Jump to content

உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம் -


Recommended Posts

உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம்
2014-07-18 10:09:03

 

உலக கிண்ணத்தை வென்ற பிலிப் லாஹ்ம் தலைமையிலான ஜேர்மன் கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டின்பின்னர் உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி கடந்த 20 வருடங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றமை  இதுவே முதல் தடவையாகும்.


முன்னாள் சம்பியனும் இதுவரை முதலிடத்தில் இருந்த அணியுமான ஸ்பெய்ன் தற்போது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா 5 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நெதர்லாந்து 3 ஆம் இடத்தையும் கொலம்பியா 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. பெல்ஜியம் 12 ஆவது இடத்திலிருந்து 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உருகுவே 6 ஆவது இடத்திலும் உள்ளன.


பிரேஸில் 7 ஆவது இடத்தையே பெற்றுள்ளது. ஸ்பெய்ன் 8 ஆவது இடத்திற்கு கீழிறங்குள்ளது.  சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் ஆகியன முறையே 9 மற்றும் 10 ஆவது இடங்களில் உள்ளன.

11 முதல் 20 வரையிலான இடங்களிலுள்ள அணிகளின் விபரம்:
(11) போர்த்துகல், (12) சிலி, (13) கிறீஸ், (14) இத்தாலி, (15, அமெரிக்கா, (16) கொஸ்டாரிக்கா, (17) குரோஷியா, (18) மெக்ஸிகோ, (19) பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா, (20) இங்கிலாந்து
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6218#sthash.siQhgdQF.dpuf

Link to comment
Share on other sites

ஜெர்மனி மீண்டும் நம்பர்–1
ஜூலை 17, 2014.

பாரிஸ்: ‘பிபா’ உலக கால்பந்து ரேங்கிங்கில் (தரவரிசை), ‘உலக சாம்பியன்’ ஜெர்மனி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

 

சர்வதேச கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, ‘பிபா’ நேற்று வெளியிட்டது. இதில், சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை தொடரின் பைனலில், அர்ஜென்டினாவை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி அணி, 20 ஆண்டுகளுக்கு பின், ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. கடைசியாக 1994ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

 

பைனல் வரை முன்னேறிய அர்ஜென்டினா அணி, 5வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறியது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில், பிரேசிலை வீழ்த்திய நெதர்லாந்து அணி 12 இடங்கள் முன்னேறி, மூன்றாவது இடம் பிடித்தது.

 

பிரேசில் பின்னடைவு:

அரையிறுதியில், ஜெர்மனியிடம் மோசமான தோல்வி கண்ட பிரேசில் அணி, 3வது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது.  இதனையடுத்து நான்கு இடங்கள் பின்தங்கிய பிரேசிலுக்கு 7வது இடம் கிடைத்தது. ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கி, முதல் சுற்றோடு திரும்பிய ஸ்பெயின் அணி, முதல் இடத்தில் இருந்து எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

 

அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் ஷூ’ விருது வென்ற ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் இடம் பெற்ற கொலம்பிய அணி, 4 இடங்கள் முன்னேறி 4வது இடம் பிடித்தது. ‘கறுப்பு குதிரை’யாக வலம் வந்த பெல்ஜியம் (5வது இடம்), இங்கிலாந்து, இத்தாலி அணிகளுக்கு ‘சிம்மசொப்பனமாக’ விளங்கிய உருகுவே (6வது இடம்) அணிகளும் முன்னேற்றம் கண்டன. மூன்று இடங்கள் பின்தங்கிய சுவிட்சர்லாந்து அணி 9வது இடத்தை பிடித்தது. ஏழு இடங்கள் முன்னேறிய பிரான்ஸ் அணி, 10வது இடத்தை கைப்பற்றியது.

போர்ச்சுகல் (11வது இடம்), இத்தாலி (14வது இடம்), அமெரிக்கா (15வது இடம்), இங்கிலாந்து (20வது இடம்) அணிகள் பின்னடைவை சந்தித்தன. லீக் சுற்றில், உருகுவே, இத்தாலி அணிகளை வீழ்த்தி, இங்கிலாந்துக்கு எதிராக ‘டிரா’ செய்த கோஸ்டாரிகா அணி, 12 இடங்கள் முன்னேறி 16வது இடம் பிடித்தது.

உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாத இந்திய அணி, 154வது இடத்தில் இருந்து 151வது இடத்துக்கு முன்னேறியது.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1405617075/klosegermany.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??  
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.