Jump to content

இறுதி யுத்தத்தின் முடிவில் கிழக்கிலிருந்த தப்பிச்சென்ற இரு பொறுப்புவாய்ந்த போராளிகள் தற்போது எங்கே? இவர்களின் தற்போதைய நிலை என்ன?


Recommended Posts

இறுதி யுத்தத்தின் போது கிழக்கின் நிலை?

இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காளில் முடிவடையும் பொழுது கிழக்கிற்கான தொடர்புகளும், போராளிகளிற்கான அனைத்து வளங்கல்களும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன.

அக் காலகட்டத்தில் கிழக்கில் செயற்பட்டுவந்த புலிகளின் இராணுவச் செயற்பாடுகளிற்கு தலைவர்களாக இருந்த சால்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் கட்டளைத் தளபதி கேணல் நகுலன்;, கேணல் றாம், கேணல் உமாறாம், மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக பதவிவகித்த லெப். கேணல் தரப் போராளி தாயாமோகன், மட்டு அம்பாறை மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக பதவி வகித்த லெப். தரப் போராளி கேணல் ரவிமோகன் மற்றம் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பிரபா ஆகியோரே கிழக்கிலிருந்த இராணுவத்தினருக்கு சிம்மசொற்பனமாக விழங்கிய புலித்தலைவர்களாவார்.

கேபி தன்னைத் தானே தலைமையென அறிவித்தார்

யுத்தம் கட்டம் கட்டமாக முடிவுற்றுக்கொண்டிருந்த வேளையில் புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தலுக்கு பொறுப்பாகவிருந்த கேபி என்று அழைக்கப்படும் திரு. பட்மநாதன் தானே புலிகளின் அடுத்தகட்ட தலைமைப் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட கிழக்கின் புலித்தலைவர்களோடு தொடர்வுகளை பேணியிருந்தார்.

கேபி யின் இப் புதிய தலைமை நிர்வாகத்தை புலிகளின் கிழக்கின் மருத்துவர் ரவிமோகன் மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோரைத் தவிர ஏனைய புலித் தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை.

தாயாமோகன் மற்றும் ரவிமோகன் வெளியேற்றம்

கேபியின் தலைமையை ஏற்றுச் செயற்பட்ட தயாமோகன், ரவிமோகன் ஆகிய இருவரும் கேபியின் ஏற்பாட்டுடன் அடுத்த கட்டத் தயார்ப்படுத்தல் சார்ந்து கேபியுடன் நேரடிக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு சிறீலங்கா கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடக இஸ்லாமியர்கள் போன்று தம்மை தோற்றம் மாற்றிக் கொண்டு வெளியேறிச் சென்றனர்.

கட்டுநாயக்கா விமாணநிலையம் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின்னர் அரச படைகளால் உச்சகட்ட பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருந்ததை அனைவரும் அறிந்தபோதும் எப்படி? யாருடைய? பின்னணியோடு இவர்கள் நாடு கடந்து சென்றார்கள் என்ற விடையம் இன்றுவரை அரச புலனாய்வுப் பிரிவினருக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இது இப்படியிருக்க மலேசியா சென்ற தயாமோகன், ரவிமோகன் ஆகிய இருவரும் கேபியின் நேராடி மேற்பார்வையில் இரகசியமான முறையில் இயக்கிரவப்பட்ட புலிப்பாசறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தாயாமோகன், ரவிமோகன் குடும்பத்தினர்

போரின் முடிவில் வன்னிப் பகுதியில் வாழ்ந்து வந்த இவ்விருவரின் குடுப்பத்தினரும் மக்களோடு மக்களாக வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த முகாம் ஓன்றில் தஞ்சம் புகுந்தனர். இதை அறிந்த அரச புலநாய்வுப் பிரிவினர் ஒலிபெருக்கி ஊடக பெயர்களை அறிவித்து சரனடையுமாறு பயமுறுத்தினர்.

இச் செய்தியை அறிந்த தயாமோகன் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணாவின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டார். இதன் பின்னர் கருணாவே தயாமோகனின் குடுப்பத்தினருக்கு பாதுகாக்கு வழங்கி வைத்திருந்தார் என்பது பல ஊடகங்களில் பலமுறை வெளிவந்த பலரும் அறிந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தியே.

கேபி பிடிபட்டார் (ரா)??

இத் தருணத்தில் கேபி அவர்கள் இலங்கை அரசபுலனாய்வுத்துறையின் பொறிக்குள் அகப்பட்டு நாடுகடத்தப்பட்டார். இதன் பின்னர் ரவிமோகன் மற்றும் தயாமோகன் ஆகியோர்கள் கைவிடப்பட்ட நிலையில், இலங்கைக்கும் செல்ல முடியாமல் இருந்த காரணத்தால் கேபியின் சகாக்களின் உதவியுடன் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்துக்கு விமாணம் மூலம் சென்று அரசியல் தஞ்சம் கோரினர்.

தயாமோகன் குடும்பம் சுவிஸில்

தற்பொளுது தாயமோகனின் குடும்பத்தினர் கடந்த 26.03.2012 அன்று சிறீலங்கா கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக சுவிட்சர்லாந்துக்கு சென்றடைந்துள்ளனர். புலிகளுடன் சிறிய தொடர்புகளை பேணிவந்த சாதாரன மக்களைளே சிறீலங்கா அரசாங்கம் துன்புறுத்தி, சில சமயத்தில் கொலை செய்து வரும் நிலையில் புலிகளின் அரசியற்துறைப் பதவி வகித்த லெப் கேணல் தயாமோகன் குடும்பத்தினர் பத்திரமாக நாடு கடந்தமை எப்படி? இது தாமோகன் தற்பொளுது அரச புலனாய்வுத் துறையின் பிண்ணனியோடு இயங்கி வருகிறார் என்று ஏற்கனவே இருந்த சந்தேகத்தை மேலும் வலுப்பெற வைத்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் புலிகள் கட்டமைப்பை சிதைக்கப் பொறி

ஐரோப்பிய நாடுகளில் இன்றும் வலுவான முறையில் இயங்கிவரும் புலிகளின் கட்டமைப்பை இலங்கைப் புலனாய்வுத்துறை அடியோடு அழிப்பதற்கு பல திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தி வருகிறது. அதன் ஓர் கட்டமாக தகுதிவாய்ந்த தயோமோகன் போன்ற போராளிகளை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி தற்பொளுது இயங்கிவரும் புலிகளின் கட்டமைப்புகளுக்க நிகராக வெறொரு கட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறது. இதற்கென புலிகளில் நீண்ட காலம் செயற்பட்டுவந்த போராளிகளை ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அனுப்பி வைத்தள்ளது.

முதற்கட்டமாக மாவீரர் தினங்கள் குறிவைப்பு / செயற்படும் நபர்கள்

இவ்வாறான சிலரே இத்தனை காலமும் ஓர் குடையின் கிழ் நாடத்தப்பட்டடுவந்த மாவீரர்நாளை இரண்டாகப் பிளவு படச் செய்தனர். மாவீரர்களை கடவுள்களுக்கு நிகராக பூசித்துவரும் தமிழ் மக்கள் இக்கபட நாடகத்தை விளங்கிக்கொள்ளாமல் உணர்வுபூர்வமான தமது ஆதரவை வழங்கினர்.

இப்படி புலிகளின் கட்டமைப்பை சிதைத்கவென சிறீலங்க அரச புலனாய்வுத் துறையினரால் கட்டமைக்கப்பட்டுள்ள குளுவினர் தாமே உன்மையான விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தாமே தலைமைச் செயலகமென்றும் குறிப்பிட்டுச் செயற்படுகின்றனர். இவர்களின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் சில நாடுவாரியாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

  • சுவிஸ்;: தயாமோகன் (பொறுப்பாளர்), நீலன் ( துணைப் பொறுப்பாளர்) மோகன், றாம்குமார், nஐயம் ( 2009 இற்கு முன் சுவிஸ் சூறிச் மானில புலிகளின் பொறுப்பாளராக இருந்துவிட்டு தற்பொளுது தலைமைச்செயலகம் என செயற்படும் தயாமோகன் அணிலில் தாவிச் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது), வேந்தன் என பலர் கவிஸில் இயங்கி வருகின்றனர்.
  • பிரான்ஸ்: அறிவு, சுரேஸ்
  • லண்டன்: சங்கீதன்

ஒட்டுமொத்த நீர்வாகத்தையும் கட்டுப்படுதஇதம் பொறுப்பில் பாண்டியன் (நியூஸ்லாந்து) சுபன்; சுரேஸ்.

தயாமோகன் பின்னணியில் கருணா மற்றும் இலங்கைப் புலனாய்வு

புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பை சீர்குலைக்கும் பெருமுயற்சியில் பங்குவகிக்கும் சூத்திரதாரிகளில் தயாமோகனும் இடப்பிடித்துள்ளதாக எமக்கு உள்ளகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்கது. தலைமைச்செயலகம் எனும் பெயரில் தாம் அதியுச்ச தமிழீழத் தெசியவாதிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு இக் கும்பல் செயற்படுத்தப்படவேண்டும் என இலங்கையிம் பாதுகாப்புச் செயலரும், அதிபர் றாNஐபக்சேயின் சகோதரருமான கோத்தபாயவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுளதெனவும் உள்ளகத் தகவல்கள் தெருவிக்கின்றன.

ரவிமோகன் பொட்டுவின் ஆளாகச் செயற்பட்டார்

மருத்துவப் போராளியான ரவிமோகன் அவர்கள் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற காலப்பகுதியில் கருணாவின் குகைக்குள் விடுதலைப்புலியாகச் செயற்பட்டவர். கருணா தன் ஆயுத பலத்தையும் ஆளானிப் வளத்தையும் பாவித்து கிழக்கின் தலைமைத்துவத்தை முற்றாக தானே கைப்பற்றச் செயற்பட்டார்.

கருணாவின் இத் திட்டத்தை முறியடிப்பதற்கும், கிழக்கை மீண்டும் கருணாவிடமிருந்து கைப்பற்றுவதற்கும் புலிகள் அமைப்பின் புலநாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி வழிநடத்தலில் ரவிமோகன் அவர்கள முதுகெலும்பாகவிருந்து செயற்பட்டார் என்பது இன்றுவரை வெளிவராத உன்மை.

புலிகள் அமைப்பிலிருக்கும் தனது விசுவாசம் காரணமாக ரவிமோகன் அவர்கள் தலைமைச் செயலகம் எனும் தனித்தியங்கும் செயற்பாட்டை இன்றைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலைமைச்செயலகத்தின் பின்னணியில் கருணாவும் இருப்பதால் ரவிமோகனை வன்னிப்புலி என்று பட்டியலிட்டு அடியோடு ஓரங்கட்டிவிடப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் முற்றுப்பெறவழில்லை எனும் கருத்தை ரவிமோகன் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் இவரின் தற்போதைய உண்மையான நிலைப்பாடு கேள்விக் குறியாகவே உள்ளது.

http://www.thinasari.com/?p=7866

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.