Jump to content

பிரேசிலுக்கு தீராத் துயரம்: நெதர்லாந்துக்கு உலகக் கோப்பை 3-ம் இடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலுக்கு தீராத் துயரம்: நெதர்லாந்துக்கு உலகக் கோப்பை 3-ம் இடம்

xfifa1_1998616h.jpg.pagespeed.ic.hj4p3kc

 

அரையிறுதிப் படுதோல்வி நினைவுகளும், காயங்களுமே மறையாதிருக்கும் வேளையில், பிரேசில் அணி அடுத்த அடியைச் சந்தித்தது. உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் 3ஆம் இடத்திற்கான ஆட்டத்திலும் பிரேசில் அணி படுதோல்வியைச் சந்தித்தது.

பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை ஊதித் தள்ளியது. இந்த முறை அந்த நாட்டின் கால்பந்து ஹீரோ நெய்மார் ஆட்டத்தைப் பார்க்க மைதானத்திற்கு வந்தார். அவர் கண்ணெதிரே இந்த அவலத் தோல்வி ஏற்பட்டுள்ளது பிரேசில் அணிக்கு.

அன்று டிஃபென்சில் ஏற்பட்ட இடைவெளி இன்னும் மறையவில்லை. ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திற்குள் நெதர்லாந்து அபாய வீரர் வான் பெர்சி பெனால்டி கிக்கில் முதல் கோலை அடித்தார்.

பிறகு மேலும் பழுதடைந்த டிஃபென்ஸ் காரணமாக டேலி பிளைன்ட் 17-வது நிமிடத்தில் 2-வது கோலை அடிக்க, இஞ்ஜுரி நேரத்தில் ஜியார்ஜீனியோ வைனால்டம் என்ற வீரர் 3-வது கோலை அடித்து பிரேசிலின் ஆழமான காயத்தில் மிளகாய்ப்பொடி தூவினார்.

சொந்த மண்ணில் அரிதாகவே தோற்ற பிரேசில் இப்போது அடுத்தடுத்து 2 போட்டிகளில் படுதோல்வி கண்டது. 1940-ற்குப் பிறகு 2 போட்டிகளை சொந்த மண்ணில் தோற்றுள்ளது பிரேசில்.

மேலும், இந்த உலகக் கோப்பையில் 14 கோல்களை வாங்கி இன்னொரு எதிர்மறை சாதனை படைத்துள்ளது பிரேசில். 1986ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு கோல்களை வாங்கியிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் போட்டிகளை நடத்தும் நாட்டைச் சேர்ந்த அணி இவ்வளவு கோல்களை வாங்கியதில்லை.

அன்று அர்ஜென்டீனா அணிக்கு எதிராக நெதர்லாந்து இதே ஆக்ரோஷத்துடனும் வேகத்துடனும் ஆடியிருந்தால் இரண்டு லத்தீன் அமெரிக்க அணிகளின் சாம்பியன் ஆசைகளும் நிராசையாகியிருந்திருக்கும்.

இத்தனைக்கும் ஆட்டம் நெதர்லாந்துக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் துவக்கவில்லை. அந்த அணியின் ஸ்னெய்டர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போக அவருக்குப் பதிலாக ஜொனாதன் டி கஸ்மன் என்பவர் விளையாடினார்.

பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரி 6 மாற்றங்களைச் செய்தார். கேப்டனும் தடுப்பாளருமான தியாகோ சில்வா அணிக்குத் திரும்பினார். ஆனால் தியாகோ சில்வாவின் தடுப்பாட்டமும் சோபிக்காத போன தருணத்தில்தான் 3 நிமிடத்திற்குள்ளாக வான் பெர்சிக்கு பெனால்டி வாப்பு கிடைத்தது.

நெதர்லாந்து அணி ஆட்டம் தொடங்கி ஒரு வேகமான மூவில் பந்து வான் பெர்சிக்கு வர அவர் அதனை அர்ஜென் ராபினுக்கு பாஸ் செய்தார் அங்கு தியாகோ சில்வா அவரை தவறான பகுதியிலிருந்து தடுக்க நினைத்தார், ராபினுக்கு அது நேரடியான கோல் வாய்ப்பாகும், ஆனால் தியாகோ சில்வா அவரைப் பிடித்தி இழுத்தார் இந்த போராட்டம் பாக்ஸிற்கு வெளியேயிருந்து பெனால்டி பகுதி வரைக்கும் நீடித்தது.

இதனைக் கண்ட அல்ஜீரிய நடுவர் டிஜேமல் ஹிமௌவ்டி பென்லாடி கிக் கொடுத்தார். ஆனால் சர்ச்சைக்குரிய முறையில் ஃபவுல் செய்த தியாகோ சில்வாவிற்கு சிகப்பு அட்டைக் காண்பிக்கத் தவறினார் அந்த நடுவர். பெனால்டி கிக்கில் வான் பெர்ஸி, ஜூலியோ சீசருக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. நெதர்லாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பிரேசில் பகுதியின் இடது பக்கத்தில் நெதர்லாந்து வீரர் கஸ்மன் உள்ளே வெட்டிப் புகுந்து கிராஸ் ஒன்றைச் செய்ய அதனை பிரேசில் வீரர் டேவிட் லூயிஸ் தலையால் தடுக்க நினைக்க பந்து நேராக நெதர்லாந்து வீரர் பிஅளைன்டிடம் வந்தது. அவருக்கு அங்கு பந்தை எடுத்துச் செல்ல நிறைய நேரம் இருந்தது. எடுத்துச் சென்று 12-வது யார்டிலிருந்து கோல் அடித்தார். நெதர்லாந்து 2-0 என்று முன்னிலை பெற்றது.

உற்சாகமில்லாமல் ஆடிய பிரேசில் அணியை மேலும் நோகடிக்க நெதர்லாந்து விரும்பவில்லை என்பதுபோலவே ஆடியது. அன்று ஜெர்மனி இருந்த மன நிலையில் நெதர்லாந்து இருந்திருந்தால் பிரேசிலுக்கு இந்த ஆட்டத்திலும் பெரிய தோல்வியே ஏற்பட்டிருக்கும்.

நெதர்லாந்து தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து பிரேசில் முன்னேறிச் செல்லுமா என்ற சந்தேகமே பெரும்பாலான ஆட்டத்தில் இருந்தது. ஆஸ்கார் மட்டுமே உற்சாகமாக ஆடினார்.

ஒரு மூவில் ஜோ அபாரமாக பந்தை எடுத்துச் சென்று நெதர்லாந்து தடுப்பாட்ட வீரர்கள் 3 பேருக்கும் போக்குக் காண்பித்தார்.பிறகு ஆஸ்காருக்கு பந்தை அடிக்க அவர் கோல் நோக்கி அடித்ததை யாஸ்பர் சிலீசன் தடுத்தார்.

இடைவேளையின் போது 2-0 என்று நெதர்லாந்து முன்னிலை பெற்றது. காயமடைந்த நெய்மாரை பிரேசில் சீருடையில் மைதானத்தில் உட்கார வைத்தது பயிற்சியாளர் ஸ்கொலாரிக்கு அவ்வளவாக நல்ல பெயரை ஏற்படுத்தவில்லை. மேலும் இது நல்ல வெகுஜன மக்கள் உளவியல் அல்ல. ஏற்கனவே தங்கள் ஆசை, நிராசைகளை ஹீரோக்கள் மீது சுமத்தி சுமையைச் சுமந்தும் சுமத்தியும் இருக்கும் ரசிகர்களை வேதனையடையச் செய்யும் விதமாக அவர்களது ஹீரோ நெய்மாரை மைதானத்தில் வந்து அமரச் செய்தது ரசிகரளிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை. மாறாக ஸ்கொலாரி மீது வெறுப்பு இருந்ததையே அவர்களது நடத்தைக் காட்டியது.

உண்மையில் பிரேசில் அணிக்கு ஆதரவூட்டும் மன நிலையில் வந்த ரசிகர்கள் 2வது கோல் விழுந்தவுடன் நெதர்லாந்துக்கு ஆதரவாக மாறியது போல்தான் தெரிந்தது. பாலினியோ காலிற்குப் பந்து வந்ததாகத் தெரியவில்லை. இடைவேளையின் போது அவர் தலையைத் தொங்க போட்ட படி சென்றபோது இந்த ஆட்டத்தில் அவருக்கு உற்சாகமில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

இடைவேளைக்குப் பிறகு ஆஸ்கார் தலைமையில் ஒரு கோல் மூவ் செய்யப்பட்டது ஆனால் அது முறியடிக்கப்பட்டது. மாறாக இஞ்ஜுரி நேரத்தில் வலது புறம் அர்ஜென் ராபின் வேகமாகப் பந்தை எடுத்துச் சென்று சற்றே நிதானித்து ஜன்மாத்திற்கு அடிக்க அவர் பந்தை எடுத்துச் சென்று வைனால்டமிற்கு அடிக்க அவர் 3வது கோலை அடித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

உலக சாம்பியன் கனவுடன் ஆடிய பிரேசிலின் கடைசி 2 போட்டிகள் அந்த அணியை எழும்ப விடாமல் செய்யும் தோல்வியில் முடிந்துள்ளது. பிரேசில் தனது ஆட்டத்தின் தன்மை குறித்து தீவிரமாக சிந்தித்து மறு பரிசீலனை செய்ய வேண்டிய காலக் கட்டம் வந்து விட்டது.

 

தி ஹிந்து

Link to comment
Share on other sites

ஜேர்மனி அணியை பொறுத்தவரை அவர்களின்  தொடர்ச்சியான பலம் என்பது அவர்களின் மன உறுதியே.  பல வேளைகளில் எதிரணி கோல் அடித்து வெற்றி முகத்தில் இருக்கும் தருணத்திலும் எந்த சலனத்தையும் உணர்வு ரீதியாக  காட்டாமல் மன உறுதியுடன் இறுதி நிமிடம் வரை களத்தில் உறுதியுடம் போராடும் அவர்களின் இயல்பு  பல வேளைகளில் வெற்றியை தேடி கொடுத்திருக்கிறது. உதாரணமாக இம்முறை கானாவிற்கு எதிரான ஆட்டதில் ஒரு கட்டதில் கானாவை விட பின்தங்கி ஜேர்மனி இருந்த போதிலும் இறுதியில் ஒரு கோல் அடித்து அதை சமபடுத்தி வெற்றி பெறாவிட்டாலும் தோல்வியில் இருந்து தமது அணியை காப்பாற்றினார்கள். 2008 ஐரோப்பிய சம்பியன் தொடரில் துருக்கியிடம் தோல்வியடைய இருந்த நிலையில் இறுதி நிமிடங்களில் வெற்றியை நோக்கி திருப்பி சாதனை படைத்தார்கள். இம்முறை அவர்கள் தமது நான்காவது நட்சத்திரத்தை தமது ரிசேர்டில் பதிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது

 

எல்லா மனிதர்களுக்கும் வாழ்வில் சோதனை காலகட்டம் வருவது இயற்கையே. அதுபோல் தற்போது பிரேசில் அணியினருக்கு வந்த சோதனைகளை தாண்டி அதிலிருந்து மீண்டு, எதிர்காலத்தில் அவர்கள் சரித்திரம் படைக்க போவது உறுதி. எவ்வளவு தான் திறமை இருந்த போதிலும் பிரேசில்  அணிவீரர்களின் emotional feelings  அவர்களின் இறுதியான படு தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருந்த போதிலும் உலக மக்களின் மிகஅபிமானத்தை பெற்ற அணியாகவே தற்போதும் பிரேசில் அணி  இருக்கிறது. மிக அதிகமாக 5 முறை உலக கோப்பையை வென்று ஐந்து நட்சத்திரங்களை தமது சீருடையில் பதித்த  போதிலும் தலைகனம் பிடித்த அணியாக பிரேசில் அணி என்றுமே காட்டி கொண்டதில்லை. தமது தவறுகளை திருத்தி மீண்டும் எழுவார்கள் என்பதில் ஐயமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி அணியை பொறுத்தவரை அவர்களின்  தொடர்ச்சியான பலம் என்பது அவர்களின் மன உறுதியே.  பல வேளைகளில் எதிரணி கோல் அடித்து வெற்றி முகத்தில் இருக்கும் தருணத்திலும் எந்த சலனத்தையும் உணர்வு ரீதியாக  காட்டாமல் மன உறுதியுடன் இறுதி நிமிடம் வரை களத்தில் உறுதியுடம் போராடும் அவர்களின் இயல்பு  பல வேளைகளில் வெற்றியை தேடி கொடுத்திருக்கிறது. உதாரணமாக இம்முறை கானாவிற்கு எதிரான ஆட்டதில் ஒரு கட்டதில் கானாவை விட பின்தங்கி ஜேர்மனி இருந்த போதிலும் இறுதியில் ஒரு கோல் அடித்து அதை சமபடுத்தி வெற்றி பெறாவிட்டாலும் தோல்வியில் இருந்து தமது அணியை காப்பாற்றினார்கள். 2008 ஐரோப்பிய சம்பியன் தொடரில் துருக்கியிடம் தோல்வியடைய இருந்த நிலையில் இறுதி நிமிடங்களில் வெற்றியை நோக்கி திருப்பி சாதனை படைத்தார்கள். இம்முறை அவர்கள் தமது நான்காவது நட்சத்திரத்தை தமது ரிசேர்டில் பதிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது

 

எல்லா மனிதர்களுக்கும் வாழ்வில் சோதனை காலகட்டம் வருவது இயற்கையே. அதுபோல் தற்போது பிரேசில் அணியினருக்கு வந்த சோதனைகளை தாண்டி அதிலிருந்து மீண்டு, எதிர்காலத்தில் அவர்கள் சரித்திரம் படைக்க போவது உறுதி. எவ்வளவு தான் திறமை இருந்த போதிலும் பிரேசில்  அணிவீரர்களின் emotional feelings  அவர்களின் இறுதியான படு தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருந்த போதிலும் உலக மக்களின் மிகஅபிமானத்தை பெற்ற அணியாகவே தற்போதும் பிரேசில் அணி  இருக்கிறது. மிக அதிகமாக 5 முறை உலக கோப்பையை வென்று ஐந்து நட்சத்திரங்களை தமது சீருடையில் பதித்த  போதிலும் தலைகனம் பிடித்த அணியாக பிரேசில் அணி என்றுமே காட்டி கொண்டதில்லை. தமது தவறுகளை திருத்தி மீண்டும் எழுவார்கள் என்பதில் ஐயமில்லை.

 

நல்லதொரு கண்ணோட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் பயிற்சியாளரின் ராஜினாமா ஏற்பு

brazil_2004236h.jpg

 

 

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் லூயிஸ் பெலிஸ் ஸ்காலரியின் ராஜினாமாவை அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அடுத்தாக மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோற்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டியை பிரேசில் நடத்தியதால் அந்நாடு குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பிரேசில் வீரர்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையுமே அளித்தனர்.

74 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் பிரேசில் அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளையும் தழுவியது, அந்நாட்டு ரசிகர்களை மட்டுமன்றி, பிற நாடுகளில் உள்ள பிரேசில் ரசிகர்களையும் நிலைகுலைய வைத்தன. தங்கள் அணியிடம் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்த பிரேசில் ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்நிலையில் தோல்விகளுக்கு முழுப் பொறுப்பேற்று பதவி விலக தயாராக இருப்பதாக பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்காலரி கூறியிருந்தார். 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது முதல்முறையாக ஸ்காலரி பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளரானார். அப்போது பிரேசில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த ஆண்டு இறுதியிலேயே தனது பதவியை ராஜினாமா செய்த ஸ்காலரி, பிறகு போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராகவும், தொடர்ந்து கிளப் அணிகளின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

2012-ம் ஆண்டில் மீண்டும் பிரேசில் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை பிரேசிலில் நடைபெறுவதால் நிச்சயமாக கோப்பையை வென்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு ஸ்காலரியை பயிற்சியாளராக நியமித்தது. 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று தந்த பயிற்சியாளர் என்பதால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் பிரேசில் மோசமான தோல்விகளை சந்தித்ததால், அவர் பதவி விலக முன்வந்தார். அவரது ராஜினாமா இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜோஸ் மரியா மரின் கூறியது:

ஸ்காலரி மற்றும் அவரது தொழில்நுட்பக் குழுவினர் பிரேசில் அணியின் பொறுப்பில் இருந்து விலக தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அணிக்காக அவர்கள் கடுமையாக உழைத்தனர். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். என்றார்.

 

தி ஹிந்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
    • யாழ் பல்கலை நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்! (இனியபாரதி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில் தான் கடமைக்குத் திரும்பிய போதிலும் தனக்கு அரைமாதச் சம்பளத்தை வழங்கி விட்டு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தனது வாழ்வாதாரத்தைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது சம்பளத்தை நிறுத்தியமை தவறு என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளது.  இதேநேரம், வருமான வரி முன்மொழிவின் போது பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பல வருமானத்தை மறைத்து வரிஏய்ப்புச் செய்துள்ளார் எனக் கைதடியைச் சேர்ந்த கே. சிவரஞ்சன் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி பணிமனையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.(ஏ)   https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_நிதியாளருக்கு_எதிராக_முறைப்பாடுகள்! 
    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.