Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்களுக்கான விருது, தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் எழுத்தாளர் அகில்

 

2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அந்நூல்களை பதிப்பித்த 22 பதிப்பகத்தாரருக்கு பரிசுமற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 

இம்முறை அயலகத் தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் ஈழத்து புலம்பெயர் எழுத்தாளர் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) எழுதிய கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத்தொகுப்பிற்கு வழங்கப்படவுள்ளது. பரிசு பெறும் நூலாசிரியர்கள் விவரம் வருமாறு:-


மரபுக் கவிதை - முனைவர் மு.இளங்கண்ணன், புதுக்கவிதை - கவிஞர் நாவேந்தன்

 

புதினம் - அரு.மருததுரை, சிறுகதை - செல்வி பர்வின்பானு நாடகம் (உரைநடை, கவிதை) - கவிமுகில் நா. கோபாலகிருஷ்ணன் திறனாய்வு- பெ.அ. இளஞ்செழியன்


மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் - முனைவர் ப.வேல்முருகன்

 

பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் - புவியரசு நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - முனைவர் கு.சேதுராமன் அகராதி, கலைக்களஞ்சியம்,கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் - ஆரூர் தாஸ் பயண இலக்கியம் - ப.முத்துக்குமார சுவாமி


வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு - டி. பவா செல்லதுரை நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு - முனைவர் கி.கிரா.சங்கரன்

 

கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் - இரா. சிவராமன்

பொறியியல், தொழில் நுட்பவியல் - கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் -முனைவர் கி.அய்யப்பன்

சட்டவியல், அரசியல் - முனைவர் ஆ.ஜெகதீசன்

மருந்தியல், உடலியல், நலவியல் - டாக்டர் ஜெயம் கண்ணன்

தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) - 1.டாக்டர் இல.மகாதேவன், 2. டாக்டர் ஒய். மகாதேவ ஐயர்ஸ்.

சமயம், ஆன்மிகம், அளவையியல் - இராமநாதன் பழனியப்பன்

கல்வியியல், உளவியல் - கவிஞர் சுடர் முருகையா

சுற்றுப்புறவியல்- வேணு சீனிவாசன்

நாட்டுப்புறவியல் - டாக்டர் சிவ. விவேகானந்தன்

வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் - அகிலேஸ்வரன் சாம்பசிவம்

இதழியல், தகவல் தொடர்பு - மா.ரா.அரசு பிற சிறப்பு வெளியீடுகள் - வெ.நல்லதம்பி

தமிழர் வாழ்வியல் - முனைவர் பி.சேதுராமன்.

 

http://ekuruvi.com/award%20india%20writing

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 427
  • Created
  • Last Reply

கடந்த ஒருவாரத்துக்கும் அதிகமான காலம் காணாமல் போயிருந்த ரிம் பொஸ்மா (Tim Bosma) வின் எரிந்த உடலின் பாகங்களை இன்று காலை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

  • தனது ட்றக் ஒன்றினை விற்பதற்காக ஒன்லைனில் விளம்பரம் போட்டு இருந்தார்
  • அதனை வாங்க இருவர் வந்து பரீட்சார்த்தமாக ஓட்டிப் பார்க வேண்டும் எனச் சொல்லி இவரையும் ஏற்றிக் கொண்டு போயிருந்தனர். அவர்களுடன் போனவர் மீண்டும் வரவில்லை.
  • மனைவி "அது ஒரு வெறுமனே ட்றக். அதனை வைத்துக் கொண்டு என் கணவரை விட்டு விடுங்கள். எனக்கு என் கணவர் வேண்டும். அவர் மகளுக்கு அப்பா வேண்டும்" என்று கெஞ்சி யுரியூபின் ஊடாக கோரிக்கை விட்டு இருந்தார்.
  • இது தொடர்பாக வாட்ட்ர் லூ பகுதியினைச் சேர்ந்த ஒரு வாலிபர் கைதானார்.
  • கைது செய்யப்பட்டவர் மிகுந்த செல்வம் உள்ள, பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவர் என்றும், பழகும் போது சாதனை கண்ட ஒரு சிறந்த  விமான ஓட்டி என்றும், எந்த விதமான குற்ற பதிவும் (Criminal records) இல்லாதவர் என்றும் சொல்லப்படுகின்றது.
  • காணாமல் போன ட்றக் இனை 3 தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவரின் தாயின் வீட்டில் இருந்து மீட்டனர்.
  • நேற்றுடன் இவர் காணாமல் போய் ஒரு வாரம் முடிந்து இருந்தது.
  • இன்று இவரது எரிந்த உடலின் பாகங்களை  மீட்டுள்ளனர். ஒரு வாகனத்தினை விற்கப் போய் இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

http://www.thestar.com/news/crime/2013/05/14/tim_bosma_missing_man_is_dead_body_burned_police_say.html

 

 

 

Link to comment
Share on other sites

காசுக்கு ஆசைப்பட்டு கிஜிஜி, ஆட்டோட்ரேடர் போன்ற தளங்களில் விளம்பரப்படுத்தினால் வில்லங்கத்தையும் விலைகொடுத்து வாங்க நேரலாம்.. :unsure: நான் இவை எதற்குள்ளும் போவதில்லை.. இந்தக்காலத்தில் டீலர்களிடமே தள்ளிவிடலாம் வாகனங்களை.. ஆனால் விலை அதிகம் கிடைக்காது..

 

பொருட்கள் எதையும் கிஜிஜியில் போடுவதில்லை.. நேரா குப்பைதான்..

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.