Jump to content

'வீட்டுக்கு ஓர் ஊனம்.. இரவில் பாலியல் கொடுமை!''


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'வீட்டுக்கு ஓர் ஊனம்.. இரவில் பாலியல் கொடுமை!''

---தப்பி வந்த வக்கீல் பேட்டி

அங்கயற்கண்ணி என்கிற கயல். வழக்கறிஞரான இவர், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி. தாத்தாவைப்போலவே தமிழுக்கான போராட்டக் களங்களில் முந்தி நிற்கும் கயல், ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் தடியடிக்கு உள்ளானவர்.

பொங்கலுக்கு முன்பு இவர், சுற்றுலா விசாவில் இலங்​கைக்குச் சென்று ஈழத் தமிழர்களின் பாதிப்புகளை நேரில் பார்த்தபோது, இலங்கை போலீஸார் கைதுசெய்ய... தமிழகம் கொந்தளித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ தொலைபேசியில் பேசினார். ''ஒரு தமிழறிஞரின் குடும்பத்துப் பிள்ளையை பத்திரமாக நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும்!'' என்றார். வழக்கறிஞர்கள் இணைந்து போராடத் தயார் ஆனார்கள். மறுநாள் பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்றார் வைகோ. அதற்குள் முந்தைய நாள் இரவே அங்கயற்கண்ணி விடுதலை செய்யப்பட்டார். 'அந்தப் பெண்ணை விடுவித்துவிட்டார்களே’ என்று வைகோவை பார்த்ததும் பிரதமர் சொல்லியிருக்கிறார்.

கயலைச் சந்தித்தோம். ''போர் முடிந்த பிறகு ஈழத் தமிழ் மக்களின் நிலையை அறிவதே, என் பயண நோக்கம். 13-ம் தேதி கொழும்பு சென்றோம். 14-ம் தேதி தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் வவுனியா சென்றோம். அங்கு, 2005, 2008 காலங்களில் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டவர்களைச் சந்தித்தோம். கட்டரியான்குளம் என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூடம், தேவாலயம், ஒரு பெரிய வீடு என மூன்று இடங்களில் மொத்தமாக 746 குடும்பங்களை வைத்திருந்தார்கள். மிகக் குறுகிய இடத்தில் அத்தனை பேரும் அடைந்தது போலத்தான் இருந்தனர். பள்ளிக்கூடத்தில் சமைத்து, உணவு தருவார்களாம். காலை உணவே, நாங்கள் சென்றபோது மாலை வரை சில இடங்களுக்கு வரவே இல்லை. சின்னக் குழந்தை​கள் பசியால் துடித்தன. எங்கள் வயிறு எரிந்தது.

மாலை 6 மணிக்கு மன்னார் மடுமாதா தேவால​யத்துக்குச் சென்றோம். எங்களைச் சந்தித்த ஈழத் தமிழர்கள் பேச்சில் துயரம் வழிந்தது. நள்ளிரவு 1 மணிக்குக் கிளம்பி வவுனியா சென்று, மறுநாள் பொங்கல் அன்று சில குடும்பங்​களைச் சந்தித்தோம். 'தமிழீழ அரசு’ப் பகுதிக்குச் செல்ல ராணுவ அனுமதி அன்று வரை கிடைக்கவில்லை. இருந்தாலும் 'அனுமதித்தால் உள்ளே போகலாமே’ என ஒரு முயற்சி செய்தோம். ஆனால், ஓமந்தை சோதனைச் சாவடியில் சிங்கள ராணுவம் திருப்பி அனுப்ப... வவுனியா திரும்பினோம்.

16-ம் தேதி காலை கிழக்கு மாகாணத்துக்குப் புறப்பட்டோம். மட்டக்களப்பு சென்று, பல பகுதிகளைத் தாண்டி விநாயகபுரம் என்ற கடலோரக் கிராமம் சென்றோம். சுனாமியால் போரால் பாதிக்கப்​பட்ட மக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. கண் இழந்து, கை, கால் இழந்து... அப்பப்பா, ஒவ்வொரு குடும்பத்​திலும் ஒருவராவது ஊனத்துடன் இருந்தனர்.

17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ராணுவ அனுமதி கிடைத்து, 2.30 மணிக்கு கிளம்பி 45 நிமிடத்தில் ஓமந்தையைஅடைந்தோம். வெளிநாட்டவர்கள் என்பதால், சோதனைச் சாவடியில் எங்களை பேருந்தில் இருந்து இறங்கச்​சொல்லி சோதித்து அனுப்பினர். 3.30 மணி நேரப் பயணத்தில் கிளிநொச்சி அடைந்து நண்பர்களுடன் ஆட்டோவில் பயணித்தோம். வவுனியா நகரத்தில் ஓரளவாவது வெளிச்சம்... இங்கோ எங்குமே இருட்டு. வீடுகள் எல்லாம் தரைமட்டம். ஐ.நா. கொடுத்த தகரங்களில்தான் மறுகுடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள்.

பெரும்பாலான வீடுகளில் அம்மாவோ அப்பாவோ இல்லை. பெற்றோரே இல்லாத குடும்பங்களையும் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு ஒரு குழந்தையாவது ஊனம். ஆண் இல்லாத வீடுகளில், சிங்கள ராணுவத்தினர் இரவு நேரத்தில் பாலியல் வன்முறை செய்வது சர்வசாதாரணம் என கேள்விப்பட்டபோது, குருதி கொதித்தது...'' என்றவர் சற்று நிறுத்தி, தொடர்ந்தார்.

''அதன்பிறகு, வன்னி தமிழ் எம்.பி. ஸ்ரீதரனைச் சந்தித்துவிட்டு, கிளிநொச்சி பேருந்து நிலையம் வந்தோம். இரவு 9.45 மணி. மின்சாரம் அற்ற கும்மிருட்டு. 'இரவு 12.45 மணிக்குத்தான் யாழ்ப்பாணத்துக்குப் பேருந்து’ என்றார்கள். வரலாற்றுப் பெருமைகொண்ட தமிழீழ அரசின் தலைநகரான அந்த மண்ணில் 3 மணி நேரம் இருந்ததே பரவசம்! அங்கிருந்து வல்வெட்டித்துறை மருத்துவமனைக்குப் போய், தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்த்தோம். எப்பேர்ப்பட்ட மனிதனின் தாயாருக்கு இந்த நிலைமையா எனும்படி இருந்தார். தாங்கிக்கொள்ள முடியவில்லை!

பிரபாகரனின் வீடு முற்றிலுமாக இடியுண்டுகிடந்தது. அந்த வீடே சிங்கள இனவெறியின் அடையாளமாக இருந்தது. ஒரு சதுர அடிக்குள் நூறு துப்பாக்கிச் சூட்டுத் துளைகள். வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆர். சிலையின் இரு கைகளும் உடைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் 19-ம் தேதி கொழும்பில் விமானம் ஏறவேண்டும் என்பதால், யாழில் இருந்து 18-ம் தேதி மதியம் 12 மணிக்கு வவுனியா கிளம்பினோம். பிற்பகல் 3 மணிக்கு ஓமந்தை சாவடியில், எங்களைப் பிடித்துச் சென்றவர்கள், உள்ளூர் போலீஸ் நிலையம் கொண்டுபோனார்கள். அங்கே இருந்த தமிழ் போலீஸ் அதிகாரி ஒருவர், 'சந்தேகத்​தின் பேரில் எங்களைக் கைது​செய்துள்ளதாக’க் கூறினார். 3 மணி நேரம் கழித்து கொழும்புக்குக் கூட்டிப்போனவர்கள், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகக் கட்டடத்தில் என்னை​யும், என்னுடன் வந்த திருமலையையும் தனித்தனியாகத் துருவி விசாரித்தார்கள். நான் எடுத்திருந்த பார்வதி அம்மா​ளின் படம் உள்பட பல முக்கியப் படங்களை அழித்தனர். மூன்று இரவு, நான்கு பகல்களுக்குப் பிறகு, 21-ம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நிறுத்தி, எங்களை விடுதலை செய்தார்கள். வெளியில் வந்த பிறகு தமிழ்நாட்டைத் தொடர்புகொண்டபோதுதான் வைகோ, நெடுமாறன், சீமான், போன்ற தலைவர்களின் அழுத்தமே எங்களை விடுவித்தது தெரியவந்தது!'' என்று முடித்தார் கயல்.

''எங்களின் ஈழ நண்பர்களைப் பார்ப்பதற்காக, முறைப்படி சென்றோம். ஆனால், எங்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து விசாரிப்பது என்றால், என்ன நியாயம்? நமக்கே இப்படி என்றால், அங்கு உள்ளவர்கள் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாமே...'' என்றார் அவருடன் சென்று இருந்த திருமலை.

இந்த நாட்டைத்தான் இங்குள்ள சிலர் அமைதி நிலவுவதாகச் சொல்கிறார்கள்!

- இரா.தமிழ்க்கனல்

படம்: பொன்.காசிராஜன்

post-8033-0-81359000-1296027852_thumb.jp

post-8033-0-49174100-1296027882_thumb.jp

post-8033-0-91490800-1296028065_thumb.jp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.