Jump to content

63 நாயன்மார்களும் ….இது நியாயமா?


Recommended Posts

காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி. இவ்வாறாக நீளுகின்ற இந்த பட்டியலை தான் காங்கிரசாக கருணாநிதி காட்டுகிறார். நவீன நாயன்மார்களும்..அறிவாலய வியாபாரிகளும் ஆடிய 3 சீட்டு சூதாட்டத்தில் தோற்றது என்னவோ கரை வேட்டி கட்டி..முரசொலியில் முழ்கி..கருப்பு சிவப்பில் வாழ்க்கையை தொலைக்கும் வக்கற்ற அப்பாவி தொண்டன் தான்.

யார் இந்தமணி செந்தில்? தமிழரின் ஆன்மீக நம்பிக்கைகளில் விளையாட?

இதைத் தான் சீமான் தன் தம்பிகளுக்கு சொல்லித் தருகின்றாரா?

தமிழன் எந்த சமயம் எனபதையும், நாயன்மார் தமிழ் தொண்டினையும் நன்கறிவர்.

யார் இந்த சமணர்கள்? தமிழையும் தமிழரின் சமயத்தையும் அழித்தவர்கள் என்று அறியாதவர்களா நாம்?

மேலும் இவருக்கு தமிழீழ விடுதலப் பற்றியும், தலைவரின் கொள்கைப் பற்றியும் என்ன தெரியும்?

வெட்டிப் புகழுக்கு சில துரோகிகள் தமிழ்நாட்டில் தோன்றியுள்ளனர், இவர்கள் பணி, தமிழரின் ஒற்றுமையை குலைப்பது தவிர வேறோன்றுமில்லை.

மானமுள்ள தமிழராகிய நாம் இவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

கீழுள்ள மின்னஞ்சல் மூலம் அவருக்கு அறிவுரைச் செய்யுங்கள்.

மணி செந்தில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.