,

பிரான்ஸ் வரும் போது சந்திக்க விரும்பும் முதல் உறவு அவர்தான்

இயக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் தலைவரில் விசுவாசம் கொண்டவர்கள் என்று கூறமுடியாது,

முன்னையகாலங்களில் இயக்கத்தில் இருந்த இயக்க போராளிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளமாட்டார்கள் இவரைப்போல் சிலர் தான் இயக்கத்தில் இருந்ததாக கூறிக்கொண்டு இவர் எழுதும் தனது சொந்தகருத்துக்களை புனித இலட்சியம் கொண்ட இயக்கத்துக்கு மாசுவிளைவிக்கும் வகையில் எழுத அனுமதிக்கமுடியாது

சாத்திரியாரின் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில்... அவரின் எழுத்துக்களில் பல மாற்றங்களை காணக் கூடியதாகவிருந்தது.

உதாரணத்துக்கு, சனல் 4 சம்பந்தமான தலைப்பு ஒன்றில்... "காந்தி செத்துட்டாரா?" என்று எழுதியதை வாசித்து முகம் சுழிக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்னும் ஒரு கிழமையில் மீண்டும் வருவார், என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

நன்றி தமிழ்சிறி,

இவர் எழுதியதைப்பார்த்து என்னையும் ஆச்சரியப்பட வைத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபாவளிக்கு சரவெடி இல்லாமலா? யாழ் களம் சாத்தர் இல்லாமலா? 

அவர் இன்னும் சூடா வந்து தளத்தை பிரிச்சு மேயபோறார். 

Link to comment
Share on other sites

இதில் இன்னொரு விடயத்தையும் எழுத வேண்டும் என நினைக்கின்றேன்

நாம் 2008 இன் இறுதிப் பகுதியில் 'யாழ்கள கனடா உறவுகள் சந்திப்பை' நிகழ்த்தும் போது எம்மை தூற்றியவர்கள் பலர். தூற்றியதுடன் நின்று விடாமல் அதில் கலந்து கொண்ட கள உறவுகளின் மனைவிமாரையும் கொச்சையாக வேறு தளங்களில் எழுதி இருந்தனர். அந்த நேரத்தில் எம் நிகழ்வை வாழ்த்தி எம்மை பாராட்டி ஊக்கப்படுத்தியவர்களில் முக்கியமானவர் சாத்திரி !!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

 

இன்று சாத்திரியின் வலைப்பூவிற்கு சென்று சர்ச்சைக்குரிய 'காமம்' எனும் பகுதியில் எழுதப்பட்டுள்ளதை வாசித்தேன். அதில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன. அதில் பயிற்சி முகாமில் நடைபெற்றதாக கூறப்படும் சில விடயங்களும் (காமம்) விபரிக்கப்பட்டு உள்ளன‌.

 

குறிப்பிட்ட தொடர்கதையில் காமம் பகுதியை நீக்குவதற்கு நிழலி அவர்களினால் கீழ்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

 

"பல பல கள உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப (ரிப்போர்ட் பண்ணியும் தனிமடல்கள் மூலமும் நீக்குமாறு கேட்கப்பட்டன) சாத்திரியின் கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை என்ற திரியில் சாத்திரியால் பதியப்பட்ட 'காமம்' என்ற பதிவும் அது தொடர்பான பதில்களும் அகற்றப்படுகின்றன."

 

நான் யாழ் களத்தை கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன், ஐந்து ஆண்டுகளாக எழுதியும் வருகின்றேன். எனது அனுபவம், பார்வையின் அடிப்படையில் சாத்திரி எழுதிய தொடர்கதையின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது தவறாகவே எனக்கு தெரிகின்றது.

 

1. தொடர்கதையின் தலைப்பிலேயே கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை என்பதில் காமம் என்பதும் அடங்குகின்றது. வாசிக்கும்போது தொடர்கதையின் முதல்பகுதியிலேயே அதன் கனதி தெரிகின்றது. அவ்வாறான நிலையில் காமம் பகுதியும் வரப்போகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். காமம் பகுதி எவ்வளவு கனதியாய் இருக்கும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே அதை ஏன் நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளவில்லை? ஆரம்பத்தில் தொடர்கதையை அனுமதித்துவிட்டு இடையில் ஓர் பகுதியை அகற்றுவதை ஓர் படைப்பாளியாக என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

2. குறிப்பிட்ட தொடர்கதையை ஆயிரக்கணக்கில் வாசகர்கள், கருத்துக்கள உறவுகள் பார்வையிட்டுள்ளார்கள். ஏராளம் பதில் கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால் சிலர் (பலர்? எத்தனைபேர்? 4? 5? 6?) தனிமடல் ஊடகவும், முறைப்பாட்டுப்பெட்டி ஊடாகவும் கூறியதன் அடிப்படையில் கதையில் காமம் பகுதியை நீக்கியது தவறாகவே தெரிகின்றது. ஒரு ஆக்கம் வந்தால் போற்றியும், தூற்றியும் கருத்துக்கள் வருவது வழமை. அதிலும் சர்ச்சைக்குரிய பகுதிகள் வரும்போது கருத்தாளர்கள் உணர்ச்சிவசப்படுவது வழமை. அதற்காக அடி, நுனி தெரியாமல் நடுவால் கத்தரித்தால் அடிப்படையில் விவாதம் என்பது பொருள் அற்றதாகிவிடும். இதை இயலாமையின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டி உள்ளது. யதார்த்தத்திற்கு புறம்பான ஓர் மாயை உலகை சிருஷ்டித்து அந்த மாயை உலகினுள் கனவு காண்பதற்கே இப்படியான 'மறைப்புக்கள்' உதவும்.

 

3. சாத்திரி தனது தொடர்கதையின் ஓர் பகுதி நீக்கப்பட்டதால் மனமுடைந்து தான் எழுதிய பதிவுகளை நீக்குவதற்கு யாழ் நிர்வாகமும் நிச்சயம் காரணமாக அமைந்துள்ளது. நீங்கள் ஓர் படைப்பாளியாக இருந்தால் அதை - வேதனையை, அவமானத்தை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும். யாழ் இணையம் பற்றி மோகன் வெளிப்படையாகவே கூறியுள்ளார் நேரம் இல்லை, அதிககவனம் செலுத்தமுடியவில்லை என்று. இவ்வாறே கருத்துக்களத்தை நிர்வகிக்கும் நிழலி, இணையவனின் சிரமங்களையும் நாம் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். அமரர் வசம்பு அவர்களின் நினைவுப்பகிர்வு பற்றிய ஓர் பகுதியில் கருத்துக்களம் பற்றிய சில சிக்கல்களை, சிரமங்களை நான் ஏற்கனவே கூறினேன். இந்தவகையில்...

 

இத்தகைய கசப்பான அனுபவங்கள், நடந்தவை நடந்தது போக... சாத்திரிவிடயத்தில் யாழ் கருத்துக்களத்தில் விடயங்கள் சுமுகமாகவும், நியாயத்துடனும் அமைவதற்கும், கையாளப்படுவதற்கும் கூறக்கூடிய ஆலோசனைகள்:

 

1. சாத்திரியின் வலைப்பூவில் ஏற்கனவே யாழில் பதியப்பட்ட பிரதான கருத்துக்கள் உள்ளன. எனவே நீக்கப்பட்ட கருத்துக்களை யாழில் மீண்டும் அந்தந்த இடங்களில் ஒட்டியதன் பின் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ள கதைகளை மீண்டும் கதைகதையாம் பகுதிக்கு இலகுவில் கொண்டுவரப்படமுடியும். இதற்கு சாத்திரியினதும், நிர்வாகத்தினதும் ஒத்துழைப்பு தேவை.

 

2. சாத்திரியின் கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை தொடர்கதையை ஆரம்பத்தில் உள்ளதுபோலவே தொடர அனைவரும் ஒத்துழையுங்கள். கதையில் கூறப்படும் பகுதிகளுடன் உடன்பாடு இல்லாவிட்டால் உங்கள் பார்வையை அங்கு கூறுங்கள், தவறுகள் காணப்பட்டால் அவற்றை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். இவை சாத்தியப்படாவிட்டால் கதையை வாசிக்காதீர்கள்.

 

சாத்திரியின் இத்தொடர்கதை ஏறக்குறைய ஒருவரின் (சாத்திரியின்) சுயசரிதைபோல் உள்ளது. சுயசரிதையின் ஓர் பகுதியை எங்களுக்கு சொல்லாதே என்றும் எமக்கு விருப்பமான பகுதியை மட்டுமே கூறு என்றும் படைப்பாளிக்கு கட்டளையிடுவதாகவே இங்கு நடந்த சம்பவங்களை பார்க்கவேண்டியுள்ளது.

 

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்புக்கு இரன்டாவது பச்சை குத்தியது நான் தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களது போராட்டம் பின்னடைந்துவிட்டது என்று சொல்லுபவர்களே, அதனுடைய காரணங்கள் என்னவென்று பார்க்க விளைவதில்லை. போராடத்தில் ஈடுபட்டவர்களும் மனிதர்கள்தான் அவர்களும் பல்வேறுபட்ட நெருகடிகளுக்கூடகவே பயணித்தார்கள் என்பதையும் , அவர்களுக்கும் ஏனையவைகளைப் போல மன உளைச்சல்கள் இருந்திருக்கும், இருந்தது என்று சொன்னால் அது அவர்களை பற்றி நாங்கள் கொண்டிருந்த (மாய) விம்பத்தை தகர்த்து விடும், எனவே அப்படியான செய்திகள், கதைகள் எழுதக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். அப்படி எழுதுபவர்களையும் "மாற்று" கருத்து கொண்டவர்கள் என்ற (இழிவான) பட்டத்தை வழங்க தயாராக உள்ளார்கள். சின்ன வயதில் எனது பேரனார் சொன்ன "அவை மற்ற பார்ட்டி ஆக்கள்" என்பதன் அர்த்தம் இப்போதுதான் அதன் சரியான பொருளுடன்/வலியுடன் தெரிகிறது.

ஆயுத போராட்டத்தின் முடிவில், ஆயிரம் ஆயிரம் போராளிகளும், தளபதிகளும், சரணடையும் போது அல்லது சிலரின்/பலரின் வார்த்தையாலப்படி "ஆயுதங்களை மௌனித்த" போது "செய் அல்லது செத்துமடி" என்கிறவர்களாய் எதிரியிடம் போகவில்லை, நாங்களும் உங்களில் ஒருவர் எங்களுக்கும் உங்களை போன்ற வாழுகிற, அழுகிற, சிரிக்கிற உரிமைகள் இருக்கு, எங்களையும் உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள் என்றுதான் வந்தார்கள். அவர்களில் பலர்/சிலரைத்தான் சிங்களம் மனித வேட்டையாடினது, அதைதான் இன்று நாங்கள் பேசுகிறோம். அப்படி அழிந்த மறைந்த மனிதர்களுக்குத்தான் நிஜாயம் கேட்கிறோம்? அந்த பாதையை தாண்டி வந்தர்வர்களுக்குதான் வாழ்வுதேடி அவர்களும் அலைகிறார்கள் எங்களில் இயன்றவர்களும் உதவுகிறார்கள்.

இதிலே அவர்களுக்கும் இடையிடையே "மனிதகுனங்ககளும்" இருந்தது என்று எழுதினால் அதை தடை செயவேண்டும் என்று கடிதம் எழுதும் அன்பர்களும், அது காலத்தின் தேவை என்பவர்களும், ஒன்றை மறந்து விடுகிறார்கள், பிரபாகரனையும் மனிதனாக சிந்திக்க மறக்கும் கூட்டந்தான் சனல் நாலில் இருந்த எல்லாவற்றையும் அதிலே இருந்த பிரபாகரனின் இறப்பு பற்றிய பகுதியால் தவற விட்டு விட்டு இருக்கிறார்கள். காலம் இன்னும் ஓடும், சனல் நாலில் அடுத்த வெளியீடு என்னவாக இருக்கும் என்று யாருக்கு தெரியும்? அப்படி வரும் போது எங்களில் இன்னும் சிலர் மொட்டாக்கு போடவேண்டி வரலாம். அதுவரைக்கும் "மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்....."

மற்றும்படி சாத்திரி என்ன சாத்திரி, எழுதுங்கோ ஆனால் நாங்கள் எதை விரும்புவோம் என்று நாடி பிடித்து எழுதுங்கள். நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் எங்கடை நாலு பச்சை விழாட்டி அது உங்கடை கடைகணக்கு கொப்பியில எழுதின புண்ணாக்கு கணக்குத்தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.