Jump to content

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி

ல்லை நகர் ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்திப்போன சமய மறுமலர்ச்சி, மிசனரிமாரின் பாடசாலைகளைவிடவும் சிறப்பான ஆங்கில பாடசாலைகளை யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் ஸ்தாபிக்கும் ஒரு இயக்கத்தை குடாநாட்டில் உருவாக்கி விட்டது. இவற்றில் முதன்மையானவர்களில் ஒருவர் கனகரத்தினம் முதலியார். இவர் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலையினை 1876ம் ஆண்டினில் ஸ்தாபித்தார். பாடசாலையில் 1880 எனப்பொறிக்கப்பட்ட ஒரு மணி இன்னமும் இருக்கின்றது. இந்த சுழிபுரம் இந்து ஆங்கிலப் பாடசாலையே இன்று விக்ரோறியாக் கல்லூரியாய் வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது.

 

1892ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரச உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலையாக இது பதிவுசெய்யப் பெற்றது. இலங்கையில் முதலாவது அரச உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலையென்ற பெயரை இது பெற்றுத்தந்தது.

 

 

பாடசாலை பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவந்ததது. ஒரு விளையாட்டு மைதானம் பாடசாலைக்கென பெறப்பட்டு, துடுப்பாட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு விக்ரோறியாக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான முதலாவது துடுப்பாட்டப்போட்டி விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

பாடசாலை சஞ்சிகை ஒன்றை 1898 இல் வெளியிட்ட ஒரு முன்னணி பாடசாலையும் இதுவே. 1905 இல் இடம்பெற்ற கல்லூரி பரிசளிப்பு விழாவிற்கு அப்போது இலங்கையின் ஆளுனராயிருந்து சேர் ஹென்றி பிளக்கும் அவரது துணைவியாரும் பிரதம விருந்தினர்களாய் வந்திருந்து பெருமை சேர்த்தார்கள், அன்றே புதிதாய் அமைக்கப்பட்ட றிட்ஜ்வே மண்டபம் சேர் ஹென்றி பிளக்கினால் திறந்து வைக்கப்பட்டது.

victoria-college-first-principal.jpg

கல்லூரியின் முதலாவது அதிபர்

 

ஐரிஸ் நாட்டவரான வில்லோக்பை சிமோல் பாடசாலையின் முதலாவது அதிபராவார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்களுடன் இணைந்து மூன்று பாடசாலைகளுக்கும் பொதுவான பரீட்சையினை கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். 1938இல் HSC வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராயிருந்த அமிர்தலிங்கம் என்பார் 1945 இல் முதன்முதல் கல்லூரியின் கலைப்பிரிவிலிருந்து பல்கலைக்கழகம் சென்றவர்.

 

01.08.1946இல் 13 ஆசிரியர்களுடனும் 371 மாணவர்களுடனும் இயங்கிய பாடசாலையினை அரசாங்கம் கையேற்றுக் கொண்டது. 1948இல் கல்லூரியின் ஆரம்பப்பிரிவும் 1951இல் வகுப்பறைகளுக்கான புதிய கட்டடமும், நான்கு ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. 1955இல் கிரேக் (Gurugae) மண்டபம் அமைக்கப்பட்டு, பாடசாலை மைதானமும் விஸ்தரிக்கப்பட்டது. மைதானத்தின் ஒரு பக்கத்திற்கு சுற்றுமதிலும் அமைக்கப்பட்டது. 1962இல் பாலச்சந்திரன் எனும் மாணவர் பெரதெனிய பொறியில் பீடத்திற்கு தெரிவானார். இதே காலத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானின் சிலை பிரதான மண்டபத்தில் அமைக்கப்பட்டது.

 

1981 இல் இரண்டு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும், ஒருவர் பொறியியல் பீடத்திற்கும், ஒருவர் விஞ்ஞானபீடத்திற்குமாய் பல்கலைக்கழகம் தெரிவானார்கள். 1982 இல் பதினொரு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவானார்கள்.

 

thejaffna.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி

.....

 

1981 இல் இரண்டு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும், ஒருவர் பொறியியல் பீடத்திற்கும், ஒருவர் விஞ்ஞானபீடத்திற்குமாய் பல்கலைக்கழகம் தெரிவானார்கள். 1982 இல் பதினொரு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவானார்கள்.

 

thejaffna.com

இங்கே ஒரு அன்பர், கதை ஒளிக் கவிஞர் இருக்கிறாரே, அவரையும் சேர்த்துக்கொள்ளுங்கோ! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு அன்பர், கதை ஒளிக் கவிஞர் இருக்கிறாரே, அவரையும் சேர்த்துக்கொள்ளுங்கோ! :)

 

அவர் இந்தக் கல்லூரியின் பழைய மாணவரானால் இன்னும் பல தகவல்களை அவரே வழங்குவார் என நினைக்கின்றேன் :D

 

Link to comment
Share on other sites

என்னையோ சொல்லுறீங்கள்... 

நான் நாட்டிலை இல்லாத நேரமாய்ப் பார்த்து போட்டிருக்கிறார் வாத்தியார்..  :o

வந்தீட்டன்!!

 

பழைய மாணவன்தான்.

8ஆம் வகுப்புவரை படித்தேன்.

 

அப்போது 7ஆம் வகுப்பில் புலமைப் பரிசில் பரீட்சை என்று ஒரு பரீட்சை நடாத்துவார்கள்...

அதன் காரணமாக கொழும்பு றோயல் கிடைக்க, அங்கை போய் ரோட்டளந்ததுதான் மிச்சம்!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்மூர் பாடசாலை. பல திறமையுள்ள மாணவர்களை ஊக்குவித்த பாடசாலை. 

 

ஆசிரியர்களும் மாணவர்களும் ஒர் குடும்பம்போல் இங்கு. பல ஆசிரியர்கள் இங்கு சொந்தக்கார ர்களாகவோ அல்லது தெரிந்தவர்காளாகவோதான் இருப்பார்கள்.

 

குழப்படி செய்தால் அடுத்த நிமிடம் வீட்டில் பூவரசம்தாடியுடன் வாசலில் நிற்பார்கள் பெற்றோர்கள்.

 

நான் இங்கு படிக்கவில்லை, ஆனா பல ஆசிரியர்கள் என் சொந்தக்கார்கள்.

 

இந்திரன் மாஸ்டரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது.அவரின் உயரமும், கம்பீரமான நடையும், பார்ப்போரை கவர்ந்திழுக்கும் சக்தி. அவர் கதைத்தால் நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர் வீட்டில்தான் பலர் செய்திகள் கேட்க கூடுவார்கள், இன்னும் பலரைப்பற்றி எழுதலாம் நேரம் கிடைக்கும் போது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையோ சொல்லுறீங்கள்... 

....

 

இல்லை, பிறேமனில் வசிக்கும் ஒரு 'பெரியவரை' சொன்னோம்!  அது நீங்கள் இல்லையா? :(:o:lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.