Jump to content

கிழக்கில் கரணமடிக்கும் கிபீர்


vivasaayi

Recommended Posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கிபீர் விமானங்கள் பறந்தமையினால் மக்கள் அச்சமடைந்தனர்.

கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிபீர் விமானங்கள் பறந்தபோது அதன் சத்தத்தை கேட்ட மக்கள் இன்று காலை மீண்டும் இதன் சத்தத்தை கேட்டு பதற்றமடைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் கிபீர் விமானங்கள் பறந்ததனால் தேர் உற்சவத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடையே ஒரு பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்த கிபீர் விமானங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களிலேயே இன்று காலை பறந்துள்ளன.

இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள படை அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வினவியபோது,

"இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையினாலேயே இந்த கிபிர் விமானங்கள் மட்டக்களப்பில் பறந்தன. இதையிட்டு எவரும் அச்சமடையத் தேவையில்லை" என்றார்.

http://www.vivasaayi.com/2013/09/habeer.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.