Jump to content

எச்சரிக்கை தேவை


Recommended Posts

இப்போது கோடைகாலம். சிறியவர், பெரியவர் என எல்லோரும் நீர்நிலைகள்: கடல், ஏரி, குளம் என தேடி சென்று குளித்து, நீந்தி, விளையாடி மகிழும் காலம்.

மகிழ்ச்சிக்காக செல்லும் இடத்தில் மரணம் ஏற்படுவதை எவரும் விரும்ப மாட்டார்கள்.

நீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

கோடை காலத்தில் வயது, பால் வேறுபாடின்றி பலரும் நீரில் மூழ்கி மரணம் அடைவது தொடர்ந்துகொண்டே உள்ளது.

நீரை விளையாட்டு சாதனமாக மட்டும் நோக்காதீர்கள். கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும்போது அதிக எச்சரிக்கை தேவை.

நீர் நிலைகளில் குளியல் செய்வதாயின் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.

சில தினங்களுக்கு முன் நல்லூரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பல்கலைக்கழக இறுதியாண்டு இரசாயனவியல் மாணவனின் அகாலமரணம் ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் நிறுவனத்தின் கோடை சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நீரில் மூழ்கி இவர் அகால மரணம் அடைந்துள்ளார்.

http://notice.lankas...0721204461.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர், நிலைகளுக்குச் செல்லும் முன்.... அந்தக்கடலின், ஆற்றின் தன்மையை முன்பே அங்குள்ளவர்களிடம் தீர விசாரித்த பின்பே உள்ளே இறங்க வேண்டும். மறந்தும் மது அருந்தி விட்டு குளிக்கச் செல்லப்படாது. பல விபத்துக்கள் இதனாலேயே... ஏற்படுகின்றன.greensmilies-026.gif

Link to comment
Share on other sites

சில தினங்களுக்கு முன் நல்லூரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பல்கலைக்கழக இறுதியாண்டு இரசாயனவியல் மாணவனின் அகாலமரணம் ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் நிறுவனத்தின் கோடை சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நீரில் மூழ்கி இவர் அகால மரணம் அடைந்துள்ளார்.

[size=4]பெற்றோருக்கு ஒரே பிள்ளை :( [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்..இவர் சங்கீத ஆசிரியை ஒருவரின் மகன் என்றும்,ரொம்ப கண்றாவியான இறப்பு வீடு என்று போய் வந்தவர்கள் சொல்லக் கேள்விப்பட்டேன்..பெற்றோர் அழுவதற்கு கூட தத்தி அற்ற நிலையில் உட்கார்ந்திருந்தார்களாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.