Jump to content

சைவ உணவு வகைகள்.


Recommended Posts

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :)

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :D

:(:lol:

தகவலுக்கு நன்றி சிறி அண்ணா :(

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

கோவைக்காய் பெரியல்...

கோவைக்காயை 4 5 துண்டுகளாக நீளம் நீளமாக வெட்டி விட்டு உப்பு போட்டு தூள் கொஞ்சமாக போட்டு ஊற 10 நிமிசம் வைத்து விட்டு பெரித்தால் நல்லா இருக்கும்.. பிட்டு சோறுடன் சாப்பிடலாம்...உங்களுக்கு விரும்பினால் தூள் போடுங்கள்... இல்லையென்றால் கூட ஒகே.... நான் தூள் போட்டுத்தான் பண்ணுவன்...

koovaikkaai/tindora masala

Ingredients

Kovakkai- 3 cups (cut lengthwise )

Onions- 1 large chopped finely

Green chilli-1 chopped finely

Ginger garlic paste- 2 tsp

Coriander powder- 2 tsp

Chilli powder – 1 tsp or acc to taste

Turmeric powder- ¼ tsp

Cloves- 3 or 4

Salt to taste

Oil- 4 to 5 tsp

Coriander leaves- 2 tsp chopped finely

For seasoning

Mustard seeds- ¼ tsp

Jeera- ¼ tsp

Curry leaves - few

Peanuts- 3 tsp

Method

Heat oil in a pan add the seasoning items. Add the chopped onion and green chilli and fry till the onions become transparent. Then add the ginger garlic paste and fry till the raw smell disappears. Now add the kovakkai pieces and fry for some time. Add the turmeric, coriander and chilli powders. Crush or powder the cloves and add it to the masala. Add little water , simmer the flame and close it with a lid. Cook till the vegetable becomes tender and oil seperates. Garnish with coriander leaves and serve hot with rice.

http://premascookbook.blogspot.com/2006/09/kovakkaitindora-masala.html

Link to comment
Share on other sites

வல்லாரை & கரட் சம்பல்

467868061_95XKP-500x500.jpgcarrot+ingre.jpg

தேவையானவை

வல்லாரை - 1 பிடி

கரட் - 3

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 3

தயிர் 1 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள்- தேவையான அளவு

கருவேப்பிலை- 10

தேசிக்காய்ப் புளி- தேவையான அளவு

செய்முறை

வல்லாரைக்கீரையை சுத்தம் செய்து மிக மெல்லிதாக வெட்டவும் .

கரட்டை துருவி எடுக்கவும் .

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை, கருவேப்பிலையை மிக்கச் சிறிதாக வெட்டவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 1மேசைக் கரண்டி தயிரையும், தேவைக்கு ஏற்ப உப்பு, தேசிக்காய்ப் புளி, மிளகு தூள் கலந்தது பரிமாறலாம்.

(விருப்பமானவகள் சிறிதளவு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருகிறேன்.உங்கள் மனைவி உங்களை பேய்காட்டிப்போட்டா :(

நானும்தான் சிறி அண்ணை முதலே சாப்பிட்டு இருக்கன் எங்கள் வீட்டில் அம்மா பண்ணுவார்கள்... :(

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:(:lol:

.

பிலாக்காய் உருளை கிழங்கு சொதி..

---------

---------

இது பிலாக்காய் பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு.. Unknown-8.gif

பிலாக்காய் சொதிக்கு நன்றி புரட்சி. :):D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிசமாகவே கோடி நன்றி குட்டி! நான் பல நாட்களாக தேடினேன் கிடைக்க வில்லை. :)

Link to comment
Share on other sites

பாகற்காய் சம்பல்?????

சிறிய பாகற்காய் - ஒன்று (வெள்ளை பாகற்காயில் கசப்பு குறைவு)

வெள்ளரிக்காய் (Cucumber) - 1/4 துண்டு

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 1

உள்ளி - 1 பல்

தயிர் - 1/2 கப்

தேசிக்காய் - 1

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

- உள்ளி, Cucumber, பாகற்காய் ஆகியவற்றை Gratter இல் அரைக்கவும்.

- பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்த கலவையுடன் தயிரை சேர்த்து, உங்கள் தேவைக்கேற்ப புளியை பிழிந்து விடவும்.

இதனை எப்படி கூறுவதென்று தெரியவில்லை. அதுதான் கேள்விகுறி அடயாளமிட்டுள்ளேன்.

இதில் உள்ள பொருட்களின் அளவுகளை உங்கள் ருசிக்கேற்ப மாற்றிகொள்ளலாம்.

*** நீரிழிவு நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பாவற்காய் உண்ண வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாவற்காய் சம்பல் செய்யும் முறை;

பாவற்காயை நடுவால் இரு துண்டுகளாக வெட்டி அளவான நீர் விட்டு அவிய விடவும்[அதிகளவு நீர் விட்டால் சத்து வீணாகிப் போய் விடும்]

அவிந்த பின் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிய பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு,தேசிக்காய் புளி விட்ட பின் சாப்பிடவும்...விரும்பினால் தக்காளி பழம் சேர்க்கவும்...தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:lol::(

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

Link to comment
Share on other sites

தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

உண்மை ரதி. பாவர்ற்காய் நீரிழிவு நோய்க்கு நல்லது. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. ஆனால் நீரிழிவு நோய்க்கு மருந்து எடுக்கும் போது மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது என இணையத்தில் வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

விசுகு,, உங்கடை உள் குத்து எல்லாம் விளங்குது........ :(

உங்களின் நகைச்சுவையான கருத்தை ரசித்தேன். :D:lol::D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய சட்னி..இது இட்லி தோசை பிரியர்களுக்கு... :):lol:

idly-3.jpg

Plantain%20Dosa2.jpg

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 3

காய்ந்த மிளகாய் - 15

தக்காளி - 2

புளி - சிறிதளவு

மஞ்சள் தூள் - ஸ்பூன்

பூண்டு- 1

சோம்பு - 1 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

எண்ணை - சிறிதளவு

கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளி பூண்டு(தோலுரித்தது) ஆகிய மூன்றையும் அரிந்து கொள்ளவும்.. புளி உப்பு காய்ந்த மிளகாய் சோம்பு ஆகிய நான்கையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.. பின்னர் அடுப்பில் வாணலை வைத்து எண்ணைய் விட்டு காய்ந்த வுடன் தாளிக்கும் சாமான்களை போட்டு தாளித்து..நறுக்கி வைத்துள்ளதை போட்டு வதக்கவும்.. பின்னர் சிறிது மஞ்சள் தூளையும் போடவும்.. பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. சுவையான வெங்காய சட்னி தயார்.. இது இட்லி ... தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்...

நன்றி.. செட்டிநாட்டு சமையல் குறிப்புகள் ஆசிரியர் ராஜேஸ்வரி

இது இட்லி தோசை பிரியர்களுக்கு...

s_grands-31%5B1%5D.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

உங்கள் வெங்காய சட்னி குறிப்பை, இன்று காலை தான் பார்த்தேன் புரட்சி. :lol:

நான் வெங்காய சட்னி பற்றி கேள்விப்பட்டுள்ளேன்..... ஆனால் செய்முறை தான் தெரியாமல் இருந்தது.cooking-emoticon.gif

சட்னிக்கு தேவையான பொருட்களில்..... சோம்பை தவிர மிச்சம் எல்லாம் வீட்டில் இருக்குது.

உங்கள் குறிப்புக்கு மிக நன்றி thumb_smiley-vault-signs-096.gif புரட்சி. அடுத்த முறை தோசை, அல்லது இட்டலி செய்யும் போது வெங்காய சட்னி தான். smiley_cooking.gif

.

Link to comment
Share on other sites

.

மிக மிக முக்கியமான திரி. எல்லாருக்கும் நன்றி. :lol:

புளிக்குழம்பு தூக்கலோ தூக்கல்.

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சாறு செய்தோம் மிக நன்றாக வந்தது. நன்றி! :lol:

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

சாப்பிட்டுள்ளேன். சுவையே தனிதான்.நன்றி ஈசன்.

Link to comment
Share on other sites

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

Vegetable Biriyani1 கிலோ அரிசி, ஒரு தேங்காய், 250 கிராம் வெங்காயம், 15 பச்சை மிளகாய், 200 கிராம் காலி பிளவர், 100 கிராம் பூண்டு, 1 கட்டு கொத்தமல்லி, 100 கிராம் உருளைக் கிழங்கு, இஞ்சி சிறுதுண்டு, தேவையான அளவு புதினா, 50 கிராம் கேரட், 50 கிராம் பீன்ஸ், 10 ஏலக்காய், 10 கிராம்பு, 100 கிராம் பட்டாணி, 100 கிராம் டால்டா, 1துண்டு இலவங்கம், 100 கிராம் நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி கேசரிப் பவுடர்

செய்முறை:

அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

http://www.lankasri.eu/ta/link.php?33y6M332HS

Link to comment
Share on other sites

.

.பலாப்பழ பாயாசம்

பலாப்பழச் சுளைகள் - 20, 30 (வருக்கை பலாப்பழம் சிறப்பு)

வெல்லம் - கால் கிலோ

நெய் அல்லது டால்டா தேவையான அளவு

ஏலக்காய் தேவையான அளவு

முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு வாணலில் நெய் விட்டு அது இளகியதும் நறுக்கிய பலாப்பழசுழைகளை இட்டு வதக்கவும்.

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேகவிட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்துவிடலாம்.

மீதம் வந்த பலாப்பழம் இருந்தால் இவ்வாறு செய்து காற்றுபுகாமல் அடைத்து வைத்திருந்து கொஞ்சமாக சாப்பிடலாம். இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

http://tamil2friends.com/tamil-samayal/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈசனின் பாகற்காய் சம்பல்.

சுஜியின் வெஜிடபிள் பிரியாணி,

நுணாவின் பிலாப்பழ பாயாசம் எல்லாவற்றுக்கும் நன்றி.xmas-7294.gif

.

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

நன்றி ஈசன்,பாவற்காய் சம்பல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாவற்காயை சிறிது துண்டுகளாக வெட்டி அதில் உப்பு கலந்து அரை மணிநேரம் வைத்தாலே அதில் உள்ள உவர்ப்புத் தன்மை குறைந்து விடுகிறது. அதன் பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி இலை இவற்றை கொஞ்ச எண்ணெயில் வதக்கி பின்பு தேசிக்காய் புளியும் விட்டு எடுத்தால் நன்றாக இருக்கும். பாவற்காய் சக்கரை வியாதிக்கு நல்ல ஒரு மருந்தாகவும் இருக்கிறது.

இணைப்பினை தொடர்ந்து இணைக்கும் உறவுகளுக்கும் நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்கறி சாம்பார்

sambar.jpg

தேவையான பொருட்கள்.

ஏதாவது ஒரு காய் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

துவரம் பருப்பு - 100 கிராம்

புளி - நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி(மிளகாய்தூள் + கொத்தமல்லி தூள் + மஞ்சள் தூள்) கலவை - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

காய்ந்த மிள்காய் - 2

பெருங்காயம் - 1 சிட்டிகை

கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

முதலில் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் .. காய். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி ஒரு டமளர் தண்ணீர் விட்டு பாத்திரத்தில் வேக விடவும்.. காய் வெந்தவுடன் உப்பு புளிகரைசல் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி மற்றும் பருப்பை போட்டு கொதிக்க விடவும் கடைசியாக 2 ஸ்பூன் எண்ணைவிட்டு கடுகு உளுந்து மிள்காய் சீரகம் வெந்தயம் பெருங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றையும் போட்டு தாளித்து கொட்டி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் ..கமகம சாம்பார் ரெடி.. சோற்றுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்..

எல்லா சாம்பாருமே இந்த முறையில் செய்ய வேண்டியதுதான் . வெண்டைக்காய் கத்திரிக்கு மட்டும் வேக வைக்கும் முன்பு சிறிது எண்ணை ஊற்றி ஒரு பாத்திரத்தில் நன்றாக வதங்கிய பின்பு மேற்சொன்ன முறையில் சாம்பார் செய்யவும்..

cooking-34.gif

நன்றி . ராஜெஸ்வரி பதிப்பகம்... சிவகாசி

Link to comment
Share on other sites

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

இது ஜிம் பாடி ஏற்றுவதற்கு பயனுள்ள குறிப்பு தோழரே குட்டி... அனைவரும் இவ்வாறுதான் காலையில் உண்டுவிட்டு உடற்பயிற்சி செய்கிறார்கள்.. :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.