Jump to content

குழந்தை வளர்ப்பு ஆரோக்கியமான கட்டுரைகள்


Recommended Posts

சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – 1
 
 

Super-Kid-300x168.jpg
ஸ்ரீவத்சனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று நான் படித்த, குழந்தை வளர்ப்புப் புத்தகங்கள், இணையப் பக்கங்கள், கலந்து கொண்ட குழந்தை வளர்ப்புப் பயிற்சி வகுப்புகளில் நான் கற்ற சில விஷயங்களை என் இணைய தளத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இது இட்லிவடை ப்ளாகில் ”சாதா குழந்தை To சூப்பர் குழந்தை” என்னும் பெயரில் வாரா வாரம் தொடராக வந்து கொண்டிருக்கிறது.

-பிரகாஷ்.

வணக்கம் இட்லி வடை வாசகர்களே.

சாதா To சூப்பர் குழந்தை மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இந்தத் தொடரை எழுதும் நான் பிரபல குழந்தை உளவியல் நிபுணரோ அல்லது நரம்புவியல் மருத்துவரோ அல்ல.

பிறந்து வளர்ந்தது மதுரை மண்ணில். வேலைக்காகக் கால்நடை மருத்துவம் சேர்ந்து, மார்க்கெட்டிங்கே என் மனதிற்குகந்தது என்று உணர்ந்து எம்.பி.ஏ பயின்று தற்போது பெங்களூரில் ஒரு தனியார்க் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிகிறேன்; ஒன்றே கால் வயதுக் குழந்தையின் தந்தை.அந்தக் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டி,அதற்கான பயிற்சிகள், வாசிப்புகளில் இறங்கி, நான் அறிந்து கொண்டதை, தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் பரிமாற விரும்பியதன் விளைவே இந்தத் தொடர்.

குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டும் தான் என்றில்லை- எல்லோருக்குமே இது அவசியமானது என்பதைப் போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்.

ஒரு குழந்தையின் வாழ்வின் முதல் நான்கைந்து வருடங்களில் அதற்கு என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் அமையும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

அப்படியான அந்த முக்கியமான காலகட்டத்தில் சரியான முறையில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? அதன் மூளை வளர்ச்சியை,படைப்பூக்கத்தை மேம்படுத்துவது எப்படி ? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக வருவதே இந்த “சாதா குழந்தை To சூப்பர் குழந்தைத் தொடர்.

அன்புடன்
டாக்டர்.பிரகாஷ்.
www.rprakash.in

இட்லிவடை ப்ளாகில் வெளியான இந்தக் கட்டுரைக்கான லிங்க் http://idlyvadai.blogspot.in/2013/02/to-1.html

 

http://www.rprakash.in/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-to-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/super_kid-1.html


 

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 2

 

indian%2Bbaby.jpg

 

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை என்னும் இந்தத் தொடர், குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் நம் அனைவருக்கும், மற்றும் வருங்காலத்தில் குழந்தைகளை வளர்க்க இருக்கும் நாளைய பெற்றோர்களுக்கும் மிக அவசியமான ஒன்று.

குழந்தைகளைப் பற்றி, கலீல் கிப்ரான் என்ன சொல்கிறார் என்பதிலிருந்து இந்தத் தொடரைத் தொடங்குவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.



Your children are not your children. 
They are the sons and daughters of Life's longing for itself. 
They come through you but not from you,
And though they are with you, yet they belong not to you. 
You may give them your love but not your thoughts. 
For they have their own thoughts. 
You may house their bodies but not their souls, 
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams. 
You may strive to be like them, but seek not to make them like you. 
For life goes not backward nor tarries with yesterday. 
You are the bows from which your children as living arrows are sent forth. 
The archer sees the mark upon the path of the infinite, and He bends you with His might that His arrows may go swift and far. 
Let your bending in the archer's hand be for gladness; 
For even as he loves the arrow that flies, so He loves also the bow that is stable. 
by Kahlil Gibran

என் அக்கா மகள் வித்யா மிகச் சிறிய வயதிலேயே படு சூட்டிகை.இரண்டு, மூன்று வயதிலேயே வயதுக்கு மீறின அறிவும்,கிரகிக்கும் திறனும் கொண்டிருந்தாள்.மிகப் பெரிய புத்திசாலியாக, கல்வி, கலைகளில் அரசியாக வலம் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு,அவள் சுமாராகப் படித்து மிக சாதாரண பெண்ணாக வளர்ந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.அதற்கு அவள் காரணம் அல்ல. வித்யா மட்டுமல்ல-உங்களுக்குத் தெரிந்து நிறைய சூட்டிகையான குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகையில், தான் தேர்ந்தெடுக்கும் துறையில் வல்லுநராக, தான் மிக விரும்பும் ஒரு கலையில் தனித் தன்மையுடன் பிரகாசிக்க இயலாத மிகவும் சாதாரணமானவராகப் பரிணமித்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.
அதற்குக் காரணம் அக்குழந்தைகள் அல்ல- அவர்களை, திறனுடன் எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் இருக்கும் நாம்தான்.

இது எப்படி என்றால்,
ஒரு குழந்தையின் ஐந்து வயது முடிவதற்குள்ளாகவே,ஏறக்குறைய அதன் தொண்ணூறு சதவீத மூளை வளர்ச்சி முடிந்து விடுகிறது.
,பிறக்கையிலேயே பல லட்ச ந்யூரான் (நரம்பு) செல்களுடன் பிறக்கிற குழந்தையின் ஒவ்வொரு ந்யூரான செல்லும் இன்னொன்றுடன் ஒயர்களைப் போல இணைக்கப் பட்டுள்ளன.குழந்தைகள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு புதிய விஷயமும் இந்த ந்யூரான் இணைப்புகளில் புதுவிதமான வழித் தடத்தை உருவாக்குகிறது. நம் நோக்கம், குழந்தையின் மூளையில் இருக்கும் ந்யூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல- ஆனால் இந்த செல்களின் இணைப்புத்திறனை பலப் படுத்துவதே. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட ந்யூரான் இணைப்புத் தடத்தை பலப்படுத்தி, குழந்தைக்குக் கற்றலை சுலபமாக்குகிறது. 
எந்தப் பெற்றோர்கள் தம் குழந்தையிடம் அதிகமாகப் பேசுகிறோர்களோ, அந்தக் குழந்தைகள் வெகு விரைவிலேயே பேசும் திறனைக் கற்றுக் கொள்கின்றன.இரண்டு வயதாகியும் சரியாகப் பேச்சு வராமல் இருந்த என் அண்ணன் மகன், சற்றேறக் குறைய அதே வயதுடைய-ஆனால் சரளமாகப் பேசக் கூடிய- என் தங்கை மகனுடன் சேர்ந்து வளரும் சூழ்நிலை வந்த போது, அவனது விடாத பேச்சை உன்னிப்பாக கவனித்து, மிகக் குறுகிய காலத்திலேயே தானும் பேசக் கற்றுக் கொண்டான்.

எப்படி உணவும், உடற்பயிற்சியும் நம் உடலை வளர்க்கின்றனவோ, அதே போல, குழந்தைகளுக்கு நிகழும் நல்ல அனுபவங்கள்,பயிற்சிகள் அதன் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
குழந்தைகள் பேச, நடக்கக் கற்றுக் கொள்வதற்கு வெகு முன்னமே, அவர்களின் மூளை வளர்ச்சி தொடங்கி விடுகிறது. முதல் மூன்று – நான்கு வருடங்களில் உருவாகும் ந்யூரல் வழித் தடங்கள் அவர்களின் பிற்காலத்திய கற்றலுக்கும், திறமைக்கும் சரியான அடித்தளமாக அமைகின்றன.

Baylor College of Medicine-இல் கண்டறிந்த ஆய்வு முடிவுகளின் படி, அடிக்கடி விளையாட வாய்ப்பும், பெற்றோர்களால் அடிக்கடி தொட்டு, தூக்கி, அரவணைக்கப் பட்ட கைக்குழந்தைகளின் மூளை, குறைவான அரவணைப்பைப் பெற்ற குழந்தைகளின் மூளையை விட அளவில் பெரியதாகவும், அதிகமான ந்யூரல் இணைப்புத் தடங்களையும் கொண்டிருந்ததாகவும் இருந்ததாம்.

சிறு குழந்தையின் மூளை வளர்ச்சித் திறனே, அதன் எதிர்காலத்தின் சாவியைத் தன்னுள் கொண்டுள்ளது என்பது நிரூபணமான உண்மை.ஒன்பது விதமான அறிவுத் திறன்களை குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.அவைகள்….
1. Visual - Spatial 
2. Verbal - Linguistic 
3. Logical - Mathematical 
4. Bodily - Kinesthetic 
5. Musical - Rhythmic 
6. Interpersonal 
7. Intrapersonal 
8. Naturalist 
9. Spiritual 

எப்படி என்று பின்னர் பார்ப்போம்


 

baby-flash-games1.jpg

ஹரிச் சந்திரன் கதையையும் சிரவணனின் கதையையும் கேட்டு வளர்ந்த ஒரு குழந்தை ஒரு தேசத்திற்கே வழிகாட்டிய மகாத்மா காந்தியாக தலைமை தாங்க முடிந்தது. 
ராமாயண, மஹாபாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்த குழந்தை, சிவாஜியாக ஒரு சாம்ராஜ்யத்தை வழிநடத்த முடிந்தது.
ஓடும் பஸ்ஸில் தன் நண்பர்களுடன் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவனும் ஒரு காலத்தில் குழந்தைதான் – சரியான விழுமியங்கள், மதிப்பீடுகள், நெறிமுறைகள் கற்றுத் தரப் படாத குழந்தை.. எந்தத் தாயும் தன் குழந்தை ஒரு தலைசிறந்த சமூக விரோதியாக வரவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டாள். முன் தினம் ஃபேஸ்புக்கில் படித்தது “தன் மகன் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தான் எனத் தெரிந்த தாய் தூக்கிலிட்டுக் கொண்டு இறந்து போனாள்” என்று. ஒரு தாயாக, தான் தோற்றுப் போய் விட்டதாக மனமுடைந்து தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்.

இந்தத் தொடர், குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல.
மாமாவாக, சித்தப்பா, பெரியப்பாவாக, ஏதேனும் ஒரு வகையில் ஒரு குழந்தையுடன் தொடர்பில், உறவு முறையுடன் இருக்கும் நம் அனைவருக்கும் அவசியமான ஒரு தொடரே. நமக்குத் தெரிந்த,நம் கண் முன்னே வளரும் ஒரு குழந்தையின் வளர்ப்பில் நாம் ஏற்படுத்தும் ஒரு சிறு முன்னேற்றம், அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஒரு கதை படித்திருக்கிறேன்…
நீரில் மட்டுமே உயிர்வாழும் நண்டு இனங்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் கடற்கரைக்கு,தவறுதலாக வந்து தரையில் தத்தளித்துக் கொண்டிருக்க, ஒரு சிறுமி ஒவ்வொரு நண்டாக எடுத்துக் கடலில் தூக்கி எறிவாள்.
அதைக் கண்ட ஒரு பெரியவர், ”இப்படி தூக்கித் தூக்கி எறிவதால், இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகும் இத்தனை ஆயிரம் நண்டுகளின் வாழ்க்கையில் என்ன விளைவை ஏற்படுத்தி விட முடியும்?”என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ”ஆயிரம் நண்டுகள் அல்ல, நான் தூக்கிப் போடும் இந்த ஒரு நண்டின் வாழ்க்கையில் அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றாள்.
அதைப் போல, நம் முன்னே கோடிக் கணக்கான மனிதர்களைக் கொண்ட நம் சமுதாயத்தில் நம்மால் மாற்றங்களை அவ்வளவு எளிதில் உருவாக்கி விட முடியாது. ஆனால், நம் குழந்தையை ஒழுங்காக வளர்ப்பதன் மூலம் நம் சமுதாயத்தின் ஒரு அலகான நம் குழந்தையை சீரமைக்க முடியும்.

 

baby_reaching_for_star_80150_7.jpg

என் மகனை நெறிப் படுத்தி வளர்ப்பதன் மூலம் சமூக விரோதிகளின் எண்ணிக்கையில் நிச்சயம் ஒன்று குறைகிறது என்று சொல்லுவேன். மேலும்,அவனை. சக மனிதர்களை மட்டுமல்ல, உலகின் அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்கக் கூடிய,இயற்கையை நேசிக்கக் கூடிய ஒரு மேம்பட்ட மனிதனாக இந்த உலகுக்கு நான் வழங்க முடியும் என்று நம்புகிறேன்.
ஏனென்றால் மாற்றம் என்பது நம் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். 
துவக்குவோம் 

- டாக்டர்.பிரகாஷ்.


http://idlyvadai.blogspot.ch/2013/02/to-2.html

Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3

 

Foods-Promote-Fetal-Brain-Development.jp

இந்தத் தொடருக்குப் பெருவாரியான ஆதரவை நல்கி வரும் இட்லிவடை வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

குழந்தை வளர வளர, நம் முயற்சி எதுவுமில்லாமலேயே அதன் மூளையும் தன்னிச்சையாக வளர்ந்து விடுவதில்லை.மாறாக, அந்தக் குழந்தையின் மூளை பெறும் அனுபவங்களையும், பயிற்சியையும் பொறுத்தே அது சிறந்ததாக வளர்கிறது.குழந்தையின் மூளையை ஒரு பிரம்மாண்டமான ஸ்பாஞ்சாக உருவகப் படுத்திக் கொள்ளவும்.மெய்,வாய்,கண்,மூக்கு, செவி என்கிற ஐந்து புலன்களால் நிகழும் அத்தனை அனுபவங்களையும் அந்த மாபெரும் ஸ்பாஞ்ச் உறிஞ்சிக் கொள்கிறது. இத்தகைய அனுபவங்களால், எந்த அளவுக்கு மூளையின் இணைப்புத் தொடர்புகள் (Synapses)தூண்டப் படுகின்றனவோ, அந்த அளவுக்கு அந்தப் பிஞ்சு மூளை சூப்பர் மூளையாக வளர்ச்சி அடைகிறது.எத்தனை குறைந்த வயதில் எவ்வளவு அதிகமான தூண்டல்களை,புதிது புதிதான அனுபவங்களை உங்கள் குழந்தைகளுக்குத் தருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது சூப்பர் குழந்தையாகப் பரிணமிக்கும்.

குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது கணப் பொழுதும் மாறிக்கொண்டே அல்லது இயங்கிக் கொண்டே இருப்பது.அது நிலையாக ஒருபோதும் நிற்பதில்லை.It is either improving or degenerating. முறையான பயிற்சிகளைப் பெறும் குழந்தையின் மூளை வளர்ந்து கொண்டிருக்கையில், பயிற்சிகளற்ற, திறன்கள் சரியாக ஊக்குவிக்கப் படாத மூளை, அதன் ந்யூரல் கனெக்ஷன்களை இழந்து வளர்ச்சியின் வேகம் குறைகிறது.
குழந்தையின் மூளை வளர்ச்சித் திறனை பாதிக்கும் காரணிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

ch1-fg3-synapse-density-over-time.jpg• ஜெனிடிக்ஸ் எனப்படும் பாரம்பரியம்,
• உணவு மற்றும் ஊட்டச் சத்து,
• பெற்றோர்களின் அன்பு,அக்கறை மற்றும் குழந்தையின் செயலுக்கான அவர்களின் பிரதிபலிப்பு, 
• குழந்தை தினசரி பெறும் அனுபவங்கள், 
• குழந்தையின் உடல் இயக்கங்கள் இவை எல்லாமே முக்கியக் காரணிகள்.
ஐந்து புலன்களின் வாயிலாகக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் மூளையின் சர்க்யூட் இணைப்புகளை பலமாக்கி அதன் சாதுர்யத்திற்கு சரியான அடித்தளம் அமைக்கின்றன.
உதாரணமாக இப்படிச் சொல்லலாம்.
அம்மாவின் உடல் வாசம்,(smell)
அப்பாவின் குரல் (hearing)
முகம் பார்ப்பது அல்லது பளபளக்கும் பொம்மையின் கலர் (vision)
மிருதுவான கை அணைப்பு (touch)
பால் குடிப்பது (taste)

அம்மாவின் அணைப்பை உணர்வது, அப்பாவின் குரலை இனங்கண்டறிவது என்று எல்லாவற்றிற்குமே அது அதற்கு என்று குழந்தையின் மூளை சர்க்யூட் போட்டு, ஒரு அமைப்பை (pattern) உருவாக்குகிறது.தொடர்ந்து பலமுறை குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்தீர்களானால்,அதன் மூளையில், ”தன்னைத் தான் அழைக்கிறார்கள்” என இனங்கண்டறிவதற்கான சர்க்யூட் கனெக்ஷன்கள் நிகழ்ந்து, நீங்கள் அழைக்கையில் திரும்பிப் பார்க்கக் கற்றுக் கொள்வான்(ள்). இவ்விதமாக,மூன்று வயதாகும் குழந்தையின் மூளையில் 1000 ட்ரில்லியன் கனெக்ஷன்ஸ் உருவாகி இருக்கும்.(இது வளர்ந்த மூளையில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகம்) சுமார் பதினோரு வயதில், தேவையில்லாத சர்க்யூட்டுகளை வெட்டி விட்டு, முக்கியமானவைகளை மட்டும் தக்க வைத்துக் கொள்கிறது.
திரும்பத் திரும்பக் கிடைக்கும் அனுபவங்களின் வாயிலாக மூளையின் சினாப்ஸிஸ்கள் பலப்படுத்தப் பட்டு, தனித் தனி இணைப்புகள் அதற்கென்று உருவாகின்றன.உபயோகிக்கப் படாத இணைப்புகள் கழற்றி விடப் படுகின்றன.(based on “Use or Lose” it principle).


right-left-brain-functions.jpg

 

வலது மற்றும் இடது மூளை:

மனித மூளையின் சிந்திக்கும் தன்மை வலது மற்றும் இடது மூளையினால் வேறுபடுகிறது.கீழ்க்கண்ட அட்டவணை வலது மற்றும் இடது மூளையின் வேறுபட்ட சிந்திக்கும் திறனைக் காட்டுகிறது.
Right and Left Brain Functions
http://shiftoftheage.files.wordpress.com/2010/03/right-left-brain-functions.jpg
நாம் ஒவ்வொருவரும் வலதோ, இடதோ ஏதோ ஒரு மூளையின் ஆதிக்கம் அதிகம் உடையவராக இருக்கிறோம்.இரண்டு பக்க மூளையையும் முழுவதுமாக சரிவரப் பயன்படுத்தும் புத்திசாலிகளாகவும் ஒரு சிலர் இருப்பர்.மனனம் செய்ய, லாஜிக்கைக் கற்றுக் கொடுக்கும் நம் கல்வி முறை பெரும்பாலும் இடது மூளையையே அதிகம் பிரயோகிக்க வகை செய்கிறது. ஆனால், வலது, இடது இரண்டு பக்க மூளையையும் சரியாகப் பயன்படுத்தப் பயிற்சி பெறும் குழந்தைகளே சூப்பர் குழந்தைகளாக மலரும்.
முழு மூளைத் திறனைப் (whole brain development) பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகள் என்பதைப் பார்க்கலாம்.



Concept # 1. Start Early:
பச்சிளம் குழந்தைப் பருவத்திலேயே , ஏன் கர்ப்பத்தில் இருக்கும் போதே மூளை வளர்ச்சி துவங்கி விடுகிறது. 
குழந்தை வயிற்றுக்குள் இருக்கையிலேயே, அதனுடன் பேச ஆரம்பித்து விடுங்கள்,நல்ல இசையை, புதிய மொழி ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்யலாம்.
Concept # 2.Make Connections:
மூளையின் சர்க்யூட் இணைப்பு, அது பெறும் தகவல்களுக்கேற்ப, தன்னுள் இணைப்புகளை உருவாக்குகிறது. அதிகமான தகவல்கள் = விரைவான மற்றும் அதிகமான கற்றல்
படைப்புத் திறன் மிக்க மூளையானது முதல் மூன்று வயதிற்குள்ளாகவே, எல்லாவிதமான செய்தி, அனுபவங்களைப் பெறுவதற்குத் தயாராகி விடுகிறது.
பார்ப்பதை, கேட்பதை விரைவாக ஸ்கேன் செய்து, அதை வகைப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய விஷயத்துடன் லிங்க் செய்து, பிற்பாடு பயன்படுத்த, பத்திரப் படுத்திக் கொள்கிறது.
இந்த வயதிற்குள்ளாகவே, உங்கள் குழந்தைகளுக்கு எல்லாப் புலன்களின் மூலமாகவும் (by using flashcards,classical music,world languages,sensorial toys and games) கற்றுக் கொடுக்க முயற்சியுங்கள்
Concept # 3:Teach Both Brains:
இரண்டு விதமான சிந்தனைத் திறத்தையும் ஊக்குவிக்க விளையாட்டு முறைகளுடன், லாஜிக்கல் விஷயங்களை, எண்களையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்கவும்.
இசையைக் கற்றுக் கொள்வது இரண்டு பக்க மூளையின் செயல்பாட்டுத் திறனையும் ஊக்குவிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
Concept # 4 Maximize the Right Brain Window:
முதல் இரண்டு வயது வரை, குழந்தைக்கு இடது மூளையின் குறுக்கீடு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். இந்த காலத்தில் வலது மூளை தனக்குக் கிடைக்கும் அனைத்துத தகவல்களையும் இடது மூளையின் குறுக்கீடுகள் அற்று குஷியாக, தானே உள்வாங்கி, சேமித்து, பிரதிபலிக்கிறது
இரண்டு வயதிற்குள்ளாகவே, எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான Flash Cards, சித்திரப் புத்தகங்கள், கதைகளை அறிமுகப் படுத்த முடியுமோ, அவ்வளக்கவ்வளவு அதன் வலது மூளையின் செயல்திறனை நன்கு ஊக்குவிக்கலாம்.மூன்று வயதுக்குப் பின்,வெவ்வேறு விதமான விளையாட்டுகளின் மூலம் வலது மூளையின் திறனை வளர்க்கலாம்.
Concept # 5. Be Happy:
A happy child becomes happy adult என்பர். குழந்தைகளுக்கு, அவர்களின் எல்லா புலன்களையும் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள். உங்கள் செயல்பாடுகள் மூலம், அமைதி, அன்பு, அரவணைப்பு போன்ற உணர்ச்சிகளையும் அவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு பழகுங்கள். கதைகளினூடே மேற்கூறிய உணர்ச்சிகளையும் மற்ற உணர்ச்சிகளையும் அவர்களுக்குப் பயிற்றுவிப்பது எளிது.


தினமும் ஒரு இருபது நிமிடங்களாவது உங்கள் குழந்தையை வெளியே பார்க், கடைவீதி, பஸ்ஸ்டாண்ட் போன்ற புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நினைவிருக்கட்டும்-ஒவ்வொரு புதிய பொருளை, இடத்தைப் பார்க்கையிலும் அதன் மூளையில் புதிய புதிய சர்க்யூட்டுகள் உருவாகின்றன.

குழந்தைகளுக்கு, நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லிக் கொண்டே , பேசிக் கொண்டே இருக்கவும்.அம்மா, இப்போ மம்மு செய்யப் போறேன், மம்மு செஞ்ச உடனே நீ சாப்பிடுவியாம், பெல் அடிக்குது, யாரு வந்துருக்காங்கன்னு பாக்கலாமா?, என்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு சாதாரண விஷயத்தையும் குழந்தையிடம் தெரிவித்துக் கொண்டே செய்யுங்கள். 

 

http://idlyvadai.blogspot.ch/2013/02/to-3.html

Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 4

 

இசையில் தொடங்குதம்மா:

child-music_main.jpgநமது மூளைக்கும், இளையராஜாவின் மூளைக்கும் அமைப்பிலும், இயங்கும் விதத்திலும் நிச்சயமாக நிறைய மாற்றங்கள் இருக்கும். காரணம்-இசை.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்து வரும் ஆய்வுகளில் தெரிய வருவது இதுதான். குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கப் படும் இசையால், அவர்களின் மூளையின் அமைப்பில், செயல்பாடுகளில் நல்ல வளர்ச்சியை உருவாக்க முடியும் என்பதே.
இந்த உலகிற்கு வரும் முன்னரே, குழந்தைகள் அம்மாவின் குரலை, தனித்து இனங்கண்டு கொள்ளப் பழகி விடுகின்றன.சொல்லப் போனால், குழந்தை கேட்கும் முதல் இசையும் அதுதான்.அம்மாவின் குரலை அரவணைப்பாக உருவகப் படுத்தும் குழந்தை, பிறந்த பின்னரும் அதையே தொடர்கிறது; 


கர்ப்பத்தில் இருக்கையிலேயே பழக்கப் படுத்தப் பட்ட , கேட்ட எந்த ஒரு இசையுடனும், ஒலியுடனும்-அது அம்மா பாடிய பாடலோ, வாசித்த ஏதேனும் ஒரு இசைக் கருவியின் இசையோ அல்லது உரக்கக் கேட்ட இசையோ-, குழந்தை வெகு விரைவாக அதனுடன் ஒத்திசைய முடிகிறது.

பேச முயற்சிப்பதற்குப் பல வாரங்களுக்கு முன்னரே, குழந்தைகள் தாயின் தாலாட்டுப் பாடல்களுக்கு பதில் கொடுக்க ஆரம்பிக்கின்றன. தொட்டிலில் போட்ட என் எட்டு மாதக் குழந்தையை ஆட்டிக் கொண்டே, ரே..ரே…ரே..ரே.. என்று ராகம் போட்டுக் கூவி, சட்டென்று நிறுத்தினால், நான் விட்ட இடத்திலிருந்து அவனும் ரே ரே என்று மழலையில் தொடரக் கேட்டிருக்கிறேன். குழந்தைகள்,தங்களை அறியாமலேயே ஒலியை உள்வாங்கி அதற்கு பதில் தருகின்றன.பொருள்களைத் தொடுகையில், கீழே போடுகையில், தட்டுகையில், கரண்டி போன்ற ஏதேனும் ஒன்றை வைத்துத் தட்டுகையில் உண்டாகும் ஒலியால் அவர்கள் கவர்ந்திழுக்கப் படுகிறார்கள்.

music-playing-guitar2.pngஎன் ஒன்றே கால் வயது மகன், காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களுக்குள்,நேராக சமையலறைக்கு வந்து கைக்குக் கிடைத்த பாத்திரம், கரண்டியைக் கொண்டு லொட்டு லொட்டென்று அவனுக்குத் தெரிந்த சுப்ரபாதத்தை இசைப்பது தினசரி வாடிக்கையாகி விட்டது.

குழந்தைகளின் நகர்வு இயக்கத்திற்கும், அவர்களின் ஒலி எழுப்பும் திறனுக்கும் உள்ள தொடர்பை நரம்பியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். சில குறிப்பிட்ட நகர்வு இயக்கங்களை மேற்கொள்ள முடியாத குழந்தைகளால், சில குறிப்பிட்ட ஒலியையும் உண்டாக்க முடியவில்லை.

இசையும், நகர்வும் ஒருமித்த ஒரு உருவாய் குழந்தை வளர்கிறது.தன் உடலையே ஒரு இசைக் கருவியாக இந்த உலகுடன் இயைந்து இசைக்கும் இசையாக வளரும் குழந்தையின் கட்டுப்பாடுகளற்ற நகர்வு பள்ளிக்கு சென்ற பிறகு, அதன் இயல்புத் தன்மையை இழக்கத் துவங்குகிறது.

அறிவியல் உலகில்,குழந்தையின் மூளை வளர்ச்சியில் இசைக்கு இருக்கும் பங்கு குறித்த விவாதங்கள் நீண்ட காலமாக நிகழ்ந்து கொண்டே இருந்தன.

iStock_000011905956Small_good_reasons_foமொஸார்ட்டின் இசையைக் கேட்ட குழந்தைகளின் ந்யூரான் செல்களின் அடர்த்தி (density) அதிகமாகி அதன் காரணமாக ஞாபக சக்தி, புதிர்களுக்கு பதில் சொல்லும் திறன்கள் அதிகரித்ததை ஆய்வு முடிவுகள் உணர்த்தின.
மிகக் குறைந்த வயதிலேயே இசையைக் கற்றுக் கொண்ட குழந்தைகள் மொழித் திறன், கணிதத் திறன், செஸ் போன்ற நுட்பமான விளையாட்டுகளை விளையாடத் தேவையான ஒன்றிரண்டு படிகள் அட்வான்ஸாக சிந்திக்கும் திறன் ,ஞாபக சக்தித் திறன்,மற்றும் பொதுவான ஐ.க்யூ போன்ற எல்லாத் திறன்களும் அதிகரித்து விளங்கின. இது போன்று, இசையால் Spatial Temporal Reasoning, and Language Analytical Reasoning திறனும் அதிகரிப்பதை “Mozart Effect” என்று அழைக்கிறார்கள்.(இந்த “Mozart Effect” குறுகிய காலத்திற்கே என்று வாதிடுவோரும் உண்டு). சிக்கலான கணிதப் புதிர்களை விடுவிக்க மூளையின் எந்தப் பகுதி நன்கு செயல்பட வேண்டுமோ, அந்தப் பகுதியை இசை நன்கு தூண்டி செயல்பட வைக்கிறது.எனவே, இசையில் ஆர்வமுடன் இருக்கும் குழந்தைகள் கணிதப் புலிகளாகவும், கணிதத்தில் புலிகளாக இருக்கும் குழந்தைகள் இசையை வெகு சீக்கிரமும் கற்க முடிகிறது.
உலகப் புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜனுக்கு, கணிதத்திற்கு அடுத்து இசையில்தான் பெரும் ஆர்வம் இருந்ததாம். சென்னையில் இருக்கையில் அப்போதைய இசை மேதை டாக்டர்.எம்.டி.ராமனாதம் அவர்களது கர்நாடக இசைக் கச்சேரியைத் தவற விட மாட்டாராம். இசை ஆர்வத்தினால் ஒரு குழலை வாங்கி அதை வாசித்துப் பயிற்சி பெற்று வாசித்ததோடு மட்டுமல்லாமல், இசை ரசனையுள்ள நண்பர்களுடன் அடிக்கடி சந்தித்து இசை குறித்த கருத்துக்களைப் பகிரவும் செய்வாராம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி பரவலாக நமக்குத் தெரியாத விஷயம், அவர் மிகச் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி மட்டுமல்ல; வயலின் இசையை மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கும் கலைஞரும் கூட.எப்போதெல்லாம் தன் ஆராய்ச்சிப் பணிகள் சிக்கலாகி, தீர்வுகளைக் கண்டறிய சிரமப் படுகிறாரோ, அப்போதெல்லாம், ஒரு சிறு பிரேக் எடுத்துக் கொண்டு, மொஸார்ட்டின் இசையை தனது வயலினில் இசைத்து மகிழ்வாராம்.
வெவ்வேறு வகையான இசையானது மூளையில் வெவ்வேறு விதமான அலைவரிசையை (ஆல்ஃபா, பீட்டா போன்ற ) உருவாக்க வல்லவை. மிகுந்த சப்தத்துடன் கூடிய ஹெவி மெட்டல்,ராக் போன்ற இசையை விடுத்து, மெல்லிய, க்ளாசிக்கல் வகை சங்கீதத்தை குழந்தைகளைக் கேட்க வைக்கலாம்.
இசையினால் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் வளர்ச்சிகள் எல்லாமே, வெறுமனே இசையை, அவர்கள் கேட்பதால் மட்டுமே நிகழ்ந்து விடுவதில்லை. ஏதேனும் ஒரு இசைக் கருவியை (பியானோ அல்லது வயலின் அல்லது வேறு ஏதேனும் ஒன்று) வாசிக்கப் பயிற்சி பெறுவதே மேற்கூறிய எல்லா நல்ல பலன்களையும் ஒருசேர அளிக்க வல்லது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் வயதும் அதற்கேற்ற இசைப் பயிற்சியும்:
கர்ப்ப காலத்தில்:
நல்ல இனிமையான, மெல்லிய இசையை தொடர்ந்து கேட்கவும்
பச்சிளம் குழந்தைகள்:
மெல்லிய, சிறிய, தாலாட்டுப் பாடல்கள், நர்சரி ரைம்ஸ்களை, குழந்தைகளைக் குளிப்பாட்டுகையில், உடை அணிவிக்கையில், உணவு ஊட்டுகையில், உறங்க வைக்கையில் பாடலாம். திரும்பத் திரும்ப வரும் வாக்கியங்கள் இருப்பது குழந்தைகள் கிரகித்து மகிழ்வதற்கு எளிதாக இருக்கும். தாளத்துடன் கூடிய ரித்மிக் பாடல்களை, அவர்களை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தோ, அவர்கள் கைகளைத் தட்டச் சொல்லியோ கற்றுக் கொடுத்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் அவர்களது பாணியில் பதிலுக்கு இசைப்பதைக் காணலாம்.
தவழும் குழந்தைகள்:
ஒன்றரை வருடம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் சின்னச் சின்ன பாடல்களை விரும்புவர். ஞாபக சக்தி இன்னமும் முழுவதும் வளராத இந்தப் பருவத்தில் ஒரு சில வார்த்தைகளையே அவர்களால் நினைவில் கொள்ள முடியும்.நகர்வும், இயக்கமும் அவர்களுக்கு மிகவும் விரும்பத் தக்கதாகி, கையசைவுகளுடன் கூடிய நர்சரி ரைம்ஸ்கள் ஒரு ஆர்டர் படி நினைவில் கொள்ள வசதியாக இருக்கும்.மீண்டும் மீண்டும் சொல்லப் படும் ரைம்ஸ்களை நினைவில் வைத்திருந்து சொல்ல முடியும்.

பள்ளிக்கு முந்தைய குழந்தைப் பருவத்தில்: (pre-schoolers)
இந்தக் குழந்தைகள், நர்சரி ரைம்ஸ்,பாடல்கள்,அறிமுகமான பொருள்கள், பொம்மைகள்,விலங்குகள்,விளையாட்டு அசைவுகள், அறிமுகமான மனிதர்கள் என அனைத்தையும் விரும்புவர்.விரல், கைகளால் இசைக்கக் கூடிய கருவிகள், இசையுடனோ, அல்லது இல்லாமலோ ஒலிக்கும் பாடல்கள் போன்றவற்றை அறிமுகம் செய்யலாம்.இந்த காலகட்டத்தில், வெவ்வேறு இசையின் வெவ்வெறு வடிவங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். நாட்டுப் புறப் பாடல்கள், சிம்ஃபொனிகள், ஒபேராக்கள்,ராக் அன் ரோல், அவர்கள் பார்த்த படங்களின் சவுண்ட் ட்ராக்ஸ் என எல்லாவற்றையும் அறிமுகப் படுத்தவும்.அவர்களை வெவ்வேறு விலங்குகளாக உருவகப் படுத்தி, அந்த விலங்குகளின் ஒலிகளை, வெவ்வேறு வாகனங்கள், பறவைகள் போல ஒலி எழுப்பச் சொல்லி கற்றுத் தரவும்.பின்பு அவைகளை இசை வடிவில் அவர்களுக்குப் போட்டுக் காட்டவும்..

குழந்தைகளுடன் சிறு சிறு நடன் அசைவுகளை நீங்களும் மேற்கொள்ளவும். ஐந்து வயதிற்குள்ளாகவே, குழந்தைகளுக்கு நடனமாடக் கற்றுக் கொடுப்பது நல்லது. நடனம் என்றால், சரியான அபிநயம் பிடிக்க ட்ரில் வாங்குவது போன்ற கண்டிப்பான நடனம் அல்ல. குழந்தைகளே மகிழ்ந்து, அவர்கள் நம்மைப் பார்த்து இமிடேட் செய்யும், சில சமயம், அவர்கள் பாணியில் புதிய அசைவுகளைக் கொண்ட அவர்கள் மகிழ்ந்து சிரமமே இல்லாமல் செய்யும் நடனம்.
இசையும் , நடனமும், குழந்தைகளின் புலன்களுக்கு இனிமையாகவும், தாளகதியுடனும் இருத்தல் அவசியம். பாடலின் அர்த்தத்தை விட ஒலியின் அழகை அவர்களை ரசிக்க வைக்கச் செய்ய வேண்டும்.உயிர்ப்புள்ள அசைவுகளும், பதிவுகளும், அவர்கள் காதுகளையும், மனதையும் மகிழ்விக்கின்றன.தாள கதியில் இருக்கும் நடன அசைவுகள் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன.

8134577_s.jpgஇசையைக் கற்பிக்க சில டிப்ஸ்:
1.பாடல்களைப் பாடவும்: சூழ்நிலைக் கேற்றவாறு, உறங்க வைப்பதற்கோ, வெளியில் அழைத்துச் செல்கையிலோ அதற்கேற்ற விதமான பாடலைப் பாடவும். குழந்தை பாடா விட்டாலும், அதனுடன் தொடர்புடைய செயலை (கைதட்ட, தலையாட்ட) செய்ய ஏதுவாக இருக்கும்.
2.நீங்களே முழுப் பாடலையும் பாடவும். வரி வரியாக சொல்லித் தர முயற்சிக்காமல், முழுப்பாடலையும், குழந்தை கவனிக்குமாறு பாடவும்.ஒரே பாடலை பலமுறை பாடிக் காட்டவும்.
3.பாடலின் எல்லா வார்த்தைகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிக்காதீர்கள்-எவ்வளவு தெரிகிறதோ அவ்வளவு பாடட்டும். அதுவே இன்பமாக இருக்கும்.
4.பாடலின் ராகம், டெக்னிக் போன்றவைகளை வலியக் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டாம்.அவர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை விட பாடுகிறார்கள் என்பது முக்கியமானது.
5.குழந்தையின் பாடலை ரெகார்ட் செய்து அவர்களுக்கு மீண்டும் போட்டுக் காட்டவும். அந்தப் பாடலுக்கே அவர்களை ஆடச் சொல்லவும்.
6.அவர்களுக்கு நன்கு தெரிந்த பாடல், ரைம்ஸில் அதில் வரும் பெயரை எடுத்து விட்டு, அவர்கள் பெயரைப் போட்டுப் பாடவும்.
உதாரணம்: ஜானி ஜானி எஸ் பாப்பா
7. மிக மெதுவாக, குழந்தை நீங்கள் விட்ட சொல்லை நிரப்புமாறு பாடவும்.
உதாரணம்: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்_____________ ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ______________
இசையுடன் அபரிமிதமான ஈடுபாட்டில் இருக்கும் குழந்தையின் அறிவு வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்ல, பிற்காலத்தில் இசையை நன்கு ரசிக்கும் ஒரு இசை ரசிகனாகவும் அவனை மாற்றுகிறது.

 

http://idlyvadai.blogspot.ch/2013/02/to-4.html

Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 5

 

 

 
CommunicationMainImage1.jpgகம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும் தகவல் தொடர்புத் திறனை குழந்தைகளிடம் திறம்பட வளர்ப்பதைப் பற்றிப் பார்ப்போம்.
"Seek first to understand, not to be understood." குழந்தைகளிடம் நாம் உரையாட வேண்டிய விதத்தின் சாரத்தை இந்த மேற்கோள் நமக்கு உணர்த்துகிறது.

வள்ளுவர் இப்போது இருந்திருந்தால், “கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று மாற்றி எழுதி இருப்பார்.அந்த அளவுக்கு, அது ஒரு அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. சரியாக, தெளிவாக கம்யூனிகேட் செய்ய முடியும் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், பள்ளியில் நன்கு திறமைசாலிகளாகவும்,பிற்காலத்தில் நன்கு பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பவர்களாகவும் விளங்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குழந்தைகள், அவர்கள் மனதில் இருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்த (express) வைப்பது எப்படி?

இதற்கு சிறந்த வழி, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் எதையுமே விளையாட்டுகள் (Fun) மூலமும், அவர்களின் ஐம்புலன்களையும் முழுவதும் ஈடுபடுத்தும் செயல்களின் மூலமும் கற்றுத் தருவதே.
குழந்தைகளிடம் நீங்கள் தொடர்ந்து பேசுவதன் மூலமே அவர்களின் பேச்சுத் திறனை வளர்க்க முடியும். இதற்கு நல்ல நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டாம். குழந்தை பிறந்ததில் இருந்தே நீங்கள் அவளு(னு)டன்உரையாடத் துவங்கலாம்.
உங்கள் முகத்தை குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். குழந்தையின் அருகே சென்று அதன் முகம் பார்த்து, மெதுவாகப் பேசவும்.அதன் பின், உங்கள் குழந்தை எழுப்பும் ஒலிகளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்து, அதை கவனிக்கவும்.(Listen). குழந்தையின் பேச்சை நீங்கள் காது கொடுத்து கவனிப்பது, அதன் சுய மதிப்பை (Self-Esteem) அதிகரித்து, அவர்களை மகிழ்விக்கும்.பொதுவாக, குழந்தைகள் 18 மாதங்கள் முதல் சரளமாகப் பேச ஆரம்பிப்பர்.உங்களின் முயற்சியைப் பொறுத்து இதை இன்னும் விரைவாக்கலாம்.


குழந்தைகளிடம் நீங்கள் பேசுவதால்…
• நீங்கள் பேசுவதை, உங்கள் வாயசைப்பை நன்கு கவனித்து, பேசுவதைக் கற்றுக் கொள்கிறது
• குழந்தையின் மூளையின் நரம்புத் தொடர்புகள் தூண்டப்பட்டு, கற்றலைத் துரிதப் படுத்துகிறது
• பின்னாளில் நல்ல வாசிப்பாளராக, எழுத்தாளராக வருவதற்கு ஒரு சரியான அடித்தளம் அமைக்கிறது.
• சமூகத் திறன்கள் (Social Skills) மற்றும் பழகும் திறன்களை (good relationships) கற்றுக் கொடுக்கிறது 
• உங்களின் அன்பை, குழந்தை புரிந்து கொள்ள ஏதுவாகி, அதன் சுய மதிப்பையும் அதிகரிக்கச் செய்யும்.
• குழந்தைக்கும், உங்களுக்குமான இணைப்பை (bond) வலுப்படுத்தும். நினைவிருக்கட்டும், இந்த இணைப்பின் பலத்தைப் பொறுத்தே, குழந்தைக்கும் உங்களுக்கும் இருக்கும் கம்யூனிகேஷன் ஆழமாகும்.

உரையாடல் ஆலோசனைகள் (Tips):
கீழ்க்கண்ட டிப்ஸ்களைக் கடைப்படிப்பதன் மூலம் உங்கள் குழந்தையின் மொழித் திறன்,(Language skills) மற்றும் கம்யூனிகேஷன் திறன்களை வளர்க்கலாம்.

விளையாட்டிற்கென தனி நேரம் ஒதுக்கி, அப்போது நன்கு உரையாடலாம்
நர்சரி ரைம்ஸ், மற்றும் குழந்தைப் பாடல்களைப் பாடிக்காட்டவும். மிக முக்கியமாக அவைகளை ஆக்சனுடன் பாடிக்காட்டவும்.
வித விதமான ஒலிகளை, வாகனங்கள், விலங்குகள் எழுப்பும் ஒலியைக் கேட்க வைக்கவும்.
நீங்கள் பேசும் போது, குழந்தையின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பவும்.
குழந்தை வளர வளர, அதன் சொல் வளத்தை (vocabulary)மேம்படுத்தவும்
(உதாரணம்) உனக்கு ஜீஸ் வேணுமா? பால் வேணுமா?
ஒரு செயல் நடக்கையிலேயே அதைப் பற்றிப் பேசவும்.

(உ.ம்) கடையில இருந்து என்னென்ன வாங்கிட்டு வந்தோம் என்று பையை அவிழ்த்து ஒவ்வொன்றாகக் காட்டுதல்
குழந்தையின் பேச்சுக்கு (அது உங்களுக்குப் புரியா விட்டாலும் கூட)ஏதாவது ஒரு பதில் மொழி கூறவும். குழந்தை அந்த வாக்கியத்தை முடிக்கும் வரை அமைதி காத்து, அதன் பின் நீங்கள் உங்கள் முறை எடுத்துப் பேச/ பதில் அளிக்கலாம். 
உங்கள் தொனி (tone) முக வெளிப்பாடுகள் (facial expressions) மீது கவனமாக இருங்கள். நீங்கள் சொல்லும் வார்த்தைகளை விட அதிக சக்தி வாய்ந்தவை இவை.

மேஜிக் வேர்ட்ஸ் எனப்படும் வார்த்தைகளான, ஸாரி, ப்ளீஸ், தேங்க் யூ, ஐ லவ் யூ போன்றவைகளை அடிக்கடி உணர்வு பூர்வமாக பயன்படுத்தவும்.

பொம்மைகள், படக் கதைகள் மூலம் உங்கள் குழந்தைகளுடன் விளையாட தினமும் கொஞ்ச நேரமாவது ஒதுக்கவும்.கதைகளில் வரும் விலங்குகள், பறவை, மனிதர்களின் குரலை, உணர்ச்சி பூர்வமாக ஏற்ற இறக்கத்துடன் மிமிக்ரி செய்யவும். உங்கள் குழந்தை பேச ஆரம்பித்தவுடன், அந்தப் படத்தில் என்ன நடக்கிறது என்று புத்தகப் படத்தைக் காட்டிக் கேட்கவும். நமது கேள்விகள் குழந்தையின் மூளையைத் தூண்டி, கற்பனா சக்தியை அதிகப் படுத்துகிறது.கதை சொல்வதன் மூலம்,முன்னர் குறிப்பிட்ட 9 multiple intelligences களில் ஏறக்குறைய எல்லாவற்றையும் தூண்டி விட முடியும்.
கதைகளை சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, சின்னச் சின்னக் கேள்விகளைக் கேட்டு, அவர்களை பதில் சொல்ல ஊக்குவிக்கவும். (அப்புறம் அந்தக் காக்கா என்ன பண்ணுச்சு?)

குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும். அப்படிப் பார்க்க வேண்டுமெனில், குழந்தைகளுக்கான சேனலைப் போட்டு, அதில் வரும் காட்சிகளை, உங்கள் குழந்தைகளுடன் பேசிய படியே பார்க்கலாம். (இங்க பாரு யானை வருது.. அது எப்படி நடக்குது பாத்தியா?)

நீங்கள் செய்யும் செயல்களையும், (அம்மா, இப்ப உனக்கு ரைம்ஸ் சொல்லப் போறேன், அப்பா, உனக்கு இப்ப வேற சட்டை போடப் போறேன்) குழந்தைகள் செய்யும் செயல்களையும் (பஸ்ஸ வச்சி விளையாடுறியா?) அவர்களிடம் சொல்லி உரையாடலாம்.

கண்டிப்பாக , அவர்களுடன் eye contact வைத்துக் கொண்டு உரையாடலை நிகழ்த்தவும்.
குழந்தைகளுக்கு க்ரேயான்கள், பென்சில்,பேப்பரைக் கொடுத்து, அவர்களை ஏதாவது எழுத வைக்க முயற்சிக்கவும். hand-eye coordination ஐ வளர்க்க இது உதவும்.

குழந்தைகளின் வயதுக்கு ஏற்றாற் போல உங்களது உரையாடலை/ கட்டளைகளை, ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தைகள், ஒரு சிறிய வாக்கியம் என்று அமைத்துக் கொள்ளவும்.

குழந்தைகளிடம் நீங்கள் உரையாடுகையில் டிவி, டேப் ரெகார்டர் போன்ற இடையூறுகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
குழந்தைகளிடம் நீங்கள் செய்யும் ப்ராமிஸ்களை கண்டிப்பாக நிறைவேற்றவும். ( ”நீ சமத்தா மம்மு சாப்டன்னா, அப்பா உன்னய பைக்ல ஒரு ரவுண்டு கூட்டிட்டுப் போவனாம்” என்றால், கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்)
Non–verbal communication எனப்படும், உடல் மொழிகளையும் உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும்.
அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில் சர்வெண்ட் மெய்டிடம் குழந்தையை விட்டு விட்டுப் போகும் பெற்றோர்கள், சர்வெண்ட் மெய்டிடம் குழந்தையிடம் எப்படிப் பேசுவது, என்று ஒரு சில அடிப்படை விஷயங்களையாவது சொல்லிக் கொடுப்பது நல்லது. நினைவிருக்கட்டும். ஒரு நாளின் முக்கால்வாசி நேரத்தை உங்கள் குழந்தை அவருடனே கழிக்கிறது.

குழந்தைகளுக்குக் கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்க்கையில் ஒரு மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் எந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அந்த விஷயத்தை மட்டுமே அவர்களிடம் சொல்ல வேண்டும்.
 
Books-and-Children.jpg

அவர்கள் அதை செய்யக் கூடாது என்று நாம் நினைக்கிறோமோ, அதை சொல்லக் கூடாது.
நாம் சொல்லும் எந்த ஒரு விஷயமும் குழந்தையின் மூளையில் படமாகப் பார்க்கப்படும். குழந்தையின் எதிர்வினையும் அது காணும் அந்தப் படத்தைப் பொறுத்தே அமைகிறது.

கோடை விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு வந்திருந்த என் உறவுக்காரக் குழந்தைகள் செந்தில், சங்கர் (இருவருமே பத்து வயதுக்குட்பட்டவர்கள்) வீட்டின் பின்புறமிருக்கும் புளிய மரத்தின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து, எங்கே அவர்கள் விழுந்து விடுவார்களோ என்று பயந்து போன அவர்களின் பெற்றோர் சத்தமிட்டனர்.

சங்கரின் அம்மா ஓடி வந்து “சங்கர், கீழ விழுந்திராத!, கீழ விழுந்திராத!” என்று பலமாக சத்தமிட்டார்.சில விநாடிகளில், சங்கர் கீழே விழுந்தான்.அதே நேரத்தில் இன்னொரு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த செந்திலைப் பார்த்து, அவனது அம்மா, “செந்தில், கெட்டியாப் பிடிச்சுக்க, நல்லா கெட்டியாப் பிடிச்சுக்க” என்று பலமாக சொன்னார். மரக்கிளையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, விழாமல் தொங்கிக் கொண்டிருந்த செந்திலை மெதுவாகக் கீழே இறக்கி விட்டோம்.

சங்கரின் அம்மா, அவனிடம் “கீழ விழுந்திராத” என்று சொன்னவுடன், சங்கரின் மூளை கீழே விழும் அந்தக் காட்சியைத் தான் முதலில் கண்டது. பின்பு, கீழே விழாமல் இருக்கும் காட்சியை அதனால் கற்பனை செய்ய இயலவில்லை. குழந்தை கீழே விழுந்தான். மாறாக, செந்திலின் அம்மா, அவனை, “நல்லா, கெட்டியாப் பிடிச்சுக்கோ” என்று கட்டளையிட்டவுடன், செந்திலின் மூளையில், மரக் கிளையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சி தோன்றி, அவ்வாறே அது செயல் படுத்தியது.
குழந்தைகளின் மூளை கேமரா மெமரி போல- தான் பார்ப்பதை, நினைப்பதை, படங்களாக நினைவு படுத்திக் கொள்ளும். மேலும், எதிர்மறைக் கட்டளை பெற்ற அந்தப் பிஞ்சு மூளைக்கு, கீழே விழுவதைத் தான் முதலில் கற்பனை செய்து பார்க்கத் தெரிந்ததே அன்றி, அது நிகழாமல் சரி செய்வது எப்படி என்று தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் இருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், குழந்தைக்கு எப்போதும் பாசிட்டிவ் கட்டளைகளை மட்டுமே தரவேண்டும். எதிர்மறைக் கட்டளைகளைக் கொடுத்தால் எதை நாம் செய்யக் கூடாதென்று சொல்கிறோமோ, அதையே அவர்கள் செய்வார்கள். கையை வாயில வைக்காத, என்று சொல்வதை விட கைய சேத்து வச்சுக்கோ, கைய நேரா கீழ வை போன்ற நேர்மறை வாக்கியங்கள் அவன் கையை வாயில் வைப்பதைத் தடுக்கும்.

நம்ம ஊரு அரசியல்வாதிகளைப் போல இதுதான் சான்ஸ் என்று குழந்தைகளிடம் ஒரேயடியாகப் பேசிக் கொண்டே இருந்து அவர்களை போர் அடிக்க வேண்டாம். அவர்கள், மெளனமாக இருந்து, சுற்றுப் புற விஷயங்களை கவனித்து கிரகிக்கவும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கவும் ;) ;) 
 
 
Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 6

 

 

bubbles-567x290-567x258.jpg
விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு இயல்பான ஒன்று. நாடு, கலாச்சாரம் என்கிற பாகுபாடுகள் ஏதுமின்றி உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளும் விளையாட்டில் வெகு ஆர்வமாக இருக்கும்.உலகின் புராதன பொம்மைகள் களிமண், குச்சி, பாறைகளால் செய்யப் பட்டிருந்தன.சிந்து சமவெளிக் காலத்திலிருந்தே(கி.மு.3000-1500) குழந்தைகள் சிறிய தேர் பொம்மைகள், பறவைகள் வடிவில் செய்யப் பட்டிருந்த விசில், குரங்கு பொம்மைகளைக் கொண்டு விளையாடி இருப்பதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானதும் நன்மை பயப்பது என்பதையும் பெற்றோர்களாகிய நாம் உணர வேண்டும்.விளையாட்டில் குழந்தைகள், தங்களை பிஸியாகவும், களிப்புடனும் வைத்துக் கொள்கின்றனர்.நம் குழந்தைகள் சிரித்து, மகிழ்வுடன் விளையாடுவதைப் பார்க்கையில் நமக்கும் அளவற்ற மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகிறது.ஆனால், இந்த விளையாட்டுக்க்கள், குழந்தையின் வளர்ச்சியில் எத்தகைய இன்றியமையாத பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அறிவதேயில்லை.கடந்த முப்பது வருடங்களில், குழந்தைகள் விளையாட்டுக்கு செலவிடும் நேரம் வெகுவாகக் குறைந்து உள்ளதாக, குழந்தை நல அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


3.jpeg

 

குழந்தையின் வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு முக்கியக் காரணியாகும்.பல்வேறு வகையான திறன்களை (skills) வளர்த்துக் கொள்வதற்கும், பின்னாளில் அவைகளைத் திறம்படப் பயன்படுத்துவதற்கும் விளையாட்டு அவசியம். விளையாட்டின் மூலமே, குழந்தைகள் கற்கின்றன; இந்த உலகைப் புரிந்து கொள்கின்றன; தாம் இந்த உலகில் எவ்வாறு பொருந்துகிறோம்(fit) என்பதை உணர்கின்றன.
நகர்தல், பார்த்தல், தொடுதல், நகர்த்துதல், ருசி பார்த்தல், நுகர்ந்து பார்த்தல், கேட்டல் போன்ற செயல்பாடுகளின் மூலம் சிறு குழந்தைகள் நிறையக் கற்றுக் கொள்கின்றன. “விளையாட்டு” (play) என்பது, நன்றாக நடக்க, ஓடத் தெரிந்த குழந்தைகளுக்குத்தான் என்று நாம் நினைப்பது முற்றிலும் தவறு.பச்சிளம் குழந்தைப் பருவத்திலேயே, அவர்களுக்கு, அவர்களது செயலின் விளைவு பற்றித் (feedback) தெரிய ஆரம்பிக்கிறது. அழுதால் பால் கிடைப்பதும், ஈர ஜட்டி மாற்றப் படுவதும்,பந்தை எறிந்தால், பிடிக்க ஆள் வருவதும்,கிலுகிலுப்பையை அசைத்தால் சத்தம் வருவதும் அவர்களுக்கு என்று ஒரு சக்தி இருப்பதைப் பற்றியும், அவர்களால் செயலாற்ற முடியும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்கின்றனர்.
பின்னர், தவழ்ந்து, நகரத் துவங்கி, வீட்டின் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, ஆராய்கின்றனர்.சற்று வளர்ந்த குழந்தையானது, பெற்றோர்கள் மற்றும் மற்ற குழந்தைகளின் செயல்களை நடிப்பதில் (imitate) சமூகத் திறன்களைக் (social skills)கற்கிறது..

பள்ளியில் சேர்ந்தவுடன், விளையாட்டு என்பது சட்ட திட்டங்களுடன் ஒரு ஃப்ரேமுக்குள் இருக்கக் கூடிய , போட்டிகளுடன் கூடிய வேறு ஒரு வடிவம் எடுத்து விடுகிறது.விளையாட்டின் மூலமே பெரும்பாலும் அவர்கள் தங்கள் நண்பர்களை சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் வழி வகை செய்கிறது.

குழந்தைகளைச் சுற்றி, பல்வேறு விதமான பொம்மைகள் இருப்பது நல்லது..பொம்மைகளும், விளையாட்டு சாதனங்களும் விலையுயர்ந்தவைகளாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. புத்தகங்கள், க்ரேயான், பென்சில், பேப்பர், பில்டிங் ப்ளாக்ஸ் பொம்மைகள்,என்று என்னென்ன முடியுமோ, எல்லாவற்றையும் அவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள்.
விளையாட்டுகளில் பல்வேறு வகைகள் உண்டு. ஒவ்வொரு விளையாட்டுமே குழந்தை, கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்புதான். ஒவ்வொரு வயதிலும், குழந்தைகள் என்னென்ன விளையாட்டுகள் விளையாடுகின்றன, அவைகளை என்னென்ன விதமாக விளையாடுகின்றன, அவைகளின் மூலம் குழந்தைகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்று விளையாட்டுக்களைப் பற்றி பல்வேறு கோணங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

மொழி வளர்ச்சி மற்றும் குழந்தைப் பருவக் கற்றல்:

குழந்தைகளுக்கு மொழி வளர்ச்சி என்பது , ஏறக்குறைய இந்த வரிசையில் நடைபெறுகிறது.
• அழுவது,சத்தமிடுவது,தோராயமாக ஓசை எழுப்புவது
• உளறுவது, இரண்டு/ மூன்று முறை அதே ஒலியை திரும்பச் செய்வது-3 மாதங்கள்
• கவனிக்கும் திறன் – 8 மாதங்கள்
• வார்த்தைகளைப் புரிந்து கொள்வது -1 வயதில்
• ஒரு சொல் பேச்சு- 1 வயதில்
• இரண்டு வார்த்தைகளை / தந்தி வார்த்தைகளை சொல்வது – 2 வயதில்
• மொழி இலக்கணம் கற்றல்
மொழி வளர்ச்சிக்கும், குழந்தைப் பருவக் கற்றலை வளர்க்கவும் உதவும் விளையாட்டுகள்:

டெமோ டேப்: (வயது: 6 வாரங்களுக்கு மேல்)

jared_reading_to_teddy_022006-759056.jpg

 

குழந்தையின் சப்தங்களை தேதி வாரியிட்டு டேப் ரெகார்டரிலோ, செல் போனிலோ ரெகார்ட் செய்யவும்.
இது குழந்தையின் மொழி வளர்ச்சியின் முன்னேற்றங்களை நாம் எளிதில் உணர வகை செய்யும்.
மற்றவர் குரலை பின்பற்றுதல்: (வயது: 3 மாதங்களுக்கு மேல்)

உங்கள் குழந்தை ஒலி எழுப்புகையில், நீங்களும் அதே ஒலியை தொடர்ந்து எழுப்பவும்.பின்பு, நீங்கள் அதே ஒலியை மீண்டும் எழுப்பி, குழந்தை எதிர்வினை புரிய,ஒரு இடைவெளி தரவும்.இந்த செய்கையானது, குழந்தைகள் அடிப்படை மொழித் திறன்களைப் பழகவும்,ஒலியைக் கொண்டு மற்றவர்களுடன் உரையாடவும் இது கற்றுத் தருகிறது.
டெடி பொம்மை எங்கே? (வயது: 6 மாதங்களுக்கு மேல்)

குழந்தை நன்கறிந்த பந்து, மற்ற பொம்மைகள்,கரடி பொம்மை எல்லாவற்றையும் அவைகளைக் குறிப்பிட்டு, குழந்தையை அடையாளம் காணச் செய்யவும்.சரியாகக் காட்டியவுடன்,கை தட்டி உற்சாகப் படுத்தவும்.இந்த விளையாட்டில் இருந்து, தெரிந்த நபர்கள், பொருட்களை இனங்கண்டறிந்து அவைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், சமூக இணைப்புகள் (social ties) பற்றிக் கற்றுக் கொள்கின்றனர்.

குழல் வழியே பேசுதல் (வயது: 10 மாதங்களுக்கு மேல்
ஊதுபத்திக் குழல், அல்லது ட்யூப் போன்ற குழல் வழியாக சற்று பலமான மற்றும், மெதுவான ஒலியை எழுப்புதல்.
இதை கவனிப்பதன் மூலம், வெவ்வேறு வகையான ஒலிகளை எழுப்புவது மற்றும் ஒலியைப் பயன்படுத்துவதைப் பற்றியும் குழந்தை கற்றுக் கொள்கிறது

மூக்கு எங்க இருக்கு? கால் எங்க இருக்கு? (வயது: 10 மாதங்களுக்கு மேல்)
குழந்தையின் பல்வேறு உடல் பாகங்களான மூக்கு, கண், வாய், காது, கால் பற்றிக் கேட்கவும். குழந்தை பல்வேறு சொற்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும், சரியாக அடையாளம் சொல்வதால், அதன் சுய மதிப்பும் கூடி, இது போன்ற விளையாட்டுகளில் மேலும் ஆர்வம் அதிகரிக்க ஏதுவாகவும் இருக்கும்.

எடுத்து வைக்க உதவு: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)
கடைக்குப் போய் வாங்கி வந்த சாமான்களை, காய்கறிகளை ஒவ்வொன்றாக அவைகளின் பெயர்களைச் சொல்லி எடுத்து வைக்கவும்.பின் அந்த சாமான்களின் பெயரைச் சொல்லி, குழந்தையை சரியாக எடுத்து மீண்டும் பையில் போடச்சொல்லவும்.
இதன் மூலம் புதிய புதிய சாமான்களின் பெயர்களைக் கற்றுக் கொள்வதோடல்லாமல், குழந்தை,ஒரு செயலை இன்னொருவருடன் சேர்ந்து செய்யும் இயல்பு பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

விலங்குகள் மிமிக்ரி: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)

விலங்குகளின் படங்களைப் புத்தகத்திலோ அல்லது சார்ட்டிலோ காட்டி, அவைகளைப் போல சப்தமிடவும்.
குழந்தை இதை நன்கு ரசித்து மகிழ்வான். மொழியைக் கேளிக்கையாக (fun) கற்றுக் கொள்வது துவங்குகிறது
அப்புக் குட்டி சொல் புத்தகம்: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)
உங்கள் குழந்தை என்னென்ன சொற்களைச் சொல்கிறானோ, அதன் படங்களைக் கத்தரித்து ஒரு நோட்டில் ஒட்டவும். மீண்டும் மீண்டும் அந்தப் படங்களைக் காட்டி அவனை சொல்ல வைப்பது,அவனுக்குப் பயிற்சியையும், சரியாகச் சொல்வதால், மிகுந்த மன மகிழ்ச்சியையும் தரும்.

போட்டோ எக்ஸ்பீரியன்ஸ் புத்தகம்: (வயது: 18 மாதங்களுக்கு மேல்)
குழந்தையைப் பற்றிய ஒரு சிறு போட்டோ ஆல்பக் கதைப் புத்தகத்தை உருவாக்கவும்.உதாரணமாக, குழந்தையை பூங்காவிற்கு அழைத்துச் செல்கையில் ஒவ்வொரு விளையாட்டின் போதும் புகைப்படங்கள் எடுக்கவும்.அவைகளை ஒரு ஆல்பத்தில் / நோட்டில் ஓட்டி, குழந்தையை அருகில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, அந்தப் படத்தைக் காட்டி அவ(ள்)ன் என்ன செயல் செய்கிறா(ள்)ன் என்று கதை போல சொல்லவும்.போட்டோவைக் காட்டி நீங்கள் கூறும் ஒவ்வொரு மொழி வளமும்,(vocabulary) குழந்தைக்கு மிகுந்த அர்த்தமுள்ளதாக விளங்கும்.ஏனென்றால், அவைகளை குழந்தையே உணர்ந்து அனுபவித்து இருக்கிறது.ஒவ்வொரு புகைப்படமும், குழந்தை ஏற்கெனவே செய்த செயலின் ஒரு அடையாளமாக இருக்கிறது.குழந்தைகளின் சுயமதிப்பு இதன் மூலம் கூடவும், அவர்கள் தங்களை புகைப்படத்தில் அடையாளப் படுத்திக் கொள்ளவும் முடிகிறது.வாசிப்பு அனுபவத்திற்கான மிகச்சிறந்த முன்னோட்டமாக இந்த விளையாட்டு திகழ்கிறது

சோஷியல் மற்றும் எமோஷனல் டெவலப்மெண்ட், ஃபைன் மோட்டார் மற்றும் க்ராஸ் மோட்டார் டெவலப்மெண்ட், சென்ஸரி டெவலப்மெண்ட்,காக்னிடிவ் டெவலப்மெண்ட் போன்ற பல்வேறு விதமான உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கான விளையாட்டுக்கள் பற்றி இனி வரும் வாரங்களில் பார்ப்போம்..

டாக்டர்.பிரகாஷ்

 

http://idlyvadai.blogspot.ch/2013/03/to-6.html

Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 7

 

2012-10-15-625.jpg

Motor skills என்பது தசைகளின் செயல்திறன்களைக் குறிப்பதாகும். gross motor skills and fine motor skills என்று இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். Gross motor skills என்பவை புஜங்களின் அசைவுகள், கால், பாதம் அல்லது ஒட்டு மொத்த உடலின் அசைவைக் கொண்டவை. உடலின் பெரிய தசைகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டு நாம் செய்யும் செயல்களான ஓடுதல், ஊர்தல், நடத்தல், நீச்சலடித்தல், பேலன்ஸ் செய்தல்,பந்து எறிதல் போன்றவைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

fine motor skills எனப்படுபவை, துல்லியமாக - கைகள், மணிக்கட்டு, கை விரல்கள், பாதங்கள், உதடுகள், நாக்கு போன்றவற்றைக் கொண்டு செய்யப் படும் சிறிய நுண்ணிய அசைவுகள்/செயல்கள்… விரல்களைக் கொண்டு சிறு பொருட்களை எடுப்பது, ஸ்பூன், ஃபோர்க் உபயோகித்து உணவு உண்ணுதல்,பென்சில், பேனாவை உபயோகித்து எழுதுதல், வரைதல் போன்ற தினசரி செயல்களைச் சொல்லலாம்.குழந்தைகளிடம் இந்த இரண்டு மோட்டார் திறன்களும் ஒன்றிணைந்தே வளர்கின்றன. மற்றும் இவை இரண்டுக்கும் இடையில் ஒருங்கிணைப்பும் உள்ளது.


குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும், இந்த இரண்டு திறன்களுமே படிப்படியாக வளர்ந்து, ஆறு முதல் 12 வயது வருகையில் குழந்தை ஏறக்குறைய இந்த எல்லா திறன்களிலும் தேர்ச்சி பெற்று விடுகிறது.
fine motor skills ஐ மேம்படுத்தும் விளையாட்டுக்கள்:

இரண்டு மாதக் குழந்தைகளுக்கு அருகில் கலர் கலரான கைக்குட்டைகளை பரப்பி வைத்தால், அதை கையினால் தொட்டு எடுக்க முயற்சிக்கையில் fine motor வளர்ச்சி ஏற்படுகிறது.குழந்தையின் கைக்கெட்டுமாறு சிறு சிறு பொம்மைகளைத் தொங்க விட்டு, அவைகளைத் தொட முயற்சிக்கையில், கைகளைக் கொண்டு ஆட்டுகையில், சத்தம் வருகையில் செயல்-விளைவுத் தத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்வதோடு, அவர்களின் காக்னிடிவ் வளர்ச்சியும் மேம்படுகிறது.

ஆறு மாதக் குழந்தை சப்தமிடும் பொம்மைகளை இயக்க முயற்சிப்பதன் மூலம் இத் திறன்களை வளர்த்துக் கொள்கிறது.
எட்டு மாதக் குழந்தையிடம் கீழே கிடக்கும் பொம்மைகளை அதற்குரிய பெட்டியில் போடச் சொல்வதன் மூலமும்,இரண்டு பொருள்களை ஒன்றுடன் ஒன்று மோதி சப்தமேற்படுத்த வைத்து (இரண்டு ஸ்பூன்கள், இரண்டு தட்டுக்கள்) கைகளைத் தட்டி ஓசை எழுப்பச் சொல்லியும் இத்திறனை வளர்க்கலாம்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையிடம், பேப்பரைக் கிழித்துப் போடச் செய்யலாம். இதைச் செய்வதில் அவர்களுக்கு ஒரு அலாதி சுகம்தான்.

பதினெட்டு மாதக் குழந்தையிடம் ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு தண்ணீரை மாற்றச் சொல்லவும்.
இரண்டு வயதுக் குழந்தையானது ஒரு டம்ளரிலிருந்து இன்னொரு டம்ளருக்கு தண்ணீரை சிந்தாமல் முழுவதும் மாற்றி விட்டதென்றால், அதன் ஃபைன் மோட்டார்த் திறன்கள் நன்கு வளர்ச்சியடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.
என் பதினைந்து மாதக் குழந்தை ஸ்ரீவத்சனிடம் ஒரு தட்டில் கடலைப் பருப்பைக் கொடுத்து அதைக் கொஞ்சமாக எடுத்து ஒரு சிறு டபராவில் போடச் சொன்னோம். ஓரளவு முயற்சிக்குப் பின் கொஞ்சம் கடலைப் பருப்பு டபராவிலும், மீதி அவனது வாய்க்குள்ளும் போனது. கவனம்- இதனால் அவனுக்குக் கொஞ்சம் வயிற்று வலி வந்தும் சிரமப் பட்டான்.
Gross motor skills மேம்படுத்தும் விளையாட்டுக்கள்:

ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் வண்ணங்களாலான பொம்மைகளை அருகில் வைத்து, அவர்கள் நகர்ந்து, தவழ்ந்து பொம்மையை நோக்கிச் செல்வதை ஊக்குவிக்கலாம்.

Sri+at+park.jpgஎட்டு மாதங்கள் ஆன குழந்தையை சேர், அல்லது அட்டைப் பெட்டிகளை சுரங்கம் போல வடிவமைத்து, அதற்குள் ஊருந்து வரச் செய்யலாம்.குட்டிக் குட்டி அட்டைப் பெட்டிகளை கயிற்றினால் ஒன்றன் பின் ஒன்றாகக் கட்டி, ட்ரெயின் போல அவைகளை இழுக்கச் செய்யலாம்.வித விதமான வண்ணங்களில் பந்துக்களைக் கொடுத்து அவர்கள் அதை எப்படிக் கையாளுகிறார்கள் (தள்ளுதல், உதைத்தல், எறிதல், உருட்டுதல்) என்று பார்த்து பயிற்சி கொடுக்கலாம்.

ஒரு வயதுக் குழந்தைகளுக்கு, கலர் கலரான பிளாஸ்டிக் வளையங்களைக் கொடுத்து, அவர்களை அதனுள், வெளியே, சுற்றி, வட்டமடித்து என்று பலவாறாக விளையாட வைக்கையில் பல க்ராஸ் மோட்டார் திறன்கள் மேம்படுகின்றன.இரண்டு வயதான குழந்தைகளை, பூங்காவில் இரும்புக் கம்பியைப் பிடித்துத் தொங்கப் பழக்கலாம்.மெத்தையிலோ, பார்க், மால் போன்ற இடங்களில் குவிக்கப் பட்டுள்ள பந்துக்களின் மேலோ குதிக்கச் செய்கையில் கால் தசைகளுக்கு நல்ல பயிற்சி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பேலன்ஸ் செய்வதற்கும் கற்றுக் கொள்கின்றனர்.

குழந்தை வளர்ப்பில், இந்தத் திறன்கள் இன்றியமையாதவையாகும். குழந்தை, பிறந்தது முதல் தலை, கை, கால்களை ஆட்டி,அவைகளின் மீது கண்ட்ரோலைக் கொண்டு வந்து, பின்னர், கொஞ்சங் கொஞ்சமாக குட்டி விரல்களை இயக்கி எழுத, சிறிய பொருள்களை எடுக்கக் கற்றுக் கொள்கிறது. மேற்சொன்ன விளையாட்டுக்களை எவற்றை குழந்தை விரும்புகிறானோ அதை அடிக்கடி செய்யச் சொல்லி, பயிற்சி தரவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விளையாட்டுக்களை விளையாடுகையில் சலிப்பு வருவதில்லை.
பள்ளிக்குச் செல்லும் முன்பே குழந்தைகளின் இவ்விதத் திறன்களை சரியாக மேம்படுத்தினால், பள்ளியில் அவர்கள் நன்கு செயல்புரிய ஏதுவாக இருக்கும்.புதிய செயல்களின் மூலம் புதிய மோட்டார்த் திறன்களைக் கற்கையில் அவர்களது மூளையில் புதிய புதிய நரம்புத் தொடர் இணைப்புகள் உருவாகி, அவைகள் பழக்கமாக வளர்கின்றன.

பொதுவாகவே, நகர்தலை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளை குழந்தைகள் நன்கு விரும்பிச் செய்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில், குழந்தைகள் செல்ஃபோன்கள், கம்ப்யூட்டர் வீடியோ கேம் போன்றவைகளையே அதிகம் விரும்புகின்றன. இவைகள் எல்லாம் ஃபைன் மோட்டார் இயக்கத்திற்குப் பயன்படும். ஆனால், இதற்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் பெரிய தசைகளை இயக்கி செயல்படுகிர க்ராஸ் மோட்டார் இயக்கங்களையும் அவர்கள் கற்றுத் தெளிய வேண்டும்.
தவழ்ந்து நடக்கத் துவங்கிய குழந்தை வீடெங்கும் சுற்றி, கைக்கு என்ன கிடைக்கிறதோ, அதை எடுத்து விளையாடப் பார்க்கும்.அதில் தவறேதுமில்லை. ஆனால், அபாயகரமான பொருட்களான, கத்தி, கூரான சமையல் பாத்திரங்களை அவர்கள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பெரிய பாத்திரத்தை எடுக்க முடியாமல் எடுத்து கீழே போடும் குழந்தை, நாளடைவில் அதை பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொள்கிறது. 

Srivatsan+Kadalai+paruppu.jpgநாம் அதை அவன் காலில் போடாமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு காய்கறிகளை எடுத்து வைத்தல் போன்ற குட்டிக் குட்டி வேலைகளை அவர்களை செய்யச் சொல்லவும். குடிநீர் கேனை அடிக்கடி திறந்து விட்டு நீரை வீணாக்கும் என் குழந்தைக்கு, வாட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டுதான் நீர்க் கேனைத் திறக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தோம். ஒவ்வொரு முறை நீர் நிரப்புகையிலும், வாட்டர் பாட்டிலை நாங்கள் பிடித்துக் கொண்டு, அவனை குமிழைத் திறக்கச் சொன்னோம். முக்கால் வாசி நிரம்பியவுடன் அவனயே மூடச் சொல்லிப் பழக்குகிறோம். இதில் அவனுக்கும் ஒரு சந்தோசம் , மற்றும், ஒரு புதிய செயலைக் கற்றுக் கொடுப்பதும் முடிகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர், நடக்கத் தெரிந்த தன் குழந்தை, தவறிப் போய்க் கீழே விழுந்து அடிபட்டு விடக் கூடாது என்கிற எண்ணத்தில், வீடு முழுவதும் கார்ப்பெட் போட்டுள்ளார். இது சரியான அணுகுமுறை அல்ல.அவரால் தெருவனைத்திற்கும், ஊர் முழுவதும் கார்ப்பெட் போட முடியுமா? பின் எப்போதுதான் அவர் குழந்தை விழுந்து எழுந்து மீண்டும் விழாமல் பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொள்ளும்?

எனவே, குழந்தைகளை ஓவராகப் பொத்திப் பொத்தி வளர்க்காமல் அவர்கள் இயல்பில் போய், அவர்களுக்கு நார்மலாக என்னென்ன அனுபவங்கள் கிட்டுமோ, அதையெல்லாம் கிடைக்கச் செய்யுங்கள்

பிகு: படங்களில் தோன்றுவது குழந்தை ஸ்ரீவத்சன்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/120430-2014-08-03-05-02-01.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் பயனுள்ள ஓர் தொடர் ..........
நிறைய விடயங்களை மீண்டும் அசைபோட கூடியதாக இருந்தது. எல்லா பெற்றோரும் வாசிக்க வேண்டும் 
Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 8

 

 

 
haba-construction-set-282x300.jpgவிளையாட்டுக்களின் உதவியுடன் குழந்தைகளின் பல்வேறு திறன்களை மேம்படுத்துவது எப்படி என்று பார்த்து வருகிறோம்.காக்னிடிவ் டெவெலப்மெண்ட் எனப்படும் சிந்தனை மேம்பாட்டுத் திறனை எப்படி வளர்ப்பது என்று இப்போது பார்க்கலாம்.


குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப் போல மூளை வளர்ச்சியை நாம் அறிய முடியாது;ஆனால், அவர்கள் புதிதாக என்னென்ன விஷயங்கள் செய்கிறார்கள் என்று அறிய முடியும்.


Piaget என்கிற குழந்தை உளவியல் அறிஞர், குழந்தையின் காக்னிடிவ் வளர்ச்சியை நான்கு பருவங்களாகப் பிரிக்கிறார்.
First cognitive development stage: Sensory motor period (0-24 months)
Second cognitive development stage: The preoperational period (2-7 years)
Third cognitive development stage: (Concrete operations (7-12 years)
Fourth cognitive development stage:Formal operations (12 years plus)


சிந்தனை மேம்பாட்டுத் திறன் என்பது, புலன்களை அறிதல்,(sensory exploration) செயல் விளைவை அறிதல்,(cause and effect) கருவிகளை உபயோகித்தல், (using tools) பொருள்களின் இயக்கம் ,(object performance) அளவு, வடிவம் மற்றும் வெளி அறிதல்,(size, shape and space)குறியீடுகளை உபயோகித்தல்,(using symbols) கணிதக் கருத்தாக்கம்,(math concepts)மற்றும் காலம் பற்றிய புரிதல் (concept of time) போன்றவைகளை உள்ளடக்கியது.


117_03_01.jpgஇந்த வகையான காக்னிடிவ் விளையாட்டுக்கள், பாவனை செய்தல் (imitation)ஆர்வ உந்துதல், (curiosity) வகைப்படுத்துதல்(classification) என்கிற மூன்று முக்கியமான சிந்தனைத் திறன்களை மேம்படுத்துகிறது, 
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பிளாஸ்டிக் பாட்டிலில் சோப்புக் கரைசலுடன், வண்ண வண்ண சிறு சிறு மணிகள், பாசிகள் போன்றவற்றைப் போட்டு, பாட்டிலைக் குலுக்கினால் அதனுள் ஏற்படும் நகர்வுகள், சோப்புக் குமிழிகள் தோன்றுதலைக் காட்டலாம். இதன் மூலம், குழந்தைகள்,செயல் விளைவுத் தத்துவத்தைப் புரிந்து கொள்கின்றன.மேலும், இது அவர்களின் புலன்களையும் கவர்ந்து அவர்களை மகிழ்விக்கிறது. பொம்மையின் சிறு பகுதி மட்டும் தெரியுமாறு வைத்திருந்து விட்டு, பொம்மை எங்கே என்று கேளுங்கள். குழந்தை, பொம்மையைச் சுட்டிக் காட்டுகையில், கை தட்டி, பாராட்டுக்களைத் தெரிவியுங்கள். ஒரு பொருளின் முழுமைத்தன்மைக்கும், அதன் பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பை குழந்தை உணர முடிகிறது.


குழந்தையின் கண்களை உங்கள் கைகளால் மூடி, பின் கைகளை எடுத்து சிரிக்கவும்.உங்கள் முகத்தை புத்தகத்தின் பின்னோ, செய்தித் தாளின் பின்னோ, மறைத்துக் கொண்டு, திடீரென்று தோன்றவும். பொம்மையைக் காட்டி, பின் அதை மறைத்து, பின் பொம்மை எங்கே என்று கேட்கவும். மெலிதான துணியில் பொம்மையை சுற்றி, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கவும்.சிறிய அட்டைப் பெட்டிக்குள் பொம்மையைப் போட்டு, பொம்மை எங்கே என்று கேளுங்கள்.இவ்விதமான விளையாட்டுகளால், குழந்தைக்கு, ”பொருள்கள் மறைக்கப்பட்டாலும், கண்களில் படாவிட்டாலும், அவைகள் இருக்கின்றன” அவற்றின் நிலைப்புத் தன்மை பற்றிய ஒரு புரிதல் ஏற்படுகிறது.


ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, பல்வேறு வடிவத்துடன் கூடிய ஸ்ட்ரா போன்ற பிளாஸ்டிக் குழாய்களைக் கொடுக்கவும். அவைகளை எவ்வாறு ஒன்றினுள் ஒன்றை நுழைக்க முயல்கிறது என்று பாருங்கள். ஷீ அட்டைப் பெட்டி மேலே வெவ்வேறு வடிவங்களில் சதுரம், செவ்வகம், முக்கோணம் என்று துளைகளைப் போட்டு, குழந்தையை, அதனதன் வடிவ மூடியை அது சரியாகப் பொருத்துகிறதா என்று பார்க்கவும்.இது போன்ற விளையாட்டுக்கள் அளவு, வெளிக்கு இடையே உள்ள தொடர்பை குழந்தைகள் கற்க உதவும்.


இரண்டு வருடக் குழந்தைக்கு,தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களின் வடிவத்தையும், பழங்கள் காய்கறிகளின் வடிவத்தையும் பற்றிக் கூறவும். உணவு உண்ணுகையில் முன்பிருந்த வடிவம் எப்படி மாறுகிறது என்பதையும் சொல்லவும்.
இரண்டு வெவ்வேறு வகை பொம்மைகள் செட்களை ஒன்றாகக் கலந்து வைக்கவும். உம்: விலங்கு பொம்மைகள் & வாகன பொம்மைகள். இரண்டு வகைகளையும் தனித் தனியே பிரித்து, வெவ்வேறு பெட்டிக்குள் போடச் சொல்லவும்.இதன் மூலம், ஒரே மாதிரி, வெவ்வேறாக இருக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதுடன், பொருள்களின் பண்புகளைப் பற்றியும் அவர்கள் கற்க முடிகிறது.

cogce4.sm.jpgகாலையில் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டு அவர்களை பதில் சொல்ல வைப்பது, 
வானம் மஞ்சளாக இருக்கிறது-சரியா தவறா? என்று கேட்டு பதில் பெறுவது,
ரைம்ஸ்களின் முதல் பாதியை மட்டும் சொல்லி, இரண்டாவது பாதியை அவர்களையே சொல்ல வைப்பது
(உ.ம்) அம்மா இங்கே __________
ஆசை முத்தம்_____________
குழந்தையின் கண்களை மூடிக் கொண்டு, பழங்கள் காய்கறிகள், பருப்பு வகைகளை அவர்கள் கைகளால் உணரச் செய்து கண்டறியச் செய்தல்
Puzzle toys எனப்படும் புதிர் பொம்மைகளை, குழந்தைகளின் வயதுக்கேற்ப வாங்கிக் கொடுத்து, அவர்களை அந்தப் புதிர்களை விடுவிக்கச் செய்யலாம்.

நினைவிருக்கட்டும்- காக்னிடிவ் திறனை நீங்கள் வளர்க்க முனைகையில், குழந்தையின் சிந்திக்கும் திறனைத் தான் மேம்படுத்துகிறீர்கள். பொருள்களை நினைவு கூற அல்ல. நம் நோக்கம்- நிறைய செய்திகளை குழந்தைக்கு வழங்குவது அல்ல- இருக்கும் செய்திகளை எப்படிப் பகுப்பாய்வது,ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துவது, அதன் மூலம் ஒரு முடிவுக்கு வருவது என்பதேயாகும். எனவே, காக்னிடிவ் திற மேம்பாட்டுக்கு, நீங்கள் தெரிவு செய்யும் விளையாட்டுக்கள் (What and why? So what? Is it good? Putting information together) மேற்கண்டவைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.


பெரும்பாலான காக்னிடிவ் திறன்கள், மொழித் திறன்களுடனே இணையாக வளர்கின்றன. இன்னும் சரியாகப் பேச்சு வராத மூன்று வயதுக்கு உட்பட்ட பருவத்திலேயே குழந்தைகள் காரண காரியத்தை அறிய முற்படுகின்றன.இதைத் தூண்டுவதற்கு, பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள் துணை புரிகின்றன. இதை நாம் மறந்து விடாமல் இருக்க, who/what/where/when/why/ என்று நினைவில் கொள்ளவும்.


இரண்டு மூன்று வயதிலேயே இவ்வகை காக்னிடிவ் விளையாட்டுக்களை விளையாடிய குழந்தை, ஐந்து வயதிலேயே, அந்த வயதொத்த குழந்தைகளை விட நல்ல புத்திசாலியாக வளர்ந்து வருவது நிரூபணமாகி உள்ளது
இன்னும் ஒன்று.All problems are opportunities. எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக புதிர்களை விடுவிக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களது சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது.பொதுவாக,குழந்தைகள் ஞாபகத் திறன் மூலமாகவும், திரும்பத் திரும்ப நிகழும் அன்றாட நிகழ்வுகளின் மூலமும் (routine)நிறையக் கற்றுக் கொள்கின்றன. வழக்கத்திற்கு மாறாக நிகழும் எந்த ஒரு நிகழ்வும், குழந்தைக்குள் கேள்விகளை எழுப்பி, சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. உம்: கரண்ட் கட் ஆகுதல்- ஏன் விளக்கு அணைந்து விட்டது? அதன் பின் என்ன செய்வோம்? என்று கேள்விகளை எழுப்பலாம்.


குழந்தைகளின் காக்னிடிவ் திறன்களை மேம்படுத்த, சில எளிய வழிமுறைகள்
• அனுதினமும், குழந்தைகள் அவர்களின் தினசரி நிகழ்வுகளில் இருந்து நிறைய விஷயத்தைக் கற்றுக் கொள்கின்றன.அவர்களது கற்றல், அவர்களது நேர வசதிப் படியே நிகழ்கிறது; நமது நேர வசதிப்படி அல்ல. எனவே, குழந்தையின் கற்றல் நேரத்தில் மிகச் சரியாக நாம் அவர்களுடனே இருந்து அவர்களை நெறிப் படுத்த வேண்டும்.

• எல்லா விதிமுறைகளையும், செயல் முறைகளையும் நூறு சதவீதம் விளக்கி விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்காமல், சில எளிய சிக்கலான தருணங்களில், சின்னச் சின்ன இடர்ப்பாடுகளில், சரியான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் என்ன விதத்தில் அதை எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள் என்று பாருங்கள்.

• குழந்தைகளை பாதிக்காத சிறிய தவறுகளை செய்ய அனுமதியுங்கள்;அதிலிருந்து அவர்கள் நிறையக் கற்றுக் கொள்வர்.சில சமயங்களில் அவர்களது உள்ளுணர்வின் படி அவர்கள் செய்யும் சில செயல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
• சில அன்றாட நடவடிக்கைகளை முதலில் இருந்து கடைசி வரை ஒரு முழுசெயலாகக் கற்பிக்கவும். 

உம்: கடைக்குப் புறப்படுவது, கடையில் சாமான்கள் வாங்குவது, வீட்டுக்கு வந்து சாமான்களை அதனதன் இடத்தில் வைப்பது.

உணவுக்கான பொருள்களை எடுத்து வைப்பது, உணவு தயாரிப்பது, அதை உட்கொள்வது இது சற்று அதிக நேரமெடுத்தாலும், குழந்தைகள் இதில் கற்றுக் கொள்வது அதிகம்.
• ஏதாவது ஒன்று சரியில்லை என்றால், அதை அவர்களிடம் என்ன? என்று கேட்டு, அவர்களையே யூகிக்கச் சொல்லவும். உம்: நாம தூங்கப் போகலாமா? தூங்குறதுக்கு என்ன செய்யணும்? மெத்தை, தலையணை எல்லாம் போடணும்

• எல்லா சந்தர்ப்பங்களிலும், “அடுத்து என்ன? நீ என்ன செய்வாய்? நமக்கு இன்னும் என்ன வேணும்?” என்று கேள்விகளைக் கேட்கவும். மூன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகள் தாங்கள் சிந்திப்பதை வாய் விட்டுச் சொல்லும் பழக்கமுடையவை. நம்முடைய கேள்விகளினால் வரும் அவர்களது பதிலைக் கொண்டு அவர்களின் மூளை எப்படி சிந்திக்கிறது என்று நாம் அறிந்து கொண்டு, அதற்கேற்ப மாதிரி அவர்களை சரியான கோணத்தில் சிந்திக்க வைக்க, வழிகாட்ட முடியும்.
குழந்தையின் காக்னிடிவ் டெவலப்மெண்ட் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

ஆரோக்கியமான குழந்தையின் நடவடிக்கைகள் பற்றி நாம் அறிந்து, நம் குழந்தை அதன் வயதிற்கேற்ப சிந்திக்கும் திறன், செயல்படும் திறனுடன் விளங்குகிறதா அல்லது, அதே வயதுடைய மற்றக் குழந்தைகளை விட பின் தங்கியுள்ளதா என ஒப்பு நோக்கி அறியலாம்.

குழந்தையின் காக்னிடிவ் வளர்ச்சி பற்றி அறிந்து கொண்டால், அதற்கேற்ற வகையில் அவர்களுக்கான விளையாட்டுகளையும், பொம்மைகளையும் நாம் தெரிவு செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

குழந்தை செய்யும் செயல்களின் காரணத்தை நாம் அறிந்து கொள்வதன் மூலம் இது, இன்ன காரணத்தால் இப்படி செய்கிறான் என்கிற தெளிவு நமக்குக் கிடைப்பதோடு, தேவையற்ற பயமும் நீங்குகிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு ஆதவன்.
சிறு குழந்தைகள் உள்ளவர்களும், திருமணம் முடிக்கப் போகின்றவர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 9

 

 

natural-play-space.jpg

 

நேற்று பெங்களூரில் பழை பெய்தது. மெலிதான தூறலின் முதல் துளிகள் வெளியே நின்று கொண்டிருந்த என் குழந்தையின் மேல் விழத் துவங்கியதும் “வாவா” “வாவா” என்றான். வாவா என்றால், அவன் மொழியில் தண்ணீர் என்று அர்த்தம்.வானத்தில் இருந்து “வாவா” விழுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இயற்கையில் இருந்து ஏராளமான விஷயங்களை, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.ஒரு சிறிய நடைப் பயிற்சியோ, ஒரு பூங்கா விஜயமோ உங்கள் குழந்தைக்கு மிக நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும்.

மரங்களை அவர்களுக்குக் காட்டுங்கள். இலைகள், கிளைகள், காய், வேர், உதிர்ந்து விழுந்த காய்ந்த இலைகள் இப்படி ஒவ்வொன்றாக அறிமுகப் படுத்துங்கள்..தென்னை,மாதுளை, செம்பருத்தி என்று வேறுபடுத்திச் சொல்லிக் கொடுங்கள்.
ஒரு பூ, இலை, சிறிய கல் போன்றவற்றைக் காட்டி, இதே போல் இன்னொன்றைக் கொண்டு வா என்று சொல்ல, குழந்தை அதைக் கொண்டு வரும் முயற்சியில் மற்ற அழகான, வித்தியாசமான விஷயங்களையும் கண்ணுற்று ஆச்சரியத்தில் மகிழ்கிறது.. ஒரு பூந்தொட்டியில் உங்கள் குழந்தையை விதையை விதைக்கச் சொல்லி, அவனையே தினமும் தண்ணீர் எடுத்து ஊற்றச் செய்யுங்கள். விதை முளைத்து மேலெழும்புகையில், குழந்தைகள் அவர்களின் தினசரி செயலின் விளைவை, அந்தச் செடியில் கண்டு குதூகலிப்பார்கள்.அந்தப் பூந்தொட்டிக்கு உங்கள் குழந்தையின் பெயரையே நீங்கள் சூட்டலாம்.


பூங்கா, அல்லது பண்ணைக்கு செல்கையில் குழந்தை பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும், சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும், விலங்கையும் படம் பிடித்து, ஒரு ஆல்பத்திலோ, நோட்டிலோ ஒட்டி, அதைக் காண்பிக்கவும்.தான் ஏற்கெனவே ரசித்துப் பார்த்த அனுபவம் என்பதால், குழந்தை அதை நன்கு விரும்புவான். தன்னை, ஆல்பத்தில் காணுகையில், குழந்தையின் சுயமதிப்பும் உயரும்.

ஒரு மழை நாளில் குடை பிடித்து, உங்கள் குழந்தையை நடத்திச் செல்லுங்கள்.மழை பெய்து முடிந்தவுடன் பொருள்கள், கட்டிடங்கள், மரங்கள், வானம் எப்படித் தோற்றமளிக்கின்றன என்பதை குழந்தை உணருவான்..மழையென்றால், ஓடி ஒதுங்கிக் கொள்வதை விட, மழைப் பொழுதில் ரசிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி குழந்தை அறிந்து கொள்கிறது.
விளையாட்டுகளின் மூலம் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் வரிசையில் அடுத்து, ஐம்புலன்களைப் பயன்படுத்தி, புலன்களின் திறனை, அறிவுத் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பார்ப்போம்.

சிந்திக்கும் திறன் இன்னும் வளர்ச்சியடையாத குழந்தைப் பருவத்தில், புலன் அனுபவங்களின் மூலமே எல்லா புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்கிறது. எனவே, அதன் மூளையை “Sensory Processing Machine” என்றும் அழைக்கலாம். புலன் அனுபவ விளையாட்டு (sensory play) என்பது, தொடுதல், நுகர்தல், பார்த்தல்,ருசித்தல் மற்றும் கேட்டல் எனப்படும் ஐம்புலச் செயல்களில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களையோ பயன்படுத்தி விளையாடுவதாகும்..நம் புலன்களே இந்த உலகைப் பற்றி நாம் அறிய உதவும் கடவுச் சொல் என்றும் கூறலாம். ஐம்புலன்களைப் பயன்படுத்தும் விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு எண்ணற்ற அனுபவங்களைக் கொடுக்க வல்லது.

ஒரு புதிய கலர் பொம்மையைப் பார்த்தலும்,ஒரு பறவையின் ஓசையைக் கேட்பதும், ஒரு பூவை முகர்ந்து பார்ப்பதும்,ஆரஞ்சு ஜீஸை ருசித்துப் பார்ப்பதும், கரடி பொம்மையைத் தொட்டுப் பார்ப்பதும், குழந்தையின் புலன்வழிக் கற்றலைப் பெரிதும் ஊக்குவிக்கின்றன. புலன் அனுபவ விளையாட்டுக்கள், குழந்தைகளின், காக்னிடிவ் திறன், மொழித் திறன், சமூக மற்றும் உணர்ச்சித் திறன் (social and emotional skilaa) உடல் வளர்ச்சித் திறன்களை மேம்படுத்துகின்றன.

சிறிய,பெரிய பாத்திரங்களில் நீரை ஊற்றி, அதை மாற்றி விளையாடுதல், பொட்டுக்கடலை, பீன்ஸ், தக்காளி, வாழைப்பழம் போன்ற பல்வேறு வடிவ பொருள்களைத் தொட்டு விளையாடுதல், அரிசி, காய்கறிகள், பழங்கள், பொம்மைகளை வகைப் படுத்துதல் போன்ற விளையாட்டுகள், காகிதக் கப்பல் செய்து நீரில் விடுதல் போன்றவை, குழந்தைக்கு, அதிகம்/குறைவு, நிரம்பி இருத்தல் / காலியாக இருத்தல், மிதத்தல்/மூழ்குதல் போன்ற அடிப்படைத் தத்துவங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மேலும், இவை, கணிதத் திறனையும், காக்னிடிவ் திறனையும் மேம்படுத்துகின்றன.

sensory+play+for+babies+ice+and+water+77

 

சென்சரி விளையாட்டுக்கள், குழந்தையின் மொழித் திறத்தை வளர்க்கின்றன. வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும், அரைகுறையாகத் தெரிந்த வார்த்தைகளை நன்கு வெளிப்படுத்தவும், புதிய வார்த்தைகளைப் பேசவும் ஊக்குவிக்கின்றன.. பக்கத்து வீட்டு தியா, நான்காவது வீட்டு சின்சினா இவர்களுடன் என் மகன் அவர்களது கைகளைப் பிடித்துக் கொண்டு, வட்டமாகச் சுற்றிச் சுற்றி ரிங்கா ரிங்கா ரோசஸ் விளையாடியவுடன் அளப்பரிய சந்தோஷத்தில், புதிது புதிதாக வார்த்தைகளைப் பேசி, அவனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறான்..தான் ரசித்த அனுபவத்தை வார்த்தைகளாக வெளிப்படுதுகையில் மொழித் திறன் வளர்கிறது. மேலும், குழுவாக விளையாடுகையில், இன்னொருவர் பக்கக் கோணம் பற்றி புரிதல் வருகிறது. விட்டுக் கொடுத்தல் , முறை வைத்து விளையாடுதல் போன்றவைகளுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

சென்சரி விளையாட்டுக்கள் குழந்தைகளின் க்ரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பூக்கத்தைத் தூண்டுகின்றன.பொருள்களை அவர்களிடம் கொடுத்து, என்ன செய்கிறார்கள் என்று கவனித்தால், அவர்கள் புதிது புதிதாக விளையாட்டுக்களை ஆடுவர்.எனவே, அவர்களுக்காக நாம் யோசிக்காமல், அவர்களையே யோசிக்க வைப்பது அதிக பலன்களைக் கொடுக்கும். கோடு மட்டும் நீங்கள் போடுங்கள், மீதி ரோடை உங்கள் குழந்தை போட்டுக் கொள்ளும்.

புலன் அனுபவ விளையாட்டுகளுக்குக் கீழ்க்கண்ட பொருள்களைத் தேர்வு செய்யலாம்
தண்ணீர்
மணல்
அரிசி,
மக்ரோனி,
சோயாபீன்ஸ்,
மரத்தூள்
களிமண்
ஃபிங்கர் பெயிண்ட் 
ஜல்லடை
செண்ட்
ஷேவிங் க்ரீம்
நுரை, சோப்பு நீர்க் குமிழிகள்
ஐஸ் க்யூப்கள்
பிளாஸ்டிக் ட்யூப்கள் (நிறுத்துக் குமிழிகளுடன்)
பல்வேறு அளவில் பாத்திரங்கள்
புனல்
ஸ்பூன்கள், கப், டம்ளர்
பொம்மை வீடு ஃபர்னிச்சர்கள்
பிங்-பாங் பந்துகள்
ஸ்ட்ரா குழல்கள்
மீன் தொட்டிக் கூழாங்கற்கள்
வாளி மற்றும் டப்பா
மற்றும் உங்கள் வீட்டில் இருக்கும் பொருள்கள், உங்கள் வசதியைப் பொறுத்து…

ஐம்புல விளையாட்டுக்களுக்கு சில உதாரணங்கள்:
தொடுதல்:

தசைகளைப் பயன்படுத்தும் விளையாட்டுக்கள், மெத்தையில் குதிப்பது, குழுவாக விளையாடுவது, (ரிங்கா ரிங்கா ரோசஸ், பிஸ்கட் பிஸ்கட் என்னா பிஸ்கட்)
கயிறு இழுப்பது,,முயல், தவளை மாதிரி நடிப்பது, ஆணை ஏறுதல், ஐஸ் க்யூப்ஸ்களைத் தொடுதல், சோப்பு நுரையைத் தொடுதல், பல்வேறு வகையான பொம்மைகளைத் தொட்டு உணருதல்.

பார்வை:
பல்வேறு வகையான வெளிச்சங்களை அறிமுகப் படுத்துதல், மெழுகுவர்த்தி வெளிச்சம், டார்ச் வெளிச்சம், இருட்டில் கைகளைக் கொண்டு பொம்மை , விலங்கு உருவங்கள் காண்பித்தல், கலர் கலரான நைட் லேம்ப்கள்,வண்ணங்களைக் கொண்டு விளையாடுதல், கலர்க் கரைசல்கள் விளையாட்டு, பார்வைத் திறனை சோதிக்க, பலூன், பந்தைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கச் செய்தல், பில்டிங் ப்ளாக்ஸ் எனப்படும் சேர்க்கும் விளையாட்டுக்கள், புதிர்கள், ஒளிந்து விளையாடுதல்

கேட்டல்:
இசையை, பாடலைக் கேட்டல், இசைக் கருவிகளை இசைக்க வைத்தல், விலங்கு, பறவைகளைப் போல மிமிக்ரி செய்தல், அமைதியாக அமர்ந்து வெளியில் இருந்து கேட்கும் ஒவ்வொரு சத்தத்தையும் என்னவென்று வகைப் படுத்தச் சொல்வது, ஒலி அளவைக் குறைத்து, பின் மிகுதியாக்கி, வேறுபாட்டை உணரச் செய்தல்
மியூசிக்கல் சேர் விளையாட்டு

நுகர்தல்:
சமையலறையில் இருக்கும் மணமிகு பொருட்களை அடையாளம் காணச் செய்தல், வெங்காயம், பூண்டு, ஏலக்காய், எலுமிச்சை போன்றவை. பாதுகாப்பான செண்ட், கற்பூரம் இவைகளை நுகரச்செய்தல், 
தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பயிர்களின் வாசனையை நுகரச் செய்தல், பூக்கள், இலைகளின் வெவ்வேறு மணத்தை அறியச் செய்தல்

crystal-bingo.jpg

 

ருசித்தல்:

குளிர்ந்த உணவு மற்றும் மிதமான சூடாக இருக்கும் உணவு, ஸ்ட்ரா வைத்து உறிஞ்சும் ஜீஸ், முறுக்கு போன்ற கடித்து சுவையறியும் உண்டி, பழ வகைகள் மற்றும் கேரட் போன்ற காய்கறிகள்,,இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம் போன்றவைகளுக்கு உதாரணங்கள் கொடுத்து, அவர்க்ளை இனங்கண்டறியச் செய்தல்
புலன் அனுபவ விளையாட்டுக்களை மேற்கொள்கையில் சில முக்கிய முன்னெச்சரிக்கைகள்:
• அபாயகரமான, ஆபத்தான கூரான பொருள்கள், குழந்தை விழுங்கி விடக்கூடிய அபாய பொருள்களைத் தவிர்க்கவும்.
• தண்ணீர் விளையாட்டு, திரவங்க்ளை மாற்றுதல் போன்றவைகளின் போது ஒரு பெரிய சாக்கு அல்லது வெளிப்புற மேட் போட்டுக் கொள்ளவும்.
• வெப்பம், குளிர் வகை உணவு வகைகளை முதலில் நீங்கள் தொட்டு உணர்ந்து விட்டு, பின் அவர்களை செய்ய அனுமதிக்கவும். 
• உடையும் பொருள்களைத் தவிர்க்கவும்.
• எல்லா விளையாட்டுகளையும் ஒரே சமயத்தில் விளையாடாமல், பகுதி பகுதியாக பிரித்து விளையாடலாம்.
• எல்லாவற்றையும் நீங்களே சொல்லிக் கொடுக்காமல், அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை கவனியுங்கள்
• முதலில் இருந்து கடைசி வரை நீங்கள் ,குழந்தை கூடவே இருப்பது எந்த வித அசம்பாவீதங்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

டாக்டர்.பிரகாஷ்.

 

http://idlyvadai.blogspot.ch/2013/04/to-9.html

Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 10

 

 

storytelling-600x369.jpgகுழந்தையின் வெவ்வேறு திறன்களை பல்வேறு வகையான விளையாட்டுக்கள், எப்படி மேம்படுத்துகின்றன என்று பார்த்தோம். சூப்பர் குழந்தைகளை உருவாக்குவதில் கதைகள் சொல்வதின் பங்கு பற்றி இனி பார்ப்போம்.


இன்று நேற்றல்ல, கதை சொல்வதென்பது பல ஆயிரம் ஆண்டுகளாக, எல்லா நாடுகளிலும் இருந்து வருகிற ஒரு நல்ல விஷயம். குழந்தை சிவாஜியும், மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியும் அவர்களது வீரத்தையும், சத்தியத்தையும் கதைகளின் மூலமே பெற்றார்கள். நான் குழந்தையாய் இருந்த போது பாட்டி எனக்குச் சொன்ன கதைகளுடனேயே பெரும்பாலும் எனது இரவு உறக்கம் துவங்கும்.அரக்கர் கதை, ராஜாக்கள் கதை, விலங்குகள், பறவைகள் பற்றின கதை என்று வற்றாத அமுதசுரபியைப் போல பாட்டியிடம் இருந்து கதைகள் வந்து கொண்டே இருக்கும். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லும் பழக்கமே இப்போதெல்லாம் அருகி வருகிறது.வேலைக்குப் போகும் பெற்றோர்கள், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரம் இல்லாததால், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களைப் போட்டு, அவர்களை உட்கார வைத்து விடுகின்றனர்.ஆயிரம் தொலைக்காட்சிச் சேனல்கள், ஒரு கதை சொல்லும் தாய்க்கு ஈடாகா. நாம் சொல்லும் கதைகள் குழந்தைகளின் மூளையை முடுக்கி விட்டு, சிந்திக்கும் திறன், யூகிக்கும் திறன், கேள்வி கேட்கும் திறன்,படைப்பூக்கம் ஆகியவைகளை வளர்க்கும். தொலைக்காட்சிச் சேனல்கள் மூளைத் திறனை மந்தமாக்கும். தொலைக்காட்சி, வீடியோ கேம் போன்றவைகளை, அதிக பட்சம் ஒரு நாளைக்கு அரை மணி நேரத்திற்கு மேல் பார்க்க அனுமதிக்க வேண்டாம்.தீராத பட்சத்தில், அம்மா அல்லது அப்பா, கூடவே இருந்து அவர்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் காட்சிகள் பற்றி விளக்கவும், கேள்விகள் கேட்கவும், அதனுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றிக் கூறவும் வேண்டும்.


கதை சொல்வதென்பது, குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களை, அவர்களுக்கு வாசித்துக் காட்டுவது, தம் நினைவில் இருந்து கதைகளை சொல்வது, பொம்மைகளைக் கொண்டு கதைகள் சொல்வது என்று இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். கதைகளை விரும்பாத குழந்தைகளும் உண்டோ? குரங்கு குல்லா எடுத்த கதை, காக்காயிடம் இருந்து நரி வடை பறித்த கதை, சிங்கத்தை முயல் ஏமாற்றிய கதை இவையெல்லாம் என் குழந்தைக்கு மிகவும் பிடித்த கதைகள். 
பல பெற்றோர்கள் நினைப்பதைப் போல, கதை சொல்வதொன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை.குழந்தை சிறியதாக இருக்கும் போதே, சிறிய மிக எளிய கதைகளை சொல்லத் தொடங்கலாம். அவர்களுக்கு வயதேற ஏற, சற்றுப் பெரிய,சிக்கலான கதைகளைச் சொல்லலாம்.

storytelling.jpgஎளிதான பயிற்சிகள் மூலம் சிறந்த கதை சொல்லியாக உங்களை வளர்த்துக் கொண்டு உங்கள் குழந்தையின் அறிவுத்திறனையும் வளர்க்கலாம்.கதை சொல்லும் முன், அந்தக் கதையை நன்கு தெரிந்து கொள்ளவும்.தேவையான புத்தகம், பொம்மைகள் அல்லது படக்கதையை எடுத்து வைத்துக் கொள்ளவும். கதையைஆரம்பிக்கையிலேயே ஒரு சஸ்பென்சோடு அல்லது எஃபெக்டோடு துவக்கவும்.உங்கள் குரலை சற்று சத்தமாக, ஏற்றத் தாழ்வுடன் ட்யூன் செய்து கொள்ளவும். குழந்தையை, உங்கள் அருகிலே அமர/படுக்கச் சொல்லி, கதை சொல்லவும்.நீங்கள் படித்த, பார்த்த கதையை மட்டுமல்ல, உங்களது வாழ்வில் நிகழ்ந்த சுவையான விஷயங்களையும், நீங்கள் கதைகளாகச் சொல்லலாம்.

கதை கேட்கும் குழந்தைகளின் கற்பனா சக்தி பெருகுகிறது.கவனிக்கும் திறன் வளர்கிறது.கதைகள் பெற்றோரையும் குழந்தைகளையும் இன்னமும் நெருக்கமாக்குகின்றன. எப்போதும் ஓடித் துள்ளித் திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகள், ஒரு இடத்தில் அமர்ந்து கதை கேட்கையில்,கவனிப்பதற்கும், அமைதியாக மனதை கதையில் ஈடுபடுத்தவும் பழகுகின்றனர்.
அன்பு, கருணை, ஒத்திசைவு, அழகு, அமைதி போன்றவற்றை அறிய உதவும் கருவிகளாக, கதைகள் விளங்குகின்றன. கதை கேட்பது,கற்றலுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கிறது.புத்தகத்தில் பார்க்கும் படங்களையும், நாம் சொல்லும் கதையையும் தொடர்புப் படுத்த, குழந்தைகள் கற்கின்றனர்.இந்த விஷீவலைஸேசன் திறன், குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, அவர்களை மகிழ்விக்கவும், ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
கதைகள் கேட்பது, கதைகளில் இன்னமும் ஆர்வத்தை அதிகப்படுத்தி, பின்பு புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கும் அடிப்படைத் தளம் அமைக்கிறது.

கதை சொல்கையிலேயே, அவர்களைக் கேள்விகள் கேட்டு, முந்தின நாள் பாதியில் அந்தக் கதையை எங்கே நிறுத்தினீர்கள் என்றெல்லாம் கேட்பது, அவர்களது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.கதையில் அடுத்து என்ன நிகழும், எவ்விதமாக முடியும்? என்று அவர்களைக் கேட்பது, அவர்களது யூகிக்கும் திறனை வளர்த்து, படைப்பூக்கத்திற்கு வழி வகுக்கும். புதிய இடங்கள், புதிய கதாபாத்திரங்கள், செயல்கள் என்று கதைகள், குழந்தைகளுக்குப் புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தி, அறிவை விரிவாக்குகின்றன.பெரும்பாலான கதைகளில் நல்லது மற்றும் தீயவை இடம் பெறுவதால், கடைப் பிடிக்க வேண்டிய மற்றும் விலக்க வேண்டியவைகளைப் பற்றி அறிகின்றனர்.நம் தலைமுறையிலிருந்து, நமது அடுத்த தலைமுறையினருக்கு, நம் பண்பாடு, கலாச்சாரம் போன்றவைகளைக் கடத்தும் சங்கிலியின் கண்ணிகளாகக் கதைகள் உள்ளன.புதிய வார்த்தைகள், உணர்ச்சிகளைக் கதைகளில் இருந்து பெறும் குழந்தை, அவைகளைப் பயன்படுத்த முற்படுவதால் மொழித் திறன் வளர்கிறது
கற்கும் நேரம், விளையாடும் நேரம் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பது நாம் தான். குழந்தைகளுக்கு எல்லா நேரமும் விளையாட்டு நேரம் தான். எனவேதான், கதை சொல்லல் நிகழும் வேளையில் தான் அதிக பட்ச மொழியறிவை, குழந்தைகள் கற்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

WinnieThePooh-3.jpgகுழந்தைகளுக்குக் கதை சொல்ல சில எளிய டிப்ஸ்:
• கதைகள் சொல்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். இரவு படுக்கைக்கு முன் என்பது சரியாக இருக்கலாம்.தினமும் அந்த நேரத்தில் கதை சொல்வதென்பது ஒரு பழக்கத்தையும் ஒழுங்கையும் கொண்டு வரும். நாளெல்லாம் ஓடி விளையாடிக் களைத்த குழந்தைக்கு அது ஒரு நல்ல புத்துணர்வூட்டும் நிகழ்வாக இருக்கும்.கதையில் ஒருமுகப் பட்டு அமைதியான குழந்தையை, ஒன்றிரண்டு தாலாட்டுப் பாடல்களால் உறங்க வைப்பதும் சுலபம்
• குரலை வெவ்வேறு அளவுகளில் வேறுபடுத்தி, உயிர்ப்புடன், மாடுலேஷன் செய்யுங்கள்.ஒரே விதமான குரல் ஒலி சலிப்பையூட்டி, கதையை போரடிக்கச் செய்து விடும்.கதையில் வரும் மிருகம், பறவை, மனிதரகள் போல உங்கள் குரலை மிமிக்ரி செய்ய முயற்சிக்கவும்.

• ஒரு பெரிய திருப்பத்திற்கு முன் கொஞ்சம் நிறுத்தவும் (pause).இது, குழந்தைகளின் எதிர்பார்ப்பைத் தூண்டி, கதையின் மேலிருக்கும் ஆவலை அதிகரிக்கும்.

• கதைகளில் வரும் உணர்ச்சிகளான கோபம், பயம், அமைதி, மகிழ்ச்சி, ஏமாற்றம் போன்றவைகளை உங்கள் முகத்தில் காண்பிக்கவும்.உங்கள் குரலும், முக பாவனைகளுமே, குழந்தைகளை, கதை உலகத்திற்கு அழைத்துச் சென்று கதையை உயிர்ப்பிக்கின்றன.

• கதாபாத்திரங்களின் உடையை, முகமூடியை அணியுங்கள். கரடிக் கதை சொல்கையில், கரடியின் முகமூடி இருந்தால் அதை அணிந்து கொண்டு சொல்லுங்கள்.

• கதையில் வரும் செயல்களை, முடிந்தவரையில் நடித்துக் காட்டுங்கள். காக்கா, வடையை எடுக்கப் பறந்து வந்தது என்று என் கைகளை சிறகுகளாகப் பறக்க வைக்கையில், என் குழந்தையின் கைகளும் சிறகைப் போல ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். குரங்கு குல்லாவை எடுத்த கதையில் குல்லாவை நான் போட்டுக் கொண்டு சொன்னால், பக்கத்திலிருந்த பிளாஸ்டின் பாத்திரத்தை குல்லா போல அவனும் போட்டுக் கொள்வான்.

• கடல் பற்றிய கதைகள் என்றால், கடலில் இருந்து எடுத்த முத்து, சிப்பி, சங்கு போன்றவைகளைக் காண்பிப்பது,சங்கின் ஒலியைக் கேட்க வைப்பது, கடலின் அலையோசையைக் கேட்க வைப்பது, உங்கள் கதைக்கு மேலும் உயிரோட்டமாக இருக்கும்.இரவு நேரத்தில் காட்டில் நிகழும் ஒரு கதை என்றால், இரவு விளக்கை மட்டும் போட்டு விட்டு, வனத்தில் கேட்கும் விலங்கு, பறவை சத்தங்களை ஒலிக்கும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களைக் கூடப் பயன்படுத்தலாம்.

• உண்மைக்கும், புனைவு கதைகளுக்கும் அதிகம் வித்தியாசம் தெரியாத சிறு குழந்தைகளிடம் பெரும்பாலும் உண்மையான கதைகளையே, அல்லது உண்மைக்கு ஒட்டி வருகின்ற நிகழ்வுகளையே சொல்வது நல்லது. குழந்தைகளின் மனோ மாதிரி (mental model)உண்மையை அடித்தளமாகக் கொண்டு வளர்வதே சிறந்தது. குழந்தையின் மனது ஒரு பெரிய உறிஞ்சும் ஸ்பாஞ்ச் போல. நாம் சொல்லும் அனைத்து விஷயங்களையும் எந்த வடிகட்டியும் இல்லாது உண்மையென்று நம்பி விடும்.எனவே, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

• கூறிய கதைகளையே மீண்டும் கூறலாம். தவறில்லை; மேலும், “எந்தக் கதை சொல்ல?” என்று குழந்தைகளையே கூட கேட்கலாம்.

• கதையைக் கூறி முடித்த பின், ”இதனால் அறியப் படும் நீதி யாதெனில” என்றெல்லாம் சொல்லாமல், கதையின் படிப்பினையை அவர்களாகவே புரிந்து கொள்வதற்கு விட்டு விடவும்.
கதைகளைக் கேட்பது குழந்தைகளின் உரிமை. அதற்குத் தகுந்த நேரம் ஒதுக்கி, அவர்களுக்குக் கதைகள் சொல்வது, பெற்றோர்களாகிய நம் கடமை.

 

http://idlyvadai.blogspot.ch/2013/04/to-10.html

Link to comment
Share on other sites

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை 

 

ஒரு பிரபல நூடுல்ஸ் விளம்பரம் ஒன்றில்…

அம்மா கடைக்கு சென்றிருக்கையில், எதையாவது சாப்பிட நினைக்கும் பதின்ம வயது மகள், அந்த நூடுல்ஸ் பாக்கெட்டை எடுத்து, நூடுல்ஸ் உணவைத் தயாரித்து விடுகிறாள்.கடையிலிருந்த வந்த அம்மா அதை ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்க்கிறாள்.

மேற்கூறிய விளம்பர நூடுல்ஸ் போணியாகவே இல்லை. காரணம் இந்திய அம்மாக்களின் மைண்ட் செட். ”அதெப்படி, நான் இல்லாம என் குழந்தை, தானாகவே ஒரு சிற்றுண்டியை சமைப்பது?”

அப்புறம், அந்த விளம்பரத்தை, அம்மா, பசிக்குது என்று மகள் கேட்பது போலவும், இரண்டே நிமிடத்தில் அம்மா நூடுல்ஸைத் தயாரித்துக் கொடுப்பது போலவும் மாற்றியதும், விற்பனை படு ஜோராக உயர்ந்தது.

இப்போதும் நிறைய அம்மாக்கள், தனது பள்ளி, கல்லூரி செல்லும் மகள், மகன்களுக்கு காலை உணவை ஊட்டுவதிலிருந்து, ஷீ, சாக்ஸ் எடுத்து வைப்பது வரை எல்லாமே செய்கிறார்கள்.( நான் இல்லேன்னா அவ(னு)ளுக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.

ஆனால், நம் குழந்தைகளை சுயசார்புடையவர்களாக மாற்றுவது,,வெற்றிகரமான குழந்தை வளர்ப்பில் ஒரு முக்கியமான இலக்காகும்,பச்சிளம் குழந்தைகளாக இருக்கையில், போஷாக்கு, சுத்தம், நகர்தல் போன்ற எல்லாவற்றிற்கும் பெற்றோரையே சார்ந்திருக்கின்றனர்.ஆனால், வளர, வளர, குழந்தைகள் வாழ்வின் அடிப்படை விஷயங்களான உணவு உண்ணுதல் போன்றவற்றைத் தாமே செய்யப் பழகினாலும், அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல், ஒத்துழைப்பு போன்றவைகளுக்கு பெற்றோரையே சார்ந்து இருக்கின்றனர்.

குழந்தைகளை எல்லா முடிவுகளையும் எடுக்க வைத்து,அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுப்பது அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதுடன், சிலசமயம், தவறான முடிவுகளுக்கு வழிகோடலாம்.அதே சமயம், பெற்றோர்களாகிய நாம், நமது அனுபவத்தை மட்டுமே முன்னிறுத்தி, அவர்கள் எல்லா விஷய்ங்களுக்கும் நம்மையே சார்ந்திருக்குமாறு செய்வது,அவர்களுக்காக நாமே எல்லா விஷய்ங்களையும் செய்வது அவர்களது முடிவெடுக்கும் திறனையும், சுயசார்புத் திறனையும் வளர விடாது நசுக்கி விடும்.

இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலைத் தன்மையைக் கடைப்பிடிப்பது, அந்தந்த வயதுக்கேற்ற சுயசார்புத் தன்மையைப் பயிற்றுவிப்பது உங்கள் குழந்தையை ஒரு சுயசார்புள்ள, வெற்றியாளராக உருவாக்க உதவும்.

ஒவ்வொன்றாகக் கற்பிக்கவும்:

உங்கள் குழந்தைகளுக்கு செய்யும் எந்த ஒரு விஷயத்தையும், நீங்கள் மெதுவாக , குழந்தை அதை நன்கு கவனித்துக் கற்றுக் கொள்ளும் வகையில் நிதானமாக செய்யவும். உதாரணத்திற்கு, சாக்ஸ் அணிவிக்கிறீர்கள் எனில், நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தை கவனிக்க ஊக்குவியுங்கள். சாக்ஸின் உள், வெளி பக்கத்தை விரித்துக் காட்டி, சரியான, பக்கத்தைக் காட்டவும். சாக்ஸை மெதுவாக அணிவித்து, அடுத்த முறை உங்கள் குழந்தையையே அணியச் சொல்லவும்.

பொறுமையுடன் இருக்கவும்:

ஷீ லேஸை உங்கள் குழந்தை கட்டுகையில், அவனருகில் நின்று கவனிக்கவும்.மெதுவாக, பொறுமையாக அவன் கட்டி முடிக்கும் வரை அமைதி காக்கவும். தவறாக செய்தால் மட்டும், எப்படி சரியாக செய்வது என்று சொல்லிக் கொடுங்கள்.இன்னொரு முறை நீயாகவே செய்கிறாயா? என்று கேட்டு மீண்டும் செய்யச் சொல்லவும்.

கவனிக்கவும்:

இப்படியாக குழந்தையை , பல்விளக்குவது, உடைகள் அணிவது, சாப்பிடுவது, என்று ஒவ்வொரு விஷயமாக செய்யச் சொல்லி ஊக்குவித்து, அவன் அதை செய்கையில் கவனித்து வரவும். தவறாக செய்கையில் அதைத் திருத்துவதை விட, முதலிலேயே, அதை எப்படி சரியாக செய்வது என்று நீங்கள் ஒரு முறை பொறுமையாக சொல்லிக் கொடுத்தால், குழந்தை அதை சுலபத்தில் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

முதல் பனிரெண்டு மாதங்களில், குழந்தை, பொம்மையைப் பிடிக்கையில், புரண்டு படுக்கையில்,கிலுகிலுப்பையை அசைக்கையில், சப்தம் எழுப்ப முயற்சிக்கையில், உட்கார முயல்கையில், பிடித்துக் கொண்டு எழுகையில் உண்மையான உற்சாகத்துடன் அதைப் பெருமிதமாக ஊக்குவிக்கவும்.

இரண்டு வயதுக்கு மேலான குழந்தைகளை செருப்பு,ஷீ அணியச் சொல்வது, தானாக உணவு உட்கொள்வது, சிறிய பிளாஸ்டிக் பாத்திரங்களை, அதனிடத்தில் வைக்கக் கற்றுக் கொடுப்பது உடைகளை அணியச் செய்தல் போன்ற செயல்களை நம்முடைய கண்காணிப்பில் செய்யச் சொல்லலாம். முதலில் தடுமாறும் குழந்தைகள், அடுத்தடுத்த முறைகளில் தேர்ச்சி பெற்று, எளிதில் இவைகளை செய்ய இயலும். இம்மாதிரி செயல்களில், சின்னச் சின்ன ஏமாற்றங்கள் நிகழலாம். பரவாயில்லை என குழந்தை அதை அனுபவிக்க அனுமதிக்கவும்.

மூன்று /நான்கு வயதிற்கு மேல் ஆன குழந்தைகள் தினசரி செயல்களான, பல் விளக்குதல், உடைகளை அணிதல், பொம்மைகளை எடுத்து வைத்தல், பழங்களைக் கழுவுதல் துணிகளை எடுத்துப் போடுதல் போன்ற சின்னச் சின்ன வேலைகளை எளிதில் செய்வர்.இதை வேலையாக செய்யச் சொல்லாமல், அவர்களது செயல்திறனை வளர்க்கும் பயிற்சியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்,. ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்னரும் அவர்களைப் பாராட்டி உற்சாகப் படுத்துங்கள்

உங்கள் குழந்தை, ஏதேனும் உதவிக்கு, உங்களை அழைக்கையில், அதைச் செய்வதற்கு முன், ”என் உதவி இல்லாமல் இதை அவன் வேறு ஏதும் முறையில் செய்ய முடியுமா?” என்று கேட்டுக் கொண்டு , மாற்று வழிகளைப் பற்றி யோசிக்கவும்.

வெவ்வெறு வகையான விருப்பத் தேர்வுகளை (choices) உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கவும். என் ஒன்றரை வயது மகனிடம், எந்த ரைம்ஸ் வேண்டும் என்றால், முதலில் சொல்வது ”இலா லா” என்பான். (நிலா நிலா ஓடி வா) அடுத்து என்ன வேண்டும் என்று கேட்டால், ”பஃப்” என்பான் (the wheels on the bus) ”பஸ்” என்று இன்னும் சொல்லப் பழகவில்லை. எந்த விளையாட்டு விளையாடலாம், எந்த நர்சரி பாடல் பாடலாம், மிருகக் காட்சிச் சாலைக்குப் போனால், அவனுக்கு இஷ்டமான எந்த விலங்கை முதலில் பார்க்கலாம், பெட் டைம் ஸ்டோரியாக எந்தக் கதைப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று இப்போதிருந்தே பல சாய்ஸ்கள் கொடுத்து தேர்ந்தெடுக்கச் சொல்லவும்.

இன்னிக்கு ப்ளூ சர்ட்டா, க்ரீன் ஷர்ட்டா?. தோசை வேணுமா? சப்பாத்தி வேணுமா? என்கிற கேள்விகளைக் கேட்டு அவனையே முடிவெடுக்கச் சொல்லுங்கள். இது போன்ற சமயங்களில் நாம் கொடுக்கும் சாய்ஸ்களை இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும். நான்கைந்து சாய்ஸ்கள் அனாவசியம் மற்றும் தேவையற்ற குழப்பத்தைக் கொடுக்கும்.

குழந்தையிடம் நடத்தும் உரையாடல்கள் மூலம் அவனது சிந்தனையைத் தூண்டி விட்டு சின்னச் சின்ன விஷய்ங்களில் முடிவெடுக்கும் திறனை மெல்ல மெல்ல வளர்க்கவும்.முக்கியமாக,.

வளரும் குழந்தை முடிவெடுக்கும் ஒவ்வொரு சாய்ஸிலும் இருக்கும், நன்மை, தீமை, சாதக பாதகங்களை அறியக் கற்றுக் கொடுக்கவும்.

குழந்தை வளர வளர, நீங்கள் அதற்குக் கொடுக்கும் சுதந்திரத்தின் அளவையும் அதிகரிக்கலாம்.

பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த குழந்தைகளை, அவர்கள் செய்ய இருக்கும் பல்வேறு செயல்களை ஒரு லிஸ்ட் போடச் சொல்லி, ஒவ்வொன்றாக அவர்கள் அதை செய்து முடிக்கையில் அதை டிக் பண்ணச் சொல்லுங்கள்.

தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின் விளைவுகளை குழந்தைகளை உணருமாறு செய்யவும். 

சுயசார்புத் தன்மையை வளர்க்கையில் உங்கள் சட்ட திட்டங்களை தெளிவாக சொல்லி விடுங்கள். உதாரணத்திற்கு, சாலையைக் கடக்கையில் என் கையை கண்டிப்பாகப் பிடித்துக் கொள்ளவும்.இந்த ரூல்ஸ்களில் எந்த மாற்றத்தையும் எதிர் பார்க்க முடியாது என்று உங்கள் குழந்தைக்கு தெளிவாக உணர்த்தி விடவும்,

சுயசார்புத் தன்மையை வளர்க்க, குழந்தைகளின் மொழித் திறனை நன்கு வளர்க்க வேண்டும். பள்ளியிலோ, நண்பர்களுடன் விளையாடுகையிலோ, தனக்கு வேண்டிய உதவியை ஆசிரியர்களிடமோ, நண்பர்களிடமோ, கேட்பதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், இது எல்லா நேரங்களிலும் அம்மாவையே எதிர்பார்க்கும் சார்புத் தன்மையைக் குறைக்க உதவும்

”இந்த செயலை செய்தால், உனக்கு இதைத் தருகிறேன்” என்று எல்லா விஷயங்களுக்கும் திருமங்கலம் ஃபார்முலா டீல்களை குழந்தைகளிடம் போடாதீர்கள். நல்ல விஷயங்களைச் செய்து முடிப்பதால் வரும் நேர்மறை உணர்வும், வெற்றிகரமான மனநிலையுமே எப்போதும் சிறந்த ஊக்குவிப்பாக இருப்பது நல்லது.

சுயசார்புத் தன்மையுள்ள குழந்தைகள் பின்னாளில், தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்க்கவும், தாங்கள் மேற்கொள்ளும் விருப்பத் தெரிவின் பின் விளைவுகளை அறிந்து நல்ல தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் வளர்கின்றன.

தீர்மானங்கள் சின்னதோ, பெரியதோ, வீட்டிற்கோ, நாட்டிற்கோ அதனதன் அளவில் நம்மை பாதிக்கின்றன.

 

http://idlyvadai.blogspot.ch/2013/04/to-11.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

குழந்தைகளுடன் உணவு நேரத்தைப் பகிரும் பெற்றோரா நீங்கள்..?

 

food_jpg_629140f_2068305h.jpg
கோப்புப் படம்.

குழந்தைகளுடன் உணவு நேரத்தைப் பகிரும் பெற்றோரா நீங்கள்..? உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள் என்கிறது ஓர் ஆய்வு.

வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவது, முக்கியமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் இணைந்து சாப்பிடும் பழக்கம், அவர்களின் உணவுப் பழக்கத்தை மேம்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.

நியூயார்க்கில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், வீட்டில் உணவு நேரத்தின்போது, குழந்தைகளுடன் பெற்றோர் அமர்ந்து தங்களது நேரத்தை பகிர்ந்துகொள்வதால், குழந்தைகளிடையே துரித உணவுகளின் மீதான ஆர்வம் குறைவதாக தெரிய வந்துள்ளது.

இதனால், பெற்றோர்கள் தங்களது நேரத்தை குழந்தைகளுக்காக செலவிடுவதை, குழந்தைகள் உணர்வதற்கு வாய்ப்பாகவும் அமையும். குடும்பத்தினர் அனைவரும், ஒரே நேரத்தில் உணவு உட்கொள்வதால், தன்னை மறந்து அதிக உணவு சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் உண்டாகும் என்கிறார் ஆய்வாளர் மொலி மார்டின்.

மேலும், "குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவதனால், அவர்களுக்கு துரித உணவுகளின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதால், மற்ற நேரங்களில் துரித உணவு மீது ஆர்வம் போகாது. இதனால் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்களின் உடல் எடைக் கூடுவதை தவிர்த்திடலாம்.

முக்கியமாக உணவு நேரத்தின்போது, குழந்தைகளுடன் தந்தை இருப்பது மிகவும் சிறந்தது. நாங்கள் 16,991 இளம் பருவத்தினரிடையே மேற்கொண்ட ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளோம்.

தந்தை இருக்கும்போதுதான், குழந்தைகள் தங்களது வீட்டில் உள்ள பழங்களை சாப்பிடுகின்றனர்" என்றார்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு முடிவு, சமீபத்தில் அமெரிக்க சமூகவியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் பகிரப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6335164.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் வீட்டில் நின்றால்
சாப்பிடும் போது எல்லொரம் ஒன்றாக மேசைக்கு கண்டிப்பாக வரணும்
அனைவரது தொலைபேசிகள்  நிறுத்தப்படணும் என்பது உத்தரவு
 
ஆனால் இவற்றை  வாசித்தபோது
எம்மவர்  நான் உட்பட  பிள்ளைகளுடன் அதிக நெரத்தை செலவிடுவதில்லை என்பது தெரிகிறது
(அகதியாக வந்த ஒரு அபலையின் ஏக்கம் இது)
 
மிகவும் பயனுள்ள ஓர் தொடர் ..........
நிறைய விடயங்களை மீண்டும் அசைபோட கூடியதாக இருந்தது. எல்லா பெற்றோரும் வாசிக்க வேண்டும் 
 
 
Link to comment
Share on other sites

நல்ல ஆக்கங்களை தொடர்ந்து இணைக்கும் ஆதவனுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

 

இந்தக் கிழமை ஆறுதலாக வாசிப்பேன்.

Link to comment
Share on other sites

பிள்ளைகளுடன் நாம் எவ்வளவு நேரம் பயனுள்ளதாகக் கழிக்கிறோமோ அவ்வளவு நல்ல பிள்ளைகள் உருவாகுவார்கள்.  முக்கியமாக முதல் ஏழெட்டு வயது வரை நாம் (யாராவது ஒரு பெற்றோராவது) முழுநேரமும் பிள்ளைகளுடன் பிள்ளையாக உறவாடினால் பிற்காலத்தில் அவர்கள் மிகவும் சிறந்து விளங்குவார்கள்.  

Link to comment
Share on other sites

குழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து காக்கிறது தினசரி காலை உணவு

 

child_2046926h.jpg
(கோப்புப் படம்)

குழந்தைகள் தினமும் காலை உணவைப் புறக்கணிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும், ஏனெனில் ஆரோக்கியமான காலை உணவு குழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கிறது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பல்கலைக் கழக மருத்துவ ஆய்வு இதனைத் தெரிவித்துள்ளது.

"காலை உணவு குழந்தைகளுக்கு மிக முக்கியமானது, குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் டைப்-2 சர்க்கரை நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது” என்று இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் அஞ்சேலா டோனின் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஆரம்பக் கல்வி பயிலும் 4,116 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களிடம் காலை உணவு தினசரி எடுத்துக் கொள்கிறார்களா என்றும் என்ன வகையான உணவு எடுத்துக் கொள்கிறார்கள் என்று கேட்கப்பட்டதோடு, இவர்களுக்கு சர்க்கரை நோய்க்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் குழந்தைகளில் 26% தாங்கள் காலை உணவு எடுத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்தனர். இவர்களைப் பரிசோதனை செய்ததில் டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளது.

இந்தியக் குழந்தைகளுக்கும் இந்த ஆய்வு மிக முக்கியமானது. ஏனெனில் காலையில் எழுந்தவுடன் பள்ளிக்கு அவசரம் அவசரமாகக் கிளப்புவதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துகின்றனர். 8 மணிக்கு ஆட்டோ வந்து விடும், வேன் வந்து விடும் என்று அவசரம் அவசரமாக நூடுல்ஸ் போன்ற உணவுகளை கொடுப்பதைப் பார்க்கிறோம்.

காலையில் ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது குழந்தைகளை மிகச் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆட்படாமல் தடுக்கும் வழி என்று இந்த ஆய்வு தற்போது தெரிவித்துள்ளது.

 

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/article6376527.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

குழந்தை வளர்ப்பில் தொலைக்காட்சியை அணுகுதல்

 

tv_jpg_1598989h.jpg

 

பூனே பயணமொன்றில் அண்ணனுடைய வீட்டில் தங்க நேரிட்டது. அண்ணன் மகளுக்கு அப்போது நான்கு வயது. கார்ட்டூன் டீவியின் விரும்பியாக இருந்தாள். ஆனால் இரவு ஒன்பதானதும் அண்ணி 'அனுமிதா,கரன்ட்டு கட், வந்து தூங்கு' என்றார். அவளும் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுவிட்டாள்.

எங்கள் குழந்தை குழலிக்கு அச்சமயம் எட்டு மாதம் தான். அதே உத்தியை நாங்களும் கையாள்வோம் என நினைத்தும் பார்க்கவில்லை. வேறு வேறுகாரணங்கள் கூறி டீவி பார்ப்பதைக் குறைக்கிறோம்.

தொலைகாட்சியை நிறையப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று போதிய அளவு இந்நேரம் பயமுறுத்தி இருப்பார்கள். குழந்தைகள் குண்டாவார்கள், ஒழுங்காக அமரத் தெரியாது. கண்கள் பாதிப்படையும், நொறுக்தீனியை நிறைய உண்பார்கள், மூளை வளர்ச்சியில் பாதிப்பு, அடம் அதிகமாவது, கெட்ட விஷயங்களை நிறைய உள்வாங்குகின்றனர்.. இப்படி ஏராளம் ஏராளம்.

சரி அதற்காகத் தொலைக்காட்சியை நிராகரித்து விட முடியுமா? புதிய தொழில்நுட்பத்தை ஓரம் கட்டிவிடமுடியுமா? உண்மையில் குழந்தை வளர்ப்பில் தொலைக்காட்சியை எப்படித்தான் அணுகுவது?

குழந்தைகள் தொலைக்காட்சியின் அடிமையாகப் போவதற்கான அடிப்படை காரணங்கள் என்ன? பெற்றோர்களின் பொறுமையின்மை மற்றும் நேரம் செலவழிக்க முடியாத போக்குமே பிரதான காரணங்கள். டீவியைப் போட்டுவிட்டு நம் வேலையைச் செய்யலாம் என்ற விஷயத்தில் ஆரம்பிக்கின்றது விபரீதம்.தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் நுழைந்துவிட்டால் அது அவர்களை இழுத்து சாப்பிட்டுவிடும். அவ்வளவு திறமையான வஸ்துக்கள் உள்ளே இருக்கின்றது.

 

* நாள் ஒன்றிற்கு இத்தனை நிமிடம் / மணி என்ற கட்டுப்பாடு ஆரம்பத்தில் இருந்தே அமலுக்கு வர வேண்டும். இது மிக அவசியம்.

 

* என்ன நிகழ்ச்சி , எந்தச் சேனலைக் குழந்தைகள் பார்க்கலாம் என்ற தேர்வு பெற்றோர் கையில் உள்ளது. அதனைப் பார்க்க மட்டும் அனுமதிக்க வேண்டும். அந்தச் சேனலை டீவி பெட்டியில் ட்யூன் செய்து வராமல் செய்துவிடலாம்.

சில நிகழ்ச்சிகளில் / சேனல்களில் மொழி மிக மோசமாக உள்ளது. சில நிகழ்ச்சிகள் இன்னும் வளர்ந்துவிட்ட பின்னரே பார்க்கலாம் என்றும் இருக்கும்.

 

* தொலைக்காட்சியைப் பார்த்து என்ன உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பரிசோதனைச் செய்ய வேண்டும். எப்படி? அது பரிசோதனை என்று அவர்களுக்குத் தெரியக்கூடாது. நிகழ்ச்சியின் பெயரைக்கூறி அதில் வரும் கதையினைக் கூறச் சொல்ல வேண்டும். குழந்தைகள் அவர்கள் பார்த்ததைக் கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உள்வாங்கியதில் கதை, வார்த்தைகள், கருத்துகள், புதிய மிருகங்கள், பெயர்கள் ஆகியவை பெற்றோருக்கு விளங்கும். அவற்றைப் பற்றிய புரிதலும் பெற்றோருக்கு அவசியம்.

 

* கார்ட்டூன் கேரக்டர்கள் மீது மோகம் வராமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். நமக்குத் தெரியாமல் அது ஒருவியாபார பொருளாகி வருகின்றது. டோரா, சோட்டா பீம், வேர்டுகேள் போன்றவை பொதிந்த பொருட்கள் குழந்தைகளைக் குறிவைத்து தினமும் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன. டிபன் பாக்ஸ், ஸ்டிக்கர், கர்சீப்,செருப்பு, ஷுக்கள், ஆடைகள் எனக் குழந்தைப் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களிலும் நுழைந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

 

* நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை சுயநினைவுடன் தவிர்க்கவும்.

 

* முடிந்தமட்டில் குழந்தைகள் டீவி பார்க்கும் போது பெற்றோர் யாரேனும் ஒருவர் உடன் அமர்வது சிறந்தது. உங்கள் இருப்பு அங்கே முக்கியம்.

 

* டீவியில் காட்சி ஓடும்போதே நீங்கள் கண்களை மூடிக்கொண்டு, குழந்தையை விவரிக்க சொல்லுங்கள். ஆரம்பத்தில் கடும்தடுமாற்றம் இருக்கும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு குழந்தை கண்ணை மூடிவிட்டு, நீங்கள் விவரியுங்கள். அந்த விவரிப்புகள் குழந்தைகள் என்னென்ன கவனிக்கலாம் என்பதை விளக்க வேண்டும்.

தொலைக்காட்சியைக் கொண்டு நிச்சயம் இந்த உலகின் விஸ்தாரத்தை, பிரம்மாண்டத்தை, அழகினை,தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, வாழ்கையில் வேண்டிய நம்பிக்கையைக் குழந்தைகளுக்குக் காட்டலாம். கற்பனை வளத்தைக் கூட்டலாம். உடனடியாக நேரில் காண முடியாததை காட்சிகளைக் காட்டலாம்.

 

குழந்தையை இப்படி கூடவே இருந்து வளர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அவர்கள் கையில் தொடப்போவது கத்தி என்றால் கொஞ்சம் உஷாராக இருப்பதில் தவறில்லை. கத்தியினைக்கொண்டு ஒழுங்காக பயன்படுத்துகின்றார்களா என்பதினை கவனிக்க வேண்டியது நம் பொறுப்பு.

மீண்டும் முன்னர் கூறியதைப்போல நிறைய பொறுமையையும், குழந்தைகளுடன் தரமான நேரத்தையும் பெற்றோர்கள் செலவிடவேண்டும். அந்த அடிப்படை புரிந்துவிட்டால் குழந்தை வளர்ப்பு சுகமானது. இடர்கள் எழும், சமாளித்துவிடலாம்.

குழந்தை வளர்ப்பினை மகிழ்வாய் கொண்டாடி மகிழுங்கள்.

 

விழியன் - வலைப்பதிவுத் தளம் http://vizhiyan.wordpress.com

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article5175496.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

பெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்?

 

Education is the basic importance in the planned development of a nation” - First Five Year Plan

“Education is the most crucial investment in human development. Education influences improvement in health, hygiene, demographic profile, productivity and all that is connected with the quality of life.” - The Ninth Five Year Plan

ஐந்தாண்டு திட்டங்களில் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதைப் போலவே பெற்றோரின் மனநிலையிலும் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறுவதற்கான வந்த சிலர், படிவத்தில் எழுதப்பட்டிருந்த மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி போன்றவற்றை சரிப்பார்த்து கையெழுத்து போட்டு விட்டு, இப்போது பிள்ளைகள் எவ்வாறு படிக்கின்றனர் என்று கேட்டனர். மேலும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளும் படியும் கூறிச்சென்றனர்.

 

ஆனால், வேறு பல பெற்றோரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படிவத்தில் கையொப்பமிட்டு பெரும்பாலான பெற்றோர் ஏதாவது குறை கூறினால்தான் தன்னை அக்கறையுள்ள பெற்றோராக கருதுவர் என்பதைப்போல விதவிதமாய் பிள்ளைகளின் மீது தேவையற்ற குற்றசாட்டுகளை வைத்தனர்.

அவற்றில் சில...

 

“என் மகள் எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறாள்.”

“என் மகன் என்னை டிவி பார்க்கவே விடுவதில்லை.”

“கையெழுத்தே சரியில்லை.”

“ஒரு மதிப்பெண்ணில் முதல் ரேங்க்-ஐ தவறவிட்டாள்”

 

தற்போதைய மாணவர்களைவிட பெற்றோரின் மனநிலையே கவலை தருவதாய் இருக்கின்றது. கையெழுத்தே சரியில்லை என்று மகளை குறைகூறிய தந்தைக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. ஏனெனில், அப்பெண்ணின் கையெழுத்து அவ்வளவு அழகு கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல. அப்பெண்ணிடம் விசாரித்ததில் அவர் பொறியியல் முடித்துவிட்டு செங்கல் சூளை நடத்துவதாய் தெரிவித்தாள்.

 

ஓ! இவர் தன்னுடைய நிறைவேறாத ஆசையை பெண்ணின் மீது திணிக்கிறார் என்று புரிந்தது.

பெற்றோர் பலரது மனநிலை இப்படித்தான் இருக்கிறது. ராணுவ வீரர் ஒருவர் வந்தார். என் மகள் 90% மார்க் வாங்கவில்லை என்று குறைபட்டார். அவளது உள்வாங்கும் திறன் அளவுக்குத் தானே அவள் மதிப்பெண் பெற முடியும் என்றேன். அது அவருக்கு புரிந்தது போலவே தெரியவில்லை. அதற்கும் மேல் Attitude, Aptitude, Individual Difference என்று அவருக்கு பாடம் நடத்தி புரியவைக்க எனக்கு நேரமில்லை.

 

அடுத்து வந்தவர், இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார். படிவத்தில் கடகடவென கையெழுத்திட்டு நீட்டியவர், 'நேற்று ஏதோ National Level Talent Test' என்று சொல்லியனுப்பியிருந்தீங்களே, அதைப் பற்றி சொல்லுங்க' என்று பரபரத்தார். 'அதற்கு முன் உங்கள் மகன் State Level Talent Exam-ல் qualify ஆயிருக்கான். அதற்காக அவனுக்கு 1000 ரூபாய் Cheque வந்திருக்கு. அதைப் பாருங்க' என்று கூறி, 'அப்பாவிடம் அதை காட்டுப்பா சந்தோஷப்படுவார்' என்றேன்.

 

மூச்சிரைக்க வகுப்பறையிலிருந்து எடுத்துக்கொண்டு ஓடிவந்தான் பிள்ளை. அதை கையில் வாங்கி வைத்துக்கொண்டு மீண்டும் அந்த Exam-ஐ பற்றி சொல்லுங்க என்றார். என்ன மனிதர் இவர். கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு! பிள்ளை எத்தனை பெரிய சாதனை செய்துவிட்டு அருகில் நிற்கிறான். முதலில் பெருமிதத்துடன் அவனிடம் கைகொடுத்து வாழ்த்தி அவனுக்கு ஒரு சிறு அங்கீகாரத்தையும் கொடுக்காமல் அடுத்து என்ன என்ன என்று நிற்கிறாரே என்று மிகவும் வருத்தமானது.

 

‘நீங்கள் ஹெட்மாஸ்டரைப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தேன். அவர் அங்கேயும் அதைப்போலவே காரியத்திலேயே கண்ணாக இருந்ததைப் பார்த்த தலைமை ஆசிரியர் முதலில் பிள்ளைக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்லுங்கள் என்று வற்புறுத்திய பிறகே கைகுலுக்கி இருக்கிறார். இந்த தந்தையிடம் அந்த பிள்ளை எப்படித்தான் இருக்கிறானோ. இந்த ஆள் வீட்டிலும் இப்படித்தான் போல, அதான் பிள்ளை வாயே திறக்கிறது இல்லையோ என்று கூறி வருத்தப்பட்டார் தலைமை ஆசிரியர்.

 

“கல்வி என்பது போரையும் வறுமையையும் அறியாமையையும் போக்குவதற்காகவும், மக்களிடையே ஒற்றுமையையும் பரந்த மனப்பான்மையையும் ஏற்படுத்துவதற்காகவும் அத்துடன் பொருளாதார வளர்ச்சிக்காகவும் தானே தவிர, கல்வி மட்டுமே ஒரு தனிச்சிறப்புமிக்க, அனைத்தையும் நிகழ்த்தக்கூடிய மாய உலகை அடைந்து விடும் வழியாகிவிடாது”என்கின்றன கல்விக்கொள்கைகள்.

 

அதுமட்டுமல்லாமல் எதனையும் விட முக்கியமானது தனி மனிதனின் ஆளுமையும் உளவியல் சார்ந்த நல் வளர்ச்சியுமே என்பதை பெற்றோர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் பிள்ளைகளை வெறும் மதிப்பெண் பெரும் எந்திரங்களாக பார்க்காமல் அவர்களது முழு உடல், உள மற்றும் ஆளுமை வளர்ச்சியில் அக்கறை செலுத்துவது ஒவ்வொரு பெற்றோரது இன்றியமையாத கடமை.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5117561.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்பிற்கு நன்றிகள்!
 
மிகவு தேவையான விடயங்களை வாசிக்க கூடியதாக இருக்கிறது.
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

குட்டிப் பார்வையாளர் (2 முதல் 5 மாதங்கள் வரை)

 

3_2121282h.jpg

 

புதிதாகப் பெற்றோர் ஆனவர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள்:

1.பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்ந்து பார்த்தல், தொடுதல் ஆகிய 5 ஐம்புலன்கள்-உணர்வுகள் மூலமே உலகை குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.

2.பெற்றோரின் குரல், சிரிப்பு ஆகியவற்றைப் பின்பற்றி, அதைத் தாங்களும் செய்து பார்க்கக் குழந்தைகள் குதூகலத்துடன் முயற்சி செய்வார்கள்.

3.குழந்தையை நம்முடன் அணைத்துக்கொள்ளும்போது மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை அவர்கள் ஒருசேர உணர்வார்கள்.

 

சுய உணர்வு: 

இப்போது குழந்தை தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு, அமைதியாவது எப்படி என்று கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்.

 

உடல்: 

குழந்தை தன் உடலைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிக்க வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

 

உறவு:

பெற்றோர் குழந்தையுடன் மென்மையாகப் பேசி, விளையாடினால் குழந்தைக்கு ரொம்பவும் பிடிக்கும்.

 

புரிதல்: 

சுவாரசியமான பொருள்களைக் கொடுக்கும்போது உலகை, உலகிலுள்ள பொருட்களைக் குழந்தை புரிந்துகொள்ள ஆரம்பிக்கும்.

 

கருத்துப் பரிமாற்றம்: 

குழந்தையைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி குழந்தையிடம் பேசுங்கள். குழந்தை பேசத் தொடங்கும் காலத்தில் பல சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த அனுபவம் உதவும்.

 

http://tamil.thehindu.com/general/health/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/article6436433.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்திருந்து புத்தகம் வாசியுங்கள்.
 
 
-பெருமாள்-
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சொந்தக் காலில் நிற்கும் பெருமிதம்(8 முதல் 13 மாதங்கள் வரை)

 

4_2142121h.jpg

 

இதுவரை தவழ்ந்து கொண்டிருந்த உங்கள் குழந்தை நாற்காலி, மேஜை, தொலைப்பேசி என கண்ணில் படும் பொருள்கள் அனைத்தையும் பிடித்திழுக்க முயல்கிறதா? அவற்றை பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயல்கிறதா? அப்படியானால் நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் இவை:

 

1.குழந்தை அனைத்தையும் ஆராய்ந்து, புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கும். இதனால் சில நேரம் குழந்தைக்கோ, மற்றவர்களுக்கோ காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், எதையும் எப்படி மென்மையாகத் தொடுவது என்பதைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள்.

 

2.எதை வைத்து விளையாடலாம் எனத் தானே தேர்வு செய்து, அந்தப் பொருளை எடுத்துக் குழந்தை விளையாடும் பருவம் இது.

 

3.தன் கையிலிருக்கும் பொருட்களைத் தூக்கி போட்டு, தூர எறிந்து விளையாடுவதன் மூலம் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் குழந்தை யூகிக்கத் தொடங்கும். பந்து போன்ற திரும்ப வராத பொருட்களையும் தூக்கி போட்டுப் பார்க்கும்.

 

சுய உணர்வு: நீங்கள் குழந்தையிடம் அன்பு செலுத்துவதன் மூலம், குழந்தையும் மற்றவர்களிடம் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளும்.

 

உடல்: இப்போது குழந்தை தானாகவே எழுந்து நின்று, நடக்க முயற்சிக்கும். ஆனால் உங்கள் கண்காணிப்பு அத்தியாவசியம். இல்லையென்றால், காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

 

உறவுகள்: குழந்தையை மற்றவர் கவனிப்பில் விட்டுவிட்டு பெற்றோர் வெளியே செல்லும்போது, ஆரம்ப நாட்களில் குழந்தை பெரிதும் ஏமாற்றம் அடையும். இந்த நிலையில் குழந்தையை ஏமாற்றிவிட்டு வெளியே செல்வதைவிட, குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் திரும்ப வந்துவிடுவேன் என்பதை விளக்கிவிட்டுச் செல்லுங்கள்.

குழந்தைக்கு அது புரியாது என்று நினைக்காமல், இதைச் செய்ய வேண்டும். காலப்போக்கில் நீங்கள் திரும்பி வந்துவிடுவீர்கள் என்பதை குழந்தை நம்பத் தொடங்கும்.

 

புரிதல்: குழந்தை, உங்களை எப்போதும் கவனித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் செய்வதை எல்லாம் செய்து பார்க்கும். அப்படித்தான் குழந்தை அனைத்தையும் கற்றுக்கொள்ளும்.

 

கருத்துப் பரிமாற்றம்: நீங்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களைக் குழந்தை தெளிவாகப் புரிந்துகொள்ளும். வார்த்தைகளைச் சொல்லிய பிறகு, அந்த வார்த்தைக்கான அர்த்தத்தைச் செய்துகாட்டி விளக்கவும் செய்யலாம்.

 

http://tamil.thehindu.com/general/health/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D8-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/article6476381.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)

 

9_2165624h.jpg

 

உருவத்தில் சிறியதாகத் தோன்றினாலும், உங்கள் குழந்தைக்குள் ஒரு விஞ்ஞானி உருவாகத் தொடங்கிவிட்டார். எதைக் கையில் எடுத்தாலும், இனிமேல் ஆராய்ச்சிதான். அப்படி என்றால் குளறுபடிகளும் நடக்கும் என்றும் அர்த்தம். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பின்வரும் குறிப்புகள் உதவும்.

 

1. மறைத்து வைக்கப்பட்ட பொருட்களைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது குழந்தையின் கற்றல் திறனும், நினைவாற்றலும் வளரும்.

 

2. அனைத்தையும் புரிந்துகொள்ளக் குழந்தை ஆவலாக இருக்கும். நீரை ஊற்றுதல், பொருட்களைக் கிளறுதல், பொம்மைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி விளையாடுதல் போன்ற செயல்பாடுகள் மூலம் குழந்தை அறிவியல்ரீதியாகச் சிந்திக்கத் தொடங்கும்.

 

3. துள்ளிக் குதிப்பது, தள்ளிவிடுவது, தன் பக்கமாக இழுப்பது என அசைவுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் குழந்தை முயற்சிக்கும்.

 

சுய உணர்வு: சாப்பிடுதல், பொருட்களை அடுக்குதல் எனத் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளக் குழந்தை முயலும். அத்தகைய நேரங்களில் பல குளறுபடிகள் நிகழ்ந்தாலும், அவற்றைச் செய்யக் குழந்தையை அனுமதித்தால் சீக்கிரம் நல்ல முன்னேற்றம் தெரியும்.

 

உடல்: குழந்தை மிகவும் துறுதுறுவென இயங்கும் பருவம் இது. புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்போது, குழந்தை சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடும்.

 

உறவுகள்: குழந்தையுடன் நீங்கள் விளையாடுவதன் மூலம், மற்றவர்களுடன் எப்படி விளையாடலாம் என்பதைக் குழந்தை தெரிந்துகொள்ளும்.

 

புரிதல்: சட்டை, பாவாடை, சாக்ஸ், ஷூ என வெவ்வேறு வகையான பொருட்களைப் பிரித்து வைத்து அடுக்குவதன் மூலம், தன் சுற்றுப்புறத்தைக் குழந்தை புரிந்துகொள்ளத் தொடங்கும். அப்படிச் செய்யும்போது எவையெல்லாம் ஒரே மாதிரியானவை, எவையெல்லாம் வித்தியாசமானவை, எது கடினமான பொருள், எது மென்மையான பொருள் என்பது போன்ற வேறுபாடுகளைக் குழந்தைக்கு விளையாட்டாகச் சொல்லிக் கொடுக்கலாம்.

 

கருத்துப் பரிமாற்றம்: குழந்தையுடன் சேர்ந்து பாடுங்கள். இசையின் மூலம் ஒரே நேரத்தில் சொற்கள், உணர்வு, மெட்டு, தாளம் போன்றவற்றைக் குழந்தை ஜாலியாகக் கற்றுக்கொள்ளும்.

 

http://tamil.thehindu.com/general/health/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-1-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/article6520796.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

குழந்தைகளின் உணவு முறையில் கவனம் செலுத்துகின்றீர்களா?

 

mom%20n%20baby.JPG

 

 

ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்­போது தனக்குக் குழந்தை பிறக்­கு­மென்று அவளின் முதல் எதிர்­பார்ப்புத் தொடங்கி விடும். வைத்­தி­யர்­களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்­போது அவ­ளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறு­வார்கள். இவ்­வாறு ஆர்­வத்­துடன் இருக்கும் ஒரு தாய் தன்­னு­டைய உடல் நலத்­திலும் குழந்­தையின் உடல் நலத்­திலும் மிகவும் கவனம் செலுத்­து­வது அவ­சியம்.

 
 
 
அந்த வகையில் கடந்த காலங்­களில் போசாக்­கற்ற தாய்­மார்­களும் குழந்­தை­களும் ஆரோக்­கி­யத்தில் மிகவும் மந்த நிலை­யி­லேயே உள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் கடந்த 17ஆம் திகதி சுகா­தார அமைச்சின் ஏற்­பாட்டில் கருத்­த­ரங்­கொன்று இடம்­பெற்­றது. இதன்­போது இலங்­கையை பொறுத்­த­மட்டில் 2007--2013 ஆண்டு காலப் பகு­தி­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வு­களின் பிர­காரம் ஏனைய உலக நாடு­க­ளையும் விட இலங்கை ஓர் ஆரோக்­கி­ய­மான நிலையில் காணப்­ப­டு­வ­தாக கருத்து தெரி­வித்­தி­ருந்­தது. அத­ன­டிப்­ப­டையில்,
சுகா­தார அமைச்சு கர்ப்­பிணி தாய்­மார்­க­ளுக்கும் அவர்­களின் குழந்­தை­க­ளுக்கும் பய­ன­ளிக்கும் வகையில் நல்ல பல கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தது.
 
ஒரு தாயாகப் போகும் பெண்­ணுக்கும் மற்றும் அவரின் கர்ப்­பப்­பையில் இருக்கும் குழந்­தைக்கும் பல பொருட்கள் தீங்கு விளை­விக்­கலாம். அதனால் கர்ப்­பி­ணிகள் சரும பரா­ம­ரிப்பு பற்றி மிகவும் கவ­ன­மாக இருக்க வேண்டும்.
 
இந்த சரும பரா­ம­ரிப்பு பற்­றிய தீர்­வு­க­ளினால் கர்ப்­பத்தை பாதிக்கும் கார­ணி­களை அறிந்துக் கொள்­ளவும் சரி­யான சரும பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பு­களை தேர்ந்­தெ­டுக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். கர்ப்­பிணிப் பெண்கள் ஹோர்­மோன்­களின் ஏற்ற இறக்­கங்கள் கார­ண­மாக சரு­மத்தின் உணர்­திறன் அதி­க­மா­வ­தற்கு ஆளா­வார்கள். இதன் விளை­வாக அவர்­க­ளது சருமம் கருமை அடைதல் மற்றும் நிற­மூட்­ட­லா­கி­றது.
 
கர்ப்­பிணி பெண்கள் அவர்­க­ளுக்கும் மற்றும் கரு­வி­லுள்ள குழந்­தையின் உடல்­நி­லைக்கு துன்பம் விளை­விக்க கார­ண­மாக இருக்கும் ஒவ்­வாமை பொருட்­க­ளி­லி­ருந்து கட்­டாயம் விலகி இருக்க வேண்டும்.
 
எப்­போதும் பயன்­ப­டுத்தும் பொருட்கள் பாது­காப்­பான பொருட்­க­ளாக உள்­ள­னவா என்றும் மற்றும் அது குழந்­தைக்கு எந்த எதிர்­வி­னையும் உண்­டாக்­காது என்­ப­தையும் உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.
 
பொது­வாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்­புள்ள உணவை உட்­கொள்­பவர் கர்ப்­பிணி தாய்­மா­ராக இருக்கும் பட்­சத்தில் கூடு­த­லாக 300 கலோரி சத்­துள்ள உணவு எடுத்துக் கொள்­வது அவ­சியம். அதா­வது, சரா­ச­ரி­யாக சாப்­பிடும் உண­வோடு வயிற்­றி­லி­ருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடு­த­லாகச் சாப்­பிட வேண்டும். காலை உண­வாக இட்லி, தோசை, சப்­பாத்தி அல்­லது அதற்கு இணை­யான சத்து தரும் ஓட்ஸ் அல்­லது சம்பா, கோதுமை, உப்­புமா என்று ஏதா­வது ஒரு உணவை அள­வோடு சாப்­பி­டலாம். மதிய உண­வுக்கு சோற்­றுடன் காய்­கறி ஏதேனும் ஒரு கீரை எடுத்துக் கொள்­ளலாம். அசைவம் சாப்­பி­டு­ப­வர்கள் என்றால் முட்­டையின் வெள்­ளைக்­கரு, மீன் போன்ற சத்­தான அசைவ உண­வொன்றை சேர்த்­துக்­கொள்­ளலாம். காலையில் எடுத்துக் கொண்ட அதே மாதி­ரி­யான அதே அள­வி­லான உண­வையே இர­வைக்கும் எடுத்­துக்­கொள்­ளலாம் என வைத்­திய நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.
 
ஒரு தாய் தன் போசாக்கு மட்­டத்­தினை பார்த்துக் கொள்­வ­துடன் தனது குழந்­தையின் வளர்ச்­சி­யிலும் கவனம் செலுத்­து­வது அவ­சியம். பிறந்த குழந்­தையின் நாக்கில் முதன் முதலாக தேன், சர்க்­கரை, பால் போன்­ற­வற்றைத் தடவும் பழக்கம் உள்­ளது. நாள்­பட்ட தேனாக இருந்தால் அதி­லி­ருக்கும் ஒரு வகை நச்சுக் கிருமி இளம் பிள்­ளை­வா­தத்­தைக்­கூட கொண்­டு­வ­ரக்­கூடும். எனவே அவ்­வா­றான விட­யங்­களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்­தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போது மிகவும் அவ­தா­னத்­து­டனும் அன்­பு­டனும் கொடுக்க வேண்டும் மாறாக கோபத்தின் உச்­சத்தில் இருக்கும் ஒரு தாய் தன் குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்­சி­யினால் ஏற்­படும் கெடு­தல்கள் அந்த பாலையே நஞ்­சாக்கி குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்­ப­டுத்தும். எனவே தாய்­மார்கள் பாலூட்டும் போது அமை­தி­யான சூழ்­நி­லையில் தாய்ப்­பா­லூட்ட வேண்டும் என்­கின்­றனர் மருத்­து­வர்கள்.
 
தாய்ப்­பாலைச் சேமித்துக் கொடுப்­பது நல்­ல­தல்ல. தவிர்க்­க­மு­டி­யாத பட்­சத்தில் சுத்­த­மான பாத்­தி­ரத்தில் சேக­ரித்துக் கொடுக்­கலாம். சாதா­ரண அறை வெப்­பத்தில் 6மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். தயிர் சாப்­பிட்டால் குழந்­தை­க­ளுக்குச் சளி பிடிக்கும் என்­பது தவறு. குழந்­தைக்கு தயிர் மிகவும் நல்ல உணவு. தயி­ரில் ­புரொ­ப­யோட்டிக் எனும் சத்து அதிகம். அது குட­லுக்கு மிக நல்­லது. குழந்­தைக்கு சரும மற்றும் உண­வு­களில் ஏற்­படும் அலர்ஜி வராமல் தடுக்கும்.
 
-4 மாதம் வரை­யான குழந்­தை­க­ளுக்கு தாய்ப்­பாலே சிறந்­தது. மேலும் இக்­கா­லப்­ப­கு­தி­களில் தாய் பால் மட்­டுமே குழந்­தை­க­ளுக்கு பருக்­க­வேண்டும். நிறைய ஆய்­வுகள் கூறும் ஒரு விடயம் தான் குழந்தை பிறந்த பின்னர் அவர்­க­ளுக்கு தாய்ப்­பா­லி­லேயே வேண்­டிய அனைத்து சத்­துக்­களும் கிடைத்து விடும். ஏனெனில் தாய்ப்­பாலில் அள­வுக்கு அதி­க­மான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்­துள்­ளது. மேலும் அந்த தாய்ப்பால் அவர்­களின் உட­லி­லுள்ள கழி­வு­களை வெளி­யேற்­று­வ­தோடு பிறந்த குழந்­தைக்கு மஞ்சட்காமா­லையை ஏற்­ப­டுத்தும் பிலி­ரூபின் என்னும் நிற­மியை வெளி­யேற்­றி­விடும். அதிலும் தாய்ப்­பாலை குறைந்­தது நான்கு மாதங்­க­ளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்­க­ளது உறுப்­புகள் அனைத்தும் வலு­வ­டை­வ­தோடு செரி­மான மண்­ட­லமும் நன்கு செயற்­பட ஆரம்­பிக்கும் என அறி­வித்­துள்­ள­தாக வைத்­திய நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.
 
மேலும் 4--6 மாதத்­திற்கு படிப்­ப­டி­யாக வளரும் ஒரு குழந்­தைக்கு வேறு உணவை சாப்­பி­டு­வதில் கவ­னத்தை செலுத்­து­வது போன்று தெரிந்தால் அப்­போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த உரு­ளைக்­கி­ழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்­பழம், பீச் பழம் போன்­ற­வற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். வாழைப்­ப­ழத்தில் இருக்கும் பொட்­டா­சியம் குழந்­தை­களின் மூளைத் திறனைத் தூண்­டு­கி­றது. இது மலச்­சிக்­கலைப் போக்கும். வாழைப்­பழம் சாப்­பிட்டால் சளி பிடிக்கும் என்­பதும் தவறு. மேலும் கடலை, பயறு, ஓட்ஸ், பார்லி என அழைக்­கப்­படும் வாட்­கோ­துமை போன்ற சத்­தான உண­வு­க­ளையும் சாப்­பிட கொடுக்­கலாம். அதிலும் இவர்­க­ளது ஆர்­வத்தை எவ்­வாறு தெரிந்து கொள்­வ­தென்றால் ஒரு நாளைக்கு 8---10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால் அப்­போது இந்த உண­வு­க­ளையும் தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்­திற்குப் பின் கொடுக்­கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
 
பின்னர் மெது­வாக வேக வைத்து மசித்த­ சோறு, காய்­க­றிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்­தையும் கொடுக்­கலாம். அதிலும் அவ்­வாறு கொடுக்கும் போது அவர்­க­ளுக்கு தாய்ப்பால் கொடுப்­பதும் அவ­சியம் என்­கின்­றனர் மருத்­து­வர்கள். குழந்­தை­க­ளுக்கு அந்த உண­வு­களால் ஏதா­வது அலர்ஜி போன்று வரு­கி­றதா என்று அவ்­வப்­போது கவ­ன­மாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்­வாறு வந்தால் உடனே அந்த உண­வு­களில் எவற்றால் ஆகி­றது என்று மருத்­து­வ­ரிடம் சென்று ஆலோ­சித்து அவற்றை தவிர மற்­ற­வற்றை கொடுக்­கலாம்.
 
தொடர்ந்து எட்டு மாதங்­களை கடக்கும் குழந்­தை­க­ளுக்கு சீஸ், தயிர் மற்றும் இரும்­புச்­சத்­துள்ள தானி­யங்­க­ளான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்­ற­வற்றை மெது­வாக கொடுக்க ஆரம்­பிக்­கலாம். அத்­துடன் 1/4 கப் புரோட்டீன் உண­வு­க­ளான முட்டை, மீன் போன்­ற­வற்­றையும் கொடுக்க ஆரம்­பிக்­கலாம்.ஒரு­வ­ரு­ட­கா­லத்தின் பின் அனைத்து உண­வு­க­ளையும் கொடுக்­கலாம். ஆனால் அது அள­வாக இருக்க வேண்டும்.
 
குழந்தை வளர்ப்பில் கவ­னிக்க வேண்­டி­யவை என பார்க்கும் போது சமைத்த உணவை 1½ மணி நேரத்­தி­லி­ருந்து 4 மணி நேரத்­துக்குள் சாப்­பிட கொடுக்க வேண்டும். இல்­லை­யெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்­மையை உரு­வாக்கும். இதனால் குழந்­தை­களின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்­பு­ணர்வு பாதிக்­கப்­படும். 8--9 வயதை அடைந்­த­வுடன் குழந்­தை­களை அதி­கா­லையில் எழுப்­புங்கள்.
 
அசைவ உணவு கொடுப்­பதை கூடி­ய­மட்டும் தவி­ருங்கள். எப்­போதும் புதி­தாக தயா­ரிக்­கப்­பட்ட உண­வு­க­ளையே குழந்­தை­க­ளுக்கு கொடுங்கள். வெள்ளைப் பூச­ணியின் சாறெ­டுத்து தேன் கலந்து தினமும் கொடுப்பது வளரும் குழந்­தை­க­ளுக்கு மிகச் சிறந்த ஊட்­டச்­சத்து உண­வாக இருக்கும். இதன் மூலம் அவர்­க­ளது கற்கும் திறனும் வளர்ச்­சியும் மேம்­படும். ஆஸ்­துமா போன்­ற­வற்றால் பாதிக்­கப்­பட்­டுள்ள குழந்­தை­க­ளுக்கு வெள்ளை பூசணியை தவிர்த்து விடலாம். குளிர்­பா­னங்கள், செயற்கை சுவை­யூட்­டிகள் மற்றும் நிற­மூட்­டிகள் கொண்ட மசாலா அடங்­கிய உண­வு­களை கடை­களில் வாங்கி குழந்­தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் தம்­மு­டைய கருத்­துக்­களை அவர்கள் மேல் திணிப்­பதை விட்­டு­விட்டு குழந்தை தனது திறனை தானே கண்­ட­றிய ஊக்­கு­விக்க வேண்டும்.
 
குழந்­தைகள் பரு­ம­னாக இருக்க வேண்டும் என்று அள­வுக்கு அதி­க­மாக உணவை கொடுத்­து­ உடல் எடையை அதி­க­ரிக்கச் செய்­வது மிகவும் தவ­றான விட­ய­மாகும். 60வயதில் வர வேண்­டிய பி.பி.சுகர் போன்­றவை 30வய­தி­லேயே அவர்­களை தேடி வந்துவிடும். ஒரு­வ­கையில் அவர்கள் பெரி­யவர்களா­னதும் இவ்­வா­றான நோய்கள் தாக்­கு­வ­தற்கு பெற்­றோரே கார­ண­வா­ளி­க­ளா­கின்­றனர்.
 
சமூ­கத்­தி­னரி­டையே தங்­க­ளு­டைய குழந்தை மிகவும் அழ­கா­கவும், கவர்ச்­சி­யான தோற்றம் கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­ட­வேண்­டு­மெ­னவே அநே­க­மான பெற்­றோர்கள் கரு­து­கின்­றனர்.
 
இதனால் அவர்கள் கையாளும் உணவு முறைகள் அவர்­களின் வாழ்க்­கை­யையே சூன்­ய­மாக்­கி­விடும் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லை. குழந்­தை­களை சீரான உடல்­வா­குடன் வளர்க்கப் பார்க்க வேண்­டு­மென வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.